இந்தியா முன்னேற யோசனைகள்!

பணம் எங்கும் புழுங்குகிறது. கறுப்பு வெள்ளை என்று நிறம் மாறுகிறது. இதை கட்டுப்படுத்த ஒரு யோசனை.

அதாவது நீங்கள் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்தால் உங்கள் சம்பளம் 20000 என்று வைத்துக் கொண்டால் அது உங்களுக்கு பணமாக கிட்டாது. இன்னும் சொல்லப் போனால் அரசாங்கம் பணமே அச்சடிக்காது.

உங்களிடம் உள்ள அட்டையில் 20000 புள்ளிகள் கூடிவிடும். இந்த அட்டையை எடுத்துக்கொண்டு கடைவீதிக்கு சென்றால் நீங்கள் செலவு செய்யலாம். உங்கள் அட்டையிலிருந்து நீங்கள் செலவு செய்த அளவிற்கு புள்ளிகள் குறைக்கப்பட்டுவிடும். பிறகு முடி திருத்தும் நிலையம் சினிமா எலெக்ட்ரானிக்ஸ் இப்படி எங்குமே பணம் இல்லை.

உங்களுக்கு பணம் கொடுப்பவர்கள் வங்கியின் மூலமாக மட்டுமே உங்கள் அட்டையிலிருக்கும் புள்ளிகளை அதிகரிக்க முடியும்.

இப்படியானால் ஒவ்வொரு குடிமகனின் செலவை அரசாங்கம் கண்கானிக்க இயலும். வரவையும் தான். இது கறுப்பு பணத்தையும் லஞ்சத்தையும் வெகுவாக குறைக்கும்.இதில் சங்கடம் என்னவென்றால் பாமர மக்களும் உபயோகிக்கும் அளவிற்கு இதை எளிமையாக்குவது தான்.

மேலும் நிறைய:-http://www.muthamilmantram.com/showthread.php?p=132302#post132302

ஆலோசகர்:- மோகன்.

0 comments: