சிங்கப்பூர் வரலாறு

சிங்கபுரம்

சிங்கப்பூரின் பண்டைக் காலம் பற்றி எழுத்து வடிவப்பதிவுகள் கோர்வையாக இல்லை, அங்கொன்றும் இங்கு கொன்றுமாகச் சிலவைதான் கிடைத்துள்ளன. இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரம் சிங்கபுரம் என்ற ஒரு நகரைக் குறிப்பிடுகிறது.

இவ்வாட்டாரத்தில் முதல் வரலாற்று ஆவணமாக விளங்கும் நகரகிரேத்தாகமா எனும் ஜாவானிய நூல் 1365-ம் ஆண்டில் எழுதபட்டது. இது தெமாசெக் எனும் குடியேற்றப் பகுதியைப் பற்றி குறிப்பிடுகிறது. சி.எம். டர்ன்புல் என்பார் தமது நூலில் (சிங்கப்பூர் வரலாறு 1819-1975).

பதினேழாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட செஜாரா மலாயு எனும் மலாட் மரபு வரலாற்று நூல் மட்டுமே தெமாசெக் சிங்கப்பூராவின் முழுமையான வரலாற்றைத் தருவதாகத் தெரிகிறது என்கிறார்.

இவ்வரலாற்று நூலின்படி இராஜ ராஜ சோழன் என்னும் இந்திய மன்னர் பதினோராம் நூற்றாண்டில் தமது படையெடுப்புகளில் ஒன்றின் போது தெமாசெக்கில் தங்கியிருந்தாகத் தெரிகிறது. இச்சோழ ராஜனின் மகன், சாங் நீல உத்தமன். ஸ்ரீ விஜய எனும் பேரரசின் மையமாக விளங்கிய பலம்பாங் எனும் நாட்டின் அரசன் ஆனான் என்றும், ஸ்ரீ திரிபுவன எனும் பெயரை அவன் சூட்டிகொண்டான் என்றும் இந்த மரபு வரலாறு தெரிவிக்கிறது. இவ்வட்டாரத்தில் உத்தமன் மேற்கொண்ட பயணங்களின் போது தெமாசெக்கில் தரை இறங்கியதாகக் கூறப்படுகிது.

அவரின் ஆட்சியின்போதும், அவரைத் தொடந்த நான்கு அரசர்களின் ஆட்சியின் போது சிங்கப்பூரா செழித்தோங்கியது. அதனால் பொறாமையுற்ற மஜபாகிட் எனும் ஜாவா பேரரசு இத்தீவைச் சூறையாடியது. தப்பியோடிய அரசர் மலாக்காவில் புதிய ஆட்சியை நிறுவினார்.

சற்று ஏறக்குறைய 1390-ம் ஆண்டில் பரமேஸ்வரா என்னும் இளவரசர் பலம்பாங் நாட்டின் சிங்காசனம் ஏறினான். பலம்பாங்கை மீண்டும் பேரரசசாக விளங்கச் செய்யவேண்டும் என்பது அவரின் பேராவல். தன் எண்ணம் நிறைவேறுவதற்கு முன்னரே அங்கிருந்து துரத்தப்பட்ட அவர், சிங்கப்பூரில் தன் பரிவாரம் புடை சூழ தங்கினான். ஆனால், மஜபாகிட் பேரரசு அவரை விடவில்லை. சிங்கப்பூரிலிருந்தும் அவரைத் துரத்தியது. பரமேஸ்வரக்கும் பின் சிங்கப்பூர் ஆள் அரவற்ற இடமாக மாறவில்லை.

சிங்கப்பூர் சமயாமிய பேரரசுக்குக் கப்பம் கட்டும் நாடாக விளங்கியது. ஆனால் பரமேஸ்வரா தோற்றுவித்த மலாக்கா அரசு விரைவில் சிங்கப்பூர் வரை தனது அதிகாரத்தை செலுத்தத் தொடங்கியது. இருப்பினும் போர்த்துகீசியர்கள் மலாக்கா நகரை 1511 கைப்பற்றியபோது அவ்வரசின் கடற்படைத் தளபதி லட்சுமணா சிங்கப்பூருக்கு ஓடிவந்தார். சுல்தான் ஜோகூர் லாமாவின் (பழைய ஜோகூர்) தம் புதிய தலை நகரத்தை அமைத்துக் கொண்டதோடு, சிங்கப்பூரில் துறைமுக அலுவலகம் ஒன்றையும் நடத்தி வந்தார்.

