அண்ணன் சாகரனுக்கு அழுத விழியோடு தங்கையின் இரங்கல்பா

அழுத விழியோடு தங்கையின் இரங்கல்பா... இலங்கை பெண்

சாதனையாளன் சாகரன் அண்ணாவே
சாதாரனமானவன் அல்ல நீங்கள்
சாதிக்க பிறந்த தமிழ்மகனல்லவா
சாதனைகளும் படைத்தீர்கள் அண்ணா

தமிழனாக பிறந்தீர் அண்ணாவே
தமிழுக்காக உழைத்தீரே அண்ணாவே
தமிழ் வாழ ஆசை கொண்டீரே அண்ணாவே
தமிழ்த்தாய் உம்மை என்றும் மறவாள்

கதிகலங்கி போனேன் நான் அண்ணாவே
காலையிலே வந்த முதல் நிமிடமே
காத்திருப்பில்லாமல் மன்றத்தினை திறப்பேன்
காலன் கொடிய செய்தியல்லவா கண்டேன் நான்

விதியினை வெல்ல முடியாத வாழ்விலே
விளையாட்டாகியதோ உள்ளங்கள் இன்று
விதி விளையாட்டிலே உம்மை இழந்திட்டோமே
விசர் பிடித்துவிட போகின்றது அண்ணாவே

மூன்று நாட்களுக்கு பின் மன்றத்தினை காண
மும்மரமாக வந்தேன் நான் இன்றைய தினம்
முத்தாய் பல முத்துக்கள் கொட்டிகிடக்குமே
முகம் மலரவில்லை முதல் பதிவினை கண்டு

அன்பு அண்ணாவே அழுகின்றேன் நான் இங்கே
அறிமுகம் இல்லாத உறவாகினும் அண்ணாவே
அன்புள்ளம் உங்கள் உள்ளம் என்றோ என் மனதில்
ஆணித்தரமாக பதிந்துவிட்டது அண்ணாவே

இழந்துவிட்டோமே உம்மை நாம் அண்ணாவே
இழக்க முடியாத இழப்பினை எண்ணி ஏங்குகின்றோம்
இழந்த உயிரை மீண்டும் பெற ஒரு வரம் கிடைத்தால்
இனிய அண்ணாவே உங்களின் உயிரை கேட்டெடுப்பேன்

துக்கங்கள் என் வாழ்வில் புதிதில்லை அண்ணாவே
துவண்டே பழகியும் போனது அண்ணாவே
துவழுகின்றேன் நானிங்கு உங்களின் இழப்பாலே
துக்கத்தை ஆற்ற முடியாமல் தவிக்கின்றேன் தனிமையிலே

இந்தியாவில் இருந்திருந்தால் நேரடியாக வந்திருப்பேன்
இருக்கும் இடமோ கடல் தாண்டிய இடமாச்சே அண்ணா
இங்கிருந்தே தேம்பி அழுகின்றேன் என் அண்ணாவே
இறுதி நிகழ்வில் கூட கலந்து கண்ணீர் விடமுடியாமலே

எங்கிருந்தோ வந்தோம் நாம் எல்லோரும் அண்ணாவே
எதிர்பார்புகள் இல்லாமல் சந்தித்தோம் அண்ணாவே
ஏனோ இறைவனுக்கும் பொறுக்கவில்லை அண்ணாவே
எங்களின் இன்ப உறவு பிணைப்பினை அண்ணாவே

தங்களின் ஆத்மா சாந்தியடையவே வேண்டி அண்ணாவே
தாமதமாக என்றாலும் தரணி முழுவதும் நாம் சொல்வோம்
தந்தீரே உன்னத சேவை எம் மன்றத்துக்கு நீவீர் என்றுமே
தரணி முழுவதும் வாழும் உங்களின் உயிர் எம் மனதிலே

விக்கித்து போய் நிக்கின்றேன் நானிங்கே அண்ணாவே
விசனமாக இருக்கின்றது கடவுளின் மேல் அண்ணாவே
விடியற்காலையிலே விழி பிதுங்கி போனேன் அண்ணாவே
விடியதா இரவுகளில் எத்தனை கனவுகளின் கோலங்கள்

வேண்டுகின்றேன் இறைவனின் திருப்பாதத்திலே அண்ணாவே
வேதனையில் நிக்கும் உங்கள் குடும்பத்தினருக்காவே அண்ணாவே
வேற்று பிறப்பில் அதே கல்யானாக பிறந்திடுங்கள் அண்ணாவே
வேதனைகள் தாங்காத என் உள்ளம் என்றுமே வேதனையிலே....

அண்ணாவே ஆணிவேராக இருந்த அண்ணாவே உங்களின் ஆத்மா சாந்தியடைய
சிறியவள் உங்கள் தங்கை இறைவனிடம் மன்றாடுகின்றேன் உங்களின்
குடும்பத்தினரையும் ஆறுதல் படுத்தனும் இறைவன் இரக்கமில்ல்லாமல் செய்த
செயலினால் பரிதவிக்கின்றோம் இங்கு நாம் எல்லோருமே....

சாகரன் அண்ணாவுக்கு கண்ணீர் அஞ்சலிகள்...