மாமனிதரின் புகழ் ஓங்குக - கிரியின் கவியஞ்சலி

மன்ற மாமனிதரின் புகழ் ஓங்குக.

எல்லை அற்றுப்பரந்து விரிந்த கடல்
இல்லை கள்ளம் வெள்ளை மனமதில்
முதிர்ந்த பேச்சில் வயது தெரியாது
உதிர்ந்த மலரின் வாசம் மறையாது

சாகரன் எங்கள் மன்றத் தூண்
சாக வயதில்லா எங்கள் தோழனை
வேகமாய் காலன் இடித்த தூண்
ஆகமம் அடுக்கா பழி இதுகாண்

ஆழியாய் பெயர் வைத்த மாமன்னனே
ஆழிப் பேரலையாய் காலன் அழைக்க
ஊழிப் புயலாய் இதயம் வெம்பியழ
யாழில் சோககீதம் இசைக்கச் செய்தாயே

அஞ்சலி செய்யும் வயதா உனக்கு?
நெஞ்சு பொறுக்கு தில்லையே மனம்
மிஞ்சும் எதிர் காலம் யாதென்றே
நஞ்சு அருந்திய உடலாய் பதறுதே

மன்றத்தின் தெய்வமாய் உயர்ந்திட்ட சாகரன்
தென்றலாய் நண்பர் மனமதில் உறையட்டும்
இன்றுநாம் சூளுரைப்போம் உயிர் கொடுத்தும்
என்றும் இம்மாமன்ற மாறாப்புகழ் காக்க.

0 comments: