தமிழில் மிக அதிகமாக விற்பனையாகும் நாளிதழ் தினகரன் என்று ஆடிட் பீரோ ஆஃப் சர்குலேஷன் (ஏ.பி.சி.) அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் வெளியாகும் அனைத்து பத்திரிகைகளின் விற்பனையை கடுமையான சோதனைகள் மூலம் தணிக்கை செய்து சான்றிதழ் வழங்கும் ஏ.பி.சி. அமைப்பின் லேட்டஸ்ட் அறிக்கையில் இந்த தகவல் இடம் பெற்றுள்ளது.
புதிய வடிவில் வெளிவரத் தொடங்கி ஓராண்டு முடிவதற்குள் தினகரன் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது. இவ்வளவு குறுகிய காலத்தில் முதலிடத்தை கைப்பற்றிய முதல் இந்திய நாளிதழ் தினகரன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏ.பி.சி. ஒரு சுயேச்சையான தணிக்கை அமைப்பு. இதன் சான்றிதழ் தவறுகளுக்கு அப்பாற்பட்டது என்பதோடு, உலக அளவில் அங்கீகரிக்கப்படும் பெருமையும் கொண்டதாகும். ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஏ.பி.சி. தனது தணிக்கை அறிக்கையை வெளியிடும். இப்போது வெளியாகி இருப்பது 2006 ஆம் ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஆறு மாத கால கணக்கெடுப்பு மற்றும் சோதனைகள் அடிப்படையிலான தணிக்கை அறிக்கையாகும். இதன்படி அந்த ஆறு மாதங்களில் 16 கோடியே 39 லட்சத்து 19 ஆயிரத்து 656 தினகரன் பிரதிகள் விற்பனை ஆகியுள்ளன.
அதாவது, தினந்தோறும் சராசரியாக 9 லட்சத்து 657 தினகரன் பிரதிகள் விற்பனை ஆகியுள்ளன. தினத்தந்தி 8 லட்சத்து 54,499 பிரதிகளும், தினமலர் 5 லட்சத்து 76,946 பிரதிகளும் விற்றுள்ளன. இதன் மூலம், தமிழில் மிக அதிகமாக விற்பனையாகும் நாளிதழ் தினகரன்தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆங்கில நாளேடுகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டால்கூட தமிழகத்திலேயே மிக அதிகமாக விற்பனையாகும் நாளிதழ் தினகரன்தான்!
தமிழ் அச்சுலகில் உயரிய தொழில்நுட்பம், நேர்த்தியான வடிவமைப்பு, செய்தி ரகம் பிரித்தல், உயிரோட்டமான வண்ணப் படங்கள், கருத்துத் திணிப்பற்ற நேர்மை, எளிய மொழிநடை, கிழமைக்கேற்ப மாறாத விலை ஆகியவற்றை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எமது நோக்கத்துக்கு கிடைத்த வெற்றியாகவே இந்த சாதனையை பார்க்கிறோம்.
மிகக் குறுகிய காலத்தில் கிடைத்திருக்கும் இந்த மகத்தான வெற்றி, உங்களைப் போன்ற லட்சோப லட்சம் வாசகர்கள் தினகரன் மீது வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையின் வெளிப்பாடே என்பதை உணர்கிறோம். அந்த நம்பிக்கைக்கும் ஆதரவுக்கும் எங்கள் நன்றியை காணிக்கையாக்குகிறோம்.
தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் தினகரன் நாளிதழ் மேலும் சாதனைகள் படைக்க
தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டுகிறோம்.
என்.ஆர்.எஸ். என்று சொல்லப்படும் வாசகர்கள் எண்ணிக்கை தொடர்பான ஆய்வில் 96 லட்சத்து 39 ஆயிரம் வாசகர்களைப் பெற்று, அகில இந்தியாவிலும் மிக அதிக வாசகர்களைக் கொண்ட 8வது மிகப் பெரிய நாளிதழ் என்ற பெருமையை தினகரன் கடந்த ஆண்டு பெற்றது. கடந்த ஆண்டு பிப்ரவரி 1 முதல் மே 31ம் தேதி வரை இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
புதிய வடிவில் வெளிவரத் தொடங்கிய மூன்றே மாதத்தில் இந்த சாதனையை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
-தினகரன்
தினகரன் நெம்பர்1 - மோகன்
Posted by
முத்தமிழ்
at
0
comments
Labels: அரசியல்
ஓரெழுத்து அர்த்தங்கள் - சுதாகர்
"அ"
1. திருமால்
2. சிவன்
3. 'எட்டு' என்னும் எண்ணின் குறி
'ஆ'
1. தோன்று / உண்டாகு (Come into Existence)
2. நிகழ் (happen, Occur)
3.முடிவுறு (to be finished, be done)
4. ஒத்துப்போ, இணக்கமாகு (be fit or agreeable)
5. உயர்வடை, சிறப்படை (Prosper, flourish)
6. ஆகு, ஆமை (be)
7. ஒப்பாகு (equal, match)
8. பொருத்து, கட்டு ( tie, bind)
9. நிகழ்த்து, செய்வி (cause, bring about)
10. ஆகுதல் (becoming)
11. எருது, மரை, எருமை ஆகியவற்றின் பெண்பால் (female of OX, Sombar and Buffalo)
12. காளை (bull)
13. ஆன்மா ( Soul)
14. முறை, விதம், ஆறு ( Way, Manner)
15. பசு (Cow)
'ஈ'
1. தானமாகக் கொடு, வழங்கு ( give alms, gift, donate)
2. கொடு, தா (give, offer)
3. படிப்பி ( give instruction)
4. படை, உண்டாக்கு (create, bring into existence)
5. நேர், இணங்கு (agree, consent)
6. ஈன் (bring forth)
7. ஈ / தேனி (இறக்கைகள் உடைய சிறிய உயிரின வகை) (fly)
8. நீக்கம், அழிவு (eradication, destruction)
9. வியப்புக் குறிப்பு (an exclamation of wonder)
'உ'
1. இரண்டு என்னும் எண்ணின் குறி (symbol for the number 2 & it's usually written with out the loop)
2. சிவனின் ஆற்றல் (Energy of Siva)
மேலும்.....
Posted by
முத்தமிழ்
at
1 comments
Labels: கல்வி
சூரியன், சந்திரன், நிலம் - சுதாகர்
சூரியன்
சூரியன்
அங்கி
அண்டயோனி
அருக்கன்
அருணன்
அழற்கதிர்
அற்கன்
ஆதபன்
ஆதி
ஆதித்தன்
ஆழ்வான்
இரவி
இருட்பகை
உச்சிக்கிழான்
உதயன்
ஊழ்
எரிகதிர்
எரிசுடர்
எல்
எல்லவன் (சந்திரனையும் குறிக்கும்)
எல்லோன்
எற்செய்வான்
என்றூழ்
ஒளியவன்
கடவுண்மண்டிலம்
கதிர்க்கடவுள்
கதிரவன்
கனலி
கிரணன்
சவிதா
சுடரோன்
சூரன்
செங்கதிர்
செஞ்சுடர்
ஞாயிறு
தபனன்
தரணி
தாமரைநாதன்
தாமன்
திகிரி
திவாகரன்
தினகரன்
தினமணி
தேரோன்
நிசாரி
பகல்செய்வான்
பதங்கன்
பரிதி
பனிப்பகை
பாஸ்கரன்
பிரபாகரன்
புலரி
மந்தி
மார்த்தாண்டம்
வாலரவி (காலைச் சூரியன்)
வான்கண்
வான்மணி
வானவன்
விண்மணி
விபாகரன்
விருச்சிகன்
விரோசனன்
வெங்கதிர்
வெஞ்சுடர்
வெயிலோன்
சந்திரன்
சந்திரன்
அந்திகாவலன்
அம்புலியம்மான்
ஆலோன்
இந்து
இரவன்
உடுக்கோன்
எல்லவன்
குபேரன்
குமுதநாதன்
சந்தமாமா
சீதன்
சுதாகரன்
சோமன்
தாரகாபதி
திங்கள்
நிலா
பசுங்கதிர்கடவுள்
பனிக்கதிர்
மண்டிலக்கடவுள்
மதி
மீனரசு
முயற்கூடு
முளரிப்பகை
வள்ளி
விது
வெண்கதிரோன்
வெண்மதி
நீர்
1. நீர்
2. தண்ணீர்
3. அக்கரம்
4. அளறு
5. அறல்
6. ஆம்
7. ஆல்
8. ஆலம்
9. உண்ணீர்
10. உதகம்
11. கஞ்சம்
12. கடும்புனல் (விரைந்து ஓடும் நீர்)
13. கழிலிநீர் (கலங்கிய நீர்)
14. கவந்தம்
15. காண்டம்
16. கோ
17. சரம்
18. சலம்
19. சுந்து
20. திருஊரல் (ஊற்று நீர்)
21. தீத்தம்
22. தோயம்
23. நாரம்
24. பாணி
25. பானீயம்
26. பிப்பலம்
27. புனல்
28. புனை
29. வார்
30. ஜலம்
மேலும்...
Posted by
முத்தமிழ்
at
1 comments
Labels: பெயர்கள்
ஆங்கிலம் அரிவோம்! - மாதவன்
1. மாணவர்களை வட்டவடிவமாக நிற்க எவ்வாறு சொல்லவேண்டும்? இப்படித்தான்...
All of you stand in a straight circle.
2. கண்ணாடி அணிந்த மாணவியை அழைப்பது எப்படி??
The girl with the mirror please comes her....
3. பலூனில் காற்று இல்லை என தெரிவிப்பது எப்படி??
There is no wind in the balloon.
மாணவன் ஒருவன் குறுக்கே பேசியதால் கோபத்தில் சொன்னவை...
4. I talk, he talk, why you middle middle talk?
மாணவர்களுக்கு தண்டனை அளிக்கும் முறைகள்.....
5. You, rotate the ground four times...
6. You, go and understand the tree...
7. You three of you stand together separately.
தலைப்பை பார்த்து(?) நாமும் நல்ல ஆங்கிலம் கற்றுக் கொள்ளலாம் என நீங்கள் எண்ணி ஏமாந்தால் நான் பொறுப்பல்ல... இது எனக்கு மின்னஞ்சலில் வந்தது. ஒரு பிரபல கல்லூரி தாளாளர் தனது மாணவர்களிடம் ஆங்கிலத்தில் பிறப்பித்த கட்டளைகள். இவை... இதைப்படித்து நீங்களும் பயன்(?) பெறுங்கள்...
மேலும் இங்கே...
http://www.muthamilmantram.com/viewtopic.php?t=20691
Posted by
முத்தமிழ்
at
7
comments
Labels: நகைச்சுவை
முக்கோண அலசல் - மன்னையார்
முதலில் தினகரனின் பிண்ணனி - கே.பி.கந்தசாமியால் நடத்தப்பட்ட பத்திரிகை அவ்வளவாக சர்க்குலேஷன் இல்லாமல் பேருக்கு இருந்த பத்திரிகை. ஒரு கட்டத்தில் கலைஞரே வேண்டாம் என கே.பி.கே முடிவு செய்து வைகோவிடம் சென்றபின் கடைசிவரை அது வைகோவின் ஆதரவாகத் தான் இருந்தது. பின்னர் அதை சன் டீவி வாங்கியது...( இதற்காகத்தான் சரத்குமார் தி.மு.க வை விட்டு வெளியேறினார்)
கோணம் 2: கலைஞர் சமீபத்தில் சன் டீவியில் தனக்கிருந்த பங்குகளை திரும்பப் பெற்றுக் கொண்டு, ஒரு பேட்டியில் விரக்தியாய் சொன்னார். மாறனைப் போலவே அவருடைய பிள்ளைகளை எதிர் பார்க்க முடியாது. வேண்டுமானால் அவர்கள் அறிவாலயத்தில் இருக்கட்டும். இல்லா விட்டால் அவர்கள் இஷ்டம்.
கோணம் 3 : தினகரன் கை மாறியதே தவிர அதன் ஊழியர்களெல்லாம் இன்னமு அப்படியே இருக்கிறார்கள்.இன்றும் கூட வைகோவைப் பற்றி தைரியமாக செய்திகள் வரும். ஆகவே சன் டீவி பத்திரிகையை வாங்கியதோடு அதை கண்காணிக்க வில்லை என்பது உண்மை.
கோணம் 4 : தினகரன் ஒரு திமுக பத்திரிகை என்ற நிலையில், முரசொலியைவிட சர்க்குலேஷன் எங்கேயோ போய்விட்டது. முரசொலி ஒரு பேப்பர் விக்கும் கடையில் 100 தினகரன் விற்று விடுகிறது. ஆகவே கலைஞரை மீறிய அசுர வளர்ச்சியில் தினகரன் இருப்பதால், கலைஞரின் விருப்பங்கள் அந்த பத்திரிகையில் அவ்வளவாக எடுபடவில்லை என்பதே உண்மை.
கோணம் 5: கருத்துக் கணிப்பு என்பது தற்செயலாக நிகழ்ந்த ஒன்றாகஎ எடுத்துக் கொண்டாலும் அதன் பின்னணி நம்மை யோசிக்க வைக்கும். இதுவரை கலைஞர் குடும்பத்திலிருந்த சூழ்நிலை என்ன என்பதை மாறன் குடும்பத்தவரக்ள் போட்டு உடைத்து விட்டனர். அத்துடன் மாறன் சகோதரர்கள், தாங்கள் இக்கால தலைமுறையைச் சேர்ந்தவர்கள் என்பதை நாசூக்காய் கலைஞ்ருக்கு உணர்த்தி விட்டனர்.
கோணம் 6 ; கலைஞரே இந்த கருத்துக் கணிப்பை ஏற்றுக்கொள்ளவில்லை என சொன்னாலும், இவரைக் கேட்டுவிட்டு அந்த பத்திரிகை எதையும் செய்வதில்லை என்பதற்கு சமீபத்திய அசம்பாவிதங்கள் ஒரு உதாரண்ம்.
கோணம் 7 : ஆக தினகரன் தான் இன்னமும் தனியான பத்திரிகை தான் என்பதை தக்க வைத்துக்கொள்ள போட்ட வலையில், பலர் பலியானது துரதிருஷ்டம். ராமதாஸ் சீரியஸ்ஸாய் கோபப் பட்டபோது ஏற்படாத விளைவுகள், அழகிரி மூலம் பத்திரிகை சந்தித்து விட்டது.
கோணம் 8 : கலைஞர் என்ற தனிமனிதனின் செல்வாக்கினால் அடைந்த பயன்கள் ஏராளமாய் இருந்தாலும் தாங்கள், என்றும் மாறன் குடும்பத்தவர்கள் தான் என்பதை மறைமுகமாக காட்டி விட்டார்கள்.
கோணம் 9 : தயாநிதி மாறன் மத்தியில் சிறந்த அமைச்சர் என்று சித்தரித்த கணிப்பு, அவரை கலைஞருக்கு அடுத்தபடியாய் காட்டாததும் அவர் மாநில அரசியலுக்கு லாயக்கில்லை என்பதையும் தோலுரித்து விட்டது.
கோணம் 10 : எல்லாவற்றிற்கும் மேலாக, 50ம் வருட பொன் விழா நெருங்கும் தருணத்தில் இது போன்ற நெருடல் மூலம் கலைஞரின் மனம் சஞ்சலப்பட்டதில்பலருக்கு சந்தோஷம் உண்டு ப்ண்ணக்கூட இந்த கணிப்பு உதவியிருக்கிறது.
ஆக கருணாநிதி - மாறன் - தினகரன் இந்த முக்கோண கணக்கில் எங்கு பார்த்தாலும் ஏதேனும் நெருடல்கள் இருப்பதை உணர முடிகிறது.
Posted by
முத்தமிழ்
at
1 comments
Labels: அரசியல்
சொர்க்கத்தில் பில்கேட்ஸ்! - மாதவன்
நம்மாளு பில்கேட்ஸ் செத்து போயி.. கடவுள் கிட்டே போய் நின்னாரு.
நம்ம கடவுளுக்கே கன்ஃபூஷன். இன்னாடா இவன் நல்லது பன்னிகிறானா இல்ல கஸ்மாலம் கெட்டது பண்ணிகிறனா ?. இவன எங்கே உடறது ? சொர்க்கமா நரகமா ந்னு பயங்கர கன்ஃபூஷன். நம்மாளுகிட்டயே கேட்டாரு கடவுளு.
‘ஏம்பா பில்லு.. எல்லா வூட்லயும் கம்பூட்டர் இருக்குன்னா நீ ஒரு ரீசனு. அதுக்காக உனுக்கு சொர்க்கத்துல இடம் தர்லாம்ன்னு பார்த்தா.. நீ தான் விண்டோ ஸ் கம்னாட்டியையும் கண்டு பிடிச்சிருக்க்கே.. நம்மளாண்ட உன் மேலுகா வந்த சாபம் கன்னா பின்னானு கீது. அதனால உன்னை நரகத்துக்கு தான் அனுப்பணும். எனுக்கு சர்யா தெர்ல.. அதனாலே நீயே டிசைட் பண்ணு உன்கு என்னா வேணும்னு.. ‘ கடவுள் சொன்னார்.
பில்கேட்ஸ் குஷியாய்டாரு. ஆனா அவருக்கு தான் சொர்க்கம் நரகம் எப்படி இருக்கும்ன்னு தெரியாதே. ( விண்டோ ஸ் ஒரு நரகங்கிறதை தவிர ). அதனால கடவுள் கூட்டிட்டு போனாரு.
முதல்ல நரகம்.
ஆஹா.. அழகான கடற்கரை. அழகா இருக்கே… பில்கேட்ஸ்க்கு குஷி. அந்த பக்கம் பார்த்தா பொண்ணுங்க பீச் சைட்ல துணியை ஈரமாக்கி உடம்ப காயவெச்சிட்டிருக்காங்க. இந்த பக்கம் பார்த்தா பொண்ணுங்க பசங்களும் பொண்ணுங்களும் சேர்ந்து குஜால்ஸ் பண்ணிட்டு இருக்காங்க. உட்டாலக்கடி செவத்த தோலு தான்.. கொஞ்சம் உத்து பார்த்தா… ந்னு வாலி பாட்ட பாடிட்டே பில்லு செம குஷியாய்ட்டாரு.
ஐயாவுக்கு ரொம்ப திருப்தி. ஆனாலும் நரகமே இப்படி இருக்குன்னா சொர்க்கம் ?
கடவுள் அவனை சொர்க்கத்துக்கு கூட்டிட்டு போனாரு.
அங்கே மேகமும், தேவதைகளும், பாட்டும்.. ம்ம்ம்ம் பில் கேட்ஸ் பாத்தாரு.
ம்ம்… நல்லாதேன் இருக்கு ஆனாலும்…நரகம் தான் கும்முன்னு இருக்கு..
சரி.. கடவுளே.. நான் நரகத்துக்கே போறேன். பில்கேட்ஸ் வழிஞ்சாரு. கடவுள் அவரை நரகத்துக்கு அனுப்பிட்டாரு,
கொஞ்ச நாள் கழிச்சு கடவுள் நம்ம பில்லு ஐயா எப்படி இருக்காருன்னு பாக்க நரகத்துக்கு போனாரு.
அங்கே ஒரு குகையில தீய்க்கு நடுவுல நம்ம பில்லு ! ஹீட்டுக்கு நடுவுல கேட்ஸ்னு கடவுள் பாடிட்டே போனா.. கேட்ஸ்க்கு கடுப்பு.
யோவ் கடவுளே.. என்னவோ காட்டிட்டு இப்படி என்னவோ பண்ணிட்டியேனு கத்துனாரு. கடவுளுக்கு புரியல..
இன்னாபா.. இன்னா மேட்டரு.. கடவுள் கேட்டாரு.
அன்னிக்கு பாத்தப்போ.. பீச் இருந்துச்சி, பீச் ல வாச் பண்ற மாதிரி பிகருங்க இருந்திச்சி, இங்கே வந்து பாத்தா தீ மட்டும் தான் இருக்கு.. நான் ஏமாத்தலாம். கடவுளே ஏமாத்தலாமா.. கேட்ஸ் கத்துனாரு.
கடவுள் சிரிச்சாரு.. ஓ.. அதைச் சொல்றியா.. அடப்பாவி.. அதைப் பார்த்து தான் இங்கே வரணும்ன்னியா… அது நரகத்தோட ஸ்கிரீன் சேவர் டா !!!
http://www.muthamilmantram.com/viewtopic.php?t=20504
Posted by
முத்தமிழ்
at
4
comments
Labels: நகைச்சுவை
எறும்பு - வைரமுத்து
எறும்புகளே எறும்புகளே
உயிர்த்துளிகளின் ஊர்வலங்களே
பத்துக்கோடி ஆண்டுகள் முன்னே
பூமியில் ஊர்ந்த பூச்சியினமே!
உலகின் மிகச்சிறிய ஆச்சரியமே!
உங்களோடு பேசவேண்டும்
சிறிதுநேரம் செவி சாய்ப்பீரா?
நின்று பேசி நேரம் கழிக்க
நாங்கள் ஒன்றும் மனிதர்கள் இல்லை
எது கேட்பதாயினும்
எம்மோடு ஊர்ந்து வாரும்
ஒரு செண்டி மீட்டரில்
ஊற்றி வைத்த உலகமே
அற்ப உயிரென்று
அவலப் பட்டதுண்டா?
பேதை மனிதரே
மில்லிமீட்டர் அளவிலும்
எம்மினத்தில் உயிருண்டு
தன் எடைபோல ஐம்பது
மடங்கு எறும்பு சுமக்கும்
நீர் சுமப்பீரா?
உங்கள் பொழுது போக்கு?
வாழ்வே பொழுது போக்கு
தேடலே விளையாட்டு
ஊர்தலே ஓய்வு
ஆறுமுதல் பத்து வாரம்
ஆயுள் கொண்ட வாழ்வு
இதில் ஓய்வென்ன ஓய்வு
தலை சாய்வென்ன - சாய்வு
இந்த ஆயுளுக்கா
இத்தனை பாடு?
உம்மைப் போல் எமக்கு
ஒற்றை வயிறல்ல
இரட்டை வயிறு
நெரிக்க ஒன்று
சேமிக்க ஒன்று
செரிக்கும் வயிறு எமக்கு
சேமிக்கும் வயிறு
இன்னோர் எறும்புக்கு
இரண்டு வயிற்றுக்குத்தான்
இத்தனை பாடு.
இனப் பெருமை பற்றிச்
சிறு குறிப்பு வரைக!
சிந்து சமவெளிக்கு முற்பட்டது
எங்கள் பொந்து நாகரிகம்
ராணிக்கென்று அந்தப்புரம்
உழைக்கும் எறும்புகள் வசிப்பறை
இறந்த எறும்பை அடக்கம் செய்ய
இடிபாடில்லாத இடுகாடு
மாரிகால சேமிப்புக் கிடங்கு
எல்லாம் அமைந்தது எங்கள்
ராஜாங்கம்
எங்கள் வாழ்க்கையின்
நீளமான நகல்கள்தான் நீங்கள்!
உங்களையே நீங்கள்
வியந்து கொள்வது எப்போது?
மயிலிறகால் அடித்தாலே
மாய்ந்துவிடும் எங்கள் ஜாதி
மதயானைக்குள் புகுந்து
மாய்த்துவிடும்போது.
நீங்கள் வெறுப்பது எது?
நேசிப்பது எது?
வெறுப்பது வாசல் தெளிக்கையிலே
வந்து விழும் கடல்களை
நேசிப்பது அரிசிமா
கோலமிடும் அண்ணபூரணிகளை
சேமிக்கும் தானியங்கள்
முளை கொண்டால் எது செய்வீர்?
கவரும்போதே தானியங்களுக்கு
கருத்தடை செய்து விடுகிறோம்
முளை களைந்த மணிகள்
முளைப்பதில்லை மனிதா!
உங்களால் மறக்க முடியாதது?
உங்கள் அகிம்சைப் போராட்ட
ஊர்வலத்தில் எங்கள் நான்காயிரம்
முன்னோர்கள் நசுங்கிச் செத்தது.
எதிர்வரும் எறும்புகளை
மூக்கோடு மூக்குரசும் காரணம்?
எங்கள் காலணி எறும்புதானா
வென மோப்பம் பிடிக்கும் முயற்சி
எம்மவர் என்றால் வழி விடுவோம்
அந்நியர் என்றால் தலையிடுவோம்
சிறிய மூர்த்திகளே
உங்கள் பெரிய கீர்த்தி எது?