போர்த்துகீசியர்கள் 1587-ம் ஆண்டில் ஜோகூர் லாமாவை அழித்து விட்டனர். ஜோகூர் அரசின் தலைமையகம் .ரியாவ்-லிங்காத் தீவுக் கூட்டத்தில் மீண்டும் அமைப்பட்டது. சுல்தானின் மூத்த அமைச்சரான தெமொகோங்கின் அதிகாரத்தில் சிங்கப்பூர் இருந்தது. கடலை நம்பி வாழ்பவர்களும், சிறிய கூட்டமாகச் சில உள்நாட்டு மக்களும் வாழ்ந்து வந்தனர்.

1819 -ஆம் ஆண்டில் பிரிட்டிஸ் கிழக்கிந்தியக் கம்பெனியின் நிர்வாக அதிகாரியாக சர் ஸ்டாம் போர்டு ராபிள்ஸ் என்பார் சிங்கப்பூருக்கு வந்தார். ஆறு கடலோடு கலக்கும் இடமாகவும், மீன் பிடி தீவாக இருந்த இத்தீவு கிழக்கிந்தியக் கம்பெனிக்குக் கிழக்காசியாவில் நடுநாயகமாக விளங்கச் சிங்கப்பூர் சிறந்த இடம் என அவர் எண்ணினார். அப்போதைய சிங்கப்பூரின் உரிமையாளராக விளங்கிய ஜோகூர் சுல்தானுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு கிழக்கிந்தியக் கம்பெனியின் வணிகத்தளமாகச் சிங்கப்பூரை மாற்றினார் ராபிளஸ். அப்போது சிங்கப்பூர் காடு மண்டிய ஒரு தீவாக இருந்தது. காட்டை அழித்து வணிக நிலையமாக்கும் பெரும் முயற்சியில் ஈடுபட்டார் ராபிள்ஸ்.

1959-ஆம் ஆண்டு வரை ஆங்கிலேயர் சிங்கப்பூரைத் தம் ஆளுகையின் கீழ் வைத்திருந்தார். 140 ஆண்டுகள் ஆங்கிலேயரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த சிங்கை 1959 இல் தன்னாட்சி உரிமை பெற்ற தனிநாடாகியது.

முதல் தேர்தல் 1959 -ஆம் நடைப்பெற்றது. அதில் மக்கள் செயல் கட்சி வெற்றிப் பெற்று திரு. லீ குவான் இயூ பிரதமராகி சிங்கப்பூரை வழி நடத்தினார்.

முதல் தேர்தல் 1959 -ஆம் நடைப்பெற்றது. அதில் மக்கள் செயல் கட்சி வெற்றிப் பெற்று திரு. லீ குவான் இயூ பிரதமராகி சிங்கப்பூரை வழி நடத்தினார்.

1963 –இல் சிங்கப்பூர் அன்றைய ‘மலாயா’வுடன் இணைந்தது. சிங்கப்பூர், மலாயா இணைந்த நாட்டை ‘மலேசியா’ என அழைத்தார்கள். ஆனால் இவ்விணைப்பு சுமார் ஒன்றரை ஆண்டுகளே நீடித்தது. கருத்து வேற்றுமையாலும்,கொள்கை வேற்றுமையாலும் 9-8-1965 ஆம் நாள் சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து பிரிந்து ஒரு தனி நாடாகியது.

சிங்கப்பூர் தனிக் குடியரசுயாகியது. அரசியல் தலைவர்களின் முன்னோக்குப் பார்வையால் சிங்கப்பூர் பல்வேறு மாற்றங்களைக் கண்டது. இயற்கைக் கனிவளங்கள் ஒன்றுமில்லா சின்னஞ்சிறு தீவு மக்கள் வளத்தை மட்டுமே நம்பியது. மலாயாவிலிருந்து பிரிந்த பின் பல்வேறு சமூக, அரசியல் பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டி இருந்தது. சின்னஞ்சிறு தீவான சிங்கப்பூரால் தனித்து ஒரு நாடாக இயங்க முடியுமா என்ற ஐயப்பாடு மக்கள் மனதில் தோன்றின. அந்த ஐயப்பாட்டைக் களைய, சிங்கப்பூர் பல ஆக்கப்பூர்வமான திட்டங்களை, செயல்பாடுகளை நிறைவேற்றியது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில், 1971- ஆம் ஆண்டு தூரகிழக்கில் தான் வைத்திருந்த இராணுவத்தை குறைக்கவே சுமார் 10,000 பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை இழந்தனர். சிங்கப்பூர் பாதுகாப்பிற்கு தன்னை நம்பவேண்டிய கட்டாய நிலையில், கட்டாய இராணுவ சேவையை ஆரம்பித்தது. மேலும் குடியிருப்பு,சமூகப் பிரச்சனைகளில் நாடு உடனே சமாளிக்க வேண்டியதாயிற்று. இதனால் பொருளாதார துறையில் நன்கு வளர்ச்சிக் கண்டது. இந்த வளர்ச்சி படிப்படியாக வளர்ந்து ஓர் உன்னத நிலையை அடைந்துள்ளது.

1819 ஆம் ஆண்டு முதல் இந்தியா, சீனா, இலங்கை போன்ற நாடுகளில் இருந்து வந்த குடியேறிய மக்களின் அரிய உழைப்பால் சிங்கை, சிறுகச் சிறுக மாநகரமாக மாறத் தொடங்கியது. தாம் குடியேறி இடத்தில் தங்களுடைய பண்பாடு, மொழி போன்றவற்றின் பாரம்பரியங்களை பல்வகை மக்களூம் பேணிக் காத்தனர். இதில் தமிழருடைய பங்கு சிறப்புக்குரியது.

சிங்கப்பூரில் தமிழர்

1880 - களிலிருந்து தமிழும், தமிழ் இலக்கியமும் தோன்றி வளரலாயிற்று. நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட வளர்ச்சியைச் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் பெற்றுள்ளது. 1993-ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக் கெடுப்பின்படி 2,873,000 மில்லியன் மக்கள் சிங்கப்பூரில் வாழ்கின்றனர்.
இதில் 77.5 விழுக்காட்டினர் சீனர்; 14.2 விழுக்காட்டினர் மலாய்க்காரர்; 7.1 விழுக்காட்டினர் இந்தியர்கள்; 1.2 விழுக்காட்டினர் பிற இனத்தவர்கள். இந்தியர்களுள் சுமார் 1 1/2 இலட்சம் தமிழர்களும் அடங்குவர்.

தமிழ்ப் பள்ளிகள்

தமிழகத்திலிருந்து வந்து குடியேறிய தமிழர்கள் தமிழின்பால் கொண்ட ஆர்வத்தால் பல தமிழ்ப்பள்ளிகளை உருவாக்கத் தொடங்கினர். தமிழையும், தமிழ்ப் பண்பாட்டையும் வளர்ப்பதற்குப் பெரும் முயற்சிகளைச் செய்துள்ளனர். ‘திருவள்ளுவர்’, ‘வாசுகி’’, ‘அரவிந்தர்’, ‘நாகம்மையார்’, ‘சாரதா தேவி’,‘கலைமகள்’, ‘உமறுப் புலவர்’ போன்ற பெயர்களில் இருபத்திரண்டுக்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகளை உருவாக்கினர்.

ஆலயங்கள்

தேடச் சென்ற தமிழர்கள், தங்கள் நாகரீகச் சின்னமாக விளங்கும் திருக்கோயில்களையும் சென்ற இடங்களில் எல்லாம் படைத்தளிக்க மறந்தார்கள் இல்லை. தமிழர்கள் சென்ற இடங்களில் எல்லாம் தாங்கள் சீரும் சிறப்பாக வாழ்கிறார்களோ இல்லையே, திருக்கோயில்கள் சீரும் சிறப்பும் பெற்று திகழ்ந்தன். இருக்க இடம் உண்ண உணவு இல்லை என்றாலும் இறைவனுக்கு ஆலயம் எழுப்பி இன்பம் கண்டான்.

