<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-7884566</id><updated>2012-02-17T01:48:40.226+06:00</updated><category term='நகைச்சுவை'/><category term='மக்கள்'/><category term='சாகரன்'/><category term='சங்கீதம்'/><category term='பெயர்கள்'/><category term='அனுபவம்'/><category term='வரலாறு'/><category term='கல்வி'/><category term='சினிமா'/><category term='மன்றம்'/><category term='கவிதை'/><category term='அரசியல்'/><category term='மருத்துவம்'/><category term='இலக்கியம்'/><title type='text'>முத்தமிழ்மன்றம்</title><subtitle type='html'>முத்தமிழ்மன்றம் எனும் எங்கள் அன்புப் பாசறையின் வலைப்பூவிதழ் இது!</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://muthamilmantram.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://muthamilmantram.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/16215519587221396052</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://img.photobucket.com/albums/v324/welcometofree/bestmtm.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>49</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-7884566.post-7768157959862930338</id><published>2007-10-04T07:26:00.000+06:00</published><updated>2007-10-04T07:40:17.267+06:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>செல்வமுரளியும் நடிகை விந்தியாவும்!</title><content type='html'>முதன் முதலில் இங்கே எனது அனுபவங்களை பகிர்ந்துகொள்வதால் ஒரு கிளுகிளுப்பாக கவர்ச்சி நடிகை விந்தியா பற்றிய செய்தியை இங்கே நான் பகிர்ந்து கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் முதன்முதலில் சேர்ந்த அந்த தமிழ் செய்திதாளில் முதலில் யார் புதியதாக பணிக்கு சேர்ந்தாலும் அங்கே முதலில் செய்திகளைதான் அடிக்க வேண்டும். செய்திகளை வேகமாகவும், பிழையில்லாமல் அடித்தால் மட்டுமே அடுத்த கட்டமாக விளம்பரங்களை செய்ய அனுமதிக்கப் படுவார்கள். விளம்பர கட்டத்தை முடித்தவுடன்தான் பக்க வடிவமைப்புக்கு அனுமதிக்கப்படுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது பத்திரிக்கை துறையின் அனுபவத்தில் பத்திரிக்கை துறையில் வரும் செய்திகள் மக்களை சென்றடையும் வேகம், மற்றும் அதில் ஏதேனும் ஒரு பிழை வந்தால் அது எத்தனை ப்ரச்னைகளை ஏற்படுத்தும் என்பதையும் அறிய முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று வழக்கம்போல் மாலை 6 மணிக்கு அலுவலகம் வந்தவுடன் அன்று வழக்கத்திற்கு மாறாக ஆபிஸ் சற்று வேகமாக இயங்குவதாக தோன்றியது. உள்ளே சென்றவுடன் தெரிந்தது. ஓசூரில் ஒரு ஷூட்டிங்கில் நடிகை விந்தியாவை யாரோ கற்பழிக்க முயன்றது தான் அந்த பரபரப்புக்கு காரணம் என்று தகவல்தான் வந்துள்ளது. இன்னும் விரிவாக நியூஸ் வரவில்லை என்பதால் சென்னை அலுவலகத்தில் இருந்து இங்கே கேள்வி மேல் கேள்வி.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவழியாக அந்த நியூஸ் பேக்ஸ் வழியாக அலுவலகத்திற்கு வந்தது. வந்தவுடன் எங்களுடைய சப்-எடிட்டர் என்னிடம் வந்து இந்த செய்தியை நீயே அடித்து டூ-ஆல் (எல்லா பதிப்புகளும் அனுப்பி விடுவது) அனுப்பிவிடு என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் செய்தியை அடித்துக் கொண்டிருக்கும்போதே எடிட்டர் என்னப்பா நியூஸ் அடிச்சாச்சா என்றார். நானும் அடித்துக் கொண்டிருகிறேன் என்றுவிட்டு இன்னும் வேகமாக அடித்து முடித்துவிட்டு ப்ரூப் செக்ஷனுக்கு சென்று கொடுத்து அவசர அவசமாக படித்து வாங்கிவந்து சப்-எடிட்டர் அவர்களிடம் கொடுத்தேன். அவரும் செய்தியை சற்று எடிட் செய்துவிட்டு அதற்கேற்றார்போல் மாற்றி அனுப்ப சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் செய்தியை மாற்றிவிட்டு உடனடியாக அனைத்து பதிப்புகளுக்கும் அனுப்பியாகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இரவு 12.30 மணிக்கு செய்திதாள் ஓடி வந்த பிறகு என்னுடைய எடிட்டர் என்னை அழைப்பதாக தகவல் வந்தது. அவருடைய அறைக்கு சென்றேன். அங்கே சென்றபிறகு அந்த செய்தியை படிக்கச்சொன்னார். அதில் இவ்வாறு இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நடிகை விந்தியாவை வாலிபர் கற்பழிக்க முயற்சி&lt;/strong&gt;, &lt;strong&gt;நடிகை விந்தியா தங்கியிருந்த ஓட்டலில் பாரில் மருந்து அருந்திவிட்டு வந்த வாலிபர் கற்பழிக்க முயற்சி என்று இருந்தது.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எடிட்டர் " ஏன்யா எந்த ஊர்ல போய் பாரில் போய் மருந்து சாப்பிடுவாங்களா? இல்லை மது சாப்பிடுவரா என்று? எனக்கோ சிரிப்பு? அந்த செய்தியை படித்தபின் அந்த மாதிரி இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே ப்ரூப்பில் இருந்து அந்த பேக்சை வாங்கி வந்தனர். அதில் மது அருந்து என்றுதான் இருந்தது. நான் ப்ரூப்பிற்கு அனுப்பியதிலும் சரியாகத்தான் இருந்தது. இதில் என்ன மாற்றம் எனில் செய்தியை சப்-எடிட்டர் மாற்றம் செய்ய சொன்னபோது அங்கே நான் &lt;strong&gt;மது அருந்தி &lt;/strong&gt;என்று இருந்த்தை தவறுதலாக அந்த &lt;strong&gt;துஅ&lt;/strong&gt; என்பதை எப்படியோ டெலிட் செய்துவிட்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உடனடியாக அனைத்து பதிப்புகளுக்கும் தகவல் அனுப்பப் பட்டது. ஆனால் மற்ற பதிப்பினரோ &lt;strong&gt;நடிகை விந்தியா தங்கியிந்த ஓட்டலில் பாரில் " மருந்து" அருந்திவிட்டு வந்த வாலிபர் கற்பழிக்க முயற்சி என்று இருந்தது.&lt;/strong&gt; என்று பிழையில்லாமல் வெளியிட்டு விட்டனர். ஆனால் இங்கே எங்களுடைய பதிப்பில் அவசர அவசரமாக நிறுத்தி மெஷினை நிறுத்தி உடனடியாக மாற்றம் செய்த தகவலை வெளியிட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நேரத்தில் அப்பப்பா எனக்கோ வேர்த்து விறுவிறுத்து விட்டது. சேர்ந்து சில மாதங்கள் கூட இல்லை. என்னடா இப்படியாகி விட்டதே என்று. அதுதான் என் முதல் அனுபவம் பத்திரிக்கை துறையில்.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் சந்திக்கிறேன்.................&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;செல்வமுரளி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7884566-7768157959862930338?l=muthamilmantram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthamilmantram.blogspot.com/feeds/7768157959862930338/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7884566&amp;postID=7768157959862930338' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/7768157959862930338'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/7768157959862930338'/><link rel='alternate' type='text/html' href='http://muthamilmantram.blogspot.com/2007/10/blog-post.html' title='செல்வமுரளியும் நடிகை விந்தியாவும்!'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/16215519587221396052</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://img.photobucket.com/albums/v324/welcometofree/bestmtm.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7884566.post-3659977977578988419</id><published>2007-08-27T11:17:00.000+06:00</published><updated>2007-08-27T11:20:02.423+06:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வரலாறு'/><title type='text'>சிங்கப்பூர் வரலாறு</title><content type='html'>&lt;strong&gt;சிங்கபுரம் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கப்பூரின் பண்டைக் காலம் பற்றி எழுத்து வடிவப்பதிவுகள் கோர்வையாக இல்லை, அங்கொன்றும் இங்கு கொன்றுமாகச் சிலவைதான் கிடைத்துள்ளன. இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரம் சிங்கபுரம் என்ற ஒரு நகரைக் குறிப்பிடுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாட்டாரத்தில் முதல் வரலாற்று ஆவணமாக விளங்கும் நகரகிரேத்தாகமா எனும் ஜாவானிய நூல் 1365-ம் ஆண்டில் எழுதபட்டது. இது தெமாசெக் எனும் குடியேற்றப் பகுதியைப் பற்றி குறிப்பிடுகிறது. சி.எம். டர்ன்புல் என்பார் தமது நூலில் (சிங்கப்பூர் வரலாறு 1819-1975). &lt;br /&gt;&lt;br /&gt;பதினேழாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட செஜாரா மலாயு எனும் மலாட் மரபு வரலாற்று நூல் மட்டுமே தெமாசெக் சிங்கப்பூராவின் முழுமையான வரலாற்றைத் தருவதாகத் தெரிகிறது என்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;இவ்வரலாற்று நூலின்படி இராஜ ராஜ சோழன் என்னும் இந்திய மன்னர் பதினோராம் நூற்றாண்டில் தமது படையெடுப்புகளில் ஒன்றின் போது தெமாசெக்கில் தங்கியிருந்தாகத் தெரிகிறது. இச்சோழ ராஜனின் மகன், சாங் நீல உத்தமன். ஸ்ரீ விஜய எனும் பேரரசின் மையமாக விளங்கிய பலம்பாங் எனும் நாட்டின் அரசன் ஆனான் என்றும், ஸ்ரீ திரிபுவன எனும் பெயரை அவன் சூட்டிகொண்டான் என்றும் இந்த மரபு வரலாறு தெரிவிக்கிறது. இவ்வட்டாரத்தில் உத்தமன் மேற்கொண்ட பயணங்களின் போது தெமாசெக்கில் தரை இறங்கியதாகக் கூறப்படுகிது.&lt;br /&gt; &lt;br /&gt;அவரின் ஆட்சியின்போதும், அவரைத் தொடந்த நான்கு அரசர்களின் ஆட்சியின் போது சிங்கப்பூரா செழித்தோங்கியது. அதனால் பொறாமையுற்ற மஜபாகிட் எனும் ஜாவா பேரரசு இத்தீவைச் சூறையாடியது. தப்பியோடிய அரசர் மலாக்காவில் புதிய ஆட்சியை நிறுவினார். &lt;br /&gt;&lt;br /&gt;சற்று ஏறக்குறைய 1390-ம் ஆண்டில் பரமேஸ்வரா என்னும் இளவரசர் பலம்பாங் நாட்டின் சிங்காசனம் ஏறினான். பலம்பாங்கை மீண்டும் பேரரசசாக விளங்கச் செய்யவேண்டும் என்பது அவரின் பேராவல். தன் எண்ணம் நிறைவேறுவதற்கு முன்னரே அங்கிருந்து துரத்தப்பட்ட அவர், சிங்கப்பூரில் தன் பரிவாரம் புடை சூழ தங்கினான். ஆனால், மஜபாகிட் பேரரசு அவரை விடவில்லை. சிங்கப்பூரிலிருந்தும் அவரைத் துரத்தியது. பரமேஸ்வரக்கும் பின் சிங்கப்பூர் ஆள் அரவற்ற இடமாக மாறவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;சிங்கப்பூர் சமயாமிய பேரரசுக்குக் கப்பம் கட்டும் நாடாக விளங்கியது. ஆனால் பரமேஸ்வரா தோற்றுவித்த மலாக்கா அரசு விரைவில் சிங்கப்பூர் வரை தனது அதிகாரத்தை செலுத்தத் தொடங்கியது. இருப்பினும் போர்த்துகீசியர்கள் மலாக்கா நகரை 1511 கைப்பற்றியபோது அவ்வரசின் கடற்படைத் தளபதி லட்சுமணா சிங்கப்பூருக்கு ஓடிவந்தார். சுல்தான் ஜோகூர் லாமாவின் (பழைய ஜோகூர்) தம் புதிய தலை நகரத்தை அமைத்துக் கொண்டதோடு, சிங்கப்பூரில் துறைமுக அலுவலகம் ஒன்றையும் நடத்தி வந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;போர்த்துகீசியர்கள் 1587-ம் ஆண்டில் ஜோகூர் லாமாவை அழித்து விட்டனர். ஜோகூர் அரசின் தலைமையகம் .ரியாவ்-லிங்காத் தீவுக் கூட்டத்தில் மீண்டும் அமைப்பட்டது. சுல்தானின் மூத்த அமைச்சரான தெமொகோங்கின் அதிகாரத்தில் சிங்கப்பூர் இருந்தது. கடலை நம்பி வாழ்பவர்களும், சிறிய கூட்டமாகச் சில உள்நாட்டு மக்களும் வாழ்ந்து வந்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;1819 -ஆம் ஆண்டில் பிரிட்டிஸ் கிழக்கிந்தியக் கம்பெனியின் நிர்வாக அதிகாரியாக சர் ஸ்டாம் போர்டு ராபிள்ஸ் என்பார் சிங்கப்பூருக்கு வந்தார். ஆறு கடலோடு கலக்கும் இடமாகவும், மீன் பிடி தீவாக இருந்த இத்தீவு கிழக்கிந்தியக் கம்பெனிக்குக் கிழக்காசியாவில் நடுநாயகமாக விளங்கச் சிங்கப்பூர் சிறந்த இடம் என அவர் எண்ணினார். அப்போதைய சிங்கப்பூரின் உரிமையாளராக விளங்கிய ஜோகூர் சுல்தானுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு கிழக்கிந்தியக் கம்பெனியின் வணிகத்தளமாகச் சிங்கப்பூரை மாற்றினார் ராபிளஸ். அப்போது சிங்கப்பூர் காடு மண்டிய ஒரு தீவாக இருந்தது. காட்டை அழித்து வணிக நிலையமாக்கும் பெரும் முயற்சியில் ஈடுபட்டார் ராபிள்ஸ். &lt;br /&gt;&lt;br /&gt;1959-ஆம் ஆண்டு வரை ஆங்கிலேயர் சிங்கப்பூரைத் தம் ஆளுகையின் கீழ் வைத்திருந்தார். 140 ஆண்டுகள் ஆங்கிலேயரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த சிங்கை 1959 இல் தன்னாட்சி உரிமை பெற்ற தனிநாடாகியது. &lt;br /&gt;&lt;br /&gt;முதல் தேர்தல் 1959 -ஆம் நடைப்பெற்றது. அதில் மக்கள் செயல் கட்சி வெற்றிப் பெற்று திரு. லீ குவான் இயூ பிரதமராகி சிங்கப்பூரை வழி நடத்தினார். &lt;br /&gt;&lt;br /&gt;முதல் தேர்தல் 1959 -ஆம் நடைப்பெற்றது. அதில் மக்கள் செயல் கட்சி வெற்றிப் பெற்று திரு. லீ குவான் இயூ பிரதமராகி சிங்கப்பூரை வழி நடத்தினார். &lt;br /&gt;&lt;br /&gt;1963 –இல் சிங்கப்பூர் அன்றைய ‘மலாயா’வுடன் இணைந்தது. சிங்கப்பூர், மலாயா இணைந்த நாட்டை ‘மலேசியா’ என அழைத்தார்கள். ஆனால் இவ்விணைப்பு சுமார் ஒன்றரை ஆண்டுகளே நீடித்தது. கருத்து வேற்றுமையாலும்,கொள்கை வேற்றுமையாலும் 9-8-1965 ஆம் நாள் சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து பிரிந்து ஒரு தனி நாடாகியது. &lt;br /&gt;&lt;br /&gt;சிங்கப்பூர் தனிக் குடியரசுயாகியது. அரசியல் தலைவர்களின் முன்னோக்குப் பார்வையால் சிங்கப்பூர் பல்வேறு மாற்றங்களைக் கண்டது. இயற்கைக் கனிவளங்கள் ஒன்றுமில்லா சின்னஞ்சிறு தீவு மக்கள் வளத்தை மட்டுமே நம்பியது. மலாயாவிலிருந்து பிரிந்த பின் பல்வேறு சமூக, அரசியல் பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டி இருந்தது. சின்னஞ்சிறு தீவான சிங்கப்பூரால் தனித்து ஒரு நாடாக இயங்க முடியுமா என்ற ஐயப்பாடு மக்கள் மனதில் தோன்றின. அந்த ஐயப்பாட்டைக் களைய, சிங்கப்பூர் பல ஆக்கப்பூர்வமான திட்டங்களை, செயல்பாடுகளை நிறைவேற்றியது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த இக்கட்டான சூழ்நிலையில், 1971- ஆம் ஆண்டு தூரகிழக்கில் தான் வைத்திருந்த இராணுவத்தை குறைக்கவே சுமார் 10,000 பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை இழந்தனர். சிங்கப்பூர் பாதுகாப்பிற்கு தன்னை நம்பவேண்டிய கட்டாய நிலையில், கட்டாய இராணுவ சேவையை ஆரம்பித்தது. மேலும் குடியிருப்பு,சமூகப் பிரச்சனைகளில் நாடு உடனே சமாளிக்க வேண்டியதாயிற்று. இதனால் பொருளாதார துறையில் நன்கு வளர்ச்சிக் கண்டது. இந்த வளர்ச்சி படிப்படியாக வளர்ந்து ஓர் உன்னத நிலையை அடைந்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;1819 ஆம் ஆண்டு முதல் இந்தியா, சீனா, இலங்கை போன்ற நாடுகளில் இருந்து வந்த குடியேறிய மக்களின் அரிய உழைப்பால் சிங்கை, சிறுகச் சிறுக மாநகரமாக மாறத் தொடங்கியது. தாம் குடியேறி இடத்தில் தங்களுடைய பண்பாடு, மொழி போன்றவற்றின் பாரம்பரியங்களை பல்வகை மக்களூம் பேணிக் காத்தனர். இதில் தமிழருடைய பங்கு சிறப்புக்குரியது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சிங்கப்பூரில் தமிழர்&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;1880 - களிலிருந்து தமிழும், தமிழ் இலக்கியமும் தோன்றி வளரலாயிற்று. நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட வளர்ச்சியைச் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் பெற்றுள்ளது. 1993-ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக் கெடுப்பின்படி 2,873,000 மில்லியன் மக்கள் சிங்கப்பூரில் வாழ்கின்றனர். &lt;br /&gt;இதில் 77.5 விழுக்காட்டினர் சீனர்; 14.2 விழுக்காட்டினர் மலாய்க்காரர்; 7.1 விழுக்காட்டினர் இந்தியர்கள்; 1.2 விழுக்காட்டினர் பிற இனத்தவர்கள். இந்தியர்களுள் சுமார் 1 1/2 இலட்சம் தமிழர்களும் அடங்குவர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தமிழ்ப் பள்ளிகள்&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்திலிருந்து வந்து குடியேறிய தமிழர்கள் தமிழின்பால் கொண்ட ஆர்வத்தால் பல தமிழ்ப்பள்ளிகளை உருவாக்கத் தொடங்கினர். தமிழையும், தமிழ்ப் பண்பாட்டையும் வளர்ப்பதற்குப் பெரும் முயற்சிகளைச் செய்துள்ளனர். ‘திருவள்ளுவர்’, ‘வாசுகி’’, ‘அரவிந்தர்’, ‘நாகம்மையார்’, ‘சாரதா தேவி’,‘கலைமகள்’, ‘உமறுப் புலவர்’ போன்ற பெயர்களில் இருபத்திரண்டுக்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகளை உருவாக்கினர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆலயங்கள்&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;தேடச் சென்ற தமிழர்கள், தங்கள் நாகரீகச் சின்னமாக விளங்கும் திருக்கோயில்களையும் சென்ற இடங்களில் எல்லாம் படைத்தளிக்க மறந்தார்கள் இல்லை. தமிழர்கள் சென்ற இடங்களில் எல்லாம் தாங்கள் சீரும் சிறப்பாக வாழ்கிறார்களோ இல்லையே, திருக்கோயில்கள் சீரும் சிறப்பும் பெற்று திகழ்ந்தன். இருக்க இடம் உண்ண உணவு இல்லை என்றாலும் இறைவனுக்கு ஆலயம் எழுப்பி இன்பம் கண்டான். &lt;br /&gt;&lt;br /&gt;அழியும் உடலுக்குள் இருக்கும் அழியா ஒன்றுக்கு, ஆன்மா என்று கண்டான். அந்த ஆன்மா போகுமிடங்களில் மதிப்பளிக்கப் படவேண்டும் என்று இறைவழி பாட்டைத் துவங்கினர். இந்து சமயம் ஒரு ஆழ்கடல் போன்றது. அதில் சேர்ந்துள்ள மொழிகளும், பண்பாடுகளும் புத்தம் புதிய கருத்துகளைக் கொண்டு சேர்த்தவை. அவற்றை எல்லாம் இயன்ற வரை ஆங்காங்கே புகுத்திய நிலையில் தான் கோயில்கள் தோன்றம் அளிக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி:- சிங்கை கிருஷ்ணன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7884566-3659977977578988419?l=muthamilmantram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthamilmantram.blogspot.com/feeds/3659977977578988419/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7884566&amp;postID=3659977977578988419' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/3659977977578988419'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/3659977977578988419'/><link rel='alternate' type='text/html' href='http://muthamilmantram.blogspot.com/2007/08/blog-post_27.html' title='சிங்கப்பூர் வரலாறு'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/16215519587221396052</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://img.photobucket.com/albums/v324/welcometofree/bestmtm.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7884566.post-2470769186429705290</id><published>2007-08-25T07:49:00.000+06:00</published><updated>2007-08-25T07:50:53.487+06:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>என்ன கொடுமை சரவணன் இது? - விமல்</title><content type='html'>&lt;img src="http://i192.photobucket.com/albums/z38/vimalgpspl/1131059_1.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.muthamilmantram.com/viewtopic.php?p=347821#347821"&gt;படிக்க &lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7884566-2470769186429705290?l=muthamilmantram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthamilmantram.blogspot.com/feeds/2470769186429705290/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7884566&amp;postID=2470769186429705290' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/2470769186429705290'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/2470769186429705290'/><link rel='alternate' type='text/html' href='http://muthamilmantram.blogspot.com/2007/08/blog-post_2900.html' title='என்ன கொடுமை சரவணன் இது? - விமல்'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/16215519587221396052</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://img.photobucket.com/albums/v324/welcometofree/bestmtm.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7884566.post-8912693603168666824</id><published>2007-08-25T07:39:00.000+06:00</published><updated>2007-08-25T07:41:56.902+06:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலக்கியம்'/><title type='text'>ஒளவையாரின் இலக்கிய இன்பம்</title><content type='html'>ஒருமுறை ஒளவையாருக்கு ஒரு கறவை ஆடு தேவைப்பட்டது. அதனை வாங்கிவர ஒரு சிற்றூருக்கு சென்றார். அங்கே வாதகோன் என்ற இடையனைக் கண்டார். அவனிடம் தனக்கு ஒரு ஆடு வேண்டும் என்று கேட்டார். "நாளைக்கு வா" என்று சாக்கு போக்கு சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;சரியென அங்கிருந்து புறப்பட்டு இன்னொரு இடையனைக் கண்டு பேசினார். அவன் பெயர் வையகோன். அவனிடம் தனக்கு ஒரு ஆடு விலலக்கு தரமுடியுமா என்று கேட்டார். அவனோ "பின்னே வா"(பிறகு வா) என்று சொல்லிவிட்டு மரத்தடியில் உறங்குவதற்காக சென்று விட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியும் மனம் தளராத ஒளவையார் இன்னொருவரிடம் முயற்சி செய்வோமே என்று எண்ணி தள்ளாத வயதிலும் கடும் வெயிலில் பக்கத்துக்கு ஊருக்கு சென்றார். அங்கே ஒரு இடையனைக் கண்டார். அவன் பெயர் யாதகோன். அவனிடம் ஒரு ஆட்டினை கேட்டார். அவனோ தன்னிடம் ஆடு இருந்தும் கொடுக்க மனமில்லாமல் "என்னிடம் இல்லை போ" என்று சொல்லி அவரை விரட்டினான். 'பரவாயில்லை நன்றியப்பா' என்று சொல்லிவிட்டு தன் இருப்பிடத்திற்கு வந்து சேர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மனம் கவலைப்பட்ட அவர் எடுத்தார் தன் எழுதுகோலை. எழுதினார் கீழ்க்கண்டவாறு:-&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வாதகோன் நாளை என்றான்&lt;br /&gt;வையகோன் பின்னே என்றான்&lt;br /&gt;யாதகோன் யாதெனும் இல்லை என்றான்.&lt;br /&gt;ஓதக்கேள்,&lt;br /&gt;வாதகோன் நாளையிலும்&lt;br /&gt;வையகோன் பின்னேயிலும்&lt;br /&gt;யாதகோன் யாதெனும் இல்லை என்று&lt;br /&gt;உரைத்ததே இனிது.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவர் ஒருபொருளை நாளை தருவதாகக் கூறினாலும் அல்லது பின்னே தருகிறேன் என்று சொன்னாலும் அது துன்பம் தரத்தக்கதே. ஒருவர் தர மனமில்லாமல் "என்னிடம் இல்லை" எனக் கூறும் ஒரு வார்த்தை பிறரை அலைக்கழிக்காமல் அவருக்கு ஒருவகையில் நன்மை செய்வதற்கு ஒப்பாகும். இதுபோன்று யாதகோனில் இல்லை என்ற வார்த்தை இனிதாகப் பட்டது ஒளவையாருக்கு!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.muthamilmantram.com/viewtopic.php?t=23705"&gt;மேலும் படிக்க&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7884566-8912693603168666824?l=muthamilmantram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthamilmantram.blogspot.com/feeds/8912693603168666824/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7884566&amp;postID=8912693603168666824' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/8912693603168666824'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/8912693603168666824'/><link rel='alternate' type='text/html' href='http://muthamilmantram.blogspot.com/2007/08/blog-post_25.html' title='ஒளவையாரின் இலக்கிய இன்பம்'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/16215519587221396052</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://img.photobucket.com/albums/v324/welcometofree/bestmtm.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7884566.post-4204274475164572428</id><published>2007-08-24T12:18:00.000+06:00</published><updated>2007-08-24T12:22:09.250+06:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வரலாறு'/><title type='text'>மலாக்காவை ஆண்டது தமிழ் மன்னனா?</title><content type='html'>மலாக்கா பற்றி &lt;a href="http://chitchatmalaysia.blogspot.com/2007/08/blog-post_21.html"&gt;&lt;strong&gt;விக்னேஸ்வரன் அடைக்கலம்&lt;/strong&gt;&lt;/a&gt; என்பவர் எழுதி இருந்தார். அதனைப் படித்ததும் இந்த பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;மலேசியாவின் மலாக்காவை எந்த தமிழ் மன்னனும் ஆட்சி செய்யவில்லை! மலாக்காவை ஆண்ட பரமேஸ்வரன் இந்தோனேசியா சுமத்ரா தீவைச் சேர்ந்து இந்து. ஆனால் மலாய் மொழி பேசக்கூடியவர்.&lt;br /&gt;&lt;br /&gt;மலாக்காவில் மட்டுமின்றி மலேசியாவிலேயே எந்த தமிழ் மன்னரும் ஆட்சி செய்யவில்லை என்பதுதான் உண்மை. ராஜராஜ சோழன் தமிழ்நாடு - சீனா வாணிகத்தில் ஈடுபட்டிருந்த தமிழக வணிகர்களின் நலன்களை காப்பாற்றுவதற்காக கடாரத்தைக் கைப்பற்றினான். அதனால் அவனுக்கு கடாரம் கொண்டான் என்ற பெயரும் உண்டு. அது இன்றுக்கு கெடா என்று அழைக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;லங்காவியில் இருந்து சிங்கப்பூர் வரைக்கும் உள்ள மலாக்கா நீரிணையை காக்கும் பொறுப்பினை ராஜராஜ சோழனின் ஆட்கள் பார்த்துக் கொண்டனர். அவனுடைய படைவீரர்கள் மலேசியாவின் கடலோரத்தில் பல இடங்களில் முகாம் இட்டிருந்தனர்!&lt;br /&gt;&lt;br /&gt;கடாரம் கொண்ட ராஜராஜ சோழன் மலேசியாவில் இருந்த மலாய் அரசர்களுக்கு என்னென்ன உதவிகள் செய்தான் என்பதை கவிச்சுடர் காரைக்கிழார் அவர்கள் சொல்லோவியத்தில் எழுதி உள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;பரமேஸ்வரன் முதலில் சுமத்ரா தீவில் இருந்து தெமாசெக் என்று அழைக்கப்படும் சிங்கப்பூருக்கு வருகிறான். அவனை மெஜாபாகிட் தாக்குதல்காரர்கள் விடாமல் துரத்துகின்றனர். அவர்களிடம் இருந்து தப்பித்து தன் ஆதரவாளர்களோடு செலத்தார் நதி வழியாக மூவார் வருகிறான். தொடர்ந்து வடக்கே நகர்ந்து 1402ம் ஆண்டில் மலாக்காவில் தன் அரசை நிறுவுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;பதினைந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மலாக்கா முக்கியத்துவமற்ற மீனவர் கிராமமாகத்தான் இருந்தது. மக்கள் தொகையும் அதிகமில்லல. தெமாசெக், மூவார், சுங்கை உஜோங் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களுடன் ஓராங் லவுட் என்ற கடல் நாடோடிகள் மட்டுமே அங்கு வசித்தனர்! மன்னன் பரமேஸ்வரன் பாசாய் இளவரசியை மணந்து முஸ்லிமாக மாறுகிறான். அதன்பிறகு அவன் பெயர் இஸ்கந்தர் ஷா என்று மாறுகிறது!&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்கந்தர் ஷாவைத் தொடர்ந்து அவருடைய புதல்வர் மெகாட் இஸ்கந்தர்ஷா அரியணை ஏறுகிறார். அவர் 10 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மலாக்காவின் மூன்றாவது மன்னர் ராஜா தெங்கா என்கிற ராடின் தெங்கா. இவர் இஸ்லாத்தை தழுவி தமிழ் முஸ்லிம் பெண்ணை மணந்து பின் முகம்மது ஷா என்று பெயர் மாறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவரின் மரணத்தைத் தொடர்ந்து ரோகான் இளவரசியின் மகனான ராஜா இப்ராஹிம் பட்டத்துக்கு வருகிறார். ஆனால் அப்போது பாரம்பரிய மலாய் இந்துக்களுக்கும் வளர்ந்து வந்த தமிழ் முஸ்லிம் சமுதாயத்துக்கும் இடையில் பெரும் நெருக்கடி நிலவியதால் முஸ்லிமாக மாறுவதற்கு மறுத்து ஸ்ரீ பரமேஸ்வர தேவாஷா என்கிற பெயருடன் ஆட்சி புரிந்த ராஜா இப்ராஹிம் அரியணை அமர்ந்த 17வது மாதத்தில் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவருடைய ஒன்றுவிட்ட சகோதரரான தமிழ் முஸ்லிம் தாய்க்குப் பிறந்த ராஜா காசிம், சுல்தான் முஸாஃபர் ஷா என்ற பெயருடன் அடுத்து பட்டத்துக்கு வருகிறார். மலாக்கா சாம்ராஜ்யத்தின் பொற்காலம் அப்போதுதான் ஆரம்பத்துக்கு வருகிறது!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7884566-4204274475164572428?l=muthamilmantram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthamilmantram.blogspot.com/feeds/4204274475164572428/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7884566&amp;postID=4204274475164572428' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/4204274475164572428'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/4204274475164572428'/><link rel='alternate' type='text/html' href='http://muthamilmantram.blogspot.com/2007/08/blog-post.html' title='மலாக்காவை ஆண்டது தமிழ் மன்னனா?'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/16215519587221396052</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://img.photobucket.com/albums/v324/welcometofree/bestmtm.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7884566.post-4219866229521511461</id><published>2007-07-25T08:05:00.000+06:00</published><updated>2007-07-25T08:08:40.331+06:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சங்கீதம்'/><title type='text'>பாரம்பரிய இசையின் தாக்கம் - டாக்டர் பெருமாள்</title><content type='html'>பாரம்பர்ய இசையின் தாக்கம் பற்றியமேலைத்தேய இசையின் ஊடுருவல் அதிகரித்து வரும் இன்றையச் சூழலில்இளைய சமூகத்தை பாரம்பர்யத்தின் பக்கம் திருப்பம் கண்டிப்பாக முடியும் அதற்க்கு உதாரனம் தான் இன்றைய ரீமேக் பாடல்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றும் கர்னாடக சங்கீதங்கள் காலத்தால் அழியாது இசையை நாம் உருவாக்கவில்லை ஒம் என்ற பிரனவ நாதத்தில் இருந்தும் இறைவனாலே உருவானதே பாரம்மர்ய இசை இதை யாராலும் அழிக்க முடியாது&lt;br /&gt;&lt;br /&gt;தற்ப்போது இளைங்கர்களின் பார்வையும் பாரம்பரிய இசையில் தான் புது இசையில் அவர்கலுக்கு தலை வலிதான் மிச்சம் சூட்சும ராகம் சரியாக அமைக்காமல் வாத்திய கருவிகளை டமால் டாமால் என்று அதிக சப்த்த்தோடு அடித்து உடல் ஆரோக்கியம் தான் கெடுகிறது, ஆனால் நமது பாரம்பரிய இசை கருவிகளோ அப்படி இல்லை மனதிற்க்கு நெருடுகிறதாகவும் உடல் நோய்களை குனப்படுத்துவதாகவும் அமைகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதை இன்றைய சூழல்களிம் நாம் கானலாம் நம் இந்திய நாட்டு ஆதிகால சங்கீத வாத்தியங்கள் மூன்றினுள்ளும் முதன்முதலாக அனைத்து வகையான பொது மக்களிடையே நாட்டில்.. வாத்தியம் என்ற பெயரில் அறிமுகம் ஆகியது நாகசுர வாத்தியமே. அனைத்து வாத்தியங்களிலும் மங்கள-வாத்தியம் என்ற தனிச்சிறப்பு பெற்றதோடு மட்டுமின்றி... சுப-நிகழ்ச்சிகளுக்கு இன்றியமையாதாகிவிட்டது நாகசுரம் ஒன்றே மனிதன் இரவில் கொண்ட நல்ல உறக்கம் வைகறை வேளையில் கலைகிறது... அதாவது கலைக்கப்படுகிறது சுற்றுச்சூழல் இயற்கை தன்மையால்... எப்படி.?&lt;br /&gt;&lt;br /&gt;ஆனைச்சாத்தன் போன்ற விடியும் வேளையில் பாடும் பறவைகளின் மெல்லிய இனிய ஒலி... அருகிலுள்ள பூஞ்சோலையினின்று எழும் வண்டுகளின் ரீங்காரம் கோழி கூவல் பிற பறவைகளின் சலசலப்பு... போன்ற மென்மையான ஒலிவகைகள் நமது அரை தூக்க நிலையில் காதில் விழுகின்றன மேலும் அருணோதய வேளை காற்று தனித்தன்மை வாய்ந்ததால், மெல்லிய குளிர் கலந்த மென்-வெம்மை புத்துணர்ச்சியை உடலில் ஏற்படுத்துகிறது. பல்வகை பூக்களின் நறுமணம் காற்றோடு கலந்து வந்து, நம் நாசியை துளைக்கிறது... தொழுவத்தில் கன்றின் குரலுக்கு மறு-மொழியாக தாய்-பசு அம்மா என்று கத்துவது நம் காதில் விழுந்தவுடனேயே அரை-தூக்கத்திலும் கூட, நமக்கு பால்-நினைவு வந்து எச்சில் ஊறுகிறது. இவை தவிர, விடிந்தும் விடியாத அந்த வைகறை வெளிச்சம் நம் கண்ணை துளைக்கிறது. இங்ஙனம் நமது ஐம்புலன்களும் தூண்டப்பெறுகின்றன..&lt;br /&gt;&lt;br /&gt;நாம் உறங்கி எழும் முன்னமேயே. இயற்கையின் நாள்-துவக்க தூண்டல்கள் யாவும் நமது ஐம்புலன் உணர்ச்சிகளையும் எழுப்பி, உடலுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் அந்நிலையில் சுற்றுச்சூழலில் இரவின் அமைதி மென்மையாக கலையும் புதுமையான முதல்-நினைவு நம் மனதில் ஓர் ஒப்புயர்வில்லா சாந்தி-உணர்வையும் ஏற்படுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அத்தகைய சுற்றுச்சூழல் புறச்-சாந்தி உணர்வை காட்டும் ராகம் பூபாளம் மேலும் உறக்கம் விட்டு எழுந்து பணிக்-கடமைகளை-ஆற்ற தேவையான சாந்தி மனத்தோடு, துவக்க எழுச்சி-உணர்வை நம்முள் ஏற்படுத்தும் ராகம். ஆனால் மனிதனின் இயல்பு மனக்-குதிரையால் பல்வகை சிந்தனை ஓட்டம்... எனவே புறச்சாந்தி உணர்வோடு வேறு ஏதாவது ஒரு உணர்வையும் கலந்து நினைக்கிறான். அத்தகைய பல்வகை உணர்வுகளோடு கலந்த அமைதி பக்தியோடு புறச்சாந்தி-உணர்வு காட்டும் பாடல்களை காணலாம்&lt;br /&gt;&lt;br /&gt;http://www.musicindiaonline.com/p/x/PUx2HaPgy9.As1NMvHdW/&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி-ஞான மேதையான ஓர் நாடக நடிகருக்கு அக்காலத்தைய முது-பெரும் மகா வித்துவான்களே விசிறிகளாகி... அவரது பாட்டை கேட்கவே அடிக்கடி நாடக-கொட்டகைக்கு வந்து கேட்டு பாராட்டினார்கள் என்றால்... கேள்வி-ஞானத்தின் வல்லமையை அறியலாம் அன்றோ?&lt;br /&gt;&lt;br /&gt;மானிட உருவில் ஸ்ரீ ராமபிரானே ஓங்கார நாதத்தின் அவதாரம். காண்போரை பிரமிக்கச்செய்யும் வகையில் தலை-சிறந்த கோதண்டம் என்னும் ராமபிரானின் வில்லின் வடிவே... மிடுக்குடனும் ஆழ்ந்த கம்பீரத்துடனும் துள்ளிப்-பாயும் ராகங்கள்.சப்த-ஸ்வரங்கள் எனப்படும் ஏழு சுரங்கள் தான்... அந்த கோதண்ட வில்லின் இனிமை வாய்ந்த சுண்டு-ஒலி நாத வகைகள்.ராகம் பாடுதலின் மூன்று வகை நுட்பங்களான.. கணம், நயம், தேஸ்யம் எனப்படுபவையே வில்-நாணின் மூன்று முறுக்கு-கம்பிகளான அதன் அங்கங்கள். நுட்பம் மிகு தாளங்கள் தான் பலப்பல மலர்-கணைகள்... நாணின் வலிமையால் அவை செலுத்தப்படும்போது அவை பிழிந்தெடுத்த பழ-ரசமாய் ராக நுணுக்கங்களின் விளக்கங்களோடு சீறி பாய்கின்றன [அதன் விளைவாய் அவை நமது ஆழ்மனதினுள் பேரின்பத்தை பதித்து விடுகின்றன]&lt;br /&gt;&lt;br /&gt;அம்பு எய்த-பின் வில்லிலிருந்து எழும் ஒலி-வகைகளே...வில்லின் இனிமை மிக்க மெல்லிய பேச்சு-குரல்களான சங்கதிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;http://www.musicindiaonline.com/p/x/HqO0YDiO1d.As1NMvHdW/&lt;br /&gt;&lt;br /&gt;அவை அந்தந்த கட்டம் / சந்தர்ப்பத்திற்கு பொருத்தமானவை.ஆக ஓங்காரமே நமது ஆழ்மனத்தை நோக்கி நாத மலர்க்-கணைகளை செலுத்தி நம்மை பேரின்பத்தில் ஆழ்த்துகிறது என்பது கருத்துஇயற்கையுடன் இணைந்து மனித உள்ளங்களை வசியப்படுத்தி இசைய வைக்கும் ஒப்பற்ற பேராற்றல் கொண்டது இசை.&lt;br /&gt;&lt;br /&gt;இசை ஒன்றே இசைப்பவருக்கும் கேட்பவருக்கும் இன்பமூட்டும் எழில்மிகு கலையாகும். ஆயகலைகள் அறுபத்து நான்கினுள் இசைக்கலையும் ஒன்று. உலகில் இசைக்கு நிகரானது இசை ஒன்றேயாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;தாயவளின் நாவின் அசைவில் எழுந்திடும் ஒலியை தாலாட்டு என்றனர். தாலாட்டு என்பதன் பொருள் தால் - ஆட்டு என்பதாகும். தால் என்றால் நாவு. நாவின் அசைவில் பிறக்கும் இசையே தாலாட்டு ஆகும். இவ்வுலகில் மனிதப் பண்பாட்டின் பிறப்பிடம் முல்லை நிலமாகும். ஆய்ச்சியர் குரவைப் பகுதியில் ஆயர் மகளிர் பாடிய “முல்லைத் தீம்பாணி’ தான் உலகிலேயே முதலில் தோன்றிய இசைவடிவம் என்பர் நுண்கலை ஆய்வர்கள். ஆக இசையின் பிறப்பிடம் முல்லை நிலமாகும். நுண்கலையாகிய இசை, நாட்டியம், சிற்பம், ஓவியம், கட்டடம் எனும் ஐந்தினுள் தலையானது இசைக்கலையாகும். இசை பிறந்தது எங்கே? காற்றினிலே என்பதுதான் உண்மை. கானகத்தில் வண்டுகள் மூங்கிலைத் துளைபோடக் காற்றுத் துளை பின் உள்ளே புகுந்து வெளிவர, அது தருகிற ஓசையை ரசித்து மகிழ்ந்தபோதுதான் மனிதன் குழலைப் படைக்க அறியலானான்.&lt;br /&gt;&lt;br /&gt;இசை, அசையாப் பொருளையும் அசைக்கும் வல்லமை கொண்டது. இதற்கு சாட்சி ராமாயணம். இசைத்தவன் ராவணன். இசை சாம கானம். இசையின் சீரிய சிறப்பை அறிந்திருந்த காரணத்தால் அகத்திய மாமுனி “”அகத்தியம்” எனும் முத்தமிழ் இலக்கணம் விளக்கும் ஓர் அரிய நூலைப் படைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;வென்றிடுவேன் எந்த நாட்டையும் நாதத்தால்" ... திருவாளர் டி.எம்.சௌந்தரராஜனும், சீர்காழி கோவிந்தராஜனும் இணைந்து ஒரு போட்டிப்-பாட்டாகப் பாடுவதைக் கேளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;http://www.musicindiaonline.com/p/x/TJbg1.736d.As1NMvHdW/&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய அரிய மொழி-வாய்ப்பும் நிறை-வளமையும் கொண்டதால் தமிழ்மொழியை வண்டமிழ் எனப் போற்றத்தக்க சீர்மையைக் காட்டுகிறது அன்றோ?.&lt;br /&gt;&lt;br /&gt;http://www.musicindiaonline.com/p/x/RqOgiENFk9.As1NMvHdW/&lt;br /&gt;http://www.musicindiaonline.com/p/x/qUygIon4yS.As1NMvHdW/&lt;br /&gt;http://www.musicindiaonline.com/p/x/mqpgAA9-69.As1NMvHdW/&lt;br /&gt;&lt;br /&gt;மற்ற இசைகலை திரைக்கூத்து - முத்தமிழ் இசையில் கேட்டு மகிழுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இசை மனதுக்கு மட்டுமன்றி உடல் நோய்களைத் தீர்க்கும் வல்லமையும் கொண்டது. வராளி பாடிட வாதம் நீங்கும். காம்போதி பாடிட துன்பம் போகும். நீலாம்பரி, யதுகுலகாம்போதி ஊக்கம் தரும். தேஷ் ராகம் மகிழ்வூட்டும். வைகறைப் பொழுது பாடுவது பூபாளம். நாட்டை, ஆரபி ராகங்கள் கடவுளை வணங்கவும் நற்காரியம் புரியும்போதும் பாடப்படுவது. இறைவனிடம் வேண்டும்போது தன்னியாசி ராகம் சிறந்தது. இறைவனின் புகழ்பாட மோகனம், மன்னனிடமோ, இறைவனிடமோ யாசிக்கும்போது வராளி பாடலாம். மனத்தில் துன்பங்கள் நீங்க இறைவனிடம் கேதாரகௌளை பாடலாம். மனத்தை ஒருமுகப்படுத்த பூர்விகல்யாணி - செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்க சகானாஸ இப்படி ஒவ்வொரு ராகமும் ஒரு குணம் கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;நாகசுரம் எனும் உயரிய இசைக்கருவி ஓர் உன்னதமான மங்களகரமான இசைக்கருவி. இதை நானசின்னம், நாகசின்னம், நாதசுரம் என்றும் அழைப்பர்.&lt;br /&gt;&lt;br /&gt;நாகசுரத்திற்குரிய சீவாளி எனப்படும் சிறிய பொருளே இனிய இசையை நாயனத்தின் செவி குளிரத் தருகிறது. இந்தச் சீவாளி கொரத்தட்டை எனப்படும் ஒருவகைக் கோரையால் செய்யப்படுகிறது. இந்தச் சீவாளி அடைபடும்போது அதைச் சுத்தப்படுத்த உதவும் குச்சி யானைத் தந்தத்தால் செய்யப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆலயங்களில் நித்தமும் அதிகாலையில் பூபாளம் இசைத்து இறைவனை எழுப்புவர். மதியம் சுருட்டி எனும் ராகமும், இரவு கானடா, சகானா எனும் ராகங்களும் இசைக்கப் பெறும். உற்சவர் ஊர்வலத்தின்போது வசந்தா எனும் ராகமும் அனைத்து பூசைகளும் முடிந்து பள்ளி அறைக்குச் செல்லும்போது ஆனந்தபைரவி, நீலாம்பரி எனும் ராகங்களும் இசைக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;இல்லறத்தில் ஈடுபடும் ஆணும் பெண்ணும் இணைந்து வாழ அடியெடுத்து வைக்கும் மன்றல் விழாவின் போது நாட்டைக்குறிஞ்சி ராகம் மிதந்திட கெட்டிமேளம் முழங்கப்படும். சரிகமபதநி என்ற எழு சுரங்களும் தமிழ் மொழியிலே வழங்கப்பட்டு வந்தன. நம்முடைய ஆன்மாவின் மூச்சு இசை. மனிதன் பிறந்தவுடன் இசை வயப்படுகிறான். “”தாயின் அன்பில் பண்பில் வருவதும் பாட்டு - வாழ்வில் களிப்பூட்டுவது பாட்டு - துயரத்தை நீக்கப் பாட்டு - களைப்பைப் போக்கப் பாட்டு - அன்பின் வெளிப்பாடு பாட்டு, மணவறையிலும் பாட்டு, மாண்டபின்னரும் பாட்டு” ஆக மனிதன் பிறப்புதொட்டு இறப்பு வரை பாட்டால் வாழ்கிறான். இசை மனித மொழியில் பிறந்து உணர்வில் கலந்து வருவதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இசை சமுதாயச் சிந்தனையையும் தருகிறது. இசை ஒரு தெய்வீகம் என்பர். மனித உலகு இசைபட வாழ்தல் வேண்டும். இசையால் இவ்வுலகு மேம்பட வேண்டும். ஒரு சிறுவன் தன் தாயைக்கேட்டான்..."ஏம்மா ... என்னை உறங்கச்-செய்ய தாலாட்டுப்-பாட்டுப் பாடுகிறாய் ... கோயிலில் சாமி கும்பிடும்போதும், வீட்டில் பூசை செய்யும்போதும் பக்திப்-பாட்டுப் பாடுகிறாய்... நெல்-குத்துவது, துணி-துவைப்பது, வயலில் வேலை-செய்யும் நேரங்களிலும் பாடுகிறாய் ... பொங்கல், தீபாவளி, கல்யாணம் போன்ற மங்கள-நிகழ்ச்சிகளிலும் பண்டிகை கோலாகலக் கொண்டாட்டங்களிலும் பாட்டுத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இவை தவிர ஊஞ்சல், கும்மி, கோலாட்டம் போன்ற பாட்டுக்கள் வேறு... போதாதற்கு யாராவது இறந்துவிட்டாலோ அப்போதும் வேறுவகையான பாட்டு பிலாக்கணம் மேலும் சவ-ஊர்வலத்தின் முன்னேயும் மணியடித்துச் சங்கு ஊதிக்கொண்டே வள்ளுவன் பாட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல, அப்பா வண்டி ஓட்டும்போதும், வயலில் நீர்-பாய்ச்ச மாடுகளை ஓட்டிக் கமலை-இறைக்கும் போதும், வேறு வேலைகள் செய்யும்போதும் பாடிக்கொண்டே செய்கிறார்.... மீனவர்களும் படகோட்டிகளும் ஐலசா- பாட்டோ அல்லது அது போன்ற கூட்டுப்-பாடலோ(Chorus) பாடிக்கொண்டே நீரில் பயணிக்கின்றனர் .... பெரும்-பாரம் ஏற்றி-இறக்கும்போதும், காட்டில் மரம் வெட்டி இழுத்துச் செல்லும்போதும் பாடிக்கொண்டே செய்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஊர்விட்டு ஊருக்குக் கூட்டமாக நடக்கும்போதும் எல்லோரும் கூட்டுக்-குரலில் பாடிக்கொண்டே செல்கின்றனர்.... கோயிலில் அன்றாட-நிகழ்ச்சியாகவும், சாமி ஊர்வலத்தின்போதும் நாயனம் என்னும் நாகசுர-வாத்தியம் வாசிக்கின்றனர் ... இவை தவிர கேளிக்கை எனும் பெயரிலே மேடைக்கச்சேரி, நாடகம், சினிமாவிலும் பாட்டு, சங்கீதம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி எங்கும் பாட்டு, எதிலும் பாட்டு, எப்போதும் பாட்டு மயமாகவே வாழ்வது ஏன் அம்மா ஆமாம் மேலும் சிலவற்றையும் கூறவிட்டுவிட்டாயே பொது-நிகழ்ச்சிகளின் துவக்கத்தில் அஞ்சலி என்ற பெயரிலும் பாட்டு, நாட்டின் தேசீய-கீதம், போர்-வீரர்களுக்கு மார்ச்-பாஸ்ட்-கீதம், போர்-முரசு-கீத-வகைகள் போன்றவற்றிலும் பாட்டுக்கள், இசை-மயம் தான்." என்று கூறி விளக்கினாள் தாய்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனெனில்... அதன் காரணங்கள் :&lt;br /&gt;&lt;br /&gt;தாலாட்டு :-- சங்கீதத்திற்கே ஓர் ஈர்ப்பு-சக்தி உண்டு... அதனால் தான் மிருகங்களும் மட்டுமின்றி விஷப்-பாம்பும் கூட வசியப்படுகிறது என்று முன்னமேயே கண்டோம்... எனவே தாலாட்டின் இசையில் மயங்கி குழந்தை உறங்கிவிடுகிறது... தொட்டிலோ தூளியோ ஆட்டும் தாயும், தானும் இசையில் லயித்து களைப்புத்-தோன்றாது விழித்திருந்து ஆட்டமுடிகிறது. பக்தி-அஞ்சலி :-- இறைவனைத் துதிக்கையிலே சங்கீதத்தோடு இசைத்துப் போற்றி வேண்டினால், இறைவனும் நமது பிரார்த்தனைக்கு எளிதில் செவிசாய்க்கிறான் எனும் உண்மையை சான்றோர் பலர் தமது அனுபவத்திலும் கண்டறிந்து... அத்தகைய விந்தையான அனுபவங்களை நமக்கு எடுத்துக்-காட்டியதையும் காண்கிறோம்.... அத்தகைய சீரிய சக்தியும் சிறப்பும் சங்கீதத்திற்கு உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் ஒவ்வொரு ராகத்துக்கும் வெவ்வேறு குணம் உண்டு. அதாவது... மகிழ்ச்சி, சோகம், கோபம் ஆனந்தம், வீரம், இரக்கம் போன்ற நவரச-உணர்வுகளைச் சுட்டுவன. பக்தி-ஆழம் காட்டுவன. மழை-பொழியச் செய்வது... ஜோதியை விளக்கில் ஏற்றுவிப்பது இன்ன பிற.&lt;br /&gt;உதாரணமாக வடநாட்டு சங்கீதத்திலே "தீபக்" எனும் ராகத்தைப்-பாடியே அக்பர்-சக்கரவர்த்தி முன்னிலையிலே விளக்கில் ஜோதியை ஏற்றிக் காட்டினானாம் தான்சேன் எனும் இசைஞானி...&lt;br /&gt;அதேபோல தென்னாட்டு சங்கீதத்திலும் கூட, "ஜோதி-ஸ்வரூபிணி" எனும் ராகத்தை ஆழ்ந்து பாடி... பல்வேறு இசை-வல்லுனர்களும் மன்னர்கள்-சபை-முன்னே விளக்கேற்றிக்-காட்டியதாக வரலாறு கூறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சங்கீத-மும்மூர்த்திகளில் ஒருவரான தீக்ஷதர்... ஊர் ஊராக க்ஷேத்திராடனம் (பல ஊர்க்-கோயில்களில் தெய்வ-தரிசன யாத்திரை) சென்றபோது.தென்-தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தின்-வழியே செல்ல-நேர்ந்தது. கடும் கோடைகாலம்... அங்கு ஆறு ஆண்டுகளாக மழையே பெய்யாததால் பஞ்சம் தலை-விரித்தாடியதைக் கண்டு மனம்-நொந்து வெதும்பினார்...&lt;br /&gt;&lt;br /&gt;உடனே .உச்சிவெய்யிலில் நின்று, வானத்தைப்-பார்த்துக்-கண்ணீர்-விட்டு அழுதுகொண்டே பாடினார்."அமிர்தவர்ஷிணி" ராகத்திலே... "ஆனந்தாம்ருதாகர்ஷிணி அம்ருதவர்ஷிணி... சலிலம் வர்ஷய, வர்ஷய வர்ஷய ..." என்ற கீர்த்தனை.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் பொருள்.. "கருணையே வடிவான ஹே அம்பா துர்க்கா-தேவி, ஆனந்தம் மட்டுமே எப்போதும் மக்களுக்கு வழங்கும்-பண்புகொண்ட நீயே இவ்வாறு பேதையரை வருத்திச்-சோதிப்பது உனக்கு அழகா தாயே!... தயை-கூர்ந்து உடனேயே, இக்கணமே .... மழை பொழியடும்.... பொழியட்டும்.... பொழியட்டும்..."&lt;br /&gt;&lt;br /&gt;அவர் பாடிமுடித்த உடனேயே வானம் விரைந்து கருத்து... பெரும் மழை பொழியத்-தொடங்கி ஒன்பது நாட்கள் இரவு பகலாகக் கொட்டோ-கொட்டு என்று கொட்டி, அந்தச் சுற்றுவட்டாரக் குளங்கள், ஏரிகள், குட்டைகள் போன்ற நீர்நிலைகள் யாவுமே நிரம்பிவிட்டதைக் கண்டவர்கள் கூறக்-கேட்ட பாண்டிய-மன்னன் நன்றிக்-கடன் உணர்வு மிக, தீக்ஷ¢தரைத் தனது சபைக்கு மிக்க பணிவுடன்-அழைத்து அவருக்குத் தக்க மரியாதை செய்வித்ததோடு இந்த விந்தை-பற்றிச் செப்பேட்டிலும் எழுதி-வைத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆம்... மழையைத்-தருவித்த அந்த ராகம்... "அம்ருதவ்ர்ஷிணி."&lt;br /&gt;&lt;br /&gt;பக்தியால் மட்டுமே தெய்வத்தின் அருளைப் பெற முடியும் என்றால், சங்கீதத்தோடு இணைத்து அவர் ஏன் பாடினார்?... அங்கு தான் சங்கீதத்தின் மகத்துவம் புலப்படுகிறது .ஆக்யினால் பாரம்பரிய இசைக்கும் என்றும் உயர்வு உண்டு மீதம் இசைகலை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7884566-4219866229521511461?l=muthamilmantram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthamilmantram.blogspot.com/feeds/4219866229521511461/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7884566&amp;postID=4219866229521511461' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/4219866229521511461'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/4219866229521511461'/><link rel='alternate' type='text/html' href='http://muthamilmantram.blogspot.com/2007/07/blog-post_1231.html' title='பாரம்பரிய இசையின் தாக்கம் - டாக்டர் பெருமாள்'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/16215519587221396052</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://img.photobucket.com/albums/v324/welcometofree/bestmtm.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7884566.post-6919429781803206175</id><published>2007-07-25T08:00:00.000+06:00</published><updated>2007-07-25T08:02:31.502+06:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மருத்துவம்'/><title type='text'>பாரம்பரிய மருத்துவம் பலனளிக்கும்! - டாக்டர் பெருமாள்</title><content type='html'>நம் அன்றாட வாழ்க்கையில் அதை தானே செய்கிறோம்? ஒரு தலைவலி வந்தால் முதலில் வென்னீரோ, காப்பியோ, சுக்கு காப்பியோ நெற்றியில் பற்றோ இடுகிறோமே? தற்போது காலம் நவீன மயமாகிவிட்டதால் நாகரீகம் கருதி மாத்திரைகளுக்கு அடிமையாகி அதற்கு பலியாகிறோம். பழையவை கிளாசிக்கல் போன்றது. எப்பொழுதும், புதியமுறை இல்லாமல் போனாலும் பயனளிக்க கூடியது.&lt;br /&gt;&lt;br /&gt;அக்காலத்தில் தமிழ் மருத்துவர்கள் தேக தத்துவ நூல், நோயைப் பற்றிய நூல், நோயணுகாவிதி, இரணமருத்துவம், உணவுப் பொருள் மருத்துவ நூல், விஷங்களை நீக்கும் நஞ்சுநூல், ஞானசர நூல், சோதிட நூல் முதலிய பல நூல்களைக் கற்றறிய வேண்டியதோடு ஆசிரியனோடு 12 ஆண்டு பழக வேண்டும். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேல்தான் தனியே மருத்துவம் செய்ய வேண்டும் என விதியிருந்தது. இப்போது அப்படிச் செய்கிற தமிழ் மருத்துவரும் இல்லை; செய்விக்கிற திட்டங்களும் இல்லை. மருத்துவத்துறையிலும் வெளிநாட்டு மருத்துவ முறைகளுக்கே ஆக்கமும் விளம்பரமும் மிகுந்துவிட்டன.அவ்வளவு தான்.&lt;br /&gt;&lt;br /&gt;பாரம்பரிய பழைய நாள் மருத்துவர்கள் பகல் இரவு சூரிய சந்திர நட்சத்திரங்களைப் பாராமலும், கடிகாரம் எனும் காலங்காட்டியைப் பாராமலும், இருக்கும் இடத்திலிருந்து மூக்கு முனையில் நடைபெறும் மூச்சைப் பார்த்தே இரவு பகல் மணி சொல்லுவார்கள்; எனது பாட்டனாரிடத்திலும் தந்தையிடத்திலும் இவ்வரிய செயலை நேரில் பார்த்தேன். இச்சரப் பயிற்சியால் தன்னிடம் வரும் நோயாளிக்கு நோய் தீரும் தீராதெனவும், பிழைப்பான் பிழைக்க மாட்டானெனவும் கூறினார்கள். நோயாளியை வந்து பார்க்கும் படி மருத்துவமனை அழைக்கவரும் ஆண், பெண்களையும், அவர்கள் வந்து நிற்கும் திசைகளையும், அவர்கள் வாயிலிருந்து வரும் முதற் சொல்லையும், அச்சமயம் மருத்துவனுக்கு மூக்கில் நடக்கும் சரத்தையும் கண்டு நோயாளியின் நிலைமைத் தெரிந்துகொள்வார்கள். முற்காலத்தில் மருத்துவர்களும் பெரு மக்களில் பலரும் வீட்டைவிட்டு வெளியே புறப்படும்போது மூக்கில் விரல் வைத்துச் சாரத்தைப் பாராமல் புறப்படமாட்டார்கள். நீரில் தலைமுழுகு முன்னும் உணவு உட்கொள்ளு முன்னும் வலப்பக்கம் நாசியில் சுவாசம் (சூரியனில்) நடைபெறுகிறதா என்பதைக் கவனிப்பார்கள். சோதிடமும் பார்ப்பார்கள். வானத்திலுள்ள நவக்கிரகங்களின் உச்சநிலையைப் பற்றிக் கவனித்துச் சூரியனைக் காலை மாலை கண்ணால் பார்ப்பது போல் சந்திரனையும் இரவில் பார்ப்பார்கள். நோயாளியின் ஜாதகத்தையும் பார்ப்பார்கள். இவைகளை எல்லாம் பார்த்து மருத்துவம் செய்வதுதான் இயற்கை மருத்துவம். அதில்தான் பயன் மிகுதி. தமிழ் மருத்துவம் அப்படிப்பட்டது. கிரகமெனும் ஞாயிறு மறைவு மதிமறைவு நேரத்தில் உண்ணாமல் ஓர் அலுவலும் பண்ணாமல் தனித்திருந்து பேசாமல் தியானம் செய்யும்படி தமிழ் மருத்துவ நூல்கள் கூறுகின்றன. அந்நேரத்து ஒளியில் பலவகைக்கெடுதல் இருப்பதே அதற்குக் காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;உலோகங்களைச் செந்தூர பஸ்மங்களாகச் செய்கிற பழக்கத்தால் செம்பை வெள்ளியாகவோ பொன்னாகவோ செய்யும் இரசவாத வித்தையும் பழைய தமிழ் மருத்துவர்களுக்குத் தெரிந்திருந்தது. அதனால் அவர்கள் இக்காலம் போல் பெரும்பாலும் பணத்துக்காக மருத்துவம் செய்யாமல், ஏழை எளியவர்களுக்கு இலவசமாகவே மருத்துவம் செய்வார்கள். மருத்துவர்கள் பிணியாளர்களைப் பார்க்கும்போது வெறுந்தரையிலிருந்து நோயாளரைத் தொட்டுப் பார்ப்பதால் நிலக் கவர்ச்சியால் மருத்துவனுடைய தேக காந்த சக்தி நோயாளிக்கும் நோயாளியின் தேக காந்த சக்தி மருத்துவனுக்கும் பரவுகிறதென்பதை அறிந்து, தற்காப்புக்காக நோயாளியைப் பார்க்கும்போது வேறொன்றிலும் அமராமல் மரப்பலகை (மணை) மீது அமர்ந்துதான் பார்ப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நோயாளியை வெறுங்கையால் தொட்டுப் பார்க்காமல் தனது கைக்கும் நோயாளி உடம்புக்கும் நடுவில் மெல்லிய பட்டுத்துணியைப் பிரித்துப் போட்டுப் பார்ப்பார்கள். மரப் பலகைக்கும் பட்டுத்துணிக்கும் நிலக்கவர்ச்சியைத் தடுக்கும் ஆற்றல் இருக்கிறதென்பதை நம் முன்னோர்கள் அக்காலத்திலேயே கண்டிருந்தார்கள். இன்றும் வயதானவர் பலருக்கும் கிராமங்களில் வாழ்பவர் சிலருக்கும் இது தெரியும். இன்று மின்சாரத்தில் வேலை செய்கிறவர்களிடம் இதைக் காண்கிறோம். பாரம்பர்ய பழைய தமிழ் மருத்துவர்கள் நோயாளரைச் சோதித்தறியும்போது நோய்வந்ததற்குக் காரணத்தை முதலில் காண்பார்கள். பலதரப்பட்ட மக்களுக்கு அவரவர் நிலத்தியல்பு, உணவு, கல்வி, அறிவு, செய்தொழில் ஆகியவற்றைக் கவனித்தும்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;"நாடியால் முன்னோர் சொன்ன நல்லொலி பரிசத்தாலும்&lt;br /&gt;நீடிய விழியினாலும் நின்ற நாக்குறிப்பினாலும்&lt;br /&gt;வாடிய மேனியாலும் மலமொடு நீரினாலும்&lt;br /&gt;சூடிய வியாதிதன்னைச் சுகமுடன் அறிந்துபாரே"&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்றபடி மருத்துவத்தில் கைநாடி, குரலொலி, உடற்சூடறியத் தொடுதல், கண், நாக்கு, உடம்பின் நிறம், நீர், மலம் இந்த எட்டுவிதச் சோதனையின்றி மருந்து கொடுக்கமாட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சில நோயாளிகளுக்கும், பல மருந்துண்டு அலுத்தவர்கட்கும் இயற்கை மருத்துவம் செய்வார்கள்; பத்தியம் எனக்கூறி உணவை மாற்றுவார்கள். உள்ளப் பிணியாளர்களை, மனநோயாளர்களை, இருக்கும் இடத்தை விட்டு 'ஸ்தல யாத்திரை' போகச் சொல்வார்கள். சில நோய்களுக்கு உடம்பில் சில இடங்களில் சுட்டும், அறுக்க வேண்டிய இடங்களை அறுத்தும், பழைய நாட்களில் மருத்துவம் செய்துள்ளார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;இக்காலத்தைப்போல் இவ்வளவு அறுவை மருத்துவங்கள் அக்காலத்தில் இல்லை. இத்தகைய நோய்களும் அக்காலத்தில் இல்லை. இவ்வளவு பெரிய மருத்துவமனைகளும் அக்காலத்தில் இல்லை. எத்தனை ஆஸ்பத்திரிகள் கட்டினாலும் இப்போது நோயாளிகளுக்கு இடம் போதவில்லை என்கிறார்கள். இதற்கு, நாள்தோறும் மக்களுக்கு நோய் அதிகப்படுவதே காரணமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்க்கு காரனம் தற்போது மருந்துகலாலே வியாதி அதிகம் சம்பவிப்பாதக அதிக தகவல் ஆகவே பாரம்பர்ய மருத்துவமெ சிறந்தது ஏன்ன்றால் வருமுன் காகும் திறன் இருந்தாது. இச்சூழலிலும் பாரம்பர்ய மருத்துவம் பயனளிக்கும்!&lt;br /&gt;&lt;br /&gt;மேலும்: &lt;a href="http://www.muthamilmantram.com/viewtopic.php?t=20633&amp;postdays=0&amp;amp;postorder=asc&amp;&amp;amp;start=3255"&gt;படிக்க&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7884566-6919429781803206175?l=muthamilmantram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthamilmantram.blogspot.com/feeds/6919429781803206175/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7884566&amp;postID=6919429781803206175' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/6919429781803206175'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/6919429781803206175'/><link rel='alternate' type='text/html' href='http://muthamilmantram.blogspot.com/2007/07/blog-post_25.html' title='பாரம்பரிய மருத்துவம் பலனளிக்கும்! - டாக்டர் பெருமாள்'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/16215519587221396052</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://img.photobucket.com/albums/v324/welcometofree/bestmtm.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7884566.post-2284706209709359454</id><published>2007-07-19T08:54:00.000+06:00</published><updated>2007-07-19T08:56:18.515+06:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மன்றம்'/><title type='text'>முத்தமிழ்மன்றத்தின் நான்காம் ஆண்டுமலர்!</title><content type='html'>அன்பு நண்பர்களே, முத்தமிழ் மன்றத்தின் நான்காம் ஆண்டு விழா மலரை உங்கள் கைகளில் தவழத் தருவதில் மிக்க மகிழ்ச்சியும் பெருமையும் அடைகின்றோம். &lt;a class="postlink" href="http://www.muthamilmantram.com/aandumalar.pdf" target="_blank"&gt;இங்கிருந்து&lt;/a&gt; தரவிறக்கிக் கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.muthamilmantram.com/malar.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மலரின் நிறைகளுக்கு நீங்களே காரணம். குறைகளுக்கு என் கவனக்குறைவே காரணமாக இருக்கும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7884566-2284706209709359454?l=muthamilmantram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthamilmantram.blogspot.com/feeds/2284706209709359454/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7884566&amp;postID=2284706209709359454' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/2284706209709359454'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/2284706209709359454'/><link rel='alternate' type='text/html' href='http://muthamilmantram.blogspot.com/2007/07/blog-post.html' title='முத்தமிழ்மன்றத்தின் நான்காம் ஆண்டுமலர்!'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/16215519587221396052</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://img.photobucket.com/albums/v324/welcometofree/bestmtm.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7884566.post-6086090683317590712</id><published>2007-05-31T07:28:00.000+06:00</published><updated>2007-05-31T07:31:29.242+06:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மக்கள்'/><title type='text'>சமூக அவலங்கள்! - மன்னை ராஜா</title><content type='html'>நாடு விடுதலை பெற்று 60 ஆண்டுகள் கழித்தும் சில அப்பாவி மக்கள் இன்னும் தங்களுக்கு கிட்ட வேண்டிய அடிப்படை மனித உரிமைகளைக் கூட அடையாமல் இழிநிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதும், அதன் விளைவாக அவ்வினங்களில் திடீர் தலைவர்கள் முளைத்து தவறான திசையில் இளைஞர்களின் வாழ்க்கையை திருப்பி விடுவதும் நம் கண்முன்னே நிகழும் சமூக அவலங்கள்..!&lt;br /&gt;&lt;br /&gt;அந்த தாழ்த்தப்பட்ட இனப் பெரியவருக்கு நிகழ்ந்த ஒரு அவமானமும் அதை கண்டிருந்த ஒரு பிஞ்சு நெஞ்சத்தில் விழுந்த அடி பிற்காலத்தில் எவ்வாறு முடிவெடுக்க வைக்குமோ என்ற நியாயமான ஆதங்கமும் ஏற்படும் வகையில் என் கண்முன் நிகழ்ந்த ஒரு சம்பவம் இது..&lt;br /&gt;&lt;br /&gt;ஒருமுறை எங்களின் விற்பனை வாகனம் பழுதுபட்டு மன்னை அருகில் உள்ள ஒரு கிராமத்தில் [ஊர் பெயர் வேண்டாமே..!] நின்றுவிட்டது. பழுது நீக்குவோர் வர தாமதமானதால் அருகில் உள்ள சிறு கோவிலில் அமர்ந்திருந்தேன். அரிசனங்கள் வாழும் பகுதி அது. இன்னும் மூன்றே நாட்களில் பொங்கலை எதிர்நோக்கி ஊர் ஒரு பரபரப்பைப் பூசிக்கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அருகில் இருந்த வீட்டில் உள்ள உரையாடல் என் காதுகளில் வந்து விழுந்தது. ஒரு சிறுவன் தன் பாட்டனாரை கடைத்தெருவுக்கு அழைத்துச் செல்ல வேண்டிக்கொண்டிருந்தான். பெரியவருக்கு 65 வயதிருக்கும். கூடியவரை சமாளிக்கப் பார்த்தும் முடியாமல் அழைத்துக் கொண்டு கிளம்பினார்.இருவரும் தங்கள் வீட்டு வேலிப் படலை நீக்கி வெளியேறுவதற்கும் ஒரு 18 வயது இளைஞன் மோட்டார் சைக்கிளில் அவர்கள் வீட்டு வழியே சாலையில் செல்வதற்கும் சரியாக இருந்தது.&lt;br /&gt;பெரியவரைப் பார்த்ததும் இளைஞன் அரைவட்டம் அடித்து திரும்பி வந்தான்..&lt;br /&gt;&lt;br /&gt;"எலே.. கழிஞ்சான்.. எங்கடா வெள்ளையும் சொள்ளையுமா கெளம்பிட்டே..?"&lt;br /&gt;&lt;br /&gt;தன் பாட்டனாரைத்தான் அந்த இளைஞன் இப்படிக் கூப்பிடுகிறான் என்று அறிந்துகொள்ளவே சிறிதுநேரம் பிடித்தது அந்த சிறுவனுக்கு. அதிர்ச்சி விலகாத கண்களுடன் இருவரையும் மாறிமாறிப் பார்த்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;வழிவழி வந்த அடிமைத்தனத்துடன் அசட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்தவாறு பெரியவர் சொன்னார்.." ஹி..ஹி.. வாங்க தம்பி.. பேரப்புள்ள கடைத்தெருவுக்கு கூப்பிட்டுது.. அதான்..." இதைச் சொல்லும்போது அவரின் உயரத்தில் இரண்டடியைக் காணோம்..!&lt;br /&gt;&lt;br /&gt;அதானே பார்த்தேன்.. துண்டு எல்லாம் தோள்ல கெடக்கேன்னு...! ஏதோ செய்யக்கூடாத செயலைச் செய்துவிட்டதுபோல் பதறி தன்னிச்சையாய்க் பெரியவரின் கை துண்டை தோளில் இருந்து எடுத்தது. கண்டும் காணாததுபோல் இளைஞன் கேட்டான்..&lt;br /&gt;&lt;br /&gt;யாரு இது பிசுக்கு..?&lt;br /&gt;&lt;br /&gt;எம்பேரனுங்க.. !&lt;br /&gt;&lt;br /&gt;படிக்கிறானா..?&lt;br /&gt;&lt;br /&gt;ஆமாங்க..!&lt;br /&gt;&lt;br /&gt;பேரு என்ன ?&lt;br /&gt;&lt;br /&gt;பிரகாசுங்க..!&lt;br /&gt;&lt;br /&gt;ஹி..ஹி.. ம்ம் பிரகாஸ்.. சட்டென்று நினைவு வந்தவனாக...&lt;br /&gt;&lt;br /&gt;ஏண்டா உம்பேரு அய்யாத்துரை தானே..?&lt;br /&gt;&lt;br /&gt;பெரியவரைப் பார்த்து இளைஞன் கேட்க, அவர் அடிமைத்தனமாய் தலையாட்டினார். அந்த மேல்சாதி இளைஞன் காட்சிக்குள் பார்வையாளராக இருக்கும் என்னைப் பார்த்து சொன்னான்.. "சீவக்காரண்ணே.. இவனுக சரியான குசும்பு புடிச்ச பயலுக.. பேரெல்லாம் அய்யா, துரைன்னுதான் வச்சுக்குவானுங்க.. நாம அவனுகளைப் பார்த்து அய்யாங்கணுமாம்.. அதான் அப்பா பேர் வச்சாங்க..கழிஞ்சான்னு.. "&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதும் பெரியவர் முகத்தில் அதே அடிமைச் சிரிப்பு. சிறுவனுக்கோ நிகழ்வுகளைச் சீரணிக்க முடியாமல் விழிகள் தெறித்துவிடும் போல இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இளைஞன் வண்டியை ஸ்டார்ட் செய்துகொண்டே சொன்னான்.. சரி..சரி.. வேட்டி சட்டையெல்லாம் அவுத்துப் போட்டுட்டு வா ஒட்டடை அடிக்கணும்.. பெரியவரின் பதிலை எதிர்பாராமல் கிளம்பிவிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறுவனுக்கு கடைவீதி போகாதது பெரிய ஏமாற்றமாகப் படவில்லை.. இயந்திரமாக உடையை அவிழ்த்துக் கொண்டிருந்த தாத்தாவைப் பார்த்து கேட்டான்..&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் தாத்தா.. பெரியவங்களை மரியாதையா அழைக்கணும்ன்னு எங்க டீச்சர் சொன்னாங்க.. ஆனா அந்த அண்ணன் உங்களை வாடா போடான்னு கூப்பிடறாங்க.. நீங்க ஒண்ணுமே சொல்லலையே...?&lt;br /&gt;&lt;br /&gt;என்ன சொல்லுவார் பெரியவர்..? உங்களுக்கு ஏதாவது சொல்லத் தோன்றுகிறதா..?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.muthamilmantram.com/viewtopic.php?p=278052#278052"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;மேலும் படிக்க....&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7884566-6086090683317590712?l=muthamilmantram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthamilmantram.blogspot.com/feeds/6086090683317590712/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7884566&amp;postID=6086090683317590712' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/6086090683317590712'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/6086090683317590712'/><link rel='alternate' type='text/html' href='http://muthamilmantram.blogspot.com/2007/05/blog-post_31.html' title='சமூக அவலங்கள்! - மன்னை ராஜா'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/16215519587221396052</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://img.photobucket.com/albums/v324/welcometofree/bestmtm.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7884566.post-6774349443656167811</id><published>2007-05-26T08:24:00.000+06:00</published><updated>2007-05-26T08:26:44.839+06:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>தினகரன் நெம்பர்1 - மோகன்</title><content type='html'>தமிழில் மிக அதிகமாக விற்பனையாகும் நாளிதழ் தினகரன் என்று ஆடிட் பீரோ ஆஃப் சர்குலேஷன் (ஏ.பி.சி.) அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் வெளியாகும் அனைத்து பத்திரிகைகளின் விற்பனையை கடுமையான சோதனைகள் மூலம் தணிக்கை செய்து சான்றிதழ் வழங்கும் ஏ.பி.சி. அமைப்பின் லேட்டஸ்ட் அறிக்கையில் இந்த தகவல் இடம் பெற்றுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;புதிய வடிவில் வெளிவரத் தொடங்கி ஓராண்டு முடிவதற்குள் தினகரன் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது. இவ்வளவு குறுகிய காலத்தில் முதலிடத்தை கைப்பற்றிய முதல் இந்திய நாளிதழ் தினகரன் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏ.பி.சி. ஒரு சுயேச்சையான தணிக்கை அமைப்பு. இதன் சான்றிதழ் தவறுகளுக்கு அப்பாற்பட்டது என்பதோடு, உலக அளவில் அங்கீகரிக்கப்படும் பெருமையும் கொண்டதாகும். ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஏ.பி.சி. தனது தணிக்கை அறிக்கையை வெளியிடும். இப்போது வெளியாகி இருப்பது 2006 ஆம் ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஆறு மாத கால கணக்கெடுப்பு மற்றும் சோதனைகள் அடிப்படையிலான தணிக்கை அறிக்கையாகும். இதன்படி அந்த ஆறு மாதங்களில் 16 கோடியே 39 லட்சத்து 19 ஆயிரத்து 656 தினகரன் பிரதிகள் விற்பனை ஆகியுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது, தினந்தோறும் சராசரியாக 9 லட்சத்து 657 தினகரன் பிரதிகள் விற்பனை ஆகியுள்ளன. தினத்தந்தி 8 லட்சத்து 54,499 பிரதிகளும், தினமலர் 5 லட்சத்து 76,946 பிரதிகளும் விற்றுள்ளன. இதன் மூலம், தமிழில் மிக அதிகமாக விற்பனையாகும் நாளிதழ் தினகரன்தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கில நாளேடுகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டால்கூட தமிழகத்திலேயே மிக அதிகமாக விற்பனையாகும் நாளிதழ் தினகரன்தான்!&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் அச்சுலகில் உயரிய தொழில்நுட்பம், நேர்த்தியான வடிவமைப்பு, செய்தி ரகம் பிரித்தல், உயிரோட்டமான வண்ணப் படங்கள், கருத்துத் திணிப்பற்ற நேர்மை, எளிய மொழிநடை, கிழமைக்கேற்ப மாறாத விலை ஆகியவற்றை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எமது நோக்கத்துக்கு கிடைத்த வெற்றியாகவே இந்த சாதனையை பார்க்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;மிகக் குறுகிய காலத்தில் கிடைத்திருக்கும் இந்த மகத்தான வெற்றி, உங்களைப் போன்ற லட்சோப லட்சம் வாசகர்கள் தினகரன் மீது வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையின் வெளிப்பாடே என்பதை உணர்கிறோம். அந்த நம்பிக்கைக்கும் ஆதரவுக்கும் எங்கள் நன்றியை காணிக்கையாக்குகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் தினகரன் நாளிதழ் மேலும் சாதனைகள் படைக்க&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.dinakaran.com/abc/compare.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்.ஆர்.எஸ். என்று சொல்லப்படும் வாசகர்கள் எண்ணிக்கை தொடர்பான ஆய்வில் 96 லட்சத்து 39 ஆயிரம் வாசகர்களைப் பெற்று, அகில இந்தியாவிலும் மிக அதிக வாசகர்களைக் கொண்ட 8வது மிகப் பெரிய நாளிதழ் என்ற பெருமையை தினகரன் கடந்த ஆண்டு பெற்றது. கடந்த ஆண்டு பிப்ரவரி 1 முதல் மே 31ம் தேதி வரை இந்த ஆய்வு நடத்தப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;புதிய வடிவில் வெளிவரத் தொடங்கிய மூன்றே மாதத்தில் இந்த சாதனையை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;-தினகரன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7884566-6774349443656167811?l=muthamilmantram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthamilmantram.blogspot.com/feeds/6774349443656167811/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7884566&amp;postID=6774349443656167811' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/6774349443656167811'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/6774349443656167811'/><link rel='alternate' type='text/html' href='http://muthamilmantram.blogspot.com/2007/05/1.html' title='தினகரன் நெம்பர்1 - மோகன்'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/16215519587221396052</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://img.photobucket.com/albums/v324/welcometofree/bestmtm.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7884566.post-4592184732467775417</id><published>2007-05-24T12:36:00.000+06:00</published><updated>2007-05-24T12:40:32.254+06:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கல்வி'/><title type='text'>ஓரெழுத்து அர்த்தங்கள் - சுதாகர்</title><content type='html'>"அ"&lt;br /&gt;&lt;br /&gt;1. திருமால்&lt;br /&gt;2. சிவன்&lt;br /&gt;3. 'எட்டு' என்னும் எண்ணின் குறி&lt;br /&gt;&lt;br /&gt;'ஆ'&lt;br /&gt;&lt;br /&gt;1. தோன்று / உண்டாகு (Come into Existence)&lt;br /&gt;2. நிகழ் (happen, Occur)&lt;br /&gt;3.முடிவுறு (to be finished, be done)&lt;br /&gt;4. ஒத்துப்போ, இணக்கமாகு (be fit or agreeable)&lt;br /&gt;5. உயர்வடை, சிறப்படை (Prosper, flourish)&lt;br /&gt;6. ஆகு, ஆமை (be)&lt;br /&gt;7. ஒப்பாகு (equal, match)&lt;br /&gt;8. பொருத்து, கட்டு ( tie, bind)&lt;br /&gt;9. நிகழ்த்து, செய்வி (cause, bring about)&lt;br /&gt;10. ஆகுதல் (becoming)&lt;br /&gt;11. எருது, மரை, எருமை ஆகியவற்றின் பெண்பால் (female of OX, Sombar and Buffalo)&lt;br /&gt;12. காளை (bull)&lt;br /&gt;13. ஆன்மா ( Soul)&lt;br /&gt;14. முறை, விதம், ஆறு ( Way, Manner)&lt;br /&gt;15. பசு (Cow)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'ஈ'&lt;br /&gt;&lt;br /&gt;1. தானமாகக் கொடு, வழங்கு ( give alms, gift, donate)&lt;br /&gt;2. கொடு, தா (give, offer)&lt;br /&gt;3. படிப்பி ( give instruction)&lt;br /&gt;4. படை, உண்டாக்கு (create, bring into existence)&lt;br /&gt;5. நேர், இணங்கு (agree, consent)&lt;br /&gt;6. ஈன் (bring forth)&lt;br /&gt;7. ஈ / தேனி (இறக்கைகள் உடைய சிறிய உயிரின வகை) (fly)&lt;br /&gt;8. நீக்கம், அழிவு (eradication, destruction)&lt;br /&gt;9. வியப்புக் குறிப்பு (an exclamation of wonder)&lt;br /&gt;&lt;br /&gt;'உ'&lt;br /&gt;&lt;br /&gt;1. இரண்டு என்னும் எண்ணின் குறி (symbol for the number 2 &amp; it's usually written with out the loop)&lt;br /&gt;2. சிவனின் ஆற்றல் (Energy of Siva)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.muthamilmantram.com/viewtopic.php?t=20943&amp;amp;postdays=0&amp;postorder=asc&amp;amp;&amp;amp;start=0"&gt;மேலும்..... &lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7884566-4592184732467775417?l=muthamilmantram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthamilmantram.blogspot.com/feeds/4592184732467775417/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7884566&amp;postID=4592184732467775417' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/4592184732467775417'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/4592184732467775417'/><link rel='alternate' type='text/html' href='http://muthamilmantram.blogspot.com/2007/05/blog-post_24.html' title='ஓரெழுத்து அர்த்தங்கள் - சுதாகர்'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/16215519587221396052</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://img.photobucket.com/albums/v324/welcometofree/bestmtm.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7884566.post-8295720426743669564</id><published>2007-05-17T13:39:00.000+06:00</published><updated>2007-05-17T13:42:13.808+06:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெயர்கள்'/><title type='text'>சூரியன், சந்திரன், நிலம் - சுதாகர்</title><content type='html'>&lt;strong&gt;சூரியன்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சூரியன்&lt;br /&gt;அங்கி&lt;br /&gt;அண்டயோனி&lt;br /&gt;அருக்கன்&lt;br /&gt;அருணன்&lt;br /&gt;அழற்கதிர்&lt;br /&gt;அற்கன்&lt;br /&gt;ஆதபன்&lt;br /&gt;ஆதி&lt;br /&gt;ஆதித்தன்&lt;br /&gt;ஆழ்வான்&lt;br /&gt;இரவி&lt;br /&gt;இருட்பகை&lt;br /&gt;உச்சிக்கிழான்&lt;br /&gt;உதயன்&lt;br /&gt;ஊழ்&lt;br /&gt;எரிகதிர்&lt;br /&gt;எரிசுடர்&lt;br /&gt;எல்&lt;br /&gt;எல்லவன் (சந்திரனையும் குறிக்கும்)&lt;br /&gt;எல்லோன்&lt;br /&gt;எற்செய்வான்&lt;br /&gt;என்றூழ்&lt;br /&gt;ஒளியவன்&lt;br /&gt;கடவுண்மண்டிலம்&lt;br /&gt;கதிர்க்கடவுள்&lt;br /&gt;கதிரவன்&lt;br /&gt;கனலி&lt;br /&gt;கிரணன்&lt;br /&gt;சவிதா&lt;br /&gt;சுடரோன்&lt;br /&gt;சூரன்&lt;br /&gt;செங்கதிர்&lt;br /&gt;செஞ்சுடர்&lt;br /&gt;ஞாயிறு&lt;br /&gt;தபனன்&lt;br /&gt;தரணி&lt;br /&gt;தாமரைநாதன்&lt;br /&gt;தாமன்&lt;br /&gt;திகிரி&lt;br /&gt;திவாகரன்&lt;br /&gt;தினகரன்&lt;br /&gt;தினமணி&lt;br /&gt;தேரோன்&lt;br /&gt;நிசாரி&lt;br /&gt;பகல்செய்வான்&lt;br /&gt;பதங்கன்&lt;br /&gt;பரிதி&lt;br /&gt;பனிப்பகை&lt;br /&gt;பாஸ்கரன்&lt;br /&gt;பிரபாகரன்&lt;br /&gt;புலரி&lt;br /&gt;மந்தி&lt;br /&gt;மார்த்தாண்டம்&lt;br /&gt;வாலரவி (காலைச் சூரியன்)&lt;br /&gt;வான்கண்&lt;br /&gt;வான்மணி&lt;br /&gt;வானவன்&lt;br /&gt;விண்மணி&lt;br /&gt;விபாகரன்&lt;br /&gt;விருச்சிகன்&lt;br /&gt;விரோசனன்&lt;br /&gt;வெங்கதிர்&lt;br /&gt;வெஞ்சுடர்&lt;br /&gt;வெயிலோன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சந்திரன்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சந்திரன்&lt;br /&gt;அந்திகாவலன்&lt;br /&gt;அம்புலியம்மான்&lt;br /&gt;ஆலோன்&lt;br /&gt;இந்து&lt;br /&gt;இரவன்&lt;br /&gt;உடுக்கோன்&lt;br /&gt;எல்லவன்&lt;br /&gt;குபேரன்&lt;br /&gt;குமுதநாதன்&lt;br /&gt;சந்தமாமா&lt;br /&gt;சீதன்&lt;br /&gt;சுதாகரன்&lt;br /&gt;சோமன்&lt;br /&gt;தாரகாபதி&lt;br /&gt;திங்கள்&lt;br /&gt;நிலா&lt;br /&gt;பசுங்கதிர்கடவுள்&lt;br /&gt;பனிக்கதிர்&lt;br /&gt;மண்டிலக்கடவுள்&lt;br /&gt;மதி&lt;br /&gt;மீனரசு&lt;br /&gt;முயற்கூடு&lt;br /&gt;முளரிப்பகை&lt;br /&gt;வள்ளி&lt;br /&gt;விது&lt;br /&gt;வெண்கதிரோன்&lt;br /&gt;வெண்மதி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நீர் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. நீர்&lt;br /&gt;2. தண்ணீர்&lt;br /&gt;3. அக்கரம்&lt;br /&gt;4. அளறு&lt;br /&gt;5. அறல்&lt;br /&gt;6. ஆம்&lt;br /&gt;7. ஆல்&lt;br /&gt;8. ஆலம்&lt;br /&gt;9. உண்ணீர்&lt;br /&gt;10. உதகம்&lt;br /&gt;11. கஞ்சம்&lt;br /&gt;12. கடும்புனல் (விரைந்து ஓடும் நீர்)&lt;br /&gt;13. கழிலிநீர் (கலங்கிய நீர்)&lt;br /&gt;14. கவந்தம்&lt;br /&gt;15. காண்டம்&lt;br /&gt;16. கோ&lt;br /&gt;17. சரம்&lt;br /&gt;18. சலம்&lt;br /&gt;19. சுந்து&lt;br /&gt;20. திருஊரல் (ஊற்று நீர்)&lt;br /&gt;21. தீத்தம்&lt;br /&gt;22. தோயம்&lt;br /&gt;23. நாரம்&lt;br /&gt;24. பாணி&lt;br /&gt;25. பானீயம்&lt;br /&gt;26. பிப்பலம்&lt;br /&gt;27. புனல்&lt;br /&gt;28. புனை&lt;br /&gt;29. வார்&lt;br /&gt;30. ஜலம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.muthamilmantram.com/viewtopic.php?t=18994&amp;postdays=0&amp;amp;postorder=asc&amp;&amp;amp;start=225"&gt;&lt;strong&gt;மேலும்...&lt;/strong&gt; &lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7884566-8295720426743669564?l=muthamilmantram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthamilmantram.blogspot.com/feeds/8295720426743669564/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7884566&amp;postID=8295720426743669564' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/8295720426743669564'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/8295720426743669564'/><link rel='alternate' type='text/html' href='http://muthamilmantram.blogspot.com/2007/05/blog-post_17.html' title='சூரியன், சந்திரன், நிலம் - சுதாகர்'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/16215519587221396052</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://img.photobucket.com/albums/v324/welcometofree/bestmtm.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7884566.post-7763339089415216307</id><published>2007-05-16T11:53:00.000+06:00</published><updated>2007-05-16T11:58:08.993+06:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><title type='text'>ஆங்கிலம் அரிவோம்! - மாதவன்</title><content type='html'>1. மாணவர்களை வட்டவடிவமாக நிற்க எவ்வாறு சொல்லவேண்டும்? இப்படித்தான்...&lt;br /&gt;&lt;br /&gt;All of you stand in a straight circle.&lt;br /&gt;&lt;br /&gt;2. கண்ணாடி அணிந்த மாணவியை அழைப்பது எப்படி??&lt;br /&gt;&lt;br /&gt;The girl with the mirror please comes her....&lt;br /&gt;&lt;br /&gt;3. பலூனில் காற்று இல்லை என தெரிவிப்பது எப்படி??&lt;br /&gt;&lt;br /&gt;There is no wind in the balloon.&lt;br /&gt;&lt;br /&gt;மாணவன் ஒருவன் குறுக்கே பேசியதால் கோபத்தில் சொன்னவை...&lt;br /&gt;&lt;br /&gt;4. I talk, he talk, why you middle middle talk?&lt;br /&gt;&lt;br /&gt;மாணவர்களுக்கு தண்டனை அளிக்கும் முறைகள்.....&lt;br /&gt;&lt;br /&gt;5. You, rotate the ground four times...&lt;br /&gt;6. You, go and understand the tree...&lt;br /&gt;7. You three of you stand together separately.&lt;br /&gt;&lt;br /&gt;தலைப்பை பார்த்து(?) நாமும் நல்ல ஆங்கிலம் கற்றுக் கொள்ளலாம் என நீங்கள் எண்ணி ஏமாந்தால் நான் பொறுப்பல்ல... இது எனக்கு மின்னஞ்சலில் வந்தது. ஒரு பிரபல கல்லூரி தாளாளர் தனது மாணவர்களிடம் ஆங்கிலத்தில் பிறப்பித்த கட்டளைகள். இவை... இதைப்படித்து நீங்களும் பயன்(?) பெறுங்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் இங்கே...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.muthamilmantram.com/viewtopic.php?t=20691"&gt;http://www.muthamilmantram.com/viewtopic.php?t=20691&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7884566-7763339089415216307?l=muthamilmantram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthamilmantram.blogspot.com/feeds/7763339089415216307/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7884566&amp;postID=7763339089415216307' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/7763339089415216307'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/7763339089415216307'/><link rel='alternate' type='text/html' href='http://muthamilmantram.blogspot.com/2007/05/blog-post_16.html' title='ஆங்கிலம் அரிவோம்! - மாதவன்'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/16215519587221396052</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://img.photobucket.com/albums/v324/welcometofree/bestmtm.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7884566.post-3118446075579601531</id><published>2007-05-10T11:47:00.000+06:00</published><updated>2007-05-10T11:49:00.881+06:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>முக்கோண அலசல் - மன்னையார்</title><content type='html'>முதலில் தினகரனின் பிண்ணனி - கே.பி.கந்தசாமியால் நடத்தப்பட்ட பத்திரிகை அவ்வளவாக சர்க்குலேஷன் இல்லாமல் பேருக்கு இருந்த பத்திரிகை. ஒரு கட்டத்தில் கலைஞரே வேண்டாம் என கே.பி.கே முடிவு செய்து வைகோவிடம் சென்றபின் கடைசிவரை அது வைகோவின் ஆதரவாகத் தான் இருந்தது. பின்னர் அதை சன் டீவி வாங்கியது...( இதற்காகத்தான் சரத்குமார் தி.மு.க வை விட்டு வெளியேறினார்) &lt;br /&gt;&lt;br /&gt;கோணம் 2: கலைஞர் சமீபத்தில் சன் டீவியில் தனக்கிருந்த பங்குகளை திரும்பப் பெற்றுக் கொண்டு, ஒரு பேட்டியில் விரக்தியாய் சொன்னார். மாறனைப் போலவே அவருடைய பிள்ளைகளை எதிர் பார்க்க முடியாது. வேண்டுமானால் அவர்கள் அறிவாலயத்தில் இருக்கட்டும். இல்லா விட்டால் அவர்கள் இஷ்டம். &lt;br /&gt;&lt;br /&gt;கோணம் 3 : தினகரன் கை மாறியதே தவிர அதன் ஊழியர்களெல்லாம் இன்னமு அப்படியே இருக்கிறார்கள்.இன்றும் கூட வைகோவைப் பற்றி தைரியமாக செய்திகள் வரும். ஆகவே சன் டீவி பத்திரிகையை வாங்கியதோடு அதை கண்காணிக்க வில்லை என்பது உண்மை. &lt;br /&gt;&lt;br /&gt;கோணம் 4 : தினகரன் ஒரு திமுக பத்திரிகை என்ற நிலையில், முரசொலியைவிட சர்க்குலேஷன் எங்கேயோ போய்விட்டது. முரசொலி ஒரு பேப்பர் விக்கும் கடையில் 100 தினகரன் விற்று விடுகிறது. ஆகவே கலைஞரை மீறிய அசுர வளர்ச்சியில் தினகரன் இருப்பதால், கலைஞரின் விருப்பங்கள் அந்த பத்திரிகையில் அவ்வளவாக எடுபடவில்லை என்பதே உண்மை. &lt;br /&gt;&lt;br /&gt;கோணம் 5: கருத்துக் கணிப்பு என்பது தற்செயலாக நிகழ்ந்த ஒன்றாகஎ எடுத்துக் கொண்டாலும் அதன் பின்னணி நம்மை யோசிக்க வைக்கும். இதுவரை கலைஞர் குடும்பத்திலிருந்த சூழ்நிலை என்ன என்பதை மாறன் குடும்பத்தவரக்ள் போட்டு உடைத்து விட்டனர். அத்துடன் மாறன் சகோதரர்கள், தாங்கள் இக்கால தலைமுறையைச் சேர்ந்தவர்கள் என்பதை நாசூக்காய் கலைஞ்ருக்கு உணர்த்தி விட்டனர். &lt;br /&gt;&lt;br /&gt;கோணம் 6 ; கலைஞரே இந்த கருத்துக் கணிப்பை ஏற்றுக்கொள்ளவில்லை என சொன்னாலும், இவரைக் கேட்டுவிட்டு அந்த பத்திரிகை எதையும் செய்வதில்லை என்பதற்கு சமீபத்திய அசம்பாவிதங்கள் ஒரு உதாரண்ம். &lt;br /&gt;&lt;br /&gt;கோணம் 7 : ஆக தினகரன் தான் இன்னமும் தனியான பத்திரிகை தான் என்பதை தக்க வைத்துக்கொள்ள போட்ட வலையில், பலர் பலியானது துரதிருஷ்டம். ராமதாஸ் சீரியஸ்ஸாய் கோபப் பட்டபோது ஏற்படாத விளைவுகள், அழகிரி மூலம் பத்திரிகை சந்தித்து விட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;கோணம் 8 : கலைஞர் என்ற தனிமனிதனின் செல்வாக்கினால் அடைந்த பயன்கள் ஏராளமாய் இருந்தாலும் தாங்கள், என்றும் மாறன் குடும்பத்தவர்கள் தான் என்பதை மறைமுகமாக காட்டி விட்டார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;கோணம் 9 : தயாநிதி மாறன் மத்தியில் சிறந்த அமைச்சர் என்று சித்தரித்த கணிப்பு, அவரை கலைஞருக்கு அடுத்தபடியாய் காட்டாததும் அவர் மாநில அரசியலுக்கு லாயக்கில்லை என்பதையும் தோலுரித்து விட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;கோணம் 10 : எல்லாவற்றிற்கும் மேலாக, 50ம் வருட பொன் விழா நெருங்கும் தருணத்தில் இது போன்ற நெருடல் மூலம் கலைஞரின் மனம் சஞ்சலப்பட்டதில்பலருக்கு சந்தோஷம் உண்டு ப்ண்ணக்கூட இந்த கணிப்பு உதவியிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆக கருணாநிதி - மாறன் - தினகரன் இந்த முக்கோண கணக்கில் எங்கு பார்த்தாலும் ஏதேனும் நெருடல்கள் இருப்பதை உணர முடிகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7884566-3118446075579601531?l=muthamilmantram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthamilmantram.blogspot.com/feeds/3118446075579601531/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7884566&amp;postID=3118446075579601531' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/3118446075579601531'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/3118446075579601531'/><link rel='alternate' type='text/html' href='http://muthamilmantram.blogspot.com/2007/05/blog-post_10.html' title='முக்கோண அலசல் - மன்னையார்'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/16215519587221396052</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://img.photobucket.com/albums/v324/welcometofree/bestmtm.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7884566.post-2771871875374979209</id><published>2007-05-05T06:24:00.000+06:00</published><updated>2007-05-05T06:40:48.159+06:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><title type='text'>சொர்க்கத்தில் பில்கேட்ஸ்! - மாதவன்</title><content type='html'>நம்மாளு பில்கேட்ஸ் செத்து போயி.. கடவுள் கிட்டே போய் நின்னாரு. &lt;br /&gt;&lt;br /&gt;நம்ம கடவுளுக்கே கன்ஃபூஷன். இன்னாடா இவன் நல்லது பன்னிகிறானா இல்ல கஸ்மாலம் கெட்டது பண்ணிகிறனா ?. இவன எங்கே உடறது ? சொர்க்கமா நரகமா ந்னு பயங்கர கன்ஃபூஷன். நம்மாளுகிட்டயே கேட்டாரு கடவுளு. &lt;br /&gt;&lt;br /&gt;‘ஏம்பா பில்லு.. எல்லா வூட்லயும் கம்பூட்டர் இருக்குன்னா நீ ஒரு ரீசனு. அதுக்காக உனுக்கு சொர்க்கத்துல இடம் தர்லாம்ன்னு பார்த்தா.. நீ தான் விண்டோ ஸ் கம்னாட்டியையும் கண்டு பிடிச்சிருக்க்கே.. நம்மளாண்ட உன் மேலுகா வந்த சாபம் கன்னா பின்னானு கீது. அதனால உன்னை நரகத்துக்கு தான் அனுப்பணும். எனுக்கு சர்யா தெர்ல.. அதனாலே நீயே டிசைட் பண்ணு உன்கு என்னா வேணும்னு.. ‘ கடவுள் சொன்னார். &lt;br /&gt;&lt;br /&gt;பில்கேட்ஸ் குஷியாய்டாரு. ஆனா அவருக்கு தான் சொர்க்கம் நரகம் எப்படி இருக்கும்ன்னு தெரியாதே. ( விண்டோ ஸ் ஒரு நரகங்கிறதை தவிர ). அதனால கடவுள் கூட்டிட்டு போனாரு. &lt;br /&gt;&lt;br /&gt;முதல்ல நரகம். &lt;br /&gt;&lt;br /&gt;ஆஹா.. அழகான கடற்கரை. அழகா இருக்கே… பில்கேட்ஸ்க்கு குஷி. அந்த பக்கம் பார்த்தா பொண்ணுங்க பீச் சைட்ல துணியை ஈரமாக்கி உடம்ப காயவெச்சிட்டிருக்காங்க. இந்த பக்கம் பார்த்தா பொண்ணுங்க பசங்களும் பொண்ணுங்களும் சேர்ந்து குஜால்ஸ் பண்ணிட்டு இருக்காங்க. உட்டாலக்கடி செவத்த தோலு தான்.. கொஞ்சம் உத்து பார்த்தா… ந்னு வாலி பாட்ட பாடிட்டே பில்லு செம குஷியாய்ட்டாரு. &lt;br /&gt;&lt;br /&gt;ஐயாவுக்கு ரொம்ப திருப்தி. ஆனாலும் நரகமே இப்படி இருக்குன்னா சொர்க்கம் ? &lt;br /&gt;&lt;br /&gt;கடவுள் அவனை சொர்க்கத்துக்கு கூட்டிட்டு போனாரு. &lt;br /&gt;&lt;br /&gt;அங்கே மேகமும், தேவதைகளும், பாட்டும்.. ம்ம்ம்ம் பில் கேட்ஸ் பாத்தாரு. &lt;br /&gt;ம்ம்… நல்லாதேன் இருக்கு ஆனாலும்…நரகம் தான் கும்முன்னு இருக்கு.. &lt;br /&gt;&lt;br /&gt;சரி.. கடவுளே.. நான் நரகத்துக்கே போறேன். பில்கேட்ஸ் வழிஞ்சாரு. கடவுள் அவரை நரகத்துக்கு அனுப்பிட்டாரு, &lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்ச நாள் கழிச்சு கடவுள் நம்ம பில்லு ஐயா எப்படி இருக்காருன்னு பாக்க நரகத்துக்கு போனாரு. &lt;br /&gt;&lt;br /&gt;அங்கே ஒரு குகையில தீய்க்கு நடுவுல நம்ம பில்லு ! ஹீட்டுக்கு நடுவுல கேட்ஸ்னு கடவுள் பாடிட்டே போனா.. கேட்ஸ்க்கு கடுப்பு. &lt;br /&gt;&lt;br /&gt;யோவ் கடவுளே.. என்னவோ காட்டிட்டு இப்படி என்னவோ பண்ணிட்டியேனு கத்துனாரு. கடவுளுக்கு புரியல.. &lt;br /&gt;&lt;br /&gt;இன்னாபா.. இன்னா மேட்டரு.. கடவுள் கேட்டாரு. &lt;br /&gt;&lt;br /&gt;அன்னிக்கு பாத்தப்போ.. பீச் இருந்துச்சி, பீச் ல வாச் பண்ற மாதிரி பிகருங்க இருந்திச்சி, இங்கே வந்து பாத்தா தீ மட்டும் தான் இருக்கு.. நான் ஏமாத்தலாம். கடவுளே ஏமாத்தலாமா.. கேட்ஸ் கத்துனாரு. &lt;br /&gt;&lt;br /&gt;கடவுள் சிரிச்சாரு.. ஓ.. அதைச் சொல்றியா.. அடப்பாவி.. அதைப் பார்த்து தான் இங்கே வரணும்ன்னியா… அது நரகத்தோட ஸ்கிரீன் சேவர் டா !!!&lt;br /&gt;&lt;br /&gt;http://www.muthamilmantram.com/viewtopic.php?t=20504&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7884566-2771871875374979209?l=muthamilmantram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthamilmantram.blogspot.com/feeds/2771871875374979209/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7884566&amp;postID=2771871875374979209' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/2771871875374979209'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/2771871875374979209'/><link rel='alternate' type='text/html' href='http://muthamilmantram.blogspot.com/2007/05/blog-post_05.html' title='சொர்க்கத்தில் பில்கேட்ஸ்! - மாதவன்'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/16215519587221396052</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://img.photobucket.com/albums/v324/welcometofree/bestmtm.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7884566.post-7100385262031608342</id><published>2007-05-04T12:55:00.000+06:00</published><updated>2007-05-04T12:57:34.950+06:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>எறும்பு - வைரமுத்து</title><content type='html'>எறும்புகளே எறும்புகளே&lt;br /&gt;உயிர்த்துளிகளின் ஊர்வலங்களே&lt;br /&gt;பத்துக்கோடி ஆண்டுகள் முன்னே&lt;br /&gt;பூமியில் ஊர்ந்த பூச்சியினமே!&lt;br /&gt;&lt;br /&gt;உலகின் மிகச்சிறிய ஆச்சரியமே!&lt;br /&gt;உங்களோடு பேசவேண்டும்&lt;br /&gt;சிறிதுநேரம் செவி சாய்ப்பீரா?&lt;br /&gt;&lt;br /&gt;நின்று பேசி நேரம் கழிக்க&lt;br /&gt;நாங்கள் ஒன்றும் மனிதர்கள் இல்லை&lt;br /&gt;எது கேட்பதாயினும்&lt;br /&gt;எம்மோடு ஊர்ந்து வாரும்&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு செண்டி மீட்டரில்&lt;br /&gt;ஊற்றி வைத்த உலகமே&lt;br /&gt;அற்ப உயிரென்று&lt;br /&gt;அவலப் பட்டதுண்டா?&lt;br /&gt;&lt;br /&gt;பேதை மனிதரே&lt;br /&gt;மில்லிமீட்டர் அளவிலும்&lt;br /&gt;எம்மினத்தில் உயிருண்டு&lt;br /&gt;தன் எடைபோல ஐம்பது&lt;br /&gt;மடங்கு எறும்பு சுமக்கும்&lt;br /&gt;நீர் சுமப்பீரா?&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் பொழுது போக்கு?&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்வே பொழுது போக்கு&lt;br /&gt;தேடலே விளையாட்டு&lt;br /&gt;ஊர்தலே ஓய்வு&lt;br /&gt;&lt;br /&gt;ஆறுமுதல் பத்து வாரம்&lt;br /&gt;ஆயுள் கொண்ட வாழ்வு&lt;br /&gt;இதில் ஓய்வென்ன ஓய்வு&lt;br /&gt;தலை சாய்வென்ன - சாய்வு&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆயுளுக்கா&lt;br /&gt;இத்தனை பாடு?&lt;br /&gt;&lt;br /&gt;உம்மைப் போல் எமக்கு&lt;br /&gt;ஒற்றை வயிறல்ல&lt;br /&gt;இரட்டை வயிறு&lt;br /&gt;நெரிக்க ஒன்று&lt;br /&gt;சேமிக்க ஒன்று&lt;br /&gt;&lt;br /&gt;செரிக்கும் வயிறு எமக்கு&lt;br /&gt;சேமிக்கும் வயிறு&lt;br /&gt;இன்னோர் எறும்புக்கு&lt;br /&gt;இரண்டு வயிற்றுக்குத்தான்&lt;br /&gt;இத்தனை பாடு.&lt;br /&gt;&lt;br /&gt;இனப் பெருமை பற்றிச்&lt;br /&gt;சிறு குறிப்பு வரைக!&lt;br /&gt;&lt;br /&gt;சிந்து சமவெளிக்கு முற்பட்டது&lt;br /&gt;எங்கள் பொந்து நாகரிகம்&lt;br /&gt;&lt;br /&gt;ராணிக்கென்று அந்தப்புரம்&lt;br /&gt;உழைக்கும் எறும்புகள் வசிப்பறை&lt;br /&gt;இறந்த எறும்பை அடக்கம் செய்ய&lt;br /&gt;இடிபாடில்லாத இடுகாடு&lt;br /&gt;&lt;br /&gt;மாரிகால சேமிப்புக் கிடங்கு&lt;br /&gt;எல்லாம் அமைந்தது எங்கள்&lt;br /&gt;ராஜாங்கம்&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் வாழ்க்கையின்&lt;br /&gt;நீளமான நகல்கள்தான் நீங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;உங்களையே நீங்கள்&lt;br /&gt;வியந்து கொள்வது எப்போது?&lt;br /&gt;&lt;br /&gt;மயிலிறகால் அடித்தாலே&lt;br /&gt;மாய்ந்துவிடும் எங்கள் ஜாதி&lt;br /&gt;மதயானைக்குள் புகுந்து&lt;br /&gt;மாய்த்துவிடும்போது.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் வெறுப்பது எது?&lt;br /&gt;நேசிப்பது எது?&lt;br /&gt;&lt;br /&gt;வெறுப்பது வாசல் தெளிக்கையிலே&lt;br /&gt;வந்து விழும் கடல்களை&lt;br /&gt;நேசிப்பது அரிசிமா&lt;br /&gt;கோலமிடும் அண்ணபூரணிகளை&lt;br /&gt;&lt;br /&gt;சேமிக்கும் தானியங்கள்&lt;br /&gt;முளை கொண்டால் எது செய்வீர்?&lt;br /&gt;&lt;br /&gt;கவரும்போதே தானியங்களுக்கு&lt;br /&gt;கருத்தடை செய்து விடுகிறோம்&lt;br /&gt;முளை களைந்த மணிகள்&lt;br /&gt;முளைப்பதில்லை மனிதா!&lt;br /&gt;&lt;br /&gt;உங்களால் மறக்க முடியாதது?&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் அகிம்சைப் போராட்ட&lt;br /&gt;ஊர்வலத்தில் எங்கள் நான்காயிரம்&lt;br /&gt;முன்னோர்கள் நசுங்கிச் செத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்வரும் எறும்புகளை&lt;br /&gt;மூக்கோடு மூக்குரசும் காரணம்?&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் காலணி எறும்புதானா&lt;br /&gt;வென மோப்பம் பிடிக்கும் முயற்சி&lt;br /&gt;எம்மவர் என்றால் வழி விடுவோம்&lt;br /&gt;அந்நியர் என்றால் தலையிடுவோம்&lt;br /&gt;&lt;br /&gt;சிறிய மூர்த்திகளே&lt;br /&gt;உங்கள் பெரிய கீர்த்தி எது?&lt;br /&gt;&lt;br /&gt;அமேசான் காட்டு ராணுவ&lt;br /&gt;எறும்புகள் யானை வழியில்&lt;br /&gt;இறந்து கிடந்தால் முழு&lt;br /&gt;யானையைத் தின்றே முன்னேறும்&lt;br /&gt;மறவாதீர் எறும்புகளின்&lt;br /&gt;வயிறுகள் யானைகளின்&lt;br /&gt;கல்லறைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;சாத்வீகம்தானே உங்கள்&lt;br /&gt;வாழ்க்கை முறை?&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை எங்களுக்குள்ளும்&lt;br /&gt;வழிப்பறி உண்டு&lt;br /&gt;எங்களுக்குள்ளும் யுத்தங்கள் உண்டு&lt;br /&gt;&lt;br /&gt;அபாயம் அறிவிக்க&lt;br /&gt;சத்தம் எழுப்பி&lt;br /&gt;சைகை செய்வதுண்டு&lt;br /&gt;&lt;br /&gt;எறும்புகளின் சத்தமா?&lt;br /&gt;இதுவரை கேட்டதில்லையே!&lt;br /&gt;&lt;br /&gt;மனிதர்கள் செவிடாயிருந்தால்&lt;br /&gt;எறும்புகள்&lt;br /&gt;என்ன செய்யும்?&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி எறும்பே நன்றி!&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் சொல்ல வேண்டும்&lt;br /&gt;நன்றி உமக்கு&lt;br /&gt;ஏன்? எதற்கு?&lt;br /&gt;&lt;br /&gt;காணாத காமதேனுவைப் பற்றி&lt;br /&gt;இல்லாத ஆதிசேஷன் பற்றி&lt;br /&gt;பொய்யில் நனைந்த புராணம்&lt;br /&gt;வளர்க்கும் நீங்கள்&lt;br /&gt;இருக்கும் எங்களைப் பற்றி&lt;br /&gt;இன்றேனும் எண்ணிப் பார்த்தீரே&lt;br /&gt;அதற்கு!&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் வைரமுத்து கவிதைகள்:-&lt;br /&gt;&lt;a href="http://www.muthamilmantram.com/viewtopic.php?p=249539#249539"&gt;http://www.muthamilmantram.com/viewtopic.php?p=249539#249539&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7884566-7100385262031608342?l=muthamilmantram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthamilmantram.blogspot.com/feeds/7100385262031608342/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7884566&amp;postID=7100385262031608342' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/7100385262031608342'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/7100385262031608342'/><link rel='alternate' type='text/html' href='http://muthamilmantram.blogspot.com/2007/05/blog-post.html' title='எறும்பு - வைரமுத்து'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/16215519587221396052</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://img.photobucket.com/albums/v324/welcometofree/bestmtm.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7884566.post-120405652097421806</id><published>2007-03-20T06:01:00.000+06:00</published><updated>2007-03-20T06:05:06.987+06:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>சிங்கப்பூர் கவிதையிலிருந்து.... பட்டினத்தார்</title><content type='html'>1. &lt;br /&gt;' ஓவர் ஸ்டேயில் இருந்த &lt;br /&gt;வீரமுத்து மவன் பாண்டியனுக்கு ரோத்தான் அடி &lt;br /&gt;பாளம் பாளமா இறங்கியிருக்குதாம்.... &lt;br /&gt;பய குளிக்கையில்கூட சட்டையைக் களட்டுறதில்லையாம்.... &lt;br /&gt;என்ன செய்ய என்னய்யனுக்கு அஞ்சு &lt;br /&gt;போண்ணாச்சு கல்யாணம் காத்தி, &lt;br /&gt;புள்ள பொறவு பாக்கணுமில்லே.... &lt;br /&gt;வயல்ல பம்பு செட்டு மாத்தணும்; &lt;br /&gt;வீடு பழுதுபாக்கணும் &lt;br /&gt;போனது லீவுக்குப் போனது &lt;br /&gt;பொட்டையாப் போச்சு. &lt;br /&gt;பத்து வெள்ளினாலும் &lt;br /&gt;ஊர்ப் பணத்துல இருநூத்தம்பது....... &lt;br /&gt;பயலையாவது பெருமாக் கோயில்ல &lt;br /&gt;கூடுற பட்டணத்து பயலுவ மாதிரி &lt;br /&gt;கம்பூட்டர் படிக்க வைக்கோணும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆருடம் சொன்னவனை நம்பி &lt;br /&gt;அனைத்தையும் &lt;br /&gt;அடகு வைத்து இங்கு வந்து &lt;br /&gt;சேர்ந்தவனுக்கு &lt;br /&gt;ரோடில் &lt;br /&gt;தார் போடும் வேலை.... &lt;br /&gt;&lt;br /&gt;**சிங்கப்பூர் தமிழன் ஒருவனைப் பற்றிய ஒரு கவிதை.......... &lt;br /&gt;&lt;br /&gt;3. &lt;br /&gt;&lt;br /&gt;அன்றொரு நாள் &lt;br /&gt;ஹாய் சொன்னவனுக்கு &lt;br /&gt;கழுத்து நீட்டினாள் &lt;br /&gt;........................... &lt;br /&gt;........................... &lt;br /&gt;இப்போதும் இவள் &lt;br /&gt;தேடுவது &lt;br /&gt;அன்றொரு நாள் &lt;br /&gt;ஹாய் சொன்ன &lt;br /&gt;அவனை..... &lt;br /&gt;&lt;br /&gt;** சுஜாதா அவர்களின் கற்றதும் பெற்றதும் புத்தகத்திலிருந்து........... &lt;br /&gt;_________________&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7884566-120405652097421806?l=muthamilmantram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthamilmantram.blogspot.com/feeds/120405652097421806/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7884566&amp;postID=120405652097421806' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/120405652097421806'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/120405652097421806'/><link rel='alternate' type='text/html' href='http://muthamilmantram.blogspot.com/2007/03/blog-post_20.html' title='சிங்கப்பூர் கவிதையிலிருந்து.... பட்டினத்தார்'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/16215519587221396052</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://img.photobucket.com/albums/v324/welcometofree/bestmtm.