மாமனிதர் சாகரனுக்கு இரங்கல்பா - வெங்கடரங்கன்

உனக்காக வாழ்த்துப்பா பாட
உள்ளம் நினைக்கையில்
இரங்கற்பாவிற்கு ஏன் துணை நின்றாய்?

அனைவரின் நலனுக்காய்
துடிதுடித்த உன் இதயம்
உனது நலன் மறந்ததேன்?

சாதிக்கத் துடித்த நீ
சாதித்து விட்டாய் என
முடித்துக் கொண்டதோ வாழ்வு?

உனது எண்ணத்தோடு
கலந்து கொள்ளாமல்
ஊமையாகிப் போன வார்த்தைகள்!

மரண செய்திக் கண்டதும்
நிச்சயப்படுத்திக் கொள்ள முடியாத
உனது இளம் வயது!

சாகரனே
முத்தமிழ்மன்றத்தின் தூணே
நீயா இறந்து போனாய்?

உனது கனவுகள்
உன்னைக் காணாது
கலங்கித் தவிக்கின்றன

முகம் அறியாத உறவுகளிடம்
இனம் புரியாத நட்பு
கொண்டாட வேண்டும் திரும்பிவா!

- கண்ணீருடன் வெங்கடரங்கன்

0 comments: