செல்வமுரளியும் நடிகை விந்தியாவும்!

முதன் முதலில் இங்கே எனது அனுபவங்களை பகிர்ந்துகொள்வதால் ஒரு கிளுகிளுப்பாக கவர்ச்சி நடிகை விந்தியா பற்றிய செய்தியை இங்கே நான் பகிர்ந்து கொள்கிறேன்.

நான் முதன்முதலில் சேர்ந்த அந்த தமிழ் செய்திதாளில் முதலில் யார் புதியதாக பணிக்கு சேர்ந்தாலும் அங்கே முதலில் செய்திகளைதான் அடிக்க வேண்டும். செய்திகளை வேகமாகவும், பிழையில்லாமல் அடித்தால் மட்டுமே அடுத்த கட்டமாக விளம்பரங்களை செய்ய அனுமதிக்கப் படுவார்கள். விளம்பர கட்டத்தை முடித்தவுடன்தான் பக்க வடிவமைப்புக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

எனது பத்திரிக்கை துறையின் அனுபவத்தில் பத்திரிக்கை துறையில் வரும் செய்திகள் மக்களை சென்றடையும் வேகம், மற்றும் அதில் ஏதேனும் ஒரு பிழை வந்தால் அது எத்தனை ப்ரச்னைகளை ஏற்படுத்தும் என்பதையும் அறிய முடிந்தது.

அன்று வழக்கம்போல் மாலை 6 மணிக்கு அலுவலகம் வந்தவுடன் அன்று வழக்கத்திற்கு மாறாக ஆபிஸ் சற்று வேகமாக இயங்குவதாக தோன்றியது. உள்ளே சென்றவுடன் தெரிந்தது. ஓசூரில் ஒரு ஷூட்டிங்கில் நடிகை விந்தியாவை யாரோ கற்பழிக்க முயன்றது தான் அந்த பரபரப்புக்கு காரணம் என்று தகவல்தான் வந்துள்ளது. இன்னும் விரிவாக நியூஸ் வரவில்லை என்பதால் சென்னை அலுவலகத்தில் இருந்து இங்கே கேள்வி மேல் கேள்வி.

ஒருவழியாக அந்த நியூஸ் பேக்ஸ் வழியாக அலுவலகத்திற்கு வந்தது. வந்தவுடன் எங்களுடைய சப்-எடிட்டர் என்னிடம் வந்து இந்த செய்தியை நீயே அடித்து டூ-ஆல் (எல்லா பதிப்புகளும் அனுப்பி விடுவது) அனுப்பிவிடு என்றார்.

நானும் செய்தியை அடித்துக் கொண்டிருக்கும்போதே எடிட்டர் என்னப்பா நியூஸ் அடிச்சாச்சா என்றார். நானும் அடித்துக் கொண்டிருகிறேன் என்றுவிட்டு இன்னும் வேகமாக அடித்து முடித்துவிட்டு ப்ரூப் செக்ஷனுக்கு சென்று கொடுத்து அவசர அவசமாக படித்து வாங்கிவந்து சப்-எடிட்டர் அவர்களிடம் கொடுத்தேன். அவரும் செய்தியை சற்று எடிட் செய்துவிட்டு அதற்கேற்றார்போல் மாற்றி அனுப்ப சொன்னார்.

நானும் செய்தியை மாற்றிவிட்டு உடனடியாக அனைத்து பதிப்புகளுக்கும் அனுப்பியாகிவிட்டது.

இரவு 12.30 மணிக்கு செய்திதாள் ஓடி வந்த பிறகு என்னுடைய எடிட்டர் என்னை அழைப்பதாக தகவல் வந்தது. அவருடைய அறைக்கு சென்றேன். அங்கே சென்றபிறகு அந்த செய்தியை படிக்கச்சொன்னார். அதில் இவ்வாறு இருந்தது.

நடிகை விந்தியாவை வாலிபர் கற்பழிக்க முயற்சி, நடிகை விந்தியா தங்கியிருந்த ஓட்டலில் பாரில் மருந்து அருந்திவிட்டு வந்த வாலிபர் கற்பழிக்க முயற்சி என்று இருந்தது.

எடிட்டர் " ஏன்யா எந்த ஊர்ல போய் பாரில் போய் மருந்து சாப்பிடுவாங்களா? இல்லை மது சாப்பிடுவரா என்று? எனக்கோ சிரிப்பு? அந்த செய்தியை படித்தபின் அந்த மாதிரி இருந்தது.

உடனே ப்ரூப்பில் இருந்து அந்த பேக்சை வாங்கி வந்தனர். அதில் மது அருந்து என்றுதான் இருந்தது. நான் ப்ரூப்பிற்கு அனுப்பியதிலும் சரியாகத்தான் இருந்தது. இதில் என்ன மாற்றம் எனில் செய்தியை சப்-எடிட்டர் மாற்றம் செய்ய சொன்னபோது அங்கே நான் மது அருந்தி என்று இருந்த்தை தவறுதலாக அந்த துஅ என்பதை எப்படியோ டெலிட் செய்துவிட்டிருந்தேன்.

உடனடியாக அனைத்து பதிப்புகளுக்கும் தகவல் அனுப்பப் பட்டது. ஆனால் மற்ற பதிப்பினரோ நடிகை விந்தியா தங்கியிந்த ஓட்டலில் பாரில் " மருந்து" அருந்திவிட்டு வந்த வாலிபர் கற்பழிக்க முயற்சி என்று இருந்தது. என்று பிழையில்லாமல் வெளியிட்டு விட்டனர். ஆனால் இங்கே எங்களுடைய பதிப்பில் அவசர அவசரமாக நிறுத்தி மெஷினை நிறுத்தி உடனடியாக மாற்றம் செய்த தகவலை வெளியிட்டோம்.

அந்த நேரத்தில் அப்பப்பா எனக்கோ வேர்த்து விறுவிறுத்து விட்டது. சேர்ந்து சில மாதங்கள் கூட இல்லை. என்னடா இப்படியாகி விட்டதே என்று. அதுதான் என் முதல் அனுபவம் பத்திரிக்கை துறையில்.

மீண்டும் சந்திக்கிறேன்.................

அன்புடன்
செல்வமுரளி

சிங்கப்பூர் வரலாறு

சிங்கபுரம்

சிங்கப்பூரின் பண்டைக் காலம் பற்றி எழுத்து வடிவப்பதிவுகள் கோர்வையாக இல்லை, அங்கொன்றும் இங்கு கொன்றுமாகச் சிலவைதான் கிடைத்துள்ளன. இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரம் சிங்கபுரம் என்ற ஒரு நகரைக் குறிப்பிடுகிறது.

இவ்வாட்டாரத்தில் முதல் வரலாற்று ஆவணமாக விளங்கும் நகரகிரேத்தாகமா எனும் ஜாவானிய நூல் 1365-ம் ஆண்டில் எழுதபட்டது. இது தெமாசெக் எனும் குடியேற்றப் பகுதியைப் பற்றி குறிப்பிடுகிறது. சி.எம். டர்ன்புல் என்பார் தமது நூலில் (சிங்கப்பூர் வரலாறு 1819-1975).

பதினேழாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட செஜாரா மலாயு எனும் மலாட் மரபு வரலாற்று நூல் மட்டுமே தெமாசெக் சிங்கப்பூராவின் முழுமையான வரலாற்றைத் தருவதாகத் தெரிகிறது என்கிறார்.

இவ்வரலாற்று நூலின்படி இராஜ ராஜ சோழன் என்னும் இந்திய மன்னர் பதினோராம் நூற்றாண்டில் தமது படையெடுப்புகளில் ஒன்றின் போது தெமாசெக்கில் தங்கியிருந்தாகத் தெரிகிறது. இச்சோழ ராஜனின் மகன், சாங் நீல உத்தமன். ஸ்ரீ விஜய எனும் பேரரசின் மையமாக விளங்கிய பலம்பாங் எனும் நாட்டின் அரசன் ஆனான் என்றும், ஸ்ரீ திரிபுவன எனும் பெயரை அவன் சூட்டிகொண்டான் என்றும் இந்த மரபு வரலாறு தெரிவிக்கிறது. இவ்வட்டாரத்தில் உத்தமன் மேற்கொண்ட பயணங்களின் போது தெமாசெக்கில் தரை இறங்கியதாகக் கூறப்படுகிது.

அவரின் ஆட்சியின்போதும், அவரைத் தொடந்த நான்கு அரசர்களின் ஆட்சியின் போது சிங்கப்பூரா செழித்தோங்கியது. அதனால் பொறாமையுற்ற மஜபாகிட் எனும் ஜாவா பேரரசு இத்தீவைச் சூறையாடியது. தப்பியோடிய அரசர் மலாக்காவில் புதிய ஆட்சியை நிறுவினார்.

சற்று ஏறக்குறைய 1390-ம் ஆண்டில் பரமேஸ்வரா என்னும் இளவரசர் பலம்பாங் நாட்டின் சிங்காசனம் ஏறினான். பலம்பாங்கை மீண்டும் பேரரசசாக விளங்கச் செய்யவேண்டும் என்பது அவரின் பேராவல். தன் எண்ணம் நிறைவேறுவதற்கு முன்னரே அங்கிருந்து துரத்தப்பட்ட அவர், சிங்கப்பூரில் தன் பரிவாரம் புடை சூழ தங்கினான். ஆனால், மஜபாகிட் பேரரசு அவரை விடவில்லை. சிங்கப்பூரிலிருந்தும் அவரைத் துரத்தியது. பரமேஸ்வரக்கும் பின் சிங்கப்பூர் ஆள் அரவற்ற இடமாக மாறவில்லை.

சிங்கப்பூர் சமயாமிய பேரரசுக்குக் கப்பம் கட்டும் நாடாக விளங்கியது. ஆனால் பரமேஸ்வரா தோற்றுவித்த மலாக்கா அரசு விரைவில் சிங்கப்பூர் வரை தனது அதிகாரத்தை செலுத்தத் தொடங்கியது. இருப்பினும் போர்த்துகீசியர்கள் மலாக்கா நகரை 1511 கைப்பற்றியபோது அவ்வரசின் கடற்படைத் தளபதி லட்சுமணா சிங்கப்பூருக்கு ஓடிவந்தார். சுல்தான் ஜோகூர் லாமாவின் (பழைய ஜோகூர்) தம் புதிய தலை நகரத்தை அமைத்துக் கொண்டதோடு, சிங்கப்பூரில் துறைமுக அலுவலகம் ஒன்றையும் நடத்தி வந்தார்.

போர்த்துகீசியர்கள் 1587-ம் ஆண்டில் ஜோகூர் லாமாவை அழித்து விட்டனர். ஜோகூர் அரசின் தலைமையகம் .ரியாவ்-லிங்காத் தீவுக் கூட்டத்தில் மீண்டும் அமைப்பட்டது. சுல்தானின் மூத்த அமைச்சரான தெமொகோங்கின் அதிகாரத்தில் சிங்கப்பூர் இருந்தது. கடலை நம்பி வாழ்பவர்களும், சிறிய கூட்டமாகச் சில உள்நாட்டு மக்களும் வாழ்ந்து வந்தனர்.

1819 -ஆம் ஆண்டில் பிரிட்டிஸ் கிழக்கிந்தியக் கம்பெனியின் நிர்வாக அதிகாரியாக சர் ஸ்டாம் போர்டு ராபிள்ஸ் என்பார் சிங்கப்பூருக்கு வந்தார். ஆறு கடலோடு கலக்கும் இடமாகவும், மீன் பிடி தீவாக இருந்த இத்தீவு கிழக்கிந்தியக் கம்பெனிக்குக் கிழக்காசியாவில் நடுநாயகமாக விளங்கச் சிங்கப்பூர் சிறந்த இடம் என அவர் எண்ணினார். அப்போதைய சிங்கப்பூரின் உரிமையாளராக விளங்கிய ஜோகூர் சுல்தானுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு கிழக்கிந்தியக் கம்பெனியின் வணிகத்தளமாகச் சிங்கப்பூரை மாற்றினார் ராபிளஸ். அப்போது சிங்கப்பூர் காடு மண்டிய ஒரு தீவாக இருந்தது. காட்டை அழித்து வணிக நிலையமாக்கும் பெரும் முயற்சியில் ஈடுபட்டார் ராபிள்ஸ்.

1959-ஆம் ஆண்டு வரை ஆங்கிலேயர் சிங்கப்பூரைத் தம் ஆளுகையின் கீழ் வைத்திருந்தார். 140 ஆண்டுகள் ஆங்கிலேயரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த சிங்கை 1959 இல் தன்னாட்சி உரிமை பெற்ற தனிநாடாகியது.

முதல் தேர்தல் 1959 -ஆம் நடைப்பெற்றது. அதில் மக்கள் செயல் கட்சி வெற்றிப் பெற்று திரு. லீ குவான் இயூ பிரதமராகி சிங்கப்பூரை வழி நடத்தினார்.

முதல் தேர்தல் 1959 -ஆம் நடைப்பெற்றது. அதில் மக்கள் செயல் கட்சி வெற்றிப் பெற்று திரு. லீ குவான் இயூ பிரதமராகி சிங்கப்பூரை வழி நடத்தினார்.

1963 –இல் சிங்கப்பூர் அன்றைய ‘மலாயா’வுடன் இணைந்தது. சிங்கப்பூர், மலாயா இணைந்த நாட்டை ‘மலேசியா’ என அழைத்தார்கள். ஆனால் இவ்விணைப்பு சுமார் ஒன்றரை ஆண்டுகளே நீடித்தது. கருத்து வேற்றுமையாலும்,கொள்கை வேற்றுமையாலும் 9-8-1965 ஆம் நாள் சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து பிரிந்து ஒரு தனி நாடாகியது.

சிங்கப்பூர் தனிக் குடியரசுயாகியது. அரசியல் தலைவர்களின் முன்னோக்குப் பார்வையால் சிங்கப்பூர் பல்வேறு மாற்றங்களைக் கண்டது. இயற்கைக் கனிவளங்கள் ஒன்றுமில்லா சின்னஞ்சிறு தீவு மக்கள் வளத்தை மட்டுமே நம்பியது. மலாயாவிலிருந்து பிரிந்த பின் பல்வேறு சமூக, அரசியல் பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டி இருந்தது. சின்னஞ்சிறு தீவான சிங்கப்பூரால் தனித்து ஒரு நாடாக இயங்க முடியுமா என்ற ஐயப்பாடு மக்கள் மனதில் தோன்றின. அந்த ஐயப்பாட்டைக் களைய, சிங்கப்பூர் பல ஆக்கப்பூர்வமான திட்டங்களை, செயல்பாடுகளை நிறைவேற்றியது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில், 1971- ஆம் ஆண்டு தூரகிழக்கில் தான் வைத்திருந்த இராணுவத்தை குறைக்கவே சுமார் 10,000 பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை இழந்தனர். சிங்கப்பூர் பாதுகாப்பிற்கு தன்னை நம்பவேண்டிய கட்டாய நிலையில், கட்டாய இராணுவ சேவையை ஆரம்பித்தது. மேலும் குடியிருப்பு,சமூகப் பிரச்சனைகளில் நாடு உடனே சமாளிக்க வேண்டியதாயிற்று. இதனால் பொருளாதார துறையில் நன்கு வளர்ச்சிக் கண்டது. இந்த வளர்ச்சி படிப்படியாக வளர்ந்து ஓர் உன்னத நிலையை அடைந்துள்ளது.

1819 ஆம் ஆண்டு முதல் இந்தியா, சீனா, இலங்கை போன்ற நாடுகளில் இருந்து வந்த குடியேறிய மக்களின் அரிய உழைப்பால் சிங்கை, சிறுகச் சிறுக மாநகரமாக மாறத் தொடங்கியது. தாம் குடியேறி இடத்தில் தங்களுடைய பண்பாடு, மொழி போன்றவற்றின் பாரம்பரியங்களை பல்வகை மக்களூம் பேணிக் காத்தனர். இதில் தமிழருடைய பங்கு சிறப்புக்குரியது.

சிங்கப்பூரில் தமிழர்

1880 - களிலிருந்து தமிழும், தமிழ் இலக்கியமும் தோன்றி வளரலாயிற்று. நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட வளர்ச்சியைச் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் பெற்றுள்ளது. 1993-ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக் கெடுப்பின்படி 2,873,000 மில்லியன் மக்கள் சிங்கப்பூரில் வாழ்கின்றனர்.
இதில் 77.5 விழுக்காட்டினர் சீனர்; 14.2 விழுக்காட்டினர் மலாய்க்காரர்; 7.1 விழுக்காட்டினர் இந்தியர்கள்; 1.2 விழுக்காட்டினர் பிற இனத்தவர்கள். இந்தியர்களுள் சுமார் 1 1/2 இலட்சம் தமிழர்களும் அடங்குவர்.

தமிழ்ப் பள்ளிகள்

தமிழகத்திலிருந்து வந்து குடியேறிய தமிழர்கள் தமிழின்பால் கொண்ட ஆர்வத்தால் பல தமிழ்ப்பள்ளிகளை உருவாக்கத் தொடங்கினர். தமிழையும், தமிழ்ப் பண்பாட்டையும் வளர்ப்பதற்குப் பெரும் முயற்சிகளைச் செய்துள்ளனர். ‘திருவள்ளுவர்’, ‘வாசுகி’’, ‘அரவிந்தர்’, ‘நாகம்மையார்’, ‘சாரதா தேவி’,‘கலைமகள்’, ‘உமறுப் புலவர்’ போன்ற பெயர்களில் இருபத்திரண்டுக்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகளை உருவாக்கினர்.

ஆலயங்கள்

தேடச் சென்ற தமிழர்கள், தங்கள் நாகரீகச் சின்னமாக விளங்கும் திருக்கோயில்களையும் சென்ற இடங்களில் எல்லாம் படைத்தளிக்க மறந்தார்கள் இல்லை. தமிழர்கள் சென்ற இடங்களில் எல்லாம் தாங்கள் சீரும் சிறப்பாக வாழ்கிறார்களோ இல்லையே, திருக்கோயில்கள் சீரும் சிறப்பும் பெற்று திகழ்ந்தன். இருக்க இடம் உண்ண உணவு இல்லை என்றாலும் இறைவனுக்கு ஆலயம் எழுப்பி இன்பம் கண்டான்.

அழியும் உடலுக்குள் இருக்கும் அழியா ஒன்றுக்கு, ஆன்மா என்று கண்டான். அந்த ஆன்மா போகுமிடங்களில் மதிப்பளிக்கப் படவேண்டும் என்று இறைவழி பாட்டைத் துவங்கினர். இந்து சமயம் ஒரு ஆழ்கடல் போன்றது. அதில் சேர்ந்துள்ள மொழிகளும், பண்பாடுகளும் புத்தம் புதிய கருத்துகளைக் கொண்டு சேர்த்தவை. அவற்றை எல்லாம் இயன்ற வரை ஆங்காங்கே புகுத்திய நிலையில் தான் கோயில்கள் தோன்றம் அளிக்கிறது.


நன்றி:- சிங்கை கிருஷ்ணன்

என்ன கொடுமை சரவணன் இது? - விமல்



படிக்க

ஒளவையாரின் இலக்கிய இன்பம்

ஒருமுறை ஒளவையாருக்கு ஒரு கறவை ஆடு தேவைப்பட்டது. அதனை வாங்கிவர ஒரு சிற்றூருக்கு சென்றார். அங்கே வாதகோன் என்ற இடையனைக் கண்டார். அவனிடம் தனக்கு ஒரு ஆடு வேண்டும் என்று கேட்டார். "நாளைக்கு வா" என்று சாக்கு போக்கு சொன்னான்.

சரியென அங்கிருந்து புறப்பட்டு இன்னொரு இடையனைக் கண்டு பேசினார். அவன் பெயர் வையகோன். அவனிடம் தனக்கு ஒரு ஆடு விலலக்கு தரமுடியுமா என்று கேட்டார். அவனோ "பின்னே வா"(பிறகு வா) என்று சொல்லிவிட்டு மரத்தடியில் உறங்குவதற்காக சென்று விட்டான்.

அப்படியும் மனம் தளராத ஒளவையார் இன்னொருவரிடம் முயற்சி செய்வோமே என்று எண்ணி தள்ளாத வயதிலும் கடும் வெயிலில் பக்கத்துக்கு ஊருக்கு சென்றார். அங்கே ஒரு இடையனைக் கண்டார். அவன் பெயர் யாதகோன். அவனிடம் ஒரு ஆட்டினை கேட்டார். அவனோ தன்னிடம் ஆடு இருந்தும் கொடுக்க மனமில்லாமல் "என்னிடம் இல்லை போ" என்று சொல்லி அவரை விரட்டினான். 'பரவாயில்லை நன்றியப்பா' என்று சொல்லிவிட்டு தன் இருப்பிடத்திற்கு வந்து சேர்ந்தார்.

மனம் கவலைப்பட்ட அவர் எடுத்தார் தன் எழுதுகோலை. எழுதினார் கீழ்க்கண்டவாறு:-

வாதகோன் நாளை என்றான்
வையகோன் பின்னே என்றான்
யாதகோன் யாதெனும் இல்லை என்றான்.
ஓதக்கேள்,
வாதகோன் நாளையிலும்
வையகோன் பின்னேயிலும்
யாதகோன் யாதெனும் இல்லை என்று
உரைத்ததே இனிது.


ஒருவர் ஒருபொருளை நாளை தருவதாகக் கூறினாலும் அல்லது பின்னே தருகிறேன் என்று சொன்னாலும் அது துன்பம் தரத்தக்கதே. ஒருவர் தர மனமில்லாமல் "என்னிடம் இல்லை" எனக் கூறும் ஒரு வார்த்தை பிறரை அலைக்கழிக்காமல் அவருக்கு ஒருவகையில் நன்மை செய்வதற்கு ஒப்பாகும். இதுபோன்று யாதகோனில் இல்லை என்ற வார்த்தை இனிதாகப் பட்டது ஒளவையாருக்கு!

மேலும் படிக்க

மலாக்காவை ஆண்டது தமிழ் மன்னனா?

மலாக்கா பற்றி விக்னேஸ்வரன் அடைக்கலம் என்பவர் எழுதி இருந்தார். அதனைப் படித்ததும் இந்த பதிவு.

மலேசியாவின் மலாக்காவை எந்த தமிழ் மன்னனும் ஆட்சி செய்யவில்லை! மலாக்காவை ஆண்ட பரமேஸ்வரன் இந்தோனேசியா சுமத்ரா தீவைச் சேர்ந்து இந்து. ஆனால் மலாய் மொழி பேசக்கூடியவர்.

மலாக்காவில் மட்டுமின்றி மலேசியாவிலேயே எந்த தமிழ் மன்னரும் ஆட்சி செய்யவில்லை என்பதுதான் உண்மை. ராஜராஜ சோழன் தமிழ்நாடு - சீனா வாணிகத்தில் ஈடுபட்டிருந்த தமிழக வணிகர்களின் நலன்களை காப்பாற்றுவதற்காக கடாரத்தைக் கைப்பற்றினான். அதனால் அவனுக்கு கடாரம் கொண்டான் என்ற பெயரும் உண்டு. அது இன்றுக்கு கெடா என்று அழைக்கப்படுகிறது.

லங்காவியில் இருந்து சிங்கப்பூர் வரைக்கும் உள்ள மலாக்கா நீரிணையை காக்கும் பொறுப்பினை ராஜராஜ சோழனின் ஆட்கள் பார்த்துக் கொண்டனர். அவனுடைய படைவீரர்கள் மலேசியாவின் கடலோரத்தில் பல இடங்களில் முகாம் இட்டிருந்தனர்!

கடாரம் கொண்ட ராஜராஜ சோழன் மலேசியாவில் இருந்த மலாய் அரசர்களுக்கு என்னென்ன உதவிகள் செய்தான் என்பதை கவிச்சுடர் காரைக்கிழார் அவர்கள் சொல்லோவியத்தில் எழுதி உள்ளார்.

பரமேஸ்வரன் முதலில் சுமத்ரா தீவில் இருந்து தெமாசெக் என்று அழைக்கப்படும் சிங்கப்பூருக்கு வருகிறான். அவனை மெஜாபாகிட் தாக்குதல்காரர்கள் விடாமல் துரத்துகின்றனர். அவர்களிடம் இருந்து தப்பித்து தன் ஆதரவாளர்களோடு செலத்தார் நதி வழியாக மூவார் வருகிறான். தொடர்ந்து வடக்கே நகர்ந்து 1402ம் ஆண்டில் மலாக்காவில் தன் அரசை நிறுவுகிறான்.

பதினைந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மலாக்கா முக்கியத்துவமற்ற மீனவர் கிராமமாகத்தான் இருந்தது. மக்கள் தொகையும் அதிகமில்லல. தெமாசெக், மூவார், சுங்கை உஜோங் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களுடன் ஓராங் லவுட் என்ற கடல் நாடோடிகள் மட்டுமே அங்கு வசித்தனர்! மன்னன் பரமேஸ்வரன் பாசாய் இளவரசியை மணந்து முஸ்லிமாக மாறுகிறான். அதன்பிறகு அவன் பெயர் இஸ்கந்தர் ஷா என்று மாறுகிறது!

இஸ்கந்தர் ஷாவைத் தொடர்ந்து அவருடைய புதல்வர் மெகாட் இஸ்கந்தர்ஷா அரியணை ஏறுகிறார். அவர் 10 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்.

மலாக்காவின் மூன்றாவது மன்னர் ராஜா தெங்கா என்கிற ராடின் தெங்கா. இவர் இஸ்லாத்தை தழுவி தமிழ் முஸ்லிம் பெண்ணை மணந்து பின் முகம்மது ஷா என்று பெயர் மாறுகிறார்.

இவரின் மரணத்தைத் தொடர்ந்து ரோகான் இளவரசியின் மகனான ராஜா இப்ராஹிம் பட்டத்துக்கு வருகிறார். ஆனால் அப்போது பாரம்பரிய மலாய் இந்துக்களுக்கும் வளர்ந்து வந்த தமிழ் முஸ்லிம் சமுதாயத்துக்கும் இடையில் பெரும் நெருக்கடி நிலவியதால் முஸ்லிமாக மாறுவதற்கு மறுத்து ஸ்ரீ பரமேஸ்வர தேவாஷா என்கிற பெயருடன் ஆட்சி புரிந்த ராஜா இப்ராஹிம் அரியணை அமர்ந்த 17வது மாதத்தில் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார்.

இவருடைய ஒன்றுவிட்ட சகோதரரான தமிழ் முஸ்லிம் தாய்க்குப் பிறந்த ராஜா காசிம், சுல்தான் முஸாஃபர் ஷா என்ற பெயருடன் அடுத்து பட்டத்துக்கு வருகிறார். மலாக்கா சாம்ராஜ்யத்தின் பொற்காலம் அப்போதுதான் ஆரம்பத்துக்கு வருகிறது!

பாரம்பரிய இசையின் தாக்கம் - டாக்டர் பெருமாள்

பாரம்பர்ய இசையின் தாக்கம் பற்றியமேலைத்தேய இசையின் ஊடுருவல் அதிகரித்து வரும் இன்றையச் சூழலில்இளைய சமூகத்தை பாரம்பர்யத்தின் பக்கம் திருப்பம் கண்டிப்பாக முடியும் அதற்க்கு உதாரனம் தான் இன்றைய ரீமேக் பாடல்கள்.

மற்றும் கர்னாடக சங்கீதங்கள் காலத்தால் அழியாது இசையை நாம் உருவாக்கவில்லை ஒம் என்ற பிரனவ நாதத்தில் இருந்தும் இறைவனாலே உருவானதே பாரம்மர்ய இசை இதை யாராலும் அழிக்க முடியாது

தற்ப்போது இளைங்கர்களின் பார்வையும் பாரம்பரிய இசையில் தான் புது இசையில் அவர்கலுக்கு தலை வலிதான் மிச்சம் சூட்சும ராகம் சரியாக அமைக்காமல் வாத்திய கருவிகளை டமால் டாமால் என்று அதிக சப்த்த்தோடு அடித்து உடல் ஆரோக்கியம் தான் கெடுகிறது, ஆனால் நமது பாரம்பரிய இசை கருவிகளோ அப்படி இல்லை மனதிற்க்கு நெருடுகிறதாகவும் உடல் நோய்களை குனப்படுத்துவதாகவும் அமைகிறது.

இதை இன்றைய சூழல்களிம் நாம் கானலாம் நம் இந்திய நாட்டு ஆதிகால சங்கீத வாத்தியங்கள் மூன்றினுள்ளும் முதன்முதலாக அனைத்து வகையான பொது மக்களிடையே நாட்டில்.. வாத்தியம் என்ற பெயரில் அறிமுகம் ஆகியது நாகசுர வாத்தியமே. அனைத்து வாத்தியங்களிலும் மங்கள-வாத்தியம் என்ற தனிச்சிறப்பு பெற்றதோடு மட்டுமின்றி... சுப-நிகழ்ச்சிகளுக்கு இன்றியமையாதாகிவிட்டது நாகசுரம் ஒன்றே மனிதன் இரவில் கொண்ட நல்ல உறக்கம் வைகறை வேளையில் கலைகிறது... அதாவது கலைக்கப்படுகிறது சுற்றுச்சூழல் இயற்கை தன்மையால்... எப்படி.?

ஆனைச்சாத்தன் போன்ற விடியும் வேளையில் பாடும் பறவைகளின் மெல்லிய இனிய ஒலி... அருகிலுள்ள பூஞ்சோலையினின்று எழும் வண்டுகளின் ரீங்காரம் கோழி கூவல் பிற பறவைகளின் சலசலப்பு... போன்ற மென்மையான ஒலிவகைகள் நமது அரை தூக்க நிலையில் காதில் விழுகின்றன மேலும் அருணோதய வேளை காற்று தனித்தன்மை வாய்ந்ததால், மெல்லிய குளிர் கலந்த மென்-வெம்மை புத்துணர்ச்சியை உடலில் ஏற்படுத்துகிறது. பல்வகை பூக்களின் நறுமணம் காற்றோடு கலந்து வந்து, நம் நாசியை துளைக்கிறது... தொழுவத்தில் கன்றின் குரலுக்கு மறு-மொழியாக தாய்-பசு அம்மா என்று கத்துவது நம் காதில் விழுந்தவுடனேயே அரை-தூக்கத்திலும் கூட, நமக்கு பால்-நினைவு வந்து எச்சில் ஊறுகிறது. இவை தவிர, விடிந்தும் விடியாத அந்த வைகறை வெளிச்சம் நம் கண்ணை துளைக்கிறது. இங்ஙனம் நமது ஐம்புலன்களும் தூண்டப்பெறுகின்றன..

நாம் உறங்கி எழும் முன்னமேயே. இயற்கையின் நாள்-துவக்க தூண்டல்கள் யாவும் நமது ஐம்புலன் உணர்ச்சிகளையும் எழுப்பி, உடலுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் அந்நிலையில் சுற்றுச்சூழலில் இரவின் அமைதி மென்மையாக கலையும் புதுமையான முதல்-நினைவு நம் மனதில் ஓர் ஒப்புயர்வில்லா சாந்தி-உணர்வையும் ஏற்படுத்துகிறது.

அத்தகைய சுற்றுச்சூழல் புறச்-சாந்தி உணர்வை காட்டும் ராகம் பூபாளம் மேலும் உறக்கம் விட்டு எழுந்து பணிக்-கடமைகளை-ஆற்ற தேவையான சாந்தி மனத்தோடு, துவக்க எழுச்சி-உணர்வை நம்முள் ஏற்படுத்தும் ராகம். ஆனால் மனிதனின் இயல்பு மனக்-குதிரையால் பல்வகை சிந்தனை ஓட்டம்... எனவே புறச்சாந்தி உணர்வோடு வேறு ஏதாவது ஒரு உணர்வையும் கலந்து நினைக்கிறான். அத்தகைய பல்வகை உணர்வுகளோடு கலந்த அமைதி பக்தியோடு புறச்சாந்தி-உணர்வு காட்டும் பாடல்களை காணலாம்

http://www.musicindiaonline.com/p/x/PUx2HaPgy9.As1NMvHdW/

கேள்வி-ஞான மேதையான ஓர் நாடக நடிகருக்கு அக்காலத்தைய முது-பெரும் மகா வித்துவான்களே விசிறிகளாகி... அவரது பாட்டை கேட்கவே அடிக்கடி நாடக-கொட்டகைக்கு வந்து கேட்டு பாராட்டினார்கள் என்றால்... கேள்வி-ஞானத்தின் வல்லமையை அறியலாம் அன்றோ?

மானிட உருவில் ஸ்ரீ ராமபிரானே ஓங்கார நாதத்தின் அவதாரம். காண்போரை பிரமிக்கச்செய்யும் வகையில் தலை-சிறந்த கோதண்டம் என்னும் ராமபிரானின் வில்லின் வடிவே... மிடுக்குடனும் ஆழ்ந்த கம்பீரத்துடனும் துள்ளிப்-பாயும் ராகங்கள்.சப்த-ஸ்வரங்கள் எனப்படும் ஏழு சுரங்கள் தான்... அந்த கோதண்ட வில்லின் இனிமை வாய்ந்த சுண்டு-ஒலி நாத வகைகள்.ராகம் பாடுதலின் மூன்று வகை நுட்பங்களான.. கணம், நயம், தேஸ்யம் எனப்படுபவையே வில்-நாணின் மூன்று முறுக்கு-கம்பிகளான அதன் அங்கங்கள். நுட்பம் மிகு தாளங்கள் தான் பலப்பல மலர்-கணைகள்... நாணின் வலிமையால் அவை செலுத்தப்படும்போது அவை பிழிந்தெடுத்த பழ-ரசமாய் ராக நுணுக்கங்களின் விளக்கங்களோடு சீறி பாய்கின்றன [அதன் விளைவாய் அவை நமது ஆழ்மனதினுள் பேரின்பத்தை பதித்து விடுகின்றன]

அம்பு எய்த-பின் வில்லிலிருந்து எழும் ஒலி-வகைகளே...வில்லின் இனிமை மிக்க மெல்லிய பேச்சு-குரல்களான சங்கதிகள்.

http://www.musicindiaonline.com/p/x/HqO0YDiO1d.As1NMvHdW/

அவை அந்தந்த கட்டம் / சந்தர்ப்பத்திற்கு பொருத்தமானவை.ஆக ஓங்காரமே நமது ஆழ்மனத்தை நோக்கி நாத மலர்க்-கணைகளை செலுத்தி நம்மை பேரின்பத்தில் ஆழ்த்துகிறது என்பது கருத்துஇயற்கையுடன் இணைந்து மனித உள்ளங்களை வசியப்படுத்தி இசைய வைக்கும் ஒப்பற்ற பேராற்றல் கொண்டது இசை.

இசை ஒன்றே இசைப்பவருக்கும் கேட்பவருக்கும் இன்பமூட்டும் எழில்மிகு கலையாகும். ஆயகலைகள் அறுபத்து நான்கினுள் இசைக்கலையும் ஒன்று. உலகில் இசைக்கு நிகரானது இசை ஒன்றேயாகும்.

தாயவளின் நாவின் அசைவில் எழுந்திடும் ஒலியை தாலாட்டு என்றனர். தாலாட்டு என்பதன் பொருள் தால் - ஆட்டு என்பதாகும். தால் என்றால் நாவு. நாவின் அசைவில் பிறக்கும் இசையே தாலாட்டு ஆகும். இவ்வுலகில் மனிதப் பண்பாட்டின் பிறப்பிடம் முல்லை நிலமாகும். ஆய்ச்சியர் குரவைப் பகுதியில் ஆயர் மகளிர் பாடிய “முல்லைத் தீம்பாணி’ தான் உலகிலேயே முதலில் தோன்றிய இசைவடிவம் என்பர் நுண்கலை ஆய்வர்கள். ஆக இசையின் பிறப்பிடம் முல்லை நிலமாகும். நுண்கலையாகிய இசை, நாட்டியம், சிற்பம், ஓவியம், கட்டடம் எனும் ஐந்தினுள் தலையானது இசைக்கலையாகும். இசை பிறந்தது எங்கே? காற்றினிலே என்பதுதான் உண்மை. கானகத்தில் வண்டுகள் மூங்கிலைத் துளைபோடக் காற்றுத் துளை பின் உள்ளே புகுந்து வெளிவர, அது தருகிற ஓசையை ரசித்து மகிழ்ந்தபோதுதான் மனிதன் குழலைப் படைக்க அறியலானான்.

இசை, அசையாப் பொருளையும் அசைக்கும் வல்லமை கொண்டது. இதற்கு சாட்சி ராமாயணம். இசைத்தவன் ராவணன். இசை சாம கானம். இசையின் சீரிய சிறப்பை அறிந்திருந்த காரணத்தால் அகத்திய மாமுனி “”அகத்தியம்” எனும் முத்தமிழ் இலக்கணம் விளக்கும் ஓர் அரிய நூலைப் படைத்தார்.

வென்றிடுவேன் எந்த நாட்டையும் நாதத்தால்" ... திருவாளர் டி.எம்.சௌந்தரராஜனும், சீர்காழி கோவிந்தராஜனும் இணைந்து ஒரு போட்டிப்-பாட்டாகப் பாடுவதைக் கேளுங்கள்.

http://www.musicindiaonline.com/p/x/TJbg1.736d.As1NMvHdW/

இத்தகைய அரிய மொழி-வாய்ப்பும் நிறை-வளமையும் கொண்டதால் தமிழ்மொழியை வண்டமிழ் எனப் போற்றத்தக்க சீர்மையைக் காட்டுகிறது அன்றோ?.

http://www.musicindiaonline.com/p/x/RqOgiENFk9.As1NMvHdW/
http://www.musicindiaonline.com/p/x/qUygIon4yS.As1NMvHdW/
http://www.musicindiaonline.com/p/x/mqpgAA9-69.As1NMvHdW/

மற்ற இசைகலை திரைக்கூத்து - முத்தமிழ் இசையில் கேட்டு மகிழுங்கள்.

இசை மனதுக்கு மட்டுமன்றி உடல் நோய்களைத் தீர்க்கும் வல்லமையும் கொண்டது. வராளி பாடிட வாதம் நீங்கும். காம்போதி பாடிட துன்பம் போகும். நீலாம்பரி, யதுகுலகாம்போதி ஊக்கம் தரும். தேஷ் ராகம் மகிழ்வூட்டும். வைகறைப் பொழுது பாடுவது பூபாளம். நாட்டை, ஆரபி ராகங்கள் கடவுளை வணங்கவும் நற்காரியம் புரியும்போதும் பாடப்படுவது. இறைவனிடம் வேண்டும்போது தன்னியாசி ராகம் சிறந்தது. இறைவனின் புகழ்பாட மோகனம், மன்னனிடமோ, இறைவனிடமோ யாசிக்கும்போது வராளி பாடலாம். மனத்தில் துன்பங்கள் நீங்க இறைவனிடம் கேதாரகௌளை பாடலாம். மனத்தை ஒருமுகப்படுத்த பூர்விகல்யாணி - செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்க சகானாஸ இப்படி ஒவ்வொரு ராகமும் ஒரு குணம் கொண்டது.

நாகசுரம் எனும் உயரிய இசைக்கருவி ஓர் உன்னதமான மங்களகரமான இசைக்கருவி. இதை நானசின்னம், நாகசின்னம், நாதசுரம் என்றும் அழைப்பர்.

நாகசுரத்திற்குரிய சீவாளி எனப்படும் சிறிய பொருளே இனிய இசையை நாயனத்தின் செவி குளிரத் தருகிறது. இந்தச் சீவாளி கொரத்தட்டை எனப்படும் ஒருவகைக் கோரையால் செய்யப்படுகிறது. இந்தச் சீவாளி அடைபடும்போது அதைச் சுத்தப்படுத்த உதவும் குச்சி யானைத் தந்தத்தால் செய்யப்படுகிறது.

ஆலயங்களில் நித்தமும் அதிகாலையில் பூபாளம் இசைத்து இறைவனை எழுப்புவர். மதியம் சுருட்டி எனும் ராகமும், இரவு கானடா, சகானா எனும் ராகங்களும் இசைக்கப் பெறும். உற்சவர் ஊர்வலத்தின்போது வசந்தா எனும் ராகமும் அனைத்து பூசைகளும் முடிந்து பள்ளி அறைக்குச் செல்லும்போது ஆனந்தபைரவி, நீலாம்பரி எனும் ராகங்களும் இசைக்கப்படும்.

இல்லறத்தில் ஈடுபடும் ஆணும் பெண்ணும் இணைந்து வாழ அடியெடுத்து வைக்கும் மன்றல் விழாவின் போது நாட்டைக்குறிஞ்சி ராகம் மிதந்திட கெட்டிமேளம் முழங்கப்படும். சரிகமபதநி என்ற எழு சுரங்களும் தமிழ் மொழியிலே வழங்கப்பட்டு வந்தன. நம்முடைய ஆன்மாவின் மூச்சு இசை. மனிதன் பிறந்தவுடன் இசை வயப்படுகிறான். “”தாயின் அன்பில் பண்பில் வருவதும் பாட்டு - வாழ்வில் களிப்பூட்டுவது பாட்டு - துயரத்தை நீக்கப் பாட்டு - களைப்பைப் போக்கப் பாட்டு - அன்பின் வெளிப்பாடு பாட்டு, மணவறையிலும் பாட்டு, மாண்டபின்னரும் பாட்டு” ஆக மனிதன் பிறப்புதொட்டு இறப்பு வரை பாட்டால் வாழ்கிறான். இசை மனித மொழியில் பிறந்து உணர்வில் கலந்து வருவதாகும்.

இசை சமுதாயச் சிந்தனையையும் தருகிறது. இசை ஒரு தெய்வீகம் என்பர். மனித உலகு இசைபட வாழ்தல் வேண்டும். இசையால் இவ்வுலகு மேம்பட வேண்டும். ஒரு சிறுவன் தன் தாயைக்கேட்டான்..."ஏம்மா ... என்னை உறங்கச்-செய்ய தாலாட்டுப்-பாட்டுப் பாடுகிறாய் ... கோயிலில் சாமி கும்பிடும்போதும், வீட்டில் பூசை செய்யும்போதும் பக்திப்-பாட்டுப் பாடுகிறாய்... நெல்-குத்துவது, துணி-துவைப்பது, வயலில் வேலை-செய்யும் நேரங்களிலும் பாடுகிறாய் ... பொங்கல், தீபாவளி, கல்யாணம் போன்ற மங்கள-நிகழ்ச்சிகளிலும் பண்டிகை கோலாகலக் கொண்டாட்டங்களிலும் பாட்டுத்தான்.

இவை தவிர ஊஞ்சல், கும்மி, கோலாட்டம் போன்ற பாட்டுக்கள் வேறு... போதாதற்கு யாராவது இறந்துவிட்டாலோ அப்போதும் வேறுவகையான பாட்டு பிலாக்கணம் மேலும் சவ-ஊர்வலத்தின் முன்னேயும் மணியடித்துச் சங்கு ஊதிக்கொண்டே வள்ளுவன் பாட்டு.

அதே போல, அப்பா வண்டி ஓட்டும்போதும், வயலில் நீர்-பாய்ச்ச மாடுகளை ஓட்டிக் கமலை-இறைக்கும் போதும், வேறு வேலைகள் செய்யும்போதும் பாடிக்கொண்டே செய்கிறார்.... மீனவர்களும் படகோட்டிகளும் ஐலசா- பாட்டோ அல்லது அது போன்ற கூட்டுப்-பாடலோ(Chorus) பாடிக்கொண்டே நீரில் பயணிக்கின்றனர் .... பெரும்-பாரம் ஏற்றி-இறக்கும்போதும், காட்டில் மரம் வெட்டி இழுத்துச் செல்லும்போதும் பாடிக்கொண்டே செய்கின்றனர்.

ஊர்விட்டு ஊருக்குக் கூட்டமாக நடக்கும்போதும் எல்லோரும் கூட்டுக்-குரலில் பாடிக்கொண்டே செல்கின்றனர்.... கோயிலில் அன்றாட-நிகழ்ச்சியாகவும், சாமி ஊர்வலத்தின்போதும் நாயனம் என்னும் நாகசுர-வாத்தியம் வாசிக்கின்றனர் ... இவை தவிர கேளிக்கை எனும் பெயரிலே மேடைக்கச்சேரி, நாடகம், சினிமாவிலும் பாட்டு, சங்கீதம் தான்.

இப்படி எங்கும் பாட்டு, எதிலும் பாட்டு, எப்போதும் பாட்டு மயமாகவே வாழ்வது ஏன் அம்மா ஆமாம் மேலும் சிலவற்றையும் கூறவிட்டுவிட்டாயே பொது-நிகழ்ச்சிகளின் துவக்கத்தில் அஞ்சலி என்ற பெயரிலும் பாட்டு, நாட்டின் தேசீய-கீதம், போர்-வீரர்களுக்கு மார்ச்-பாஸ்ட்-கீதம், போர்-முரசு-கீத-வகைகள் போன்றவற்றிலும் பாட்டுக்கள், இசை-மயம் தான்." என்று கூறி விளக்கினாள் தாய்.

ஏனெனில்... அதன் காரணங்கள் :

தாலாட்டு :-- சங்கீதத்திற்கே ஓர் ஈர்ப்பு-சக்தி உண்டு... அதனால் தான் மிருகங்களும் மட்டுமின்றி விஷப்-பாம்பும் கூட வசியப்படுகிறது என்று முன்னமேயே கண்டோம்... எனவே தாலாட்டின் இசையில் மயங்கி குழந்தை உறங்கிவிடுகிறது... தொட்டிலோ தூளியோ ஆட்டும் தாயும், தானும் இசையில் லயித்து களைப்புத்-தோன்றாது விழித்திருந்து ஆட்டமுடிகிறது. பக்தி-அஞ்சலி :-- இறைவனைத் துதிக்கையிலே சங்கீதத்தோடு இசைத்துப் போற்றி வேண்டினால், இறைவனும் நமது பிரார்த்தனைக்கு எளிதில் செவிசாய்க்கிறான் எனும் உண்மையை சான்றோர் பலர் தமது அனுபவத்திலும் கண்டறிந்து... அத்தகைய விந்தையான அனுபவங்களை நமக்கு எடுத்துக்-காட்டியதையும் காண்கிறோம்.... அத்தகைய சீரிய சக்தியும் சிறப்பும் சங்கீதத்திற்கு உள்ளன.

மேலும் ஒவ்வொரு ராகத்துக்கும் வெவ்வேறு குணம் உண்டு. அதாவது... மகிழ்ச்சி, சோகம், கோபம் ஆனந்தம், வீரம், இரக்கம் போன்ற நவரச-உணர்வுகளைச் சுட்டுவன. பக்தி-ஆழம் காட்டுவன. மழை-பொழியச் செய்வது... ஜோதியை விளக்கில் ஏற்றுவிப்பது இன்ன பிற.
உதாரணமாக வடநாட்டு சங்கீதத்திலே "தீபக்" எனும் ராகத்தைப்-பாடியே அக்பர்-சக்கரவர்த்தி முன்னிலையிலே விளக்கில் ஜோதியை ஏற்றிக் காட்டினானாம் தான்சேன் எனும் இசைஞானி...
அதேபோல தென்னாட்டு சங்கீதத்திலும் கூட, "ஜோதி-ஸ்வரூபிணி" எனும் ராகத்தை ஆழ்ந்து பாடி... பல்வேறு இசை-வல்லுனர்களும் மன்னர்கள்-சபை-முன்னே விளக்கேற்றிக்-காட்டியதாக வரலாறு கூறுகிறது.

சங்கீத-மும்மூர்த்திகளில் ஒருவரான தீக்ஷதர்... ஊர் ஊராக க்ஷேத்திராடனம் (பல ஊர்க்-கோயில்களில் தெய்வ-தரிசன யாத்திரை) சென்றபோது.தென்-தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தின்-வழியே செல்ல-நேர்ந்தது. கடும் கோடைகாலம்... அங்கு ஆறு ஆண்டுகளாக மழையே பெய்யாததால் பஞ்சம் தலை-விரித்தாடியதைக் கண்டு மனம்-நொந்து வெதும்பினார்...

உடனே .உச்சிவெய்யிலில் நின்று, வானத்தைப்-பார்த்துக்-கண்ணீர்-விட்டு அழுதுகொண்டே பாடினார்."அமிர்தவர்ஷிணி" ராகத்திலே... "ஆனந்தாம்ருதாகர்ஷிணி அம்ருதவர்ஷிணி... சலிலம் வர்ஷய, வர்ஷய வர்ஷய ..." என்ற கீர்த்தனை.

இதன் பொருள்.. "கருணையே வடிவான ஹே அம்பா துர்க்கா-தேவி, ஆனந்தம் மட்டுமே எப்போதும் மக்களுக்கு வழங்கும்-பண்புகொண்ட நீயே இவ்வாறு பேதையரை வருத்திச்-சோதிப்பது உனக்கு அழகா தாயே!... தயை-கூர்ந்து உடனேயே, இக்கணமே .... மழை பொழியடும்.... பொழியட்டும்.... பொழியட்டும்..."

அவர் பாடிமுடித்த உடனேயே வானம் விரைந்து கருத்து... பெரும் மழை பொழியத்-தொடங்கி ஒன்பது நாட்கள் இரவு பகலாகக் கொட்டோ-கொட்டு என்று கொட்டி, அந்தச் சுற்றுவட்டாரக் குளங்கள், ஏரிகள், குட்டைகள் போன்ற நீர்நிலைகள் யாவுமே நிரம்பிவிட்டதைக் கண்டவர்கள் கூறக்-கேட்ட பாண்டிய-மன்னன் நன்றிக்-கடன் உணர்வு மிக, தீக்ஷ¢தரைத் தனது சபைக்கு மிக்க பணிவுடன்-அழைத்து அவருக்குத் தக்க மரியாதை செய்வித்ததோடு இந்த விந்தை-பற்றிச் செப்பேட்டிலும் எழுதி-வைத்துள்ளார்.

ஆம்... மழையைத்-தருவித்த அந்த ராகம்... "அம்ருதவ்ர்ஷிணி."

பக்தியால் மட்டுமே தெய்வத்தின் அருளைப் பெற முடியும் என்றால், சங்கீதத்தோடு இணைத்து அவர் ஏன் பாடினார்?... அங்கு தான் சங்கீதத்தின் மகத்துவம் புலப்படுகிறது .ஆக்யினால் பாரம்பரிய இசைக்கும் என்றும் உயர்வு உண்டு மீதம் இசைகலை.

பாரம்பரிய மருத்துவம் பலனளிக்கும்! - டாக்டர் பெருமாள்

நம் அன்றாட வாழ்க்கையில் அதை தானே செய்கிறோம்? ஒரு தலைவலி வந்தால் முதலில் வென்னீரோ, காப்பியோ, சுக்கு காப்பியோ நெற்றியில் பற்றோ இடுகிறோமே? தற்போது காலம் நவீன மயமாகிவிட்டதால் நாகரீகம் கருதி மாத்திரைகளுக்கு அடிமையாகி அதற்கு பலியாகிறோம். பழையவை கிளாசிக்கல் போன்றது. எப்பொழுதும், புதியமுறை இல்லாமல் போனாலும் பயனளிக்க கூடியது.

அக்காலத்தில் தமிழ் மருத்துவர்கள் தேக தத்துவ நூல், நோயைப் பற்றிய நூல், நோயணுகாவிதி, இரணமருத்துவம், உணவுப் பொருள் மருத்துவ நூல், விஷங்களை நீக்கும் நஞ்சுநூல், ஞானசர நூல், சோதிட நூல் முதலிய பல நூல்களைக் கற்றறிய வேண்டியதோடு ஆசிரியனோடு 12 ஆண்டு பழக வேண்டும். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேல்தான் தனியே மருத்துவம் செய்ய வேண்டும் என விதியிருந்தது. இப்போது அப்படிச் செய்கிற தமிழ் மருத்துவரும் இல்லை; செய்விக்கிற திட்டங்களும் இல்லை. மருத்துவத்துறையிலும் வெளிநாட்டு மருத்துவ முறைகளுக்கே ஆக்கமும் விளம்பரமும் மிகுந்துவிட்டன.அவ்வளவு தான்.

பாரம்பரிய பழைய நாள் மருத்துவர்கள் பகல் இரவு சூரிய சந்திர நட்சத்திரங்களைப் பாராமலும், கடிகாரம் எனும் காலங்காட்டியைப் பாராமலும், இருக்கும் இடத்திலிருந்து மூக்கு முனையில் நடைபெறும் மூச்சைப் பார்த்தே இரவு பகல் மணி சொல்லுவார்கள்; எனது பாட்டனாரிடத்திலும் தந்தையிடத்திலும் இவ்வரிய செயலை நேரில் பார்த்தேன். இச்சரப் பயிற்சியால் தன்னிடம் வரும் நோயாளிக்கு நோய் தீரும் தீராதெனவும், பிழைப்பான் பிழைக்க மாட்டானெனவும் கூறினார்கள். நோயாளியை வந்து பார்க்கும் படி மருத்துவமனை அழைக்கவரும் ஆண், பெண்களையும், அவர்கள் வந்து நிற்கும் திசைகளையும், அவர்கள் வாயிலிருந்து வரும் முதற் சொல்லையும், அச்சமயம் மருத்துவனுக்கு மூக்கில் நடக்கும் சரத்தையும் கண்டு நோயாளியின் நிலைமைத் தெரிந்துகொள்வார்கள். முற்காலத்தில் மருத்துவர்களும் பெரு மக்களில் பலரும் வீட்டைவிட்டு வெளியே புறப்படும்போது மூக்கில் விரல் வைத்துச் சாரத்தைப் பாராமல் புறப்படமாட்டார்கள். நீரில் தலைமுழுகு முன்னும் உணவு உட்கொள்ளு முன்னும் வலப்பக்கம் நாசியில் சுவாசம் (சூரியனில்) நடைபெறுகிறதா என்பதைக் கவனிப்பார்கள். சோதிடமும் பார்ப்பார்கள். வானத்திலுள்ள நவக்கிரகங்களின் உச்சநிலையைப் பற்றிக் கவனித்துச் சூரியனைக் காலை மாலை கண்ணால் பார்ப்பது போல் சந்திரனையும் இரவில் பார்ப்பார்கள். நோயாளியின் ஜாதகத்தையும் பார்ப்பார்கள். இவைகளை எல்லாம் பார்த்து மருத்துவம் செய்வதுதான் இயற்கை மருத்துவம். அதில்தான் பயன் மிகுதி. தமிழ் மருத்துவம் அப்படிப்பட்டது. கிரகமெனும் ஞாயிறு மறைவு மதிமறைவு நேரத்தில் உண்ணாமல் ஓர் அலுவலும் பண்ணாமல் தனித்திருந்து பேசாமல் தியானம் செய்யும்படி தமிழ் மருத்துவ நூல்கள் கூறுகின்றன. அந்நேரத்து ஒளியில் பலவகைக்கெடுதல் இருப்பதே அதற்குக் காரணம்.

உலோகங்களைச் செந்தூர பஸ்மங்களாகச் செய்கிற பழக்கத்தால் செம்பை வெள்ளியாகவோ பொன்னாகவோ செய்யும் இரசவாத வித்தையும் பழைய தமிழ் மருத்துவர்களுக்குத் தெரிந்திருந்தது. அதனால் அவர்கள் இக்காலம் போல் பெரும்பாலும் பணத்துக்காக மருத்துவம் செய்யாமல், ஏழை எளியவர்களுக்கு இலவசமாகவே மருத்துவம் செய்வார்கள். மருத்துவர்கள் பிணியாளர்களைப் பார்க்கும்போது வெறுந்தரையிலிருந்து நோயாளரைத் தொட்டுப் பார்ப்பதால் நிலக் கவர்ச்சியால் மருத்துவனுடைய தேக காந்த சக்தி நோயாளிக்கும் நோயாளியின் தேக காந்த சக்தி மருத்துவனுக்கும் பரவுகிறதென்பதை அறிந்து, தற்காப்புக்காக நோயாளியைப் பார்க்கும்போது வேறொன்றிலும் அமராமல் மரப்பலகை (மணை) மீது அமர்ந்துதான் பார்ப்பார்கள்.

நோயாளியை வெறுங்கையால் தொட்டுப் பார்க்காமல் தனது கைக்கும் நோயாளி உடம்புக்கும் நடுவில் மெல்லிய பட்டுத்துணியைப் பிரித்துப் போட்டுப் பார்ப்பார்கள். மரப் பலகைக்கும் பட்டுத்துணிக்கும் நிலக்கவர்ச்சியைத் தடுக்கும் ஆற்றல் இருக்கிறதென்பதை நம் முன்னோர்கள் அக்காலத்திலேயே கண்டிருந்தார்கள். இன்றும் வயதானவர் பலருக்கும் கிராமங்களில் வாழ்பவர் சிலருக்கும் இது தெரியும். இன்று மின்சாரத்தில் வேலை செய்கிறவர்களிடம் இதைக் காண்கிறோம். பாரம்பர்ய பழைய தமிழ் மருத்துவர்கள் நோயாளரைச் சோதித்தறியும்போது நோய்வந்ததற்குக் காரணத்தை முதலில் காண்பார்கள். பலதரப்பட்ட மக்களுக்கு அவரவர் நிலத்தியல்பு, உணவு, கல்வி, அறிவு, செய்தொழில் ஆகியவற்றைக் கவனித்தும்,

"நாடியால் முன்னோர் சொன்ன நல்லொலி பரிசத்தாலும்
நீடிய விழியினாலும் நின்ற நாக்குறிப்பினாலும்
வாடிய மேனியாலும் மலமொடு நீரினாலும்
சூடிய வியாதிதன்னைச் சுகமுடன் அறிந்துபாரே"


என்றபடி மருத்துவத்தில் கைநாடி, குரலொலி, உடற்சூடறியத் தொடுதல், கண், நாக்கு, உடம்பின் நிறம், நீர், மலம் இந்த எட்டுவிதச் சோதனையின்றி மருந்து கொடுக்கமாட்டார்கள்.

சில நோயாளிகளுக்கும், பல மருந்துண்டு அலுத்தவர்கட்கும் இயற்கை மருத்துவம் செய்வார்கள்; பத்தியம் எனக்கூறி உணவை மாற்றுவார்கள். உள்ளப் பிணியாளர்களை, மனநோயாளர்களை, இருக்கும் இடத்தை விட்டு 'ஸ்தல யாத்திரை' போகச் சொல்வார்கள். சில நோய்களுக்கு உடம்பில் சில இடங்களில் சுட்டும், அறுக்க வேண்டிய இடங்களை அறுத்தும், பழைய நாட்களில் மருத்துவம் செய்துள்ளார்கள்

இக்காலத்தைப்போல் இவ்வளவு அறுவை மருத்துவங்கள் அக்காலத்தில் இல்லை. இத்தகைய நோய்களும் அக்காலத்தில் இல்லை. இவ்வளவு பெரிய மருத்துவமனைகளும் அக்காலத்தில் இல்லை. எத்தனை ஆஸ்பத்திரிகள் கட்டினாலும் இப்போது நோயாளிகளுக்கு இடம் போதவில்லை என்கிறார்கள். இதற்கு, நாள்தோறும் மக்களுக்கு நோய் அதிகப்படுவதே காரணமாகும்.

இதற்க்கு காரனம் தற்போது மருந்துகலாலே வியாதி அதிகம் சம்பவிப்பாதக அதிக தகவல் ஆகவே பாரம்பர்ய மருத்துவமெ சிறந்தது ஏன்ன்றால் வருமுன் காகும் திறன் இருந்தாது. இச்சூழலிலும் பாரம்பர்ய மருத்துவம் பயனளிக்கும்!

மேலும்: படிக்க

முத்தமிழ்மன்றத்தின் நான்காம் ஆண்டுமலர்!

அன்பு நண்பர்களே, முத்தமிழ் மன்றத்தின் நான்காம் ஆண்டு விழா மலரை உங்கள் கைகளில் தவழத் தருவதில் மிக்க மகிழ்ச்சியும் பெருமையும் அடைகின்றோம். இங்கிருந்து தரவிறக்கிக் கொள்ளுங்கள்.



மலரின் நிறைகளுக்கு நீங்களே காரணம். குறைகளுக்கு என் கவனக்குறைவே காரணமாக இருக்கும்.

சமூக அவலங்கள்! - மன்னை ராஜா

நாடு விடுதலை பெற்று 60 ஆண்டுகள் கழித்தும் சில அப்பாவி மக்கள் இன்னும் தங்களுக்கு கிட்ட வேண்டிய அடிப்படை மனித உரிமைகளைக் கூட அடையாமல் இழிநிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதும், அதன் விளைவாக அவ்வினங்களில் திடீர் தலைவர்கள் முளைத்து தவறான திசையில் இளைஞர்களின் வாழ்க்கையை திருப்பி விடுவதும் நம் கண்முன்னே நிகழும் சமூக அவலங்கள்..!

அந்த தாழ்த்தப்பட்ட இனப் பெரியவருக்கு நிகழ்ந்த ஒரு அவமானமும் அதை கண்டிருந்த ஒரு பிஞ்சு நெஞ்சத்தில் விழுந்த அடி பிற்காலத்தில் எவ்வாறு முடிவெடுக்க வைக்குமோ என்ற நியாயமான ஆதங்கமும் ஏற்படும் வகையில் என் கண்முன் நிகழ்ந்த ஒரு சம்பவம் இது..

ஒருமுறை எங்களின் விற்பனை வாகனம் பழுதுபட்டு மன்னை அருகில் உள்ள ஒரு கிராமத்தில் [ஊர் பெயர் வேண்டாமே..!] நின்றுவிட்டது. பழுது நீக்குவோர் வர தாமதமானதால் அருகில் உள்ள சிறு கோவிலில் அமர்ந்திருந்தேன். அரிசனங்கள் வாழும் பகுதி அது. இன்னும் மூன்றே நாட்களில் பொங்கலை எதிர்நோக்கி ஊர் ஒரு பரபரப்பைப் பூசிக்கொண்டிருந்தது.

அருகில் இருந்த வீட்டில் உள்ள உரையாடல் என் காதுகளில் வந்து விழுந்தது. ஒரு சிறுவன் தன் பாட்டனாரை கடைத்தெருவுக்கு அழைத்துச் செல்ல வேண்டிக்கொண்டிருந்தான். பெரியவருக்கு 65 வயதிருக்கும். கூடியவரை சமாளிக்கப் பார்த்தும் முடியாமல் அழைத்துக் கொண்டு கிளம்பினார்.இருவரும் தங்கள் வீட்டு வேலிப் படலை நீக்கி வெளியேறுவதற்கும் ஒரு 18 வயது இளைஞன் மோட்டார் சைக்கிளில் அவர்கள் வீட்டு வழியே சாலையில் செல்வதற்கும் சரியாக இருந்தது.
பெரியவரைப் பார்த்ததும் இளைஞன் அரைவட்டம் அடித்து திரும்பி வந்தான்..

"எலே.. கழிஞ்சான்.. எங்கடா வெள்ளையும் சொள்ளையுமா கெளம்பிட்டே..?"

தன் பாட்டனாரைத்தான் அந்த இளைஞன் இப்படிக் கூப்பிடுகிறான் என்று அறிந்துகொள்ளவே சிறிதுநேரம் பிடித்தது அந்த சிறுவனுக்கு. அதிர்ச்சி விலகாத கண்களுடன் இருவரையும் மாறிமாறிப் பார்த்தான்.

வழிவழி வந்த அடிமைத்தனத்துடன் அசட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்தவாறு பெரியவர் சொன்னார்.." ஹி..ஹி.. வாங்க தம்பி.. பேரப்புள்ள கடைத்தெருவுக்கு கூப்பிட்டுது.. அதான்..." இதைச் சொல்லும்போது அவரின் உயரத்தில் இரண்டடியைக் காணோம்..!

அதானே பார்த்தேன்.. துண்டு எல்லாம் தோள்ல கெடக்கேன்னு...! ஏதோ செய்யக்கூடாத செயலைச் செய்துவிட்டதுபோல் பதறி தன்னிச்சையாய்க் பெரியவரின் கை துண்டை தோளில் இருந்து எடுத்தது. கண்டும் காணாததுபோல் இளைஞன் கேட்டான்..

யாரு இது பிசுக்கு..?

எம்பேரனுங்க.. !

படிக்கிறானா..?

ஆமாங்க..!

பேரு என்ன ?

பிரகாசுங்க..!

ஹி..ஹி.. ம்ம் பிரகாஸ்.. சட்டென்று நினைவு வந்தவனாக...

ஏண்டா உம்பேரு அய்யாத்துரை தானே..?

பெரியவரைப் பார்த்து இளைஞன் கேட்க, அவர் அடிமைத்தனமாய் தலையாட்டினார். அந்த மேல்சாதி இளைஞன் காட்சிக்குள் பார்வையாளராக இருக்கும் என்னைப் பார்த்து சொன்னான்.. "சீவக்காரண்ணே.. இவனுக சரியான குசும்பு புடிச்ச பயலுக.. பேரெல்லாம் அய்யா, துரைன்னுதான் வச்சுக்குவானுங்க.. நாம அவனுகளைப் பார்த்து அய்யாங்கணுமாம்.. அதான் அப்பா பேர் வச்சாங்க..கழிஞ்சான்னு.. "

இப்போதும் பெரியவர் முகத்தில் அதே அடிமைச் சிரிப்பு. சிறுவனுக்கோ நிகழ்வுகளைச் சீரணிக்க முடியாமல் விழிகள் தெறித்துவிடும் போல இருந்தது.

இளைஞன் வண்டியை ஸ்டார்ட் செய்துகொண்டே சொன்னான்.. சரி..சரி.. வேட்டி சட்டையெல்லாம் அவுத்துப் போட்டுட்டு வா ஒட்டடை அடிக்கணும்.. பெரியவரின் பதிலை எதிர்பாராமல் கிளம்பிவிட்டான்.

சிறுவனுக்கு கடைவீதி போகாதது பெரிய ஏமாற்றமாகப் படவில்லை.. இயந்திரமாக உடையை அவிழ்த்துக் கொண்டிருந்த தாத்தாவைப் பார்த்து கேட்டான்..

ஏன் தாத்தா.. பெரியவங்களை மரியாதையா அழைக்கணும்ன்னு எங்க டீச்சர் சொன்னாங்க.. ஆனா அந்த அண்ணன் உங்களை வாடா போடான்னு கூப்பிடறாங்க.. நீங்க ஒண்ணுமே சொல்லலையே...?

என்ன சொல்லுவார் பெரியவர்..? உங்களுக்கு ஏதாவது சொல்லத் தோன்றுகிறதா..?

மேலும் படிக்க....