புதிய தலைமை நடத்துனர் கிரி!

அன்புள்ள முத்தமிழ் மன்ற நண்பர்களே,

நமது மன்றத்தில் அருமையான பல பதிவுகளைத் தந்து கொண்டிருப்பவரும் மற்றவர்களுக்கு தம்மாலான உதவியைச் செய்து வருபவருமான ரத்தினகிரி அவர்கள் இன்றுமுதல் தலைமை நடத்துனர் ஆகிறார். இக்பால் மற்றும் ரத்தினகிரி ஆகியோர் தலைமை நடத்துனர்களாக இருந்து நமது மன்றத்தையும் உறுப்பினர்களையும் வழிநடத்துவார்கள். நண்பர்கள் ஒத்துழைப்பு நல்குமாறு வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன். பதவி உயர்வு பெற்ற ரத்தினகிரி அவர்களை பாராட்டுவதில் பெருமை அடைகிறேன். இந்திய சுதந்திர நாள் வாழ்த்துக்களை நம் மன்ற நண்பர்கள் அனைவருக்கும் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

நன்றி.

இப்படிக்கு,
முத்தமிழ்.

===================================================================

அன்புத் தம்பி ரத்தினகிரி அவர்கள் முத்தமிழ் மன்றம் புதிய பொலிவைப் பெற்றுள்ள சுதந்திர தின இந்நன்னாளிலிருந்து தலைமை நடத்துனராக பதிவு உயர்வு பெறுகிறார் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றோம்.ரத்தினகிரி குறுகிய காலத்தில் நல்ல பதிவுகள் பல தந்து மன்ற உறுப்பினர்கள், நடத்துனர்கள் மற்றும் நிர்வாக நண்பர்கள் மனதில் இடம் நல்லதொரு இடம் பெற்றுள்ளார் என்பதை நினைவுக்கு கொண்டு வந்து அவரை நன்றியுடன் பாராட்டுகின்றோம்.எல்லோரும் தொடர்ந்து இதே மாதிரியான அன்புடனும், நட்புடனும் கூடிய ஆதரவினை அவருக்கு அளித்து, அவர் தன் பணியில் முன்னரை விட அதிக உற்சாகத்துடனும், உத்வேகத்துடனும் உலா வர மகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறோம்.

அன்புடன்,
இக்பால்.