அமேசான் காட்டு ராணுவ
எறும்புகள் யானை வழியில்
இறந்து கிடந்தால் முழு
யானையைத் தின்றே முன்னேறும்
மறவாதீர் எறும்புகளின்
வயிறுகள் யானைகளின்
கல்லறைகள்.
சாத்வீகம்தானே உங்கள்
வாழ்க்கை முறை?
இல்லை எங்களுக்குள்ளும்
வழிப்பறி உண்டு
எங்களுக்குள்ளும் யுத்தங்கள் உண்டு
அபாயம் அறிவிக்க
சத்தம் எழுப்பி
சைகை செய்வதுண்டு
எறும்புகளின் சத்தமா?
இதுவரை கேட்டதில்லையே!
மனிதர்கள் செவிடாயிருந்தால்
எறும்புகள்
என்ன செய்யும்?
நன்றி எறும்பே நன்றி!
நாங்கள் சொல்ல வேண்டும்
நன்றி உமக்கு
ஏன்? எதற்கு?
காணாத காமதேனுவைப் பற்றி
இல்லாத ஆதிசேஷன் பற்றி
பொய்யில் நனைந்த புராணம்
வளர்க்கும் நீங்கள்
இருக்கும் எங்களைப் பற்றி
இன்றேனும் எண்ணிப் பார்த்தீரே
அதற்கு!
மேலும் வைரமுத்து கவிதைகள்:-
http://www.muthamilmantram.com/viewtopic.php?p=249539#249539
Posted by
முத்தமிழ்
at
2
comments
Labels: கவிதை
சிங்கப்பூர் கவிதையிலிருந்து.... பட்டினத்தார்
1.
' ஓவர் ஸ்டேயில் இருந்த
வீரமுத்து மவன் பாண்டியனுக்கு ரோத்தான் அடி
பாளம் பாளமா இறங்கியிருக்குதாம்....
பய குளிக்கையில்கூட சட்டையைக் களட்டுறதில்லையாம்....
என்ன செய்ய என்னய்யனுக்கு அஞ்சு
போண்ணாச்சு கல்யாணம் காத்தி,
புள்ள பொறவு பாக்கணுமில்லே....
வயல்ல பம்பு செட்டு மாத்தணும்;
வீடு பழுதுபாக்கணும்
போனது லீவுக்குப் போனது
பொட்டையாப் போச்சு.
பத்து வெள்ளினாலும்
ஊர்ப் பணத்துல இருநூத்தம்பது.......
பயலையாவது பெருமாக் கோயில்ல
கூடுற பட்டணத்து பயலுவ மாதிரி
கம்பூட்டர் படிக்க வைக்கோணும்.
2.
ஆருடம் சொன்னவனை நம்பி
அனைத்தையும்
அடகு வைத்து இங்கு வந்து
சேர்ந்தவனுக்கு
ரோடில்
தார் போடும் வேலை....
**சிங்கப்பூர் தமிழன் ஒருவனைப் பற்றிய ஒரு கவிதை..........
3.
அன்றொரு நாள்
ஹாய் சொன்னவனுக்கு
கழுத்து நீட்டினாள்
...........................
...........................
இப்போதும் இவள்
தேடுவது
அன்றொரு நாள்
ஹாய் சொன்ன
அவனை.....
** சுஜாதா அவர்களின் கற்றதும் பெற்றதும் புத்தகத்திலிருந்து...........
_________________
Posted by
முத்தமிழ்
at
1 comments
Labels: கவிதை
நான்சென்ஸ் நாற்பது - மாதவன்
நான்சென்ஸ் ஆளாளுக்கு வித்தியாசப்படலாம். எனக்கு சில விசயங்கள் நான்சென்ஸ்ஸாகவே(Nonsense) படுவதுண்டு. குறுகிய நேரத்தில் நான்சென்ஸை நாற்பதாக பட்டியலிட முடிந்தது.’நான்சென்ஸ் நாற்பது’ என்பது ‘நா நா’வென எதுகை மோனையாக அமைந்ததால் நாற்பதோடு நிறுத்திக்கொள்கிறேன்.உங் களுக்கு நான்சென்ஸாக படுபவனவற்றை பின்னூட்டமாக விடுங்கள். நான்சென்ஸ் நாற்பது இப்படியாக…
1.sunday-க்கு பிறகு வரும் Monday
2.அலுவலக மீட்டிங்கில் இண்ட்ஸ்ரடிங்காக மூக்கு நோண்டிக் கொண்டிருக்கும் சக ஊழியன்
3.பெஞ்சு(சேர்) தேய்க்காத அரசு அதிகாரி
4.சிரிக்க வைக்காத குண்டு மனிதர்கள்
5.சமத்து குழந்தை
6.பிய்ந்து போன பழைய செருப்பும் கடிக்காத புதுசெருப்பும்
7.60 வயதில் ஜிலு ஜிலு அரை டவுசருடன் வாக்கிங் போகும் தாத்தா
8.சென்னைக்கு டிராபிஃக் சிக்னல்
9.பஸ் ஸ்டாப்பில் நிற்கும் மாநகரப்பேருந்து
10.குழியில்லாத சென்னை சாலைகள்
11.‘அவுட்சோர்சிங்’ மென்பொருள்துறை
12.ஜோக் அடித்து வலுக்கட்டாயமாக சிரிக்க வைக்கும் மேலதிகாரி
13.அரசியல் இல்லா அலுவலகம்
14.கொள்கையுள்ள அரசியல் கட்சி
15.சீரியல் பார்க்காத குடும்ப பெண்
16.ஏழைக்கு கல்வி
17.செக்ஸ் படம் பார்க்காத மாணவன்
18.கோவிலும் கோவில் பிச்சைக்காரனும்
19.சோறு உண்ணும் ஏழை
20.பெண் சுகம் காணாத துறவி
21.திருடாத பணிப்பெண்
22.சிக்கனாகமல்(chicken) இயற்கையாக சாகும் கோழி
23.தொப்பையில்லாத போலீஸ்
24.ISO 9001:2000 தரச்சான்று பெற்றிருக்கும் காவல்நிலையம்
25.NRI-இன் இந்திய கவலை
26.scehdule படி முடியும் பிராஜக்ட்
27.மூத்திரமோ, தண்ணீரோ தெளிக்கப்பட்டிருக்காத வெஸ்டர்ன் 28.
28.டாஸ்மாக்கில் டீ குடிக்கும் டாஸ்மாக் ஊழியன்
29.நாட்டை திருத்த நினைக்கும் சினிமாக்காரன் கனவு
30.இருமல் வராத கிழடு கட்டைகள்
31.சண்டைப்போடாத மனைவி
32.வீட்டுக்கு வந்த நண்பருடன் பேசாமல் டீவியில் லயித்திருப்பது
33.வீட்டுக்கு வந்திருப்போர் முன் சிறு குழந்தையை ‘அதைச் செய்’, ‘இதைச் செய்’ என்று வன்முறையில் ஆழ்த்துவது
34.சண்டையில்லா இலக்கியமும் கையில் துப்பட்ட சுற்றாத குட்டி ரேவதியும்
35.சினிமாவில்/டிவியில் நுழைய மாட்டேன் என்று அடம்பிடிக்கும் எழுத்தாளன்
36.எழுதியதை புத்தகமாக விற்கத்துணியாத ஏழை சோனகிரி எழுத்தாளன்
37.பெண்ணுரிமையைப் போற்றும் சினிமா கவிஞன்/எழுத்து வியாபாரி
38.ஆபிஸில் முத்தமிழ்மன்றம் படிக்காமல் வேலையில் லயித்திருப்பது
39.நான்சென்ஸை தொகுக்கும் நான்
40.மத்த பதிவுகளையெல்லாம் விட்டு விட்டு இந்த பதிவை படிப்பது
முத்தமிழ்மன்றம்
இதே போன்ற பதிவு
Posted by
முத்தமிழ்
at
5
comments
Labels: நகைச்சுவை
மாமனிதர் சாகரனுக்கு மறுபிறப்பு கொடு இறைவா! - ஷீநிசி
நான் உன்னை
அறிந்த நிமிடங்கள் -நீ
இறந்த நிமிடங்களாயிருந்தது..
சாதிக்க விரும்பினாய்
என்று அறிந்தேன் -உன்மேல்
எங்களின் அன்பு எத்துணையென்று
சோதிக்கவும் விரும்பினாயோ?!
எத்தனை கனவுகள்
புதைந்துக்கொண்டிருந்தது உன்னுள்!
அத்தனை கனவுகளும்
புதைந்திடுமோ இனி மண்னுள்?!
நேசிக்கும் நண்பர்களை கொடுத்தாய்
அவருக்கு! -நல்லது இறைவா?
சுவாசிக்கும் நாட்களை குறைத்தாயே?!
நல்லதா இறைவா?
சார்ந்த உறவுகளின்
விழிகளை கொஞ்சம்
துடைத்துவிடு....
சாகரனை இன்றைக்கே
வேறொரு உயிரில்
படைத்துவிடு....
- கண்ணீருடன் வேண்டுவது ஷீநிசி
Posted by
பரஞ்சோதி
at
0
comments
Labels: சாகரன்
மாமனிதர் சாகரனுக்கு இரங்கல்பா - வெங்கடரங்கன்
உனக்காக வாழ்த்துப்பா பாட
உள்ளம் நினைக்கையில்
இரங்கற்பாவிற்கு ஏன் துணை நின்றாய்?
அனைவரின் நலனுக்காய்
துடிதுடித்த உன் இதயம்
உனது நலன் மறந்ததேன்?
சாதிக்கத் துடித்த நீ
சாதித்து விட்டாய் என
முடித்துக் கொண்டதோ வாழ்வு?
உனது எண்ணத்தோடு
கலந்து கொள்ளாமல்
ஊமையாகிப் போன வார்த்தைகள்!
மரண செய்திக் கண்டதும்
நிச்சயப்படுத்திக் கொள்ள முடியாத
உனது இளம் வயது!
சாகரனே
முத்தமிழ்மன்றத்தின் தூணே
நீயா இறந்து போனாய்?
உனது கனவுகள்
உன்னைக் காணாது
கலங்கித் தவிக்கின்றன
முகம் அறியாத உறவுகளிடம்
இனம் புரியாத நட்பு
கொண்டாட வேண்டும் திரும்பிவா!
- கண்ணீருடன் வெங்கடரங்கன்
Posted by
பரஞ்சோதி
at
0
comments
Labels: சாகரன்
மாமனிதரின் புகழ் ஓங்குக - கிரியின் கவியஞ்சலி
மன்ற மாமனிதரின் புகழ் ஓங்குக.
எல்லை அற்றுப்பரந்து விரிந்த கடல்
இல்லை கள்ளம் வெள்ளை மனமதில்
முதிர்ந்த பேச்சில் வயது தெரியாது
உதிர்ந்த மலரின் வாசம் மறையாது
சாகரன் எங்கள் மன்றத் தூண்
சாக வயதில்லா எங்கள் தோழனை
வேகமாய் காலன் இடித்த தூண்
ஆகமம் அடுக்கா பழி இதுகாண்
ஆழியாய் பெயர் வைத்த மாமன்னனே
ஆழிப் பேரலையாய் காலன் அழைக்க
ஊழிப் புயலாய் இதயம் வெம்பியழ
யாழில் சோககீதம் இசைக்கச் செய்தாயே
அஞ்சலி செய்யும் வயதா உனக்கு?
நெஞ்சு பொறுக்கு தில்லையே மனம்
மிஞ்சும் எதிர் காலம் யாதென்றே
நஞ்சு அருந்திய உடலாய் பதறுதே
மன்றத்தின் தெய்வமாய் உயர்ந்திட்ட சாகரன்
தென்றலாய் நண்பர் மனமதில் உறையட்டும்
இன்றுநாம் சூளுரைப்போம் உயிர் கொடுத்தும்
என்றும் இம்மாமன்ற மாறாப்புகழ் காக்க.
Posted by
பரஞ்சோதி
at
0
comments
Labels: சாகரன்
அண்ணன் சாகரனுக்கு அழுத விழியோடு தங்கையின் இரங்கல்பா
அழுத விழியோடு தங்கையின் இரங்கல்பா... இலங்கை பெண்
சாதனையாளன் சாகரன் அண்ணாவே
சாதாரனமானவன் அல்ல நீங்கள்
சாதிக்க பிறந்த தமிழ்மகனல்லவா
சாதனைகளும் படைத்தீர்கள் அண்ணா
தமிழனாக பிறந்தீர் அண்ணாவே
தமிழுக்காக உழைத்தீரே அண்ணாவே
தமிழ் வாழ ஆசை கொண்டீரே அண்ணாவே
தமிழ்த்தாய் உம்மை என்றும் மறவாள்
கதிகலங்கி போனேன் நான் அண்ணாவே
காலையிலே வந்த முதல் நிமிடமே
காத்திருப்பில்லாமல் மன்றத்தினை திறப்பேன்
காலன் கொடிய செய்தியல்லவா கண்டேன் நான்
விதியினை வெல்ல முடியாத வாழ்விலே
விளையாட்டாகியதோ உள்ளங்கள் இன்று
விதி விளையாட்டிலே உம்மை இழந்திட்டோமே
விசர் பிடித்துவிட போகின்றது அண்ணாவே
மூன்று நாட்களுக்கு பின் மன்றத்தினை காண
மும்மரமாக வந்தேன் நான் இன்றைய தினம்
முத்தாய் பல முத்துக்கள் கொட்டிகிடக்குமே
முகம் மலரவில்லை முதல் பதிவினை கண்டு
அன்பு அண்ணாவே அழுகின்றேன் நான் இங்கே
அறிமுகம் இல்லாத உறவாகினும் அண்ணாவே
அன்புள்ளம் உங்கள் உள்ளம் என்றோ என் மனதில்
ஆணித்தரமாக பதிந்துவிட்டது அண்ணாவே
இழந்துவிட்டோமே உம்மை நாம் அண்ணாவே
இழக்க முடியாத இழப்பினை எண்ணி ஏங்குகின்றோம்
இழந்த உயிரை மீண்டும் பெற ஒரு வரம் கிடைத்தால்
இனிய அண்ணாவே உங்களின் உயிரை கேட்டெடுப்பேன்
துக்கங்கள் என் வாழ்வில் புதிதில்லை அண்ணாவே
துவண்டே பழகியும் போனது அண்ணாவே
துவழுகின்றேன் நானிங்கு உங்களின் இழப்பாலே
துக்கத்தை ஆற்ற முடியாமல் தவிக்கின்றேன் தனிமையிலே
இந்தியாவில் இருந்திருந்தால் நேரடியாக வந்திருப்பேன்
இருக்கும் இடமோ கடல் தாண்டிய இடமாச்சே அண்ணா
இங்கிருந்தே தேம்பி அழுகின்றேன் என் அண்ணாவே
இறுதி நிகழ்வில் கூட கலந்து கண்ணீர் விடமுடியாமலே
எங்கிருந்தோ வந்தோம் நாம் எல்லோரும் அண்ணாவே
எதிர்பார்புகள் இல்லாமல் சந்தித்தோம் அண்ணாவே
ஏனோ இறைவனுக்கும் பொறுக்கவில்லை அண்ணாவே
எங்களின் இன்ப உறவு பிணைப்பினை அண்ணாவே
தங்களின் ஆத்மா சாந்தியடையவே வேண்டி அண்ணாவே
தாமதமாக என்றாலும் தரணி முழுவதும் நாம் சொல்வோம்
தந்தீரே உன்னத சேவை எம் மன்றத்துக்கு நீவீர் என்றுமே
தரணி முழுவதும் வாழும் உங்களின் உயிர் எம் மனதிலே
விக்கித்து போய் நிக்கின்றேன் நானிங்கே அண்ணாவே
விசனமாக இருக்கின்றது கடவுளின் மேல் அண்ணாவே
விடியற்காலையிலே விழி பிதுங்கி போனேன் அண்ணாவே
விடியதா இரவுகளில் எத்தனை கனவுகளின் கோலங்கள்
வேண்டுகின்றேன் இறைவனின் திருப்பாதத்திலே அண்ணாவே
வேதனையில் நிக்கும் உங்கள் குடும்பத்தினருக்காவே அண்ணாவே
வேற்று பிறப்பில் அதே கல்யானாக பிறந்திடுங்கள் அண்ணாவே
வேதனைகள் தாங்காத என் உள்ளம் என்றுமே வேதனையிலே....
அண்ணாவே ஆணிவேராக இருந்த அண்ணாவே உங்களின் ஆத்மா சாந்தியடைய
சிறியவள் உங்கள் தங்கை இறைவனிடம் மன்றாடுகின்றேன் உங்களின்
குடும்பத்தினரையும் ஆறுதல் படுத்தனும் இறைவன் இரக்கமில்ல்லாமல் செய்த
செயலினால் பரிதவிக்கின்றோம் இங்கு நாம் எல்லோருமே....
சாகரன் அண்ணாவுக்கு கண்ணீர் அஞ்சலிகள்...
Posted by
பரஞ்சோதி
at
2
comments
Labels: சாகரன்
சாகாவரம் பெற்ற சாகரனுக்கு காவியனின் கவியஞ்சலிகள்
எங்கள் பிரம்மா சாகரன் அவர்களின் உடல் வேண்டும் என்றால் எங்களை விட்டு போயிருக்கலாம், அவர் மூச்சு, அவர் உயிர், அவர் திறமைகள் அனைத்தும் என்றும் இவ்வுலகில் நிலைத்திருக்கும்.
முத்தமிழ் மன்றம், தேன்கூடு, பாலகுமாரன், துவக்கு, இன்னும் பல்வேறு தளங்களை படைத்த பிரம்மாவுக்கு எங்கள் கவியஞ்சலிகள்.
----------
காவியனின் கவியஞ்சலி
சாகரனே...
இணைய உலகின்
இணையில்லா சாதனையாளனே
எங்கே சென்றாய் எமை விட்டு..
பட்டு பூச்சியாய்
உனை வட்டமிட்ட
சின்ன சிட்டு மகளை விட்டு
எட்ட ஏன் சென்றாய்....
விம்மி விம்மி
அழுது துடிக்கும் உன்
அன்பு மனையாள் விட்டு
எட்ட ஏன் சென்றிட்டாய்
இனிய நண்பன் உனக்கு
இதய நோய் தந்திட்ட அந்த
இறைவனுக்கு இரக்கமில்லையோ
நண்பா...
தமிழ் மணக்கும் இணையங்கள் மேல்
இடி விழுந்து போயிற்று
முத்தமிழ் மன்றம் இன்று
முகாரியே பாடுது...
தமிழ்த் தாய் முக்குளித்து
எடுத்த எங்கள்
முத்து சிப்பியே...
உனை நான் பார்த்தறியேன்
இரு தினம் முன்
இணயத்தில் படித்தேன்
தமிழ் வளர்க்க நீ
தாயாய் உழைத்ததும்
முத்தமிழ் மன்றுக்கு நீ
தகப்பன் ஆனதும்...
நேற்றைய பொழுது நீ
மடிந்திட்ட செய்தி கேட்டு
என் தலை
மேல் இடி விழுந்து போயிற்று
மூச்சு முட்டிப் போனது
இதயத்து இரத்தம்
கண் வழியே கண்ணிராய் ஓடிற்று
கதி கலங்கி நிற்குதய்யா இணையம்
இதய வலி உனை
இறைவனடி சேர்த்தது கேட்டு
இதயங்களில் இரத்தக் கண்ணீர் வடிகிறது
இறைவா
இனி ஒரு கல்யாணை எமக்கு
கனவிலேனும் தருவாயா?...
சாகரன் என்ற சாதனையாளனே
நீ.....
சாகா வரம் பெற்றுவிட்டாய்
இணையங்கள் மூலம்
எம்
இதயங்கள் வென்றுவிட்டாய்
மண் விட்டு போகலாம்
உன் உடல்....
எம் மனம் விட்டு போகாது
உம் உயிர்....
எம் நினைவில் என்றும்
நீர் வாழ்வீர்.....
Posted by
பரஞ்சோதி
at
1 comments
Labels: சாகரன்
கண்ணீர் அஞ்சலி!
ரியாத் தமிழ்ச் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும், எழுத்துக் கூடத்தின் ஒருங்கிணைப்பாளரும், தேன்கூடு திரட்டியை தோற்றுவித்தவரும், முத்தமிழ்மன்றத்தின் நிர்வாகியுமான திரு. கல்யாண்(சாகரன்) அவர்கள் நேற்று மாரடைப்பால் மரணமடைந்து விட்டார். அவரது உடல் ஒபய்த் ஹாஸ்பிடலில் தற்சமயம் உள்ளது என்பதனை மிகவும் துயரத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்!
முத்தமிழ்மன்றம் உருவாகக் காரணமாக இருந்த முக்கிய தூணை இழந்து தவிக்கிறோம். 1978ல் பிறந்தவர். 28 வயது முடிந்து இன்னும் 29கூட ஆகாதவர். இந்த வயது இறக்கும் வயதா???
இதுபோன்ற கொடுஞ்செயல்களைப் பார்க்கும்போது இறைவன் இருக்கின்றானா என்று கேட்கத் தோன்றுகிறது. மனைவி, மூன்று வயது குட்டிப் பாப்பா வர்ணிகா, அப்பா, அம்மா, தங்கை ஆகியோரைப் பிரித்து அவரை அழைத்துச் சென்ற காலனை நினைத்தால்... கோபமாக வருகிறது.
கல்யாணின் பிரிவால் வாடும் அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். கல்யாணின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைத் தொழுவோம்.
பிரிவால் வாடும்,
முத்தமிழ்மன்ற நண்பர்கள்.
தொடர்புடைய சுட்டிகள்:-
1.ரியாத் தமிழ்ச்சங்கம்
2.சந்திரமதி கந்தசாமி
3.துளசிகோபால்
4.நாமக்கல் சிபி
5.தமிழ்மணம்
6.சிந்தாநதி
7.முத்தமிழ்மன்றம்
Posted by
முத்தமிழ்
at
2
comments
என்னை ஜெயிக்க வையுங்கள்!- சக்தி பரஞ்சோதி
இது ஒரு மீள்பதிவு:- சக்தி அவர்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் முன்னணியில் இருக்கிறார். இப்பதிவைப் படிக்கும் நண்பர்கள் அனைவரும் சக்திக்கே 47ம் எண்ணில் வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
சக்தி சொல்கிறார்:-
தாத்தா, பாட்டி, மாமா, அத்தை, அண்ணா, அக்கா, அண்ணி, சித்தப்பா, சித்தி, பெரியப்பா, பெரியம்மா மற்றும் அனைவரும் வாங்க, வாங்க. எனக்கு ஓட்டு போடுங்க. ஜெயிக்க வையுங்கள். நீங்க ஓட்டு போட்டால் மட்டும் போதாது, எல்லோரையும் ஓட்டு போட வையுங்க. உங்களை நம்பி தான் களத்தில் இறங்கி இருக்கேன்.
http://www.indiaparenting.com/funtime/babyphotos2/2006dec4b_main.shtml
47-ம் எண் என்னுடையது. மறந்து விடாதீங்க, மறந்தும் இருந்து விடாதீங்க. என் அப்பா யார்னு தெரியும் இல்லே? சிறுவர் பூங்கா புகழ் பரஞ்சோதிதான்!
அன்புடன்
சக்தி.
Posted by
முத்தமிழ்
at
11
comments
சிநேகிதாவுக்கு வாக்களியுங்கள்!
நண்பர்களே!
http://www.indiaparenting.com/funtime/babyphotos2/2006dec2b_main.shtml
என்னுடைய நண்பர் முரளிமோகனின் அருமை புதல்வி ஒரு போட்டியில் கலந்து கொண்டிருக்கிறார், அவருக்கு உங்கள் பொன்னான வாக்கை செலுத்து வெற்றி பெற செய்யுங்கள்.உங்களை நம்பி அவரிடம் சவால் விட்டிருக்கிறேன், கவுத்திப்புடாதீங்க
போடுங்கய்யா ஓட்டு நம்பர் # 33 சிநேகிதாவை பார்த்து
போடுங்கம்மா ஓட்டு நம்பர் # 33 சிநேகிதாவை பார்த்து
போடுங்கண்ணா ஓட்டு நம்பர் # 33 சிநேகிதாவை பார்த்து
போடுங்க அக்கா ஓட்டு நம்பர் # 33 சிநேகிதாவை பார்த்து
அன்புடன்,
பரஞ்சோதி.