அழியும் உடலுக்குள் இருக்கும் அழியா ஒன்றுக்கு, ஆன்மா என்று கண்டான். அந்த ஆன்மா போகுமிடங்களில் மதிப்பளிக்கப் படவேண்டும் என்று இறைவழி பாட்டைத் துவங்கினர். இந்து சமயம் ஒரு ஆழ்கடல் போன்றது. அதில் சேர்ந்துள்ள மொழிகளும், பண்பாடுகளும் புத்தம் புதிய கருத்துகளைக் கொண்டு சேர்த்தவை. அவற்றை எல்லாம் இயன்ற வரை ஆங்காங்கே புகுத்திய நிலையில் தான் கோயில்கள் தோன்றம் அளிக்கிறது.


நன்றி:- சிங்கை கிருஷ்ணன்

என்ன கொடுமை சரவணன் இது? - விமல்



படிக்க

ஒளவையாரின் இலக்கிய இன்பம்

ஒருமுறை ஒளவையாருக்கு ஒரு கறவை ஆடு தேவைப்பட்டது. அதனை வாங்கிவர ஒரு சிற்றூருக்கு சென்றார். அங்கே வாதகோன் என்ற இடையனைக் கண்டார். அவனிடம் தனக்கு ஒரு ஆடு வேண்டும் என்று கேட்டார். "நாளைக்கு வா" என்று சாக்கு போக்கு சொன்னான்.

சரியென அங்கிருந்து புறப்பட்டு இன்னொரு இடையனைக் கண்டு பேசினார். அவன் பெயர் வையகோன். அவனிடம் தனக்கு ஒரு ஆடு விலலக்கு தரமுடியுமா என்று கேட்டார். அவனோ "பின்னே வா"(பிறகு வா) என்று சொல்லிவிட்டு மரத்தடியில் உறங்குவதற்காக சென்று விட்டான்.

அப்படியும் மனம் தளராத ஒளவையார் இன்னொருவரிடம் முயற்சி செய்வோமே என்று எண்ணி தள்ளாத வயதிலும் கடும் வெயிலில் பக்கத்துக்கு ஊருக்கு சென்றார். அங்கே ஒரு இடையனைக் கண்டார். அவன் பெயர் யாதகோன். அவனிடம் ஒரு ஆட்டினை கேட்டார். அவனோ தன்னிடம் ஆடு இருந்தும் கொடுக்க மனமில்லாமல் "என்னிடம் இல்லை போ" என்று சொல்லி அவரை விரட்டினான். 'பரவாயில்லை நன்றியப்பா' என்று சொல்லிவிட்டு தன் இருப்பிடத்திற்கு வந்து சேர்ந்தார்.

மனம் கவலைப்பட்ட அவர் எடுத்தார் தன் எழுதுகோலை. எழுதினார் கீழ்க்கண்டவாறு:-

வாதகோன் நாளை என்றான்
வையகோன் பின்னே என்றான்
யாதகோன் யாதெனும் இல்லை என்றான்.
ஓதக்கேள்,
வாதகோன் நாளையிலும்
வையகோன் பின்னேயிலும்
யாதகோன் யாதெனும் இல்லை என்று
உரைத்ததே இனிது.


ஒருவர் ஒருபொருளை நாளை தருவதாகக் கூறினாலும் அல்லது பின்னே தருகிறேன் என்று சொன்னாலும் அது துன்பம் தரத்தக்கதே. ஒருவர் தர மனமில்லாமல் "என்னிடம் இல்லை" எனக் கூறும் ஒரு வார்த்தை பிறரை அலைக்கழிக்காமல் அவருக்கு ஒருவகையில் நன்மை செய்வதற்கு ஒப்பாகும். இதுபோன்று யாதகோனில் இல்லை என்ற வார்த்தை இனிதாகப் பட்டது ஒளவையாருக்கு!

மேலும் படிக்க

மலாக்காவை ஆண்டது தமிழ் மன்னனா?

மலாக்கா பற்றி விக்னேஸ்வரன் அடைக்கலம் என்பவர் எழுதி இருந்தார். அதனைப் படித்ததும் இந்த பதிவு.

மலேசியாவின் மலாக்காவை எந்த தமிழ் மன்னனும் ஆட்சி செய்யவில்லை! மலாக்காவை ஆண்ட பரமேஸ்வரன் இந்தோனேசியா சுமத்ரா தீவைச் சேர்ந்து இந்து. ஆனால் மலாய் மொழி பேசக்கூடியவர்.

மலாக்காவில் மட்டுமின்றி மலேசியாவிலேயே எந்த தமிழ் மன்னரும் ஆட்சி செய்யவில்லை என்பதுதான் உண்மை. ராஜராஜ சோழன் தமிழ்நாடு - சீனா வாணிகத்தில் ஈடுபட்டிருந்த தமிழக வணிகர்களின் நலன்களை காப்பாற்றுவதற்காக கடாரத்தைக் கைப்பற்றினான். அதனால் அவனுக்கு கடாரம் கொண்டான் என்ற பெயரும் உண்டு. அது இன்றுக்கு கெடா என்று அழைக்கப்படுகிறது.

லங்காவியில் இருந்து சிங்கப்பூர் வரைக்கும் உள்ள மலாக்கா நீரிணையை காக்கும் பொறுப்பினை ராஜராஜ சோழனின் ஆட்கள் பார்த்துக் கொண்டனர். அவனுடைய படைவீரர்கள் மலேசியாவின் கடலோரத்தில் பல இடங்களில் முகாம் இட்டிருந்தனர்!

கடாரம் கொண்ட ராஜராஜ சோழன் மலேசியாவில் இருந்த மலாய் அரசர்களுக்கு என்னென்ன உதவிகள் செய்தான் என்பதை கவிச்சுடர் காரைக்கிழார் அவர்கள் சொல்லோவியத்தில் எழுதி உள்ளார்.

பரமேஸ்வரன் முதலில் சுமத்ரா தீவில் இருந்து தெமாசெக் என்று அழைக்கப்படும் சிங்கப்பூருக்கு வருகிறான். அவனை மெஜாபாகிட் தாக்குதல்காரர்கள் விடாமல் துரத்துகின்றனர். அவர்களிடம் இருந்து தப்பித்து தன் ஆதரவாளர்களோடு செலத்தார் நதி வழியாக மூவார் வருகிறான். தொடர்ந்து வடக்கே நகர்ந்து 1402ம் ஆண்டில் மலாக்காவில் தன் அரசை நிறுவுகிறான்.

பதினைந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மலாக்கா முக்கியத்துவமற்ற மீனவர் கிராமமாகத்தான் இருந்தது. மக்கள் தொகையும் அதிகமில்லல. தெமாசெக், மூவார், சுங்கை உஜோங் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களுடன் ஓராங் லவுட் என்ற கடல் நாடோடிகள் மட்டுமே அங்கு வசித்தனர்! மன்னன் பரமேஸ்வரன் பாசாய் இளவரசியை மணந்து முஸ்லிமாக மாறுகிறான். அதன்பிறகு அவன் பெயர் இஸ்கந்தர் ஷா என்று மாறுகிறது!

இஸ்கந்தர் ஷாவைத் தொடர்ந்து அவருடைய புதல்வர் மெகாட் இஸ்கந்தர்ஷா அரியணை ஏறுகிறார். அவர் 10 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்.

மலாக்காவின் மூன்றாவது மன்னர் ராஜா தெங்கா என்கிற ராடின் தெங்கா. இவர் இஸ்லாத்தை தழுவி தமிழ் முஸ்லிம் பெண்ணை மணந்து பின் முகம்மது ஷா என்று பெயர் மாறுகிறார்.

இவரின் மரணத்தைத் தொடர்ந்து ரோகான் இளவரசியின் மகனான ராஜா இப்ராஹிம் பட்டத்துக்கு வருகிறார். ஆனால் அப்போது பாரம்பரிய மலாய் இந்துக்களுக்கும் வளர்ந்து வந்த தமிழ் முஸ்லிம் சமுதாயத்துக்கும் இடையில் பெரும் நெருக்கடி நிலவியதால் முஸ்லிமாக மாறுவதற்கு மறுத்து ஸ்ரீ பரமேஸ்வர தேவாஷா என்கிற பெயருடன் ஆட்சி புரிந்த ராஜா இப்ராஹிம் அரியணை அமர்ந்த 17வது மாதத்தில் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார்.

இவருடைய ஒன்றுவிட்ட சகோதரரான தமிழ் முஸ்லிம் தாய்க்குப் பிறந்த ராஜா காசிம், சுல்தான் முஸாஃபர் ஷா என்ற பெயருடன் அடுத்து பட்டத்துக்கு வருகிறார். மலாக்கா சாம்ராஜ்யத்தின் பொற்காலம் அப்போதுதான் ஆரம்பத்துக்கு வருகிறது!