சாகாவரம் பெற்ற சாகரனுக்கு காவியனின் கவியஞ்சலிகள்

எங்கள் பிரம்மா சாகரன் அவர்களின் உடல் வேண்டும் என்றால் எங்களை விட்டு போயிருக்கலாம், அவர் மூச்சு, அவர் உயிர், அவர் திறமைகள் அனைத்தும் என்றும் இவ்வுலகில் நிலைத்திருக்கும்.

முத்தமிழ் மன்றம், தேன்கூடு, பாலகுமாரன், துவக்கு, இன்னும் பல்வேறு தளங்களை படைத்த பிரம்மாவுக்கு எங்கள் கவியஞ்சலிகள்.

----------

காவியனின் கவியஞ்சலி

சாகரனே...
இணைய உலகின்
இணையில்லா சாதனையாளனே
எங்கே சென்றாய் எமை விட்டு..

பட்டு பூச்சியாய்
உனை வட்டமிட்ட
சின்ன சிட்டு மகளை விட்டு
எட்ட ஏன் சென்றாய்....

விம்மி விம்மி
அழுது துடிக்கும் உன்
அன்பு மனையாள் விட்டு
எட்ட ஏன் சென்றிட்டாய்

இனிய நண்பன் உனக்கு
இதய நோய் தந்திட்ட அந்த
இறைவனுக்கு இரக்கமில்லையோ

நண்பா...
தமிழ் மணக்கும் இணையங்கள் மேல்
இடி விழுந்து போயிற்று
முத்தமிழ் மன்றம் இன்று
முகாரியே பாடுது...

தமிழ்த் தாய் முக்குளித்து
எடுத்த எங்கள்
முத்து சிப்பியே...
உனை நான் பார்த்தறியேன்
இரு தினம் முன்
இணயத்தில் படித்தேன்
தமிழ் வளர்க்க நீ
தாயாய் உழைத்ததும்
முத்தமிழ் மன்றுக்கு நீ
தகப்பன் ஆனதும்...

நேற்றைய பொழுது நீ
மடிந்திட்ட செய்தி கேட்டு
என் தலை
மேல் இடி விழுந்து போயிற்று
மூச்சு முட்டிப் போனது
இதயத்து இரத்தம்
கண் வழியே கண்ணிராய் ஓடிற்று

கதி கலங்கி நிற்குதய்யா இணையம்
இதய வலி உனை
இறைவனடி சேர்த்தது கேட்டு
இதயங்களில் இரத்தக் கண்ணீர் வடிகிறது

இறைவா
இனி ஒரு கல்யாணை எமக்கு
கனவிலேனும் தருவாயா?...

சாகரன் என்ற சாதனையாளனே
நீ.....
சாகா வரம் பெற்றுவிட்டாய்
இணையங்கள் மூலம்
எம்
இதயங்கள் வென்றுவிட்டாய்
மண் விட்டு போகலாம்
உன் உடல்....
எம் மனம் விட்டு போகாது
உம் உயிர்....
எம் நினைவில் என்றும்
நீர் வாழ்வீர்.....

1 comments:

said...

//சாகரன் என்ற சாதனையாளனே
நீ.....
சாகா வரம் பெற்றுவிட்டாய்
இணையங்கள் மூலம்
எம்
இதயங்கள் வென்றுவிட்டாய்
மண் விட்டு போகலாம்
உன் உடல்....
எம் மனம் விட்டு போகாது
உம் உயிர்....
எம் நினைவில் என்றும்
நீர் வாழ்வீர்.....
//

சத்தியமான வார்த்தைகள்.