Posted by
முத்தமிழ்
at
6
comments
ஏன் இந்த பெயர் வந்தது? - மன்னையார்
எதற்காக கூப்பிடுகிறோம் என்று தெரியாமலே நாம் பெயர்களை அழைக்கிறோம். அதிலும் பெயர்களை மொட்டை போட்டு கொச்சையாவும் அழைக்கிறோம். ஏன் இந்த பெயர் வந்தது?
1. சென்னை - சென்னபசவ நாயக்கன் என்பவன் தான் ஆண்ட பகுதியை 1600 வருடம் வாக்கில் வெறும் 10000 ரூபாய்க்கு கிழக்கிந்திய கம்பனியாரிடம் விற்றுவிட்டாராம். அவர் ஆண்ட பகுதியின் ஞாபகமாய சென்னப் பட்டணம் என்று அழைக்கப்பட்ட இடம் சென்னையாகி விட்டது.
மதராஸ் :- முகமதியர்கள் பலர் இங்கே பள்ளிவாசல்களை நிறுவி தொழுகை நடத்தியபடி இருந்ததால், மதராஸே என்று அழைக்கப்பட்டது பின் நாளில் மெட்ராஸாகிவிட்டது.
கோடம்பாக்கம் - கோடா பாக் : குதிரைகளும் அதை வளர்ப்பவர்களும் நிறைந்த பகுதியாய் இருந்த இடம் இன்று கோடம்பாக்கம் ஆகிவிட்டது.
மாம்பலம்: மாம்லான் எனும் ஆங்கிலேய கலக்டெர் தங்கியிருந்த இடம் இன்று மாம்பலமாகி விட்டது.
மா அம்பலம் :- ஒரு காலத்தில் மிகப் பெரிய சிவாலயம் இங்கிருந்ததாகவும் அந்த ஆலயம் அடங்கிய பகுதி மா அம்பலம் என வழங்கப் பட்டதாம். இன்றைய க்ருஷ்ணவேணி திரையரங்கமே ஒரு கோவில் மிகப் பெரிய திருக்குளம் என்று சொல்லப்படுகிறது.
சைதாப்பேட்டை: சதயு புரம் : சதயு எனும் மன்னன் 108 சிவாலயங்களை எழுப்பினான். அதில் 108வது சிவாலயம் சதயுபுரத்தில் இருக்கும் திருக்காரணீசன். சதயுபுரம் கூப்பிட வசதியாய் சைதாபேட்டையாகிவிட்டது.
கிண்டி:- ப்ருங்கி முனிவர் தன்னுடைய தவக்காலத்தில் பூஜைக்கான கிண்டியைப் பொருத்திய இடம் இன்று கிண்டியாகிவிட்டது.
பரங்கிமலை:- ப்ருங்கி முனிவர் வழிபட்ட சிவாலயம் இன்றும் பரங்கி மலையில் இருப்பதாகச் சொல்கிறார்கள். சர்ச்சுக்குள் பழைய கோவிலின் கட்டமைப்புகள் இருப்பாதாகச் சொல்லப்படுகிறது (ஆய்வுக்குரியது).
சேத்துப்பட்டு: மண்பாண்டம் செய்யும் குயவர்கள் அதற்கான மண்ணை இந்த பகுதியில் சேறு போல் குழைத்து மாட்டு வண்டியில் எடுத்துச் செல்வார்களாம். சேறு குழைத்த இடம் சேற்றுப்பட்டு.
எழுமூர்: இன்றும் சென்னையில் சூர்யோதயம் விழும் முதலிடம் எழுமூர். பூமி மட்டத்தின் மேல் தளத்தில் உள்ளது. சூரியன் எழுமூர் இன்று எழும்பூராகிவிட்டது. இதற்கு சாட்சி, தாஸப்ரகாஷ் அருகிலுள்ள சந்தில் இருக்கும் சிவனுக்கு எழுமீஸ்வரர் என்று பெயர்.திருநாவுக்கரசரால் வைப்புத் தலமாய் பாடப்பட்ட திருத்தலம்.
ராயபுரம்: பல்லவ மன்னனின் அமைச்சரவையில் இருந்த ராயர்களுக்கு ஒதுக்கப்பட்ட மானியம் ராயர்புரம் இன்று ராயபுரம்.
சிந்தாதரிப்பேட்டை: சின்ன தறிப் பேட்டை : சிறிய அள்விலே தறி வைத்துக்கொண்டு குழந்தைகளுக்கான துணிகளை நெய்த பகுதி இன்று சிந்தாதரிப்பேட்டை.
தண்டையார்பேட்டை : பல்லவ ராஜ்யத்தில் உள்ள கோவில்களின் கைங்கர்ய தொண்டை ப்ரதிபலன் பாராது ஆற்றி வந்த அன்பர்களுக்கான் குடியிருப்புக்கு கொடுக்கப் பட்ட மான்யம் தொண்டையார் புரி இன்று தண்டையார் பேட்டை.
புரசவாக்கம்: புரசைப் பாக்கம்: புரசுக் காடுகள் மண்டியிருந்த பகுதி இன்று புரசவாக்கம்.
அமிஞ்சிகரை: அமைந்தகரை அமர்ந்தகரை: ராமபிரான் (லவகுசர்களிடம் போரிட்டு வெற்றி காண முடியாமல்) அமர்ந்த கூவக்கரை இன்று அமைந்தகரை.
செங்கல்பட்டு: செங்கழுநீர் பட்டு : செங்கழுநீர் பூக்கள் நிறைந்த குளங்களை நிறைய கொண்ட இடம் இன்று செங்கல்பட்டு.
பெருங்களத்தூர் : பெரிய பெரிய குளங்களை தன்னகத்தே கொண்ட விவசாய பூமி இன்று பெரிய குளத்தூர் இன்று பெருங்களத்தூர்.
பல்லாவரம்: பல்லவபுரம் பல்லவர்கள் எழுப்பிய சமணப்பள்ளிகள் உள்ள இடம். அனகாபுத்தூர் அருகே இன்றும் காணலாம்.
பூந்தமல்லி : பூந்தண் எனும் அசுரனுக்கு ஈசன் மோக்ஷம் கொடுத்த இடம். மல்லிகாடுகள் அடர்ந்த இடம் இன்று பூந்தமல்லி.
நந்தம்பாக்கம்: நந்தர்கள் எனும் வம்சத்தவர்கள் ராமனை வரவேற்ற இடம் இன்று நந்தம்பாக்கம்.
ராமாபுரம்: ராமபிரான் தங்கிய மாஞ்சோலை இன்று ராமாபுரம்.
போரூர்: முருகப்பெருமான் சூரஸம்ஹாரத்திற்கு ஆயுதம் எடுத்த இடம் இன்று போரூர்.
கோவூர்: கோ- காமதேனு பூசித்த சிவாலயம் இன்று கோவூர்.
குன்றத்தூர்: குன்றுகள் நிறைந்த ஊர் (சீக்கிரம் போய் பாருங்க... ஏன்னா மல முழுங்கிங்க புல் டோசரோட காலி பண்ணிக்கிட்டிருக்காங்க).
ஸ்ரீ பெரும் பூதூர்: அசுர பூதங்கள் நிர்மாணம் பண்ணிய சிவாலயபுரி இன்று ஸ்ரீ பெரும்புதூர்.
சுங்குவார் சத்திரம்: பழங்காலத்தில் வரி வசூலித்த டோல்கேட் இன்று சுங்குவார் சத்திரம்.
நந்தனம்:- மா அம்பலத்திலிருந்த சிவாலய நந்தவனம் இருந்த இடம் இன்று நந்தனம். இங்கு பூமியுலிருந்து எடுக்கப்பட்ட நந்தி சிஐடி நகரில் இருக்கிறது.
யானை கவுணி : திருக்குடை வைபவத்தில் எம்பெருமான் யானை போல் ஒடி தாண்டினாராம்.ஒரே சமயத்தில் இரண்டு ரயில்வே கேட்டுகள் போடப்பட்ட பெரிய நுழைவயில் யானகவுணி.
மாதவரம்: மாதவன் ஈசனிடம் வரம் பெற்ற இடம் இன்று மாதவரம். புராதன சிவ்-விஷ்ணு ஆலயங்கள் உள்ளன.
திண்டிவனம் : திந்த்ரினி வனம் ( புளியங்காடு) இன்று திண்டிவனம்.
வடபழநி: பழய பெயர் புலியூர்கோட்டம்.
வளசரவாக்கம்: வள்ளி சேர் பாக்கம்: முருகப் பெருமான் வள்ளியோடு சேர்ந்த இடம் இன்று வளசரவாக்கம். இங்கு 7 அடி முருக விக்ரகம் பூமியிலிருந்து கிடைத்து கோவில் கட்டியிருக்கிறார்கள். எல்லா டீவி சீரியலிலும் தவறாமல் இக்கோவில் வரும்.
ஈக்காட்டுதாங்கல் : ஈர காடு தங்கல் : வருடத்தில் ஒருநாள் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் இங்கே ராத்தங்கலுக்கு வருவார். எங்குபார்த்தாலும் தண்ணீரில் மிதக்கும் காட்டிற்கு நடுவே எம்பெருமானின் சோலை இருந்ததாம். இன்று ஸ்வாஹா.......
முகப்பேர் : மகப்பேர் ஸந்தானபுரி.
முகலிவாக்கம் : கோவூர் ஈசனின் க்ரீடம் (மௌளி) இருந்த இடம் மௌளிவாக்கம் இன்று முகலிவாக்கம்.
அயனாவரம்: அயன் (ப்ரஹ்ம்மா பூசித்த சிவன்) வரம் பெற்ற இடம்.
மேலும் படிக்க:- http://muthamilmantram.com/showthread.php?p=148709#post148709
Posted by
முத்தமிழ்
at
1 comments
காவியக் காதல்!
அமரக் காதல் என்றால் நமது நினைவில் உடனே வருபவர்கள் அம்பிகாபதி-அமராவதிதான்.
அம்பிகாபதி கவிச் சக்கரவர்த்தி கம்பரின் மகன். அமராவதி குலோத்துங்க சோழ மன்னனின் மகள். கம்பர் குலோத்துங்கனின் அவைக்களப் புலவராக ஒட்டக்கூத்தருடன் சமமாக இருந்தார். அமராவதி அம்பிகாபதியின் புலமை மற்றும் இலக்கிய அறிவை வியந்து அவன் மேல் காதல் கொண்டாள். அம்பிகாபதியின் அறிவுத்திறனை எடுத்துக் காட்டும் சம்பவம் ஒன்றுண்டு.
ஒரு முறை கம்பர் ஒரு நெல்வயலுக்குச் சென்றிருந்தார். வயலுக்குத் தண்ணீர் பாய்ச்ச ஏற்றம் என்ற சாதனத்தைத்தான் முன்பு பயன்படுத்தினர் ஏனென்றால் "பம்ப்" (pump) கண்டுபிடிக்கப் படவில்லை. அங்கே ஏற்றம் இறைப்பவன், "மூங்கிலிலை மேலே" என்ற இரண்டு வார்தைகளை மட்டும் திரும்பத் திரும்பப் பாடிக் கொண்டே ஏற்றமிறைத்தான். கம்பருக்கு அதன் பிறகு என்ன வார்த்தைகள் பாடலில் வரும் என்று தெரியவில்லை. தந்தை ஏதோ சிந்தனையிலிருப்பதைக் கண்ட அம்பிகாபதி அவரிடம் விஷயத்தைக் கூறுமாறு கேட்டான்.
அவர் விஷயத்தைக் கூறியதும் அம்பிகாபதி,
"மூங்கிலிலை மேலே, தூங்கு பனி நீரே, தூங்கு பனி நீரை வாங்கும் கதிரோனே" என்ற வார்த்தைகளைக் கூறவும் கம்பர் அகமிக மகிழ்ந்து, "ஏற்றக் காரன் பாட்டுக்கு எதிர்ப் பாட்டில்லை, என் அம்பிகாபதிக்கு நிகர் யாருமில்லை" என்று கூறிப் புளகாங்கிதமடந்தார்.
அம்பிகாபதி ஒரு நாள் கம்பருடன் குலோத்துங்கனின் அவைக்குச் சென்றிருந்தான். அப்பொழுது அமராவதி அவனுக்கும் கம்பருக்கும் ஒரு தட்டில் நீர் கொணர்ந்து கொடுத்தாள். அவளது நடையழகை மிகவும் ரசித்த அம்பிகாபதி தன்னை மறந்து, "இட்டவடி நோக எடுத்தவடி கொப்பளிக்கவட்டில் சுமந்து மருங்கசைய" என்று பாட ஆரம்பித்து விட்டான். அப்பொழுது ஒட்டக்கூத்தரும் அவையிலிருந்தார். ஒட்டக்கூத்தரின் குதர்க்க புத்தியைப் பற்றி நன்கறிந்த கம்பர் உடனே குருக்கிட்டு,'கொட்டிக்கிழங்கோ கிழங்கென்று கூவுவாள் நாவில் வழங்கோசை வையம் பெறும்' என்று பாடலை முடித்தார்.
இந்தச் சமாளிப்பை ஒட்டக்கூத்தர் ஏற்றுக் கொள்ளவில்லை. கம்பர் கலைமகளிடம் முறையிட்டார். சரஸ்வதி தேவி ஒரு மூதாட்டியாகத் தோன்றி, ஒரு கூடையில் கொட்டிக் கிழங்குகளை எடுத்துக் கொண்டு அரண்மனை வாயிலில் வந்து கூவினாள். அதனால் அம்பிகாபதி அன்று தப்பினான்.
அம்பிகாபதி - அமராவதி காதலுக்கு ஒட்டக்கூத்தர் வாயிலாகக் கடும் எதிர்ப்பு உருவானது. அதன்படி மன்னன் குலோத்துங்கன் அவர்கள் காதலுக்கு ஒரு நிபந்தனை விதித்தான். அம்பிகாபதி காதல் ரசம் இல்லாமல் தொடர்ந்து நூறு பாடல்கள் பாட வேண்டும். பாடி முடித்தால் அமராவதியை அடையலாம். தவறினால் மரண தண்டனையை ஏற்க வேண்டும். இதனையேற்று அம்பிகாபதி பாட ஆரம்பித்தான்.
அமராவதி ஒரு தட்டில் நூறு மலர்களை வைத்துக் கொண்டு ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு மலராக எடுத்து வேறு ஒரு தட்டிலிட்டாள். இவ்வாறு பாடும் பொழுது முதல் பாடலான இறைவணக்கப் பாடல் கணக்கிலெடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. இதனை உணராத அமராவதி, அம்பிகாபதி இறைவணக்கப் பாடலுடன் சேர்த்து நூறு பாடல்களைப் பாடி முடித்ததும் பரவசத்தில் தன்னை மறந்து அம்பிகாபதியை நோக்கிச் சென்றாள். அவளைக் கண்ட பரவசத்தில் அம்பிகாபதி தன்னை மறந்து,
'சற்றே பருத்த தனமே துவளத் தரளவடம்
துற்றேயசையக் குழையூசலாட, துவர்கொள் செவ்வாய்
நற்றேனொழுக நடன சிங்கார நடையழகின்
பொற்றேறிருக்கத் தலையலங்காரம் புறப்பட்டதே'
எனும் காதல் ரசம் ததும்பும் ஒரு பாடலைப் பாடி விட்டான். ஒட்டக்கூத்தர் அவனைக் கையும் களவுமாகப் பிடித்து அவன் மரண தண்டனை அடையும்படிச் செய்துவிட்டார்.
இந்தக் கதை, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் அம்பிகாபதியாகவும், பிரபல பாடகியும் நடிகையுமான பானுமதி அவர்கள் அமராவதியாகவும், எம். என். நம்பியார் அவர்கள் ஒட்டக்கூத்தராகவும், பழம்பெரும் நடிகர் எம். கே. ராதா கம்பராகவும் நடித்த "அம்பிகாபதி" திரைப் படத்தில் தத்ரூபமாகப் படமாக்கப் பட்டுள்ளது.
காதலியை அடைய வேண்டிய அம்பிகாபதி உணார்ச்சி மிகுதியால் காலனை அடைய நேர்ந்த இக்கதை இன்றைய காதலர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். காதலில் வேகத்தை விட விவேகமே முக்கியம் என்பதை உணர்ந்தால் வெற்றி நிச்சயம்!
Posted by
முத்தமிழ்
at
0
comments
