1. மாணவர்களை வட்டவடிவமாக நிற்க எவ்வாறு சொல்லவேண்டும்? இப்படித்தான்...
All of you stand in a straight circle.
2. கண்ணாடி அணிந்த மாணவியை அழைப்பது எப்படி??
The girl with the mirror please comes her....
3. பலூனில் காற்று இல்லை என தெரிவிப்பது எப்படி??
There is no wind in the balloon.
மாணவன் ஒருவன் குறுக்கே பேசியதால் கோபத்தில் சொன்னவை...
4. I talk, he talk, why you middle middle talk?
மாணவர்களுக்கு தண்டனை அளிக்கும் முறைகள்.....
5. You, rotate the ground four times...
6. You, go and understand the tree...
7. You three of you stand together separately.
தலைப்பை பார்த்து(?) நாமும் நல்ல ஆங்கிலம் கற்றுக் கொள்ளலாம் என நீங்கள் எண்ணி ஏமாந்தால் நான் பொறுப்பல்ல... இது எனக்கு மின்னஞ்சலில் வந்தது. ஒரு பிரபல கல்லூரி தாளாளர் தனது மாணவர்களிடம் ஆங்கிலத்தில் பிறப்பித்த கட்டளைகள். இவை... இதைப்படித்து நீங்களும் பயன்(?) பெறுங்கள்...
மேலும் இங்கே...
http://www.muthamilmantram.com/viewtopic.php?t=20691
ஆங்கிலம் அரிவோம்! - மாதவன்
Posted by
முத்தமிழ்
at
7
comments
Labels: நகைச்சுவை
சொர்க்கத்தில் பில்கேட்ஸ்! - மாதவன்
நம்மாளு பில்கேட்ஸ் செத்து போயி.. கடவுள் கிட்டே போய் நின்னாரு.
நம்ம கடவுளுக்கே கன்ஃபூஷன். இன்னாடா இவன் நல்லது பன்னிகிறானா இல்ல கஸ்மாலம் கெட்டது பண்ணிகிறனா ?. இவன எங்கே உடறது ? சொர்க்கமா நரகமா ந்னு பயங்கர கன்ஃபூஷன். நம்மாளுகிட்டயே கேட்டாரு கடவுளு.
‘ஏம்பா பில்லு.. எல்லா வூட்லயும் கம்பூட்டர் இருக்குன்னா நீ ஒரு ரீசனு. அதுக்காக உனுக்கு சொர்க்கத்துல இடம் தர்லாம்ன்னு பார்த்தா.. நீ தான் விண்டோ ஸ் கம்னாட்டியையும் கண்டு பிடிச்சிருக்க்கே.. நம்மளாண்ட உன் மேலுகா வந்த சாபம் கன்னா பின்னானு கீது. அதனால உன்னை நரகத்துக்கு தான் அனுப்பணும். எனுக்கு சர்யா தெர்ல.. அதனாலே நீயே டிசைட் பண்ணு உன்கு என்னா வேணும்னு.. ‘ கடவுள் சொன்னார்.
பில்கேட்ஸ் குஷியாய்டாரு. ஆனா அவருக்கு தான் சொர்க்கம் நரகம் எப்படி இருக்கும்ன்னு தெரியாதே. ( விண்டோ ஸ் ஒரு நரகங்கிறதை தவிர ). அதனால கடவுள் கூட்டிட்டு போனாரு.
முதல்ல நரகம்.
ஆஹா.. அழகான கடற்கரை. அழகா இருக்கே… பில்கேட்ஸ்க்கு குஷி. அந்த பக்கம் பார்த்தா பொண்ணுங்க பீச் சைட்ல துணியை ஈரமாக்கி உடம்ப காயவெச்சிட்டிருக்காங்க. இந்த பக்கம் பார்த்தா பொண்ணுங்க பசங்களும் பொண்ணுங்களும் சேர்ந்து குஜால்ஸ் பண்ணிட்டு இருக்காங்க. உட்டாலக்கடி செவத்த தோலு தான்.. கொஞ்சம் உத்து பார்த்தா… ந்னு வாலி பாட்ட பாடிட்டே பில்லு செம குஷியாய்ட்டாரு.
ஐயாவுக்கு ரொம்ப திருப்தி. ஆனாலும் நரகமே இப்படி இருக்குன்னா சொர்க்கம் ?
கடவுள் அவனை சொர்க்கத்துக்கு கூட்டிட்டு போனாரு.
அங்கே மேகமும், தேவதைகளும், பாட்டும்.. ம்ம்ம்ம் பில் கேட்ஸ் பாத்தாரு.
ம்ம்… நல்லாதேன் இருக்கு ஆனாலும்…நரகம் தான் கும்முன்னு இருக்கு..
சரி.. கடவுளே.. நான் நரகத்துக்கே போறேன். பில்கேட்ஸ் வழிஞ்சாரு. கடவுள் அவரை நரகத்துக்கு அனுப்பிட்டாரு,
கொஞ்ச நாள் கழிச்சு கடவுள் நம்ம பில்லு ஐயா எப்படி இருக்காருன்னு பாக்க நரகத்துக்கு போனாரு.
அங்கே ஒரு குகையில தீய்க்கு நடுவுல நம்ம பில்லு ! ஹீட்டுக்கு நடுவுல கேட்ஸ்னு கடவுள் பாடிட்டே போனா.. கேட்ஸ்க்கு கடுப்பு.
யோவ் கடவுளே.. என்னவோ காட்டிட்டு இப்படி என்னவோ பண்ணிட்டியேனு கத்துனாரு. கடவுளுக்கு புரியல..
இன்னாபா.. இன்னா மேட்டரு.. கடவுள் கேட்டாரு.
அன்னிக்கு பாத்தப்போ.. பீச் இருந்துச்சி, பீச் ல வாச் பண்ற மாதிரி பிகருங்க இருந்திச்சி, இங்கே வந்து பாத்தா தீ மட்டும் தான் இருக்கு.. நான் ஏமாத்தலாம். கடவுளே ஏமாத்தலாமா.. கேட்ஸ் கத்துனாரு.
கடவுள் சிரிச்சாரு.. ஓ.. அதைச் சொல்றியா.. அடப்பாவி.. அதைப் பார்த்து தான் இங்கே வரணும்ன்னியா… அது நரகத்தோட ஸ்கிரீன் சேவர் டா !!!
http://www.muthamilmantram.com/viewtopic.php?t=20504
Posted by
முத்தமிழ்
at
4
comments
Labels: நகைச்சுவை
நான்சென்ஸ் நாற்பது - மாதவன்
நான்சென்ஸ் ஆளாளுக்கு வித்தியாசப்படலாம். எனக்கு சில விசயங்கள் நான்சென்ஸ்ஸாகவே(Nonsense) படுவதுண்டு. குறுகிய நேரத்தில் நான்சென்ஸை நாற்பதாக பட்டியலிட முடிந்தது.’நான்சென்ஸ் நாற்பது’ என்பது ‘நா நா’வென எதுகை மோனையாக அமைந்ததால் நாற்பதோடு நிறுத்திக்கொள்கிறேன்.உங் களுக்கு நான்சென்ஸாக படுபவனவற்றை பின்னூட்டமாக விடுங்கள். நான்சென்ஸ் நாற்பது இப்படியாக…
1.sunday-க்கு பிறகு வரும் Monday
2.அலுவலக மீட்டிங்கில் இண்ட்ஸ்ரடிங்காக மூக்கு நோண்டிக் கொண்டிருக்கும் சக ஊழியன்
3.பெஞ்சு(சேர்) தேய்க்காத அரசு அதிகாரி
4.சிரிக்க வைக்காத குண்டு மனிதர்கள்
5.சமத்து குழந்தை
6.பிய்ந்து போன பழைய செருப்பும் கடிக்காத புதுசெருப்பும்
7.60 வயதில் ஜிலு ஜிலு அரை டவுசருடன் வாக்கிங் போகும் தாத்தா
8.சென்னைக்கு டிராபிஃக் சிக்னல்
9.பஸ் ஸ்டாப்பில் நிற்கும் மாநகரப்பேருந்து
10.குழியில்லாத சென்னை சாலைகள்
11.‘அவுட்சோர்சிங்’ மென்பொருள்துறை
12.ஜோக் அடித்து வலுக்கட்டாயமாக சிரிக்க வைக்கும் மேலதிகாரி
13.அரசியல் இல்லா அலுவலகம்
14.கொள்கையுள்ள அரசியல் கட்சி
15.சீரியல் பார்க்காத குடும்ப பெண்
16.ஏழைக்கு கல்வி
17.செக்ஸ் படம் பார்க்காத மாணவன்
18.கோவிலும் கோவில் பிச்சைக்காரனும்
19.சோறு உண்ணும் ஏழை
20.பெண் சுகம் காணாத துறவி
21.திருடாத பணிப்பெண்
22.சிக்கனாகமல்(chicken) இயற்கையாக சாகும் கோழி
23.தொப்பையில்லாத போலீஸ்
24.ISO 9001:2000 தரச்சான்று பெற்றிருக்கும் காவல்நிலையம்
25.NRI-இன் இந்திய கவலை
26.scehdule படி முடியும் பிராஜக்ட்
27.மூத்திரமோ, தண்ணீரோ தெளிக்கப்பட்டிருக்காத வெஸ்டர்ன் 28.
28.டாஸ்மாக்கில் டீ குடிக்கும் டாஸ்மாக் ஊழியன்
29.நாட்டை திருத்த நினைக்கும் சினிமாக்காரன் கனவு
30.இருமல் வராத கிழடு கட்டைகள்
31.சண்டைப்போடாத மனைவி
32.வீட்டுக்கு வந்த நண்பருடன் பேசாமல் டீவியில் லயித்திருப்பது
33.வீட்டுக்கு வந்திருப்போர் முன் சிறு குழந்தையை ‘அதைச் செய்’, ‘இதைச் செய்’ என்று வன்முறையில் ஆழ்த்துவது
34.சண்டையில்லா இலக்கியமும் கையில் துப்பட்ட சுற்றாத குட்டி ரேவதியும்
35.சினிமாவில்/டிவியில் நுழைய மாட்டேன் என்று அடம்பிடிக்கும் எழுத்தாளன்
36.எழுதியதை புத்தகமாக விற்கத்துணியாத ஏழை சோனகிரி எழுத்தாளன்
37.பெண்ணுரிமையைப் போற்றும் சினிமா கவிஞன்/எழுத்து வியாபாரி
38.ஆபிஸில் முத்தமிழ்மன்றம் படிக்காமல் வேலையில் லயித்திருப்பது
39.நான்சென்ஸை தொகுக்கும் நான்
40.மத்த பதிவுகளையெல்லாம் விட்டு விட்டு இந்த பதிவை படிப்பது
முத்தமிழ்மன்றம்
இதே போன்ற பதிவு
Posted by
முத்தமிழ்
at
5
comments
Labels: நகைச்சுவை
