மாமனிதர் சாகரனுக்கு மறுபிறப்பு கொடு இறைவா! - ஷீநிசி

நான் உன்னை
அறிந்த நிமிடங்கள் -நீ
இறந்த நிமிடங்களாயிருந்தது..

சாதிக்க விரும்பினாய்
என்று அறிந்தேன் -உன்மேல்
எங்களின் அன்பு எத்துணையென்று
சோதிக்கவும் விரும்பினாயோ?!

எத்தனை கனவுகள்
புதைந்துக்கொண்டிருந்தது உன்னுள்!
அத்தனை கனவுகளும்
புதைந்திடுமோ இனி மண்னுள்?!

நேசிக்கும் நண்பர்களை கொடுத்தாய்
அவருக்கு! -நல்லது இறைவா?
சுவாசிக்கும் நாட்களை குறைத்தாயே?!
நல்லதா இறைவா?

சார்ந்த உறவுகளின்
விழிகளை கொஞ்சம்
துடைத்துவிடு....

சாகரனை இன்றைக்கே
வேறொரு உயிரில்
படைத்துவிடு....

- கண்ணீருடன் வேண்டுவது ஷீநிசி

0 comments: