உன்னை வாழ்த்துவதற்கு
பேதை என்னிடம்
வார்த்தைகள் ஏதும் இல்லை
உன்னில் நான் பல கவிஞர்களை
காண்கின்றேன்....பூரிப்பாகவுள்ளது....
முத்தமிழ் மன்றமே
என் வேலை
மணித்தியாலங்களில் பல
உன்னோடு முடிகின்றது...
நான் உன்னில்...இரசித்து
பார்ப்பது..இந்த கவி பக்கம்
மட்டுமே...
ஏனோ தெரியவில்லை....
என் நாட்கள் கூட முழுமை
அடைவதில்லை உன்னை நான்
ஒரு நாளாவது பார்க்காது போனால்..
இது உன்னில்...கவி......தவழ விடும்
பல உறவுகளுக்கு தெரியும்....
உன்னை ஆராதிக்க....
பலர் இருக்கின்ற போதிலும்
இதிலே இந்த பேதைக்கும்
ஒரு ஆசை வந்திட்டது...
உன்னை வாழ்த்துவதற்கு
முத்தமிழ்மன்றமே... நீ வாழி
உன் உன்னத கலைச்சேவை வாழி
உன்னில் கவி படைக்கும்
அனைத்து கவிஞர்களும் வாழி
என்றென்றும் உன் சேவை வாழியவே
முத்தமிழ் மன்றத்தினை...வாழ்த்த வயதோ...அனுபவமோ கானாது எனக்கு இருந்தும் ஒரு சிறிய ஆசை...தவறெனின் மன்னித்துவிடுங்கள் உறவுகளே...
நன்றிகளுடன்
இலங்கை பெண்...
முத்தமிழ்மன்றத்திற்கு வாழ்த்துக்கள்!
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
Post a Comment