இந்து என்று ஒரு மதமே கிடையாது! - சிவசேவகன்

1. உள்ளங்கவர் கள்வன் (By கி.வா.ஜகன்னாதன்)

"இந்துமதம் என்ற இக்காலத்தில் வழங்கும் பெயர் பலசமயங்களுக்கும் பொதுவானது. அப்படி ஒரு தனிச் சமயம் இல்லை. ஆனாலும் சைவம் வைணவம் முதலிய சமயங்கள் பலவற்றிற்குப் பொதுவாக அந்தப் பெயர் அயல் நாட்டவரால் வழங்கப் பெற்று நாளடைவில் நாமும் வழங்கும்படியாயிற்று"

2. காங்கிரஸ் 15-7-1956 (ஜுன் வெளிவந்த பிலிம் இண்டியாத் தமிழாக்கம்) "ஆங்கிலச் சரித்திரப் பேராசிரியர்கள் தான் முகலாயர்கள் இந்தியருக்கு கொடுத்து வந்த 'இந்து' என்ற பெயரை எடுத்துக் கொண்டு மேலும் மேலும் அழுத்தமாக வற்புறுத்தி ........ பிரிவினையை ஏற்படுத்துவதற்குக் காரண கர்த்தர்க்களாக இருந்தார்கள். முகலாயர்கள் இந்தியாவைப் படையெடுப்பதற்கு முன்பு ஹிந்துக்கள் என்ற பெயரே கிடையாது"

3. பிரம வித்தியா பத்திரிகை (புத்தகம் 4, இலக்கம் 14, பக்கம் 201, 202.) பக்கம் -201 "ஹிந்து என்னுஞ் சொல் புதியதே. இதைச் சிலபாஷாகவிகள் உபயோகிக்கின்றனர். சில நவீனர் இது மகமதியரிட்ட பெயரென்றும் மற்றவர் யவணர் ஸிந்து நதிக்கரையில் வசிப்பவராதலின் ஹிந்துக்களெனப் பெயரிட்டா ரென்றும் வேறு சார்பினர் இ·தறிஞர் பெயரென்றும் பிறர் ஓர்வகைச் சித்தாந்திகள் பெயரென்றும் மற்றவர் ஒதுக்கப் பட்டவர் பெயரென்றும் சிலர் பிரஷ்டர் பெயரென்றும் பலவழி சொல்லுகிறார்கள்." "இச் சொல் மகமதியர் விசேஷமாய் நெடுங்காலமாய் வியவகரிப்பதாய் ஆரட்ட பாஷை (அதாவது அரபிபாஷை). அதில் ஹிந்து என்று (அஞ்ஞானி என்னும் பொருளில்) இருக்கின்றது. அவர்கள் இந்த இந்தியா தேசத்தின் ஆக்ஷ¢யைக் கைக்கொண்ட பொழுது நம்மவர் ஞானிகளாகவும் மற்றவர் அஞ்ஞானிகளாகவும் எண்ணி இப்பெயரை இட்டார் என்பது."

4. தினமணி 10-3-1958 "ஹிந்தி என்ற வார்த்தையே இந்தியச் சொல் அல்ல என்று ராஜாஜி இங்கு தமிழர் அளித்த வரவேற்பில் பேசுகையில் கூறினார். பூர்வீக பாரசீகர் இந்தியாவுக்கு வந்தபோது இந்தியாவின் பூர்வீக குடிகள் பேசிய மொழிக்கு ஹிந்தி என்று பெயரிட்டனர் என்று அவர் விளக்கினார்"

5. R.K.முகர்ஜி என்பவர் சென்னைக் கோகலே ஹாலில் 27.09.1941ல் நடந்த கூட்டமொன்றில் பிரசங்கித்தது. "India and Hinduism are Organically related like body and soul. The name HINDUISM was given to them by Persians"

6. படுக்கை யறையில் பாசாங்கு செய்த பங்கஜவல்லியின் கதை "கிறிஸ்து பிறந்த 1191 வது வருஷத்திலே சகாபுடீன் கோரி என்னப்பட்ட மகமதிய அரசன் டில்லி இராஜ்யத்தை ஜயித்து மகமதிய அரசை நிலைபெறச் செய்த போது இந்நாட்டவர்களாகிய ஆரியரை இந்துக்களென்று அழைக்கத் தொடங்கினர்.......இதனை இத்தேச புராதன சரித்திரமாகிய 'பாரத் பாகி' என்னப்பட்ட நூலிற் காணலாம்."

மேலும் படிக்க:- http://www.muthamilmantram.com/index.php?name=PNphpBB2&file=viewtopic&t=3558

இதே நாளில்...-மணி

செஞ்சிலுவை சங்கத்தை தொடங்கிய ஹென்றி டுனானட் பிறந்தநாள்.(08-05-1821)

சுதந்திர போராட்ட வீரர் கோபால கிருஷ்ண கோகலே பிறந்த நாள் தேதி : 09-05-1866

தென்னாப்ரிக்காவின் அதிபராக நெல்சன் மன்டேலா பதவி ஏற்றார். 10.05.1994

தாம்பரத்திற்கும் சென்னை கடற்கறைக்கும் இடையே முதல் மின்சார ரயில் விடப்பட்டது.(11.05.1931)

மேலும் படிக்க:-http://www.muthamilmantram.com/index.php?name=PNphpBB2&file=viewtopic&t=3161

ஏன் என்ற கேள்வி! - ரத்தினகிரி

ஒரு ஏ.கே. 47 துப்பாக்கியை வாங்க 100 டாலர் ஆகிறதாம். 3000 குழந்தைகளுக்குக் கண்ணுக்கு வைட்டமின் A மாத்திரை வாங்க இந்தப் பணம் போதுமானது.

ஒரு மில்லியன் கண்ணி வெடிகள் வாங்க 100 மில்லியன் டாலர் ஆகிறதாம். இந்தப் பணத்தில் 77 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட முடியும்.

23 எஃப் - 86 ரக போர் விமானங்கள் வாங்க 800 மில்லியன் டாலர் ஆகிறதாம். இதைக் கொண்டு 1.6 பில்லியன் மக்களுக்கு 10 ஆண்டுகளுக்கு அயோடின் கலந்த உப்பை வழங்க முடியும்.

மேலும் படிக்க:- http://www.muthamilmantram.com/index.php?name=PNphpBB2&file=viewtopic&t=3070

மகா சதாசிவன் - சிவசேவகன்

இடதுகை பழக்கம் - மூர்த்தி

இடது கைப் பழக்கம் உள்ளவர்கள் பற்றி அண்மையில் கலிபோர்னியா பல்கலைக்கழகத் தில் ஒரு சர்வே நடத்தப்பட்டது. இந்த சர்வேயை நடத்திய பேராசிரியர் ஸ்டான்லி கோரன், இடது கைப் பழக்கம் உள்ள நூற்றுக் கணக்கானவர்களைச் சந்தித்தார். இடது கைப் பழக்கம் கொண்ட இறந்தவர்கள் பற்றியும் ஆராய்ந்தார். இவரது ஆராய்ச்சியின்படி இடது கைப் பழக்கம் உள்ளவர்களுக்கு சில குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இடது கைப் பழக்கம் உள்ளவர்கள் வலது கைப் பழக்கம் கொண்ட வாழ்க்கைத் துணையுடன் சேர்ந்து வாழும்போது மிகவும் சிரமப்படுகிறார்களாம். தவிர, வலது கைப் பழக்கம் கொண்டவர்களை விட இவர்களுக்கு சராசரியாக 9 வருடம் ஆயுள் குறைவாக இருப்பதையும் கண்டறிந்தார்.

இதற்கு முக்கியக்காரணம் இவர்கள் அதிக அளவில் விபத்துக்களில் சிக்கிக் கொள்வதுதான். ஏனெனில் உலகம் முழுவதும் வலதுகை பழக்கம் கொண்டவர்களுக் காகவே எந்திரங்கள், தொழில் உபகரணங்கள், வாகனங்கள் தயாரிக்கப்பட்டிருப்பதால் அதை இடது கைப் பழக்கம் உள்ளவர்கள் கையாளும்போது அவர்களுக்குப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

ஒரே ஆறுதலான விஷயம், இடது கைப்பழக்கம் உள்ளவர்கள் இக்கட்டான சூழ்நிலை யிலும் சட்டென்று திடமான முடிவுகளை எடுப்பதுதான். வலது கைப் பழக்கம் உள்ளவர்கள் இது போன்ற நேரங்களில் தடுமாறி விடுகிறார்களாம்.

குழந்தையின் வளர்ப்பு சரியா? -பாலா

போனாவாரம் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தேன். குழந்தைக்கு 2 முதல் மூன்று வயது இருக்கும் என்று நினைக்கிறேன். ஆண் குழந்தை. நன்றாக நடக்கிறான். ஏதற்கெடுத்தாலும் அழுகை. பெற்றோர்கள் ஒரு வார்த்தை கூட கடிந்து பேசுவதில்லை. அந்த குழந்தையும் கையில் கிடைக்கும் செல்போன் முதல் கொண்டு கன்னாபின்னாவென தூக்கிபோட்டு விளையாடிக்கொண்டிருக்கிறது. பெற்றோர்களும் அதுமாதிரி செய்ய கூடாது என்று கூட சொல்லவில்லை. அவர்கள் வீட்டில் உள்ள பெரிய எல்சிடி டிவி 59" இஞ்ச் டிவியை கூட எதோ ஸ்டூலால் தள்ளி அந்த டிவி இப்ப எல்லாத்தையும் ஒன்னுக்கு மன்னாக காண்பித்து கொண்டிருக்கிறது. ஸ்கிரீனில் உள்ள கலர்கள் போய்விட்டன. சொல்ல போனால் அநியாத்துக்கு செல்லம். கார்ட்லெஸ் போன், ட்வி ரிமோட் இப்படி எல்லாம் உடைந்துபோய்தான் இருக்கிறது. நாம் பொதுவாக அதிகபட்சம் குழந்தை எல்லைமீறி அழுதால் ஏய் என்று அதட்டுவோம். அட்லீஸ்ட் குழந்தை கொஞ்சமாவது அழுகையை நிப்பாட்டும் அல்லவா? இங்கே அது கூட இல்லை.

குழந்தைகளை அடிப்பதை கண்டால் பொறுக்காத எனக்கு இந்த குழந்தையை பார்த்தும் ஏனோ அடித்து வளர்க்கவேண்டும்போல் தோன்றுகிறது. இப்படியே விட்டால் அந்த பொருளின் அருமை அந்த குழந்தைக்கு எப்படி தெரியும்.? உண்மையில் குழந்தையை அப்படிதான் வளர்க்கவேண்டுமா?

கீரைபக்கோடா- பரஞ்சோதி

தேவையான பொருட்கள்:-

கடலைப் பருப்பு - 1 1/2 கப், அரைக் கீரை - 1 கட்டு, புதினா - 1 கைப்பிடி, கறிவேப்பிலை -சிறிது, மல்லித்தழை -சிறிது, மிளகாய் வற்றல் - 2 பச்சை மிளகாய் - 2 ,சோம்பு - 1 டீஸ்பூன், இஞ்சி - 1 துண்டு, பூண்டு - 5 பல், எண்ணெய் - தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு

செய்முறை:-

கடலைப் பருப்பை இரண்டு மணி நேரம் தண்­ரில் ஊறவைத்து பச்சை மிளகாய், மிளகாய் வற்றல், இஞ்சி, பூண்டு, சோம்பு ஆகியவற்றைச் சேர்த்து கரகரப்பாக அரைத்தெடுங்கள். அரைக் கீரை, மல்லி, புதினா, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சுத்தம் செய்து பொடியாக நறுக்குங்கள். அரைத்த விழுதுடன் உப்பு கீரை வகைகளைச் சேர்த்துப் பிசையுங்கள். சிறிது சிறிதாக எடுத்து சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள். சுடச்சுட சாப்பிட சுவையாக இருக்கும். தக்காளி சாஸ் தொட்டுக்கொண்டால் சுவை கூடும்.

ஆப்பிள் எனும் அருமருந்து- மஞ்சு சுந்தர்

ஆப்பிள்களை தினமும் சாப்பிட்டு வருவது நல்லது. நோய்க்காலங்களில் ஆப்பிள்கள் சாப்பிடுபவர்களையும், மருத்துவர்கள் ஆப்பிள் கொடுங்கள் என்று கூறுவதையெல்லாம் நாம் பார்த்திருக்கறோம். ஆனால் குறிப்பாக அதன் மருத்துவப் பயன்கள் என்ன என்பதோ, அதன் ஒரு சில குறைவான தீமைகள் பற்றியோ அறிந்ததில்லை என்றே தோன்றுகிறது.

பயன்கள்:-

கலோரிகளில் குறைவானது ஆப்பிள். மேலும் கரைபடக்கூடிய நார்ச்சத்துக்கள் ஆப்பிள்களில் அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் கொலஸ்ட்ராலைக் குறைக்க ஆப்பிள் பெரிதும் உதவுகிறது. ஃபைட்டோ கெமிக்கல்ஸ் ஆப்பிள்களில் அதிகம் காணப்படுகிறது. அதாவது குறிப்பாக `குவர்செடின்' அதிகமாக இருப்பதால், இருதய நோயையும், புற்றுநோயையும் தடுக்கிறது.

குறைகள்:-

ஊட்டச்சத்துகள், பிற பழவகைகளை ஒப்பிடும் போது ஆப்பிளில் குறைவு ஆப்பிளின் தோலில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் எச்ச சொச்சங்கள் இருப்பது. ஒரு புதிய ஆப்பிள் அருமையான ஆரோக்கிய உணவு. 140 கிராம் எடை கொண்ட ஒரு ஆப்பிளில் 90 கலோரிகளே உள்ளன. ஆப்பிளை அப்படியே எடுத்துக் கொள்வதும் உண்டு. சமைத்து உண்பதும் உண்டு. நறுக்கி வேகவைத்தும் உண்ணலாம். வறுத்து மொறுமொறுவென்றும் உண்ணலாம். ஆப்பிள் கொண்டு செய்யப்படும் பணியாரம், ஆப்பிள் சாலட்கள், ஆப்பிள் சாறு போன்றவற்றையும் உண்ணலாம். ஆப்பிள் சாற்றை சூடேற்றி பிறகு குளிரவைத்து தினமும் அருந்தி வரலாம். ஆப்பிள் சாறு அருந்தும் பழக்கம் பெரும்பாலும் மேலை நாடுகளில் இருந்து வருகிறது. என்றாலும் தோலில் பூச்சிக்கொல்லி படலங்கள் இருக்கும் என்பதால் தோலை நீக்கிவிடுவது நல்லது நன்றி: வெப் உலகம்.

டைட்டானிக் கப்பல்- சின்னமருது, சுபன்

இங்கிலாந்திலிருந்து நியூயார்க் நகருக்கு 1912-ல் புறப்பட்ட டைட்டானிக் என்ற பிரம்மாண்டமான பயணிகள் கப்பல், வடக்கு அட்லான்டிக் பெருங்கடலில் பாறையில் மோதி கவிழ்ந்துவிட்டது என்றுதான் இதுவரை கூறப்பட்டு வருகிறது. "இது சரியா?' என்று கேப் எலிசபெத் என்ற இடத்தைச் சேர்ந்த ரோஜர் லாங் கேட்கிறார். "அப்படியானால் அந்த கப்பல் எப்படி கவிழ்ந்தது?' என்று அவரையே கேட்டால், "அதைப் பற்றித்தான் நாம் யோசிக்க வேண்டும்' என்கிறார். பாறையில் கப்பல் மோதிய பிறகு அதன் வேகத்தைக் குறைத்து திசையை மாற்ற முற்பட்டபோது, அதன் வால் பகுதி உடைந்து 30 டிகிரி கோணத்தில் சாய்ந்தது என்று இதுவரை கூறப்பட்டு வருகிறது. இது சரியல்ல, 10 முதல் 11 டிகிரி வரை மட்டுமே அது சரிந்திருக்க வேண்டும் என்கிறார் ரோஜர் லாங். சுமார் 850 அடி நீளத்துக்கு இருந்த அக்கப்பல் கடலில் மூழ்கியபோது அதில் இருந்தவர்களில் 1,500-க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டனர். தனது முதல் பயணத்திலேயே மிகப்பெரிய விபத்தைச் சந்தித்தது டைட்டானிக்.

ஆனால் டைட்டானிக் ஆங்கிலப் படத்தில் மிகவும் வித்தியாசமான முறையில் படமாக்கி இருக்கின்றனர். படம் முழுக்கக் கற்பனைதான் என்றாலும் கதாசிரியர் தான் படித்த கேள்விப்பட்ட செய்திகளையே அந்தப் படத்தில் புகுத்தி இருக்கிறார். நடந்த சம்பவத்தில் அழகாக காதலையும் ஏற்றியது கதாசிரியரின் புதுமை.

டைட்டானிக் கப்பல்சார் விபத்துகளில் மிகவும் மோசமான விபத்துதாகும். இக்கப்பல் தனது கன்னி பயணத்தை southamton இலிருந்து new york city க்கு மேற்கொள்ளும் போது new foundland இற்கு தெற்கே 153 km தொலைவில் பனிப்பாறையுடன் மோதுண்டது. இது நடந்தது சித்திரை 14, 1912. இவ்விபத்தில் ஏறாத்தாழ 1513 பேர் இறந்தனர். இவர்களுள் அமெரிக்க கோடீஸ்வரர்களான John Jacob Astor, Benjamin Guggenheim மற்றும் Isidor Straus என்போர் அடங்குவர்.

இதில் தண்ணீர் உள்புக முடியா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதனால் இதனை மூழ்கடிக்க முடியாதென அறிவித்தனர் இருந்தாலும் பனிப்பாறை இவற்றை எல்லாம் துவம்சம் செய்து மூழ்கடிக்க முடியா கப்பலை மூன்றே மணித்தியாலத்தில் மூழ்கடித்து விட்டது. பின் தொடர்ச்சியாக நடந்த விசாரணைகளில் பனிப்பாறைகள் பற்றிய எச்சரிக்கையும் மீறி கப்பல் தலைவனால் மிக விரைவாக கப்பல் செலுத்தப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. மேலும் உயிர் காக்கும் படகுகளும்(lifeboat) அங்கிருந்தவர்களுள் பாதிப்பேருக்கே போதுமானதாக இருந்தது. அருகிலிருந்தும் எந்தவொரு உதவியும் பெறமுடியவில்லை காரணம் அருகிலிருந்த californian இல் இருந்த வானொலி அலை கட்டுப்பாட்டாளர்(radio opperator) வேலையில் இல்லாமல்(off duty) உறங்கிகொண்டு இருந்தார். இவையே பின்பு கடல் வழி பிரயாணங்களின் போது ஏற்படும் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு தீர்வாகவந்தது.

அத்தீர்வுகள் ஆவன:-

முடிந்தவரை அனைவருக்கும் ஏற்ற மாதிரி உயிர் காக்கும் படகுகளை (lifeboat) எடுத்து வருதல்,24 மணி நேர ஆழ்கடல் அவதானிப்பு,சர்வதேச அளவில் பனிப்பாறைகள் பற்றிய அவதானிப்பு.

டைட்டானிக் 1985 இன் பின் முக்கிய விடயமாக மாறியது. காரணம் அந்த வருடம் தான் கப்பலின் உண்மையான் உடைந்த பாகங்கள் கடலின் கீழே 3800 மீற்றர்(12,000 அடி) ஆழத்தில் கண்டு பிடிக்கப்பட்டது. கப்பல் இருந்த இடம் பிரெஞ்சு அமெரிக்க ஆய்வாளர்களால் கடலுக்கடியில் புகைப்படம் பிடிக்க கூடிய கருவிகளால் புகைப்படம் பிடிக்கப்பட்டது. அதன் பிறகு 1986ஆம் ஆண்டு ஆடி மாதம் அமெரிக்க ஆய்வாளர்கள் கப்பலுக்கு அருகில் சென்று பாத்தனர். ஆனால் எதையும் மீட்கவில்லை.

அதற்கு அடுத்தவருடம் பிரெஞ்சு மீட்பு குழுவினர் கப்பலில் இருந்து நகைகள்,பணம் முதலியவற்றை எடுத்து 1987 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் பாரிஸ் நகரில் காட்சிபடுத்தினர். கப்பலை வெளிகொண்டுவரும் முயற்சிகள் சில பல காரணங்களால் கைகூடி வரவில்லை.

தங்கம் நமது அங்கம்- ரத்தினகிரி

கடந்த 6000 ஆண்டுகளில் உலகில் மொத்தம் சற்றேறக் குறைய 1,25,000 டன் தங்கம் உற்பத்தியாகியிருக்கிறது. இந்த வரலாறை இரண்டு காலங்களாகப் பிரித்துப் பார்க்கலாம். 1848க்கு முன், அதற்குப் பின் என்று. 1848 வரை மொத்தமே 10,000 டன் மட்டுமே வெட்டி எடுக்கப்பட்ட தங்கம் கடந்த 158 ஆண்டுகளுக்குள் மீதி 115000 டன் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. எனவே 90%க்கும் மேலான உலக தங்கம் 1848க்குப் பின்னரே வெட்டி எடுக்கப்பட்டுள்ளது.

முதலில் தங்கத்தை வெட்டி எடுத்தவர்கள் எகிப்தியர்களாக இருக்கலாமென்றும் கி.மு. 2000 ஆண்டு வாக்கிலேயே (இப்போது சூடான் மற்றும் சவுதி அரேபியா) ஆண்டுக்கு 1 டன் வரை எடுக்கப்பட்டுள்ளதற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதுவே ரோமானியர்கள் காலத்தில் 5 முதல் 10 டன் வரை ஆண்டுக்கு வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இவை ஸ்பெயின், போர்ச்சுக்கல் மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கி.பி. 500 - 1400 ஆண்டுவரை 1 டன்னுக்கும் குறைவாகவே எடுக்கப்பட்டு வந்துள்ளது. 15வது நூற்றாண்டில், தங்கக் கடற்கரை என்று ஆப்ரிக்காவின் மேற்குப் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட பின் (தற்போது கானா) தங்கம் கிடைக்கும் முக்கிய இடங்களில் ஒன்றாக அது மாறியது. அங்கிருந்து 5 முதல் 8 டன் வரை ஆண்டுக்கு எடுக்கப்பட்டது.

16வது நூற்றாண்டில் மெக்சிகோ மற்றும் பெருவில் மேலும் தங்கம் கண்டு பிடிக்கப்பட்டது. 17வது நூற்றாண்டில் தான் ஆண்டுக்கு 10-12 டன் தங்கம் வெட்டியெடுக்கப்பட்டது. 18வது நூற்றாண்டில் ரஷ்யாவும் தன் பங்குக்கு தங்கத்தை எடுக்க ஆரம்பித்ததும் இது ஆண்டுக்கு 25 டன்னாக மாறியது. 1847ல் தான் அதுவரை இருந்த வரலாற்றிலேயே அதிக பட்சமாக ரஷ்யா 35 டன் எடுத்தது. அந்த ஆண்டில் உலக மொத்த உற்பத்தியே 75 டன் தான்.

1848. தங்க வரலாற்றில் ஒரு முக்கியமான ஆண்டு. கலிபோர்னியாவில் தங்கச் சுரங்கம் கண்டெடுக்கப்பட்டது. அதற்குள் 1914ம் ஆண்டு வாக்கில் ரஷ்யாவும் 60 டன் வரை தங்கம் ஆண்டுக்கு எடுக்க ஆரம்பித்து விட்டது. 1848ல் அமெரிக்காவின் நதிப் பகுதிகளில் சட்டரின் மில் (Sutter's Mill) கண்டுபிடிக்கப்பட்ட பின் தங்கத்தின் தலைவிதியே மாறிவிட்டது எனலாம். 1851லேயே 77 டன் எடுக்கப்பட்டது. இந்த ஆண்டிலேயே ஆஸ்திரேலியாவிலும் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. 1853ல் 93 டன்னாக அதிகரித்தது. 1856ல் ஆஸ்திரேலியாவில் மட்டும் 95 டன் தங்கம் எடுக்கப்பட்டது. உலக உற்பத்தி அந்த ஆண்டில் 280 டன்னாக அதிகரித்தது. 1886ல் தென்னாப்பிரிக்காவில் விட்வாட்டெஸ்ரெண்ட் பேசின் (Witwatesrand Basin) கண்டுபிடிக்கப்பட்ட பின் மேலும் தங்க உற்பத்தி அதிகரித்தது. கிழக்குப் பகுதிகளில் 1873லேயே தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.

1898ல் அமெரிக்காவுக்கு அதிகமாக தங்கம் அனுப்பியது ஆப்ரிக்காவாகும், அப்போதிருந்து இது இன்னும் நீடிக்கிறது. அந்த ஆண்டில் உலகின் மொத்த தங்கத்தில் 40% ஆப்ரிக்காவிலிருந்தே எடுக்கப்பட்டிருந்தது. 1970ல் தான் முதலில் தங்க உற்பத்தி ஆண்டுக்கு 1000 டன்னை எட்டியது. இதற்குள் 1893ல் மேற்கு ஆஸ்திரேலியாவில் கல்கூர்லி (Kalgoorlie) சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை இந்தச் சுரங்கத்திலிருந்து மட்டும் 1300 டன் வரை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். 1903ல் ஆஸ்திரேலியாவின் பங்கு 119 டன்னாகும். இதே அளவு 1988ல் தான் அவர்களால் எட்ட முடிந்தது மீண்டும். 1896ல் கனடாவின் யூகான் எல்லைப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட தங்கப் படிமங்கள் மொத்தம் 75 டன் தங்கம் மூன்றாண்டுகளில் உற்பத்தி செய்ய ஏதுவாயிருந்தது.

இந்த நூற்றாண்டில் ஆண்டுக்கு 400 டன் வரை தங்கம் எடுக்க ஆரம்பித்திருந்தது மொத்த உலகமும். 20வது நூற்றாண்டில் தங்க உற்பத்தி தொய்வடைந்தது என்றே சொல்லலாம். 1940ல் அமெரிக்காவின் உற்பத்தி 155 டன்னாகவும், கனடாவின் உற்பத்தி 172 டன்னாகவும் இருந்தது. 1991 வரை இந்த எண்ணிக்கையை கனடாவாலேயே முறியடிக்க முடியவில்லை. 1980ல் ஏற்பட்ட தங்க விலை ஏற்றம் மூடிக்கிடந்த அனைத்து சுரங்கங்களுக்கும் புத்துணர்ச்சி அளித்தது. இதனால் ஆண்டுக்கு வெறூம் 962 டன்னாக இருந்த உற்பத்தி ஒரே ஆண்டில் 1744 டன்னாக அடுத்த பத்தாண்டுகளுக்குள் தாண்டிக் குதித்தது. இதற்குள் பிரேசில், வெனிசுலா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலும் தங்கம் எடுக்க ஆரம்பிக்கப் பட்டது. இதில் பிரேசிலிலுள்ள செர்ரா பெலாடா என்னும் சுரங்கம் 1983ல் மட்டும் 13டன் தங்கம் எடுத்துத் தந்தது.

1980களில் புகுத்தப்பட்ட நவீன சுரங்கத் தொழில் நுட்பம் இதற்கு மிகவும் உதவிகரமாக இருந்தது எனலாம். 1980ல் கனடாவின் 51.6 டன் தங்க உற்பத்தி ஒரே ஆண்டில் மும்மடங்காகி 175.3 டன் உற்பத்தியை ஈட்டித் தந்தது. தற்போது கண்டெடுக்கப்பட்ட ஹெம்லோ சுரங்கம் ஆண்டுக்கு 35 டன்னை உற்பத்தி செய்து தருகிறது. இன்னும் எதிர்காலத்திலும் அதிக தங்க உற்பத்தி செய்ய வாய்ப்பிருப்பதாக அறிய முடிகிறது. முக்கியமாக, பசிபிக் பெருங்கடலின் தீ வட்டம் (rim of fire) (இது என்ன தீ வட்டம் என்று தெரியவேண்டுமானால் அண்டத்தின் அற்புதங்களைப் பாருங்கள்!) கானா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்ற இடங்களில் தங்கத்தின் சுரங்கங்கள் அமைக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறுகின்றனர்.

1993ல் மீண்டும் ஒரு தங்க விலையேற்றத்தை உலகம் கண்டாலும், சுற்றுப் புற சூழலையும் கணக்கில் கொள்ள வேண்டியிருக்கிறது. இருந்த போதிலும் இப்போதைக்கு தங்கத்துக்கு தட்டுப்பாடு வராது என்றே தோன்றுகிறது.

புதுவையின் முதல் ஐஏஎஸ்- மணி

தமிழக முதல்வர்கள்!- மணி