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7884566.post-1108152244545278442</id><published>2007-03-19T12:18:00.000+06:00</published><updated>2007-03-19T15:11:14.135+06:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><title type='text'>நான்சென்ஸ் நாற்பது - மாதவன்</title><content type='html'>நான்சென்ஸ் ஆளாளுக்கு வித்தியாசப்படலாம். எனக்கு சில விசயங்கள் நான்சென்ஸ்ஸாகவே(Nonsense) படுவதுண்டு. குறுகிய நேரத்தில் நான்சென்ஸை நாற்பதாக பட்டியலிட முடிந்தது.’நான்சென்ஸ் நாற்பது’ என்பது ‘நா நா’வென எதுகை மோனையாக அமைந்ததால் நாற்பதோடு நிறுத்திக்கொள்கிறேன்.உங் களுக்கு நான்சென்ஸாக படுபவனவற்றை பின்னூட்டமாக விடுங்கள். நான்சென்ஸ் நாற்பது இப்படியாக…&lt;br /&gt;&lt;br /&gt;1.sunday-க்கு பிறகு வரும் Monday&lt;br /&gt;2.அலுவலக மீட்டிங்கில் இண்ட்ஸ்ரடிங்காக மூக்கு நோண்டிக் கொண்டிருக்கும் சக ஊழியன்&lt;br /&gt;3.பெஞ்சு(சேர்) தேய்க்காத அரசு அதிகாரி&lt;br /&gt;4.சிரிக்க வைக்காத குண்டு மனிதர்கள்&lt;br /&gt;5.சமத்து குழந்தை&lt;br /&gt;6.பிய்ந்து போன பழைய செருப்பும் கடிக்காத புதுசெருப்பும்&lt;br /&gt;7.60 வயதில் ஜிலு ஜிலு அரை டவுசருடன் வாக்கிங் போகும் தாத்தா&lt;br /&gt;8.சென்னைக்கு டிராபிஃக் சிக்னல்&lt;br /&gt;9.பஸ் ஸ்டாப்பில் நிற்கும் மாநகரப்பேருந்து&lt;br /&gt;10.குழியில்லாத சென்னை சாலைகள்&lt;br /&gt;11.‘அவுட்சோர்சிங்’ மென்பொருள்துறை&lt;br /&gt;12.ஜோக் அடித்து வலுக்கட்டாயமாக சிரிக்க வைக்கும் மேலதிகாரி&lt;br /&gt;13.அரசியல் இல்லா அலுவலகம்&lt;br /&gt;14.கொள்கையுள்ள அரசியல் கட்சி&lt;br /&gt;15.சீரியல் பார்க்காத குடும்ப பெண்&lt;br /&gt;16.ஏழைக்கு கல்வி&lt;br /&gt;17.செக்ஸ் படம் பார்க்காத மாணவன்&lt;br /&gt;18.கோவிலும் கோவில் பிச்சைக்காரனும்&lt;br /&gt;19.சோறு உண்ணும் ஏழை&lt;br /&gt;20.பெண் சுகம் காணாத துறவி&lt;br /&gt;21.திருடாத பணிப்பெண்&lt;br /&gt;22.சிக்கனாகமல்(chicken) இயற்கையாக சாகும் கோழி&lt;br /&gt;23.தொப்பையில்லாத போலீஸ்&lt;br /&gt;24.ISO 9001:2000 தரச்சான்று பெற்றிருக்கும் காவல்நிலையம்&lt;br /&gt;25.NRI-இன் இந்திய கவலை&lt;br /&gt;26.scehdule படி முடியும் பிராஜக்ட்&lt;br /&gt;27.மூத்திரமோ, தண்ணீரோ தெளிக்கப்பட்டிருக்காத வெஸ்டர்ன் 28.&lt;br /&gt;28.டாஸ்மாக்கில் டீ குடிக்கும் டாஸ்மாக் ஊழியன்&lt;br /&gt;29.நாட்டை திருத்த நினைக்கும் சினிமாக்காரன் கனவு&lt;br /&gt;30.இருமல் வராத கிழடு கட்டைகள்&lt;br /&gt;31.சண்டைப்போடாத மனைவி&lt;br /&gt;32.வீட்டுக்கு வந்த நண்பருடன் பேசாமல் டீவியில் லயித்திருப்பது&lt;br /&gt;33.வீட்டுக்கு வந்திருப்போர் முன் சிறு குழந்தையை ‘அதைச் செய்’, ‘இதைச் செய்’ என்று வன்முறையில் ஆழ்த்துவது&lt;br /&gt;34.சண்டையில்லா இலக்கியமும் கையில் துப்பட்ட சுற்றாத குட்டி ரேவதியும்&lt;br /&gt;35.சினிமாவில்/டிவியில் நுழைய மாட்டேன் என்று அடம்பிடிக்கும் எழுத்தாளன்&lt;br /&gt;36.எழுதியதை புத்தகமாக விற்கத்துணியாத ஏழை சோனகிரி எழுத்தாளன்&lt;br /&gt;37.பெண்ணுரிமையைப் போற்றும் சினிமா கவிஞன்/எழுத்து வியாபாரி&lt;br /&gt;38.ஆபிஸில் முத்தமிழ்மன்றம் படிக்காமல் வேலையில் லயித்திருப்பது&lt;br /&gt;39.நான்சென்ஸை தொகுக்கும் நான்&lt;br /&gt;40.மத்த பதிவுகளையெல்லாம் விட்டு விட்டு இந்த பதிவை படிப்பது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.muthamilmantram.com/viewtopic.php?t=19445"&gt;முத்தமிழ்மன்றம்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://halwacity.com/blogs/?p=236"&gt;இதே போன்ற பதிவு&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7884566-1108152244545278442?l=muthamilmantram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthamilmantram.blogspot.com/feeds/1108152244545278442/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7884566&amp;postID=1108152244545278442' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/1108152244545278442'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/1108152244545278442'/><link rel='alternate' type='text/html' href='http://muthamilmantram.blogspot.com/2007/03/blog-post.html' title='நான்சென்ஸ் நாற்பது - மாதவன்'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/16215519587221396052</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://img.photobucket.com/albums/v324/welcometofree/bestmtm.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7884566.post-1412631094670954981</id><published>2007-02-17T11:20:00.000+06:00</published><updated>2007-02-17T11:28:02.227+06:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சாகரன்'/><title type='text'>சாகரனுக்கு கவியஞ்சலிகள் - தம்பியடா நீ - மூர்த்தி</title><content type='html'>&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7884566-1412631094670954981?l=muthamilmantram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthamilmantram.blogspot.com/feeds/1412631094670954981/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7884566&amp;postID=1412631094670954981' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/1412631094670954981'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/1412631094670954981'/><link rel='alternate' type='text/html' href='http://muthamilmantram.blogspot.com/2007/02/blog-post_17.html' title='சாகரனுக்கு கவியஞ்சலிகள் - தம்பியடா நீ - மூர்த்தி'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7884566.post-4297388091235626758</id><published>2007-02-14T10:46:00.002+06:00</published><updated>2007-02-14T11:00:11.262+06:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சாகரன்'/><title type='text'>மாமனிதர் சாகரனுக்கு மறுபிறப்பு கொடு இறைவா! - ஷீநிசி</title><content type='html'>&lt;strong&gt;நான் உன்னை&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அறிந்த நிமிடங்கள் -நீ&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இறந்த நிமிடங்களாயிருந்தது..&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சாதிக்க விரும்பினாய்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;என்று அறிந்தேன் -உன்மேல்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எங்களின் அன்பு எத்துணையென்று&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சோதிக்கவும் விரும்பினாயோ?!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எத்தனை கனவுகள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;புதைந்துக்கொண்டிருந்தது உன்னுள்!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அத்தனை கனவுகளும்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;புதைந்திடுமோ இனி மண்னுள்?!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நேசிக்கும் நண்பர்களை கொடுத்தாய்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அவருக்கு! -நல்லது இறைவா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சுவாசிக்கும் நாட்களை குறைத்தாயே?!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நல்லதா இறைவா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சார்ந்த உறவுகளின் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;விழிகளை கொஞ்சம் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;துடைத்துவிடு....&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சாகரனை இன்றைக்கே&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வேறொரு உயிரில்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;படைத்துவிடு....&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;- கண்ணீருடன் வேண்டுவது ஷீநிசி&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7884566-4297388091235626758?l=muthamilmantram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthamilmantram.blogspot.com/feeds/4297388091235626758/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7884566&amp;postID=4297388091235626758' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/4297388091235626758'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/4297388091235626758'/><link rel='alternate' type='text/html' href='http://muthamilmantram.blogspot.com/2007/02/blog-post_797.html' title='மாமனிதர் சாகரனுக்கு மறுபிறப்பு கொடு இறைவா! - ஷீநிசி'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7884566.post-1554539658571667876</id><published>2007-02-14T10:46:00.001+06:00</published><updated>2007-02-14T10:57:07.245+06:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சாகரன்'/><title type='text'>மாமனிதர் சாகரனுக்கு இரங்கல்பா - வெங்கடரங்கன்</title><content type='html'>&lt;strong&gt;உனக்காக வாழ்த்துப்பா பாட&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உள்ளம் நினைக்கையில்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இரங்கற்பாவிற்கு ஏன் துணை நின்றாய்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அனைவரின் நலனுக்காய்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;துடிதுடித்த உன் இதயம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உனது நலன் மறந்ததேன்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சாதிக்கத் துடித்த நீ&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சாதித்து விட்டாய் என&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;முடித்துக் கொண்டதோ வாழ்வு?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உனது எண்ணத்தோடு&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கலந்து கொள்ளாமல்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஊமையாகிப் போன வார்த்தைகள்!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மரண செய்திக் கண்டதும்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நிச்சயப்படுத்திக் கொள்ள முடியாத&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உனது இளம் வயது!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சாகரனே &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;முத்தமிழ்மன்றத்தின் தூணே&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நீயா இறந்து போனாய்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உனது கனவுகள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உன்னைக் காணாது&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கலங்கித் தவிக்கின்றன&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;முகம் அறியாத உறவுகளிடம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இனம் புரியாத நட்பு&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கொண்டாட வேண்டும் திரும்பிவா!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;- கண்ணீருடன் வெங்கடரங்கன்&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7884566-1554539658571667876?l=muthamilmantram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthamilmantram.blogspot.com/feeds/1554539658571667876/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7884566&amp;postID=1554539658571667876' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/1554539658571667876'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/1554539658571667876'/><link rel='alternate' type='text/html' href='http://muthamilmantram.blogspot.com/2007/02/blog-post_8627.html' title='மாமனிதர் சாகரனுக்கு இரங்கல்பா - வெங்கடரங்கன்'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7884566.post-2189549954397615171</id><published>2007-02-14T10:46:00.000+06:00</published><updated>2007-02-14T10:53:01.019+06:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சாகரன்'/><title type='text'>மாமனிதரின் புகழ் ஓங்குக - கிரியின் கவியஞ்சலி</title><content type='html'>&lt;strong&gt;&lt;u&gt;மன்ற மாமனிதரின் புகழ் ஓங்குக.&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எல்லை அற்றுப்பரந்து விரிந்த கடல்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இல்லை கள்ளம் வெள்ளை மனமதில்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;முதிர்ந்த பேச்சில் வயது தெரியாது&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உதிர்ந்த மலரின் வாசம் மறையாது&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சாகரன் எங்கள் மன்றத் தூண்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சாக வயதில்லா எங்கள் தோழனை&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வேகமாய் காலன் இடித்த தூண்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆகமம் அடுக்கா பழி இதுகாண்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆழியாய் பெயர் வைத்த மாமன்னனே&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆழிப் பேரலையாய் காலன் அழைக்க&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஊழிப் புயலாய் இதயம் வெம்பியழ&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;யாழில் சோககீதம் இசைக்கச் செய்தாயே&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அஞ்சலி செய்யும் வயதா உனக்கு?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நெஞ்சு பொறுக்கு தில்லையே மனம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மிஞ்சும் எதிர் காலம் யாதென்றே&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நஞ்சு அருந்திய உடலாய் பதறுதே&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மன்றத்தின் தெய்வமாய் உயர்ந்திட்ட சாகரன்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தென்றலாய் நண்பர் மனமதில் உறையட்டும்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இன்றுநாம் சூளுரைப்போம் உயிர் கொடுத்தும்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;என்றும் இம்மாமன்ற மாறாப்புகழ் காக்க.&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7884566-2189549954397615171?l=muthamilmantram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthamilmantram.blogspot.com/feeds/2189549954397615171/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7884566&amp;postID=2189549954397615171' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/2189549954397615171'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/2189549954397615171'/><link rel='alternate' type='text/html' href='http://muthamilmantram.blogspot.com/2007/02/blog-post_14.html' title='மாமனிதரின் புகழ் ஓங்குக - கிரியின் கவியஞ்சலி'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7884566.post-4894755450841892412</id><published>2007-02-13T11:28:00.001+06:00</published><updated>2007-02-13T11:47:48.717+06:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சாகரன்'/><title type='text'>அண்ணன் சாகரனுக்கு அழுத விழியோடு தங்கையின் இரங்கல்பா</title><content type='html'>&lt;strong&gt;&lt;u&gt;அழுத விழியோடு தங்கையின் இரங்கல்பா...  இலங்கை பெண்&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சாதனையாளன் சாகரன் அண்ணாவே&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சாதாரனமானவன் அல்ல நீங்கள் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சாதிக்க பிறந்த தமிழ்மகனல்லவா&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சாதனைகளும் படைத்தீர்கள் அண்ணா&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தமிழனாக பிறந்தீர் அண்ணாவே&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தமிழுக்காக உழைத்தீரே அண்ணாவே&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தமிழ் வாழ ஆசை கொண்டீரே அண்ணாவே&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தமிழ்த்தாய் உம்மை என்றும் மறவாள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கதிகலங்கி போனேன் நான் அண்ணாவே&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;காலையிலே வந்த முதல் நிமிடமே&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;காத்திருப்பில்லாமல் மன்றத்தினை திறப்பேன்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;காலன் கொடிய செய்தியல்லவா கண்டேன் நான் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;விதியினை வெல்ல முடியாத வாழ்விலே&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;விளையாட்டாகியதோ உள்ளங்கள் இன்று&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;விதி விளையாட்டிலே உம்மை இழந்திட்டோமே&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;விசர் பிடித்துவிட போகின்றது அண்ணாவே&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மூன்று நாட்களுக்கு பின் மன்றத்தினை காண&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மும்மரமாக வந்தேன் நான் இன்றைய தினம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;முத்தாய் பல முத்துக்கள் கொட்டிகிடக்குமே &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;முகம் மலரவில்லை முதல் பதிவினை கண்டு&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அன்பு அண்ணாவே அழுகின்றேன் நான் இங்கே&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அறிமுகம் இல்லாத உறவாகினும் அண்ணாவே&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அன்புள்ளம் உங்கள் உள்ளம் என்றோ என் மனதில்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆணித்தரமாக பதிந்துவிட்டது அண்ணாவே&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இழந்துவிட்டோமே உம்மை நாம் அண்ணாவே&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இழக்க முடியாத இழப்பினை எண்ணி ஏங்குகின்றோம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இழந்த உயிரை மீண்டும் பெற ஒரு வரம் கிடைத்தால்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இனிய அண்ணாவே உங்களின் உயிரை கேட்டெடுப்பேன்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;துக்கங்கள் என் வாழ்வில் புதிதில்லை அண்ணாவே&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;துவண்டே பழகியும் போனது அண்ணாவே&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;துவழுகின்றேன் நானிங்கு உங்களின் இழப்பாலே&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;துக்கத்தை ஆற்ற முடியாமல் தவிக்கின்றேன் தனிமையிலே&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இந்தியாவில் இருந்திருந்தால் நேரடியாக வந்திருப்பேன்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இருக்கும் இடமோ கடல் தாண்டிய இடமாச்சே அண்ணா&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இங்கிருந்தே தேம்பி அழுகின்றேன் என் அண்ணாவே &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இறுதி நிகழ்வில் கூட கலந்து கண்ணீர் விடமுடியாமலே&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எங்கிருந்தோ வந்தோம் நாம் எல்லோரும் அண்ணாவே&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எதிர்பார்புகள் இல்லாமல் சந்தித்தோம் அண்ணாவே&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஏனோ இறைவனுக்கும் பொறுக்கவில்லை அண்ணாவே&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எங்களின் இன்ப உறவு பிணைப்பினை அண்ணாவே&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தங்களின் ஆத்மா சாந்தியடையவே வேண்டி அண்ணாவே&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தாமதமாக என்றாலும் தரணி முழுவதும் நாம் சொல்வோம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தந்தீரே உன்னத சேவை எம் மன்றத்துக்கு நீவீர் என்றுமே&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தரணி முழுவதும் வாழும் உங்களின் உயிர் எம் மனதிலே&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;விக்கித்து போய் நிக்கின்றேன் நானிங்கே அண்ணாவே&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;விசனமாக இருக்கின்றது கடவுளின் மேல் அண்ணாவே&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;விடியற்காலையிலே விழி பிதுங்கி போனேன் அண்ணாவே&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;விடியதா இரவுகளில் எத்தனை கனவுகளின் கோலங்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வேண்டுகின்றேன் இறைவனின் திருப்பாதத்திலே அண்ணாவே&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வேதனையில் நிக்கும் உங்கள் குடும்பத்தினருக்காவே அண்ணாவே&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வேற்று பிறப்பில் அதே கல்யானாக பிறந்திடுங்கள் அண்ணாவே&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வேதனைகள் தாங்காத என் உள்ளம் என்றுமே வேதனையிலே....&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அண்ணாவே ஆணிவேராக இருந்த அண்ணாவே உங்களின் ஆத்மா சாந்தியடைய &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சிறியவள் உங்கள் தங்கை இறைவனிடம் மன்றாடுகின்றேன் உங்களின்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;குடும்பத்தினரையும் ஆறுதல் படுத்தனும் இறைவன் இரக்கமில்ல்லாமல் செய்த &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;செயலினால் பரிதவிக்கின்றோம் இங்கு நாம் எல்லோருமே....&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சாகரன் அண்ணாவுக்கு கண்ணீர் அஞ்சலிகள்...&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7884566-4894755450841892412?l=muthamilmantram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthamilmantram.blogspot.com/feeds/4894755450841892412/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7884566&amp;postID=4894755450841892412' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/4894755450841892412'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/4894755450841892412'/><link rel='alternate' type='text/html' href='http://muthamilmantram.blogspot.com/2007/02/blog-post_4910.html' title='அண்ணன் சாகரனுக்கு அழுத விழியோடு தங்கையின் இரங்கல்பா'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7884566.post-2419598160131215687</id><published>2007-02-13T11:28:00.000+06:00</published><updated>2007-02-13T08:06:12.495+06:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சாகரன்'/><title type='text'>சாகாவரம் பெற்ற சாகரனுக்கு காவியனின் கவியஞ்சலிகள்</title><content type='html'>எங்கள் பிரம்மா சாகரன் அவர்களின் உடல் வேண்டும் என்றால் எங்களை விட்டு போயிருக்கலாம், அவர் மூச்சு, அவர் உயிர், அவர் திறமைகள் அனைத்தும் என்றும் இவ்வுலகில் நிலைத்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;முத்தமிழ் மன்றம், தேன்கூடு, பாலகுமாரன், துவக்கு, இன்னும் பல்வேறு தளங்களை படைத்த பிரம்மாவுக்கு எங்கள் கவியஞ்சலிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;----------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt; &lt;u&gt;காவியனின் கவியஞ்சலி&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சாகரனே...&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இணைய உலகின் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இணையில்லா சாதனையாளனே&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எங்கே சென்றாய் எமை விட்டு..&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பட்டு பூச்சியாய்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உனை வட்டமிட்ட&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சின்ன சிட்டு மகளை விட்டு &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எட்ட ஏன் சென்றாய்....&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;விம்மி விம்மி &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அழுது துடிக்கும் உன் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அன்பு மனையாள் விட்டு &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எட்ட ஏன் சென்றிட்டாய்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இனிய நண்பன் உனக்கு &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இதய நோய் தந்திட்ட அந்த&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இறைவனுக்கு இரக்கமில்லையோ&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நண்பா...&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தமிழ் மணக்கும் இணையங்கள் மேல்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இடி விழுந்து போயிற்று&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;முத்தமிழ் மன்றம் இன்று&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;முகாரியே பாடுது...&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தமிழ்த் தாய் முக்குளித்து &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எடுத்த எங்கள் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;முத்து சிப்பியே...&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உனை நான் பார்த்தறியேன்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இரு தினம் முன்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இணயத்தில் படித்தேன்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தமிழ் வளர்க்க நீ &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தாயாய் உழைத்ததும் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;முத்தமிழ் மன்றுக்கு நீ &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தகப்பன் ஆனதும்...&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நேற்றைய பொழுது நீ &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மடிந்திட்ட செய்தி கேட்டு &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;என் தலை &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மேல் இடி விழுந்து போயிற்று&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மூச்சு முட்டிப் போனது &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இதயத்து இரத்தம் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கண் வழியே கண்ணிராய் ஓடிற்று&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கதி கலங்கி நிற்குதய்யா இணையம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இதய வலி உனை &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இறைவனடி சேர்த்தது கேட்டு &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இதயங்களில் இரத்தக் கண்ணீர் வடிகிறது&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இறைவா&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இனி ஒரு கல்யாணை எமக்கு &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கனவிலேனும் தருவாயா?...&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சாகரன் என்ற சாதனையாளனே&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நீ.....&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சாகா வரம் பெற்றுவிட்டாய்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இணையங்கள் மூலம் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எம் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இதயங்கள் வென்றுவிட்டாய்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மண் விட்டு போகலாம் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உன் உடல்....&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எம் மனம் விட்டு போகாது &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உம் உயிர்....&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எம் நினைவில் என்றும் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நீர் வாழ்வீர்.....&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7884566-2419598160131215687?l=muthamilmantram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthamilmantram.blogspot.com/feeds/2419598160131215687/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7884566&amp;postID=2419598160131215687' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/2419598160131215687'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/2419598160131215687'/><link rel='alternate' type='text/html' href='http://muthamilmantram.blogspot.com/2007/02/blog-post_13.html' title='சாகாவரம் பெற்ற சாகரனுக்கு காவியனின் கவியஞ்சலிகள்'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7884566.post-117124444130827513</id><published>2007-02-12T07:32:00.000+06:00</published><updated>2007-02-13T01:10:44.876+06:00</updated><title type='text'>கண்ணீர் அஞ்சலி!</title><content type='html'>&lt;img src="http://www.filespace.org/Greth/candle.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரியாத் தமிழ்ச் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும், எழுத்துக் கூடத்தின் ஒருங்கிணைப்பாளரும், தேன்கூடு திரட்டியை தோற்றுவித்தவரும், முத்தமிழ்மன்றத்தின் நிர்வாகியுமான திரு. கல்யாண்(சாகரன்) அவர்கள் நேற்று மாரடைப்பால் மரணமடைந்து விட்டார். அவரது உடல் ஒபய்த் ஹாஸ்பிடலில் தற்சமயம் உள்ளது என்பதனை மிகவும் துயரத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்!&lt;br /&gt;&lt;br /&gt;முத்தமிழ்மன்றம் உருவாகக் காரணமாக இருந்த முக்கிய தூணை இழந்து தவிக்கிறோம். 1978ல் பிறந்தவர். 28 வயது முடிந்து இன்னும் 29கூட ஆகாதவர். இந்த வயது இறக்கும் வயதா???&lt;br /&gt;&lt;br /&gt;இதுபோன்ற கொடுஞ்செயல்களைப் பார்க்கும்போது இறைவன் இருக்கின்றானா என்று கேட்கத் தோன்றுகிறது. மனைவி, மூன்று வயது குட்டிப் பாப்பா வர்ணிகா, அப்பா, அம்மா, தங்கை ஆகியோரைப் பிரித்து அவரை அழைத்துச் சென்ற காலனை நினைத்தால்... கோபமாக வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கல்யாணின் பிரிவால் வாடும் அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். கல்யாணின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைத் தொழுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரிவால் வாடும்,&lt;br /&gt;முத்தமிழ்மன்ற நண்பர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்புடைய சுட்டிகள்:-&lt;br /&gt;&lt;br /&gt;1.&lt;a href="http://groups.yahoo.com/group/riyadhtamilsangam/message/1168"&gt;ரியாத் தமிழ்ச்சங்கம்&lt;/a&gt;&lt;br /&gt;2.&lt;a href="http://mathy.kandasamy.net/musings/2007/02/11/638"&gt;சந்திரமதி கந்தசாமி&lt;/a&gt;&lt;br /&gt;3.&lt;a href="http://thulasidhalam.blogspot.com/2007/02/blog-post_12.html"&gt;துளசிகோபால்&lt;/a&gt;&lt;br /&gt;4.&lt;a href="http://pithatralgal.blogspot.com/2007/02/192.html"&gt;நாமக்கல் சிபி&lt;/a&gt;&lt;br /&gt;5.&lt;a href="http://blog.thamizmanam.com/archives/84"&gt;தமிழ்மணம்&lt;/a&gt;&lt;br /&gt;6.&lt;a href="http://valai.blogspirit.com/archive/2007/02/11/kalyan.html"&gt;சிந்தாநதி&lt;/a&gt;&lt;br /&gt;7.&lt;a href="http://www.muthamilmantram.com/showthread.php?t=18585"&gt;முத்தமிழ்மன்றம்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7884566-117124444130827513?l=muthamilmantram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthamilmantram.blogspot.com/feeds/117124444130827513/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7884566&amp;postID=117124444130827513' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/117124444130827513'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/117124444130827513'/><link rel='alternate' type='text/html' href='http://muthamilmantram.blogspot.com/2007/02/blog-post.html' title='கண்ணீர் அஞ்சலி!'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/16215519587221396052</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://img.photobucket.com/albums/v324/welcometofree/bestmtm.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7884566.post-116668724075755335</id><published>2006-12-26T12:43:00.000+06:00</published><updated>2006-12-26T13:52:36.383+06:00</updated><title type='text'>என்னை ஜெயிக்க வையுங்கள்!- சக்தி பரஞ்சோதி</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;இது ஒரு மீள்பதிவு:-&lt;/span&gt;&lt;/strong&gt; சக்தி அவர்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் முன்னணியில் இருக்கிறார். இப்பதிவைப் படிக்கும் நண்பர்கள் அனைவரும் சக்திக்கே 47ம் எண்ணில் வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.indiaparenting.com/funtime/babyphotos2/2006dec4b/sakthi.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;சக்தி சொல்கிறார்:-&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தாத்தா, பாட்டி, மாமா, அத்தை, அண்ணா, அக்கா, அண்ணி, சித்தப்பா, சித்தி, பெரியப்பா, பெரியம்மா மற்றும் அனைவரும் வாங்க, வாங்க. எனக்கு ஓட்டு போடுங்க. ஜெயிக்க வையுங்கள். நீங்க ஓட்டு போட்டால் மட்டும் போதாது, எல்லோரையும் ஓட்டு போட வையுங்க. உங்களை நம்பி தான் களத்தில் இறங்கி இருக்கேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.indiaparenting.com/funtime/babyphotos2/2006dec4b_main.shtml"&gt;http://www.indiaparenting.com/funtime/babyphotos2/2006dec4b_main.shtml&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;47-ம் எண் என்னுடையது. மறந்து விடாதீங்க, மறந்தும் இருந்து விடாதீங்க. என் அப்பா யார்னு தெரியும் இல்லே? &lt;a href="http://siruvarpoonga.blogspot.com/"&gt;சிறுவர் பூங்கா&lt;/a&gt; புகழ் பரஞ்சோதிதான்!&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;சக்தி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7884566-116668724075755335?l=muthamilmantram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthamilmantram.blogspot.com/feeds/116668724075755335/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7884566&amp;postID=116668724075755335' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/116668724075755335'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/116668724075755335'/><link rel='alternate' type='text/html' href='http://muthamilmantram.blogspot.com/2006/12/blog-post_26.html' title='என்னை ஜெயிக்க வையுங்கள்!- சக்தி பரஞ்சோதி'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/16215519587221396052</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://img.photobucket.com/albums/v324/welcometofree/bestmtm.gif'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7884566.post-116589781353982955</id><published>2006-12-12T10:24:00.000+06:00</published><updated>2006-12-12T10:37:35.926+06:00</updated><title type='text'>சிநேகிதாவுக்கு வாக்களியுங்கள்!</title><content type='html'>நண்பர்களே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.indiaparenting.com/funtime/babyphotos2/2006dec2b/snehitha.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.indiaparenting.com/funtime/babyphotos2/2006dec2b_main.shtml"&gt;http://www.indiaparenting.com/funtime/babyphotos2/2006dec2b_main.shtml&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய நண்பர் முரளிமோகனின் அருமை புதல்வி ஒரு போட்டியில் கலந்து கொண்டிருக்கிறார், அவருக்கு உங்கள் பொன்னான வாக்கை செலுத்து வெற்றி பெற செய்யுங்கள்.உங்களை நம்பி அவரிடம் சவால் விட்டிருக்கிறேன், கவுத்திப்புடாதீங்க&lt;br /&gt;&lt;br /&gt;போடுங்கய்யா ஓட்டு நம்பர் # 33 சிநேகிதாவை பார்த்து&lt;br /&gt;போடுங்கம்மா ஓட்டு நம்பர் # 33 சிநேகிதாவை பார்த்து&lt;br /&gt;போடுங்கண்ணா ஓட்டு நம்பர் # 33 சிநேகிதாவை பார்த்து&lt;br /&gt;போடுங்க அக்கா ஓட்டு நம்பர் # 33 சிநேகிதாவை பார்த்து&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;பரஞ்சோதி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7884566-116589781353982955?l=muthamilmantram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthamilmantram.blogspot.com/feeds/116589781353982955/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7884566&amp;postID=116589781353982955' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/116589781353982955'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/116589781353982955'/><link rel='alternate' type='text/html' href='http://muthamilmantram.blogspot.com/2006/12/blog-post.html' title='சிநேகிதாவுக்கு வாக்களியுங்கள்!'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/16215519587221396052</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://img.photobucket.com/albums/v324/welcometofree/bestmtm.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7884566.post-116243236337466887</id><published>2006-11-02T07:45:00.000+06:00</published><updated>2007-02-11T20:39:12.096+06:00</updated><title type='text'>ஏன் இந்த பெயர் வந்தது? - மன்னையார்</title><content type='html'>எதற்காக கூப்பிடுகிறோம் என்று தெரியாமலே நாம் பெயர்களை அழைக்கிறோம். அதிலும் பெயர்களை மொட்டை போட்டு கொச்சையாவும் அழைக்கிறோம். ஏன் இந்த பெயர் வந்தது?&lt;br /&gt;&lt;br /&gt;1. சென்னை - சென்னபசவ நாயக்கன் என்பவன் தான் ஆண்ட பகுதியை 1600 வருடம் வாக்கில் வெறும் 10000 ரூபாய்க்கு கிழக்கிந்திய கம்பனியாரிடம் விற்றுவிட்டாராம். அவர் ஆண்ட பகுதியின் ஞாபகமாய சென்னப் பட்டணம் என்று அழைக்கப்பட்ட இடம் சென்னையாகி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மதராஸ் :- முகமதியர்கள் பலர் இங்கே பள்ளிவாசல்களை நிறுவி தொழுகை நடத்தியபடி இருந்ததால், மதராஸே என்று அழைக்கப்பட்டது பின் நாளில் மெட்ராஸாகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;கோடம்பாக்கம் - கோடா பாக் : குதிரைகளும் அதை வளர்ப்பவர்களும் நிறைந்த பகுதியாய் இருந்த இடம் இன்று கோடம்பாக்கம் ஆகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மாம்பலம்: மாம்லான் எனும் ஆங்கிலேய கலக்டெர் தங்கியிருந்த இடம் இன்று மாம்பலமாகி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மா அம்பலம் :- ஒரு காலத்தில் மிகப் பெரிய சிவாலயம் இங்கிருந்ததாகவும் அந்த ஆலயம் அடங்கிய பகுதி மா அம்பலம் என வழங்கப் பட்டதாம். இன்றைய க்ருஷ்ணவேணி திரையரங்கமே ஒரு கோவில் மிகப் பெரிய திருக்குளம் என்று சொல்லப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சைதாப்பேட்டை: சதயு புரம் : சதயு எனும் மன்னன் 108 சிவாலயங்களை எழுப்பினான். அதில் 108வது சிவாலயம் சதயுபுரத்தில் இருக்கும் திருக்காரணீசன். சதயுபுரம் கூப்பிட வசதியாய் சைதாபேட்டையாகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;கிண்டி:- ப்ருங்கி முனிவர் தன்னுடைய தவக்காலத்தில் பூஜைக்கான கிண்டியைப் பொருத்திய இடம் இன்று கிண்டியாகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;பரங்கிமலை:- ப்ருங்கி முனிவர் வழிபட்ட சிவாலயம் இன்றும் பரங்கி மலையில் இருப்பதாகச் சொல்கிறார்கள். சர்ச்சுக்குள் பழைய கோவிலின் கட்டமைப்புகள் இருப்பாதாகச் சொல்லப்படுகிறது (ஆய்வுக்குரியது).&lt;br /&gt;&lt;br /&gt;சேத்துப்பட்டு: மண்பாண்டம் செய்யும் குயவர்கள் அதற்கான மண்ணை இந்த பகுதியில் சேறு போல் குழைத்து மாட்டு வண்டியில் எடுத்துச் செல்வார்களாம். சேறு குழைத்த இடம் சேற்றுப்பட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;எழுமூர்: இன்றும் சென்னையில் சூர்யோதயம் விழும் முதலிடம் எழுமூர். பூமி மட்டத்தின் மேல் தளத்தில் உள்ளது. சூரியன் எழுமூர் இன்று எழும்பூராகிவிட்டது. இதற்கு சாட்சி, தாஸப்ரகாஷ் அருகிலுள்ள சந்தில் இருக்கும் சிவனுக்கு எழுமீஸ்வரர் என்று பெயர்.திருநாவுக்கரசரால் வைப்புத் தலமாய் பாடப்பட்ட திருத்தலம்.&lt;br /&gt;&lt;br /&gt;ராயபுரம்: பல்லவ மன்னனின் அமைச்சரவையில் இருந்த ராயர்களுக்கு ஒதுக்கப்பட்ட மானியம் ராயர்புரம் இன்று ராயபுரம்.&lt;br /&gt;&lt;br /&gt;சிந்தாதரிப்பேட்டை: சின்ன தறிப் பேட்டை : சிறிய அள்விலே தறி வைத்துக்கொண்டு குழந்தைகளுக்கான துணிகளை நெய்த பகுதி இன்று சிந்தாதரிப்பேட்டை.&lt;br /&gt;&lt;br /&gt;தண்டையார்பேட்டை : பல்லவ ராஜ்யத்தில் உள்ள கோவில்களின் கைங்கர்ய தொண்டை ப்ரதிபலன் பாராது ஆற்றி வந்த அன்பர்களுக்கான் குடியிருப்புக்கு கொடுக்கப் பட்ட மான்யம் தொண்டையார் புரி இன்று தண்டையார் பேட்டை.&lt;br /&gt;&lt;br /&gt;புரசவாக்கம்: புரசைப் பாக்கம்: புரசுக் காடுகள் மண்டியிருந்த பகுதி இன்று புரசவாக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;அமிஞ்சிகரை: அமைந்தகரை அமர்ந்தகரை: ராமபிரான் (லவகுசர்களிடம் போரிட்டு வெற்றி காண முடியாமல்) அமர்ந்த கூவக்கரை இன்று அமைந்தகரை.&lt;br /&gt;&lt;br /&gt;செங்கல்பட்டு: செங்கழுநீர் பட்டு : செங்கழுநீர் பூக்கள் நிறைந்த குளங்களை நிறைய கொண்ட இடம் இன்று செங்கல்பட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;பெருங்களத்தூர் : பெரிய பெரிய குளங்களை தன்னகத்தே கொண்ட விவசாய பூமி இன்று பெரிய குளத்தூர் இன்று பெருங்களத்தூர்.&lt;br /&gt;&lt;br /&gt;பல்லாவரம்: பல்லவபுரம் பல்லவர்கள் எழுப்பிய சமணப்பள்ளிகள் உள்ள இடம். அனகாபுத்தூர் அருகே இன்றும் காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பூந்தமல்லி : பூந்தண் எனும் அசுரனுக்கு ஈசன் மோக்ஷம் கொடுத்த இடம். மல்லிகாடுகள் அடர்ந்த இடம் இன்று பூந்தமல்லி.&lt;br /&gt;&lt;br /&gt;நந்தம்பாக்கம்: நந்தர்கள் எனும் வம்சத்தவர்கள் ராமனை வரவேற்ற இடம் இன்று நந்தம்பாக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;ராமாபுரம்: ராமபிரான் தங்கிய மாஞ்சோலை இன்று ராமாபுரம்.&lt;br /&gt;&lt;br /&gt;போரூர்: முருகப்பெருமான் சூரஸம்ஹாரத்திற்கு ஆயுதம் எடுத்த இடம் இன்று போரூர்.&lt;br /&gt;&lt;br /&gt;கோவூர்: கோ- காமதேனு பூசித்த சிவாலயம் இன்று கோவூர்.&lt;br /&gt;&lt;br /&gt;குன்றத்தூர்: குன்றுகள் நிறைந்த ஊர் (சீக்கிரம் போய் பாருங்க... ஏன்னா மல முழுங்கிங்க புல் டோசரோட காலி பண்ணிக்கிட்டிருக்காங்க).&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீ பெரும் பூதூர்: அசுர பூதங்கள் நிர்மாணம் பண்ணிய சிவாலயபுரி இன்று ஸ்ரீ பெரும்புதூர்.&lt;br /&gt;&lt;br /&gt;சுங்குவார் சத்திரம்: பழங்காலத்தில் வரி வசூலித்த டோல்கேட் இன்று சுங்குவார் சத்திரம்.&lt;br /&gt;&lt;br /&gt;நந்தனம்:- மா அம்பலத்திலிருந்த சிவாலய நந்தவனம் இருந்த இடம் இன்று நந்தனம். இங்கு பூமியுலிருந்து எடுக்கப்பட்ட நந்தி சிஐடி நகரில் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;யானை கவுணி : திருக்குடை வைபவத்தில் எம்பெருமான் யானை போல் ஒடி தாண்டினாராம்.ஒரே சமயத்தில் இரண்டு ரயில்வே கேட்டுகள் போடப்பட்ட பெரிய நுழைவயில் யானகவுணி.&lt;br /&gt;&lt;br /&gt;மாதவரம்: மாதவன் ஈசனிடம் வரம் பெற்ற இடம் இன்று மாதவரம். புராதன சிவ்-விஷ்ணு ஆலயங்கள் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;திண்டிவனம் : திந்த்ரினி வனம் ( புளியங்காடு) இன்று திண்டிவனம்.&lt;br /&gt;&lt;br /&gt;வடபழநி: பழய பெயர் புலியூர்கோட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;வளசரவாக்கம்: வள்ளி சேர் பாக்கம்: முருகப் பெருமான் வள்ளியோடு சேர்ந்த இடம் இன்று வளசரவாக்கம். இங்கு 7 அடி முருக விக்ரகம் பூமியிலிருந்து கிடைத்து கோவில் கட்டியிருக்கிறார்கள். எல்லா டீவி சீரியலிலும் தவறாமல் இக்கோவில் வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈக்காட்டுதாங்கல் : ஈர காடு தங்கல் : வருடத்தில் ஒருநாள் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் இங்கே ராத்தங்கலுக்கு வருவார். எங்குபார்த்தாலும் தண்ணீரில் மிதக்கும் காட்டிற்கு நடுவே எம்பெருமானின் சோலை இருந்ததாம். இன்று ஸ்வாஹா.......&lt;br /&gt;&lt;br /&gt;முகப்பேர் : மகப்பேர் ஸந்தானபுரி.&lt;br /&gt;&lt;br /&gt;முகலிவாக்கம் : கோவூர் ஈசனின் க்ரீடம் (மௌளி) இருந்த இடம் மௌளிவாக்கம் இன்று முகலிவாக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;அயனாவரம்: அயன் (ப்ரஹ்ம்மா பூசித்த சிவன்) வரம் பெற்ற இடம்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் படிக்க:- &lt;a href="http://muthamilmantram.com/showthread.php?p=148709#post148709"&gt;http://muthamilmantram.com/showthread.php?p=148709#post148709&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7884566-116243236337466887?l=muthamilmantram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthamilmantram.blogspot.com/feeds/116243236337466887/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7884566&amp;postID=116243236337466887' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/116243236337466887'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/116243236337466887'/><link rel='alternate' type='text/html' href='http://muthamilmantram.blogspot.com/2006/11/blog-post.html' title='ஏன் இந்த பெயர் வந்தது? - மன்னையார்'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/16215519587221396052</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://img.photobucket.com/albums/v324/welcometofree/bestmtm.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7884566.post-116045977868187975</id><published>2006-10-10T11:51:00.000+06:00</published><updated>2006-10-10T11:56:18.693+06:00</updated><title type='text'>காவியக் காதல்!</title><content type='html'>அமரக் காதல் என்றால் நமது நினைவில் உடனே வருபவர்கள் அம்பிகாபதி-அமராவதிதான். &lt;br /&gt;&lt;br /&gt;அம்பிகாபதி கவிச் சக்கரவர்த்தி கம்பரின் மகன். அமராவதி குலோத்துங்க சோழ மன்னனின் மகள். கம்பர் குலோத்துங்கனின் அவைக்களப் புலவராக ஒட்டக்கூத்தருடன் சமமாக இருந்தார். அமராவதி அம்பிகாபதியின் புலமை மற்றும் இலக்கிய அறிவை வியந்து அவன் மேல் காதல் கொண்டாள். அம்பிகாபதியின் அறிவுத்திறனை எடுத்துக் காட்டும் சம்பவம் ஒன்றுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முறை கம்பர் ஒரு நெல்வயலுக்குச் சென்றிருந்தார். வயலுக்குத் தண்ணீர் பாய்ச்ச ஏற்றம் என்ற சாதனத்தைத்தான் முன்பு பயன்படுத்தினர் ஏனென்றால் "பம்ப்" (pump) கண்டுபிடிக்கப் படவில்லை. அங்கே ஏற்றம் இறைப்பவன், "மூங்கிலிலை மேலே" என்ற இரண்டு வார்தைகளை மட்டும் திரும்பத் திரும்பப் பாடிக் கொண்டே ஏற்றமிறைத்தான். கம்பருக்கு அதன் பிறகு என்ன வார்த்தைகள் பாடலில் வரும் என்று தெரியவில்லை. தந்தை ஏதோ சிந்தனையிலிருப்பதைக் கண்ட அம்பிகாபதி அவரிடம் விஷயத்தைக் கூறுமாறு கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் விஷயத்தைக் கூறியதும் அம்பிகாபதி,&lt;br /&gt;&lt;strong&gt;"மூங்கிலிலை மேலே, தூங்கு பனி நீரே, தூங்கு பனி நீரை வாங்கும் கதிரோனே&lt;/strong&gt;" என்ற வார்த்தைகளைக் கூறவும் கம்பர் அகமிக மகிழ்ந்து, "ஏற்றக் காரன் பாட்டுக்கு எதிர்ப் பாட்டில்லை, என் அம்பிகாபதிக்கு நிகர் யாருமில்லை" என்று கூறிப் புளகாங்கிதமடந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்பிகாபதி ஒரு நாள் கம்பருடன் குலோத்துங்கனின் அவைக்குச் சென்றிருந்தான். அப்பொழுது அமராவதி அவனுக்கும் கம்பருக்கும் ஒரு தட்டில் நீர் கொணர்ந்து கொடுத்தாள். அவளது நடையழகை மிகவும் ரசித்த அம்பிகாபதி தன்னை மறந்து,&lt;strong&gt; "இட்டவடி நோக எடுத்தவடி கொப்பளிக்கவட்டில் சுமந்து மருங்கசைய"&lt;/strong&gt; என்று பாட ஆரம்பித்து விட்டான். அப்பொழுது ஒட்டக்கூத்தரும் அவையிலிருந்தார். ஒட்டக்கூத்தரின் குதர்க்க புத்தியைப் பற்றி நன்கறிந்த கம்பர் உடனே குருக்கிட்டு,&lt;strong&gt;'கொட்டிக்கிழங்கோ கிழங்கென்று கூவுவாள் நாவில் வழங்கோசை வையம் பெறும்'&lt;/strong&gt; என்று பாடலை முடித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் சமாளிப்பை ஒட்டக்கூத்தர் ஏற்றுக் கொள்ளவில்லை. கம்பர் கலைமகளிடம் முறையிட்டார். சரஸ்வதி தேவி ஒரு மூதாட்டியாகத் தோன்றி, ஒரு கூடையில் கொட்டிக் கிழங்குகளை எடுத்துக் கொண்டு அரண்மனை வாயிலில் வந்து கூவினாள். அதனால் அம்பிகாபதி அன்று தப்பினான்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்பிகாபதி - அமராவதி காதலுக்கு ஒட்டக்கூத்தர் வாயிலாகக் கடும் எதிர்ப்பு உருவானது. அதன்படி மன்னன் குலோத்துங்கன் அவர்கள் காதலுக்கு ஒரு நிபந்தனை விதித்தான். அம்பிகாபதி காதல் ரசம் இல்லாமல் தொடர்ந்து நூறு பாடல்கள் பாட வேண்டும். பாடி முடித்தால் அமராவதியை அடையலாம். தவறினால் மரண தண்டனையை ஏற்க வேண்டும். இதனையேற்று அம்பிகாபதி பாட ஆரம்பித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அமராவதி ஒரு தட்டில் நூறு மலர்களை வைத்துக் கொண்டு ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு மலராக எடுத்து வேறு ஒரு தட்டிலிட்டாள். இவ்வாறு பாடும் பொழுது முதல் பாடலான இறைவணக்கப் பாடல் கணக்கிலெடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. இதனை உணராத அமராவதி, அம்பிகாபதி இறைவணக்கப் பாடலுடன் சேர்த்து நூறு பாடல்களைப் பாடி முடித்ததும் பரவசத்தில் தன்னை மறந்து அம்பிகாபதியை நோக்கிச் சென்றாள். அவளைக் கண்ட பரவசத்தில் அம்பிகாபதி தன்னை மறந்து,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;'சற்றே பருத்த தனமே துவளத் தரளவடம் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;துற்றேயசையக் குழையூசலாட, துவர்கொள் செவ்வாய்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நற்றேனொழுக நடன சிங்கார நடையழகின்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பொற்றேறிருக்கத் தலையலங்காரம் புறப்பட்டதே'&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனும் காதல் ரசம் ததும்பும் ஒரு பாடலைப் பாடி விட்டான். ஒட்டக்கூத்தர் அவனைக் கையும் களவுமாகப் பிடித்து அவன் மரண தண்டனை அடையும்படிச் செய்துவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கதை, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் அம்பிகாபதியாகவும், பிரபல பாடகியும் நடிகையுமான பானுமதி அவர்கள் அமராவதியாகவும், எம். என். நம்பியார் அவர்கள் ஒட்டக்கூத்தராகவும், பழம்பெரும் நடிகர் எம். கே. ராதா கம்பராகவும் நடித்த "அம்பிகாபதி" திரைப் படத்தில் தத்ரூபமாகப் படமாக்கப் பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;காதலியை அடைய வேண்டிய அம்பிகாபதி உணார்ச்சி மிகுதியால் காலனை அடைய நேர்ந்த இக்கதை இன்றைய காதலர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். காதலில் வேகத்தை விட விவேகமே முக்கியம் என்பதை உணர்ந்தால் வெற்றி நிச்சயம்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7884566-116045977868187975?l=muthamilmantram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthamilmantram.blogspot.com/feeds/116045977868187975/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7884566&amp;postID=116045977868187975' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/116045977868187975'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/116045977868187975'/><link rel='alternate' type='text/html' href='http://muthamilmantram.blogspot.com/2006/10/blog-post.html' title='காவியக் காதல்!'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/16215519587221396052</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://img.photobucket.com/albums/v324/welcometofree/bestmtm.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7884566.post-115942861400284893</id><published>2006-09-28T13:26:00.000+06:00</published><updated>2006-09-28T13:39:34.463+06:00</updated><title type='text'>முத்தமிழ்மன்றத்திற்கு வாழ்த்துக்கள்!</title><content type='html'>உன்னை வாழ்த்துவதற்கு&lt;br /&gt;பேதை என்னிடம்&lt;br /&gt;வார்த்தைகள் ஏதும் இல்லை&lt;br /&gt;உன்னில் நான் பல கவிஞர்களை&lt;br /&gt;காண்கின்றேன்....பூரிப்பாகவுள்ளது....&lt;br /&gt;&lt;br /&gt;முத்தமிழ் மன்றமே&lt;br /&gt;என் வேலை&lt;br /&gt;மணித்தியாலங்களில் பல&lt;br /&gt;உன்னோடு முடிகின்றது...&lt;br /&gt;&lt;br /&gt;நான் உன்னில்...இரசித்து&lt;br /&gt;பார்ப்பது..இந்த கவி பக்கம்&lt;br /&gt;மட்டுமே...&lt;br /&gt;ஏனோ தெரியவில்லை....&lt;br /&gt;என் நாட்கள் கூட முழுமை&lt;br /&gt;அடைவதில்லை உன்னை நான்&lt;br /&gt;ஒரு நாளாவது பார்க்காது போனால்..&lt;br /&gt;இது உன்னில்...கவி......தவழ விடும்&lt;br /&gt;பல உறவுகளுக்கு தெரியும்....&lt;br /&gt;&lt;br /&gt;உன்னை ஆராதிக்க....&lt;br /&gt;பலர் இருக்கின்ற போதிலும்&lt;br /&gt;இதிலே இந்த பேதைக்கும்&lt;br /&gt;ஒரு ஆசை வந்திட்டது...&lt;br /&gt;உன்னை வாழ்த்துவதற்கு&lt;br /&gt;&lt;br /&gt;முத்தமிழ்மன்றமே... நீ வாழி&lt;br /&gt;உன் உன்னத கலைச்சேவை வாழி&lt;br /&gt;உன்னில் கவி படைக்கும்&lt;br /&gt;அனைத்து கவிஞர்களும் வாழி&lt;br /&gt;என்றென்றும் உன் சேவை வாழியவே&lt;br /&gt;&lt;br /&gt;முத்தமிழ் மன்றத்தினை...வாழ்த்த வயதோ...அனுபவமோ கானாது எனக்கு இருந்தும் ஒரு சிறிய ஆசை...தவறெனின் மன்னித்துவிடுங்கள் உறவுகளே...&lt;br /&gt;&lt;br /&gt;நன்றிகளுடன்&lt;br /&gt;இலங்கை பெண்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7884566-115942861400284893?l=muthamilmantram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthamilmantram.blogspot.com/feeds/115942861400284893/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7884566&amp;postID=115942861400284893' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/115942861400284893'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/115942861400284893'/><link rel='alternate' type='text/html' href='http://muthamilmantram.blogspot.com/2006/09/blog-post_28.html' title='முத்தமிழ்மன்றத்திற்கு வாழ்த்துக்கள்!'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/16215519587221396052</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://img.photobucket.com/albums/v324/welcometofree/bestmtm.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7884566.post-115932559544869656</id><published>2006-09-27T08:51:00.000+06:00</published><updated>2006-09-27T08:53:15.456+06:00</updated><title type='text'>இந்தியா முன்னேற யோசனைகள்!</title><content type='html'>பணம் எங்கும் புழுங்குகிறது. கறுப்பு வெள்ளை என்று நிறம் மாறுகிறது. இதை கட்டுப்படுத்த ஒரு யோசனை.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது நீங்கள் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்தால் உங்கள் சம்பளம் 20000 என்று வைத்துக் கொண்டால் அது உங்களுக்கு பணமாக கிட்டாது. இன்னும் சொல்லப் போனால் அரசாங்கம் பணமே அச்சடிக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களிடம் உள்ள அட்டையில் 20000 புள்ளிகள் கூடிவிடும். இந்த அட்டையை எடுத்துக்கொண்டு கடைவீதிக்கு சென்றால் நீங்கள் செலவு செய்யலாம். உங்கள் அட்டையிலிருந்து நீங்கள் செலவு செய்த அளவிற்கு புள்ளிகள் குறைக்கப்பட்டுவிடும். பிறகு முடி திருத்தும் நிலையம் சினிமா எலெக்ட்ரானிக்ஸ் இப்படி எங்குமே பணம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கு பணம் கொடுப்பவர்கள் வங்கியின் மூலமாக மட்டுமே உங்கள் அட்டையிலிருக்கும் புள்ளிகளை அதிகரிக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியானால் ஒவ்வொரு குடிமகனின் செலவை அரசாங்கம் கண்கானிக்க இயலும். வரவையும் தான். இது கறுப்பு பணத்தையும் லஞ்சத்தையும் வெகுவாக குறைக்கும்.இதில் சங்கடம் என்னவென்றால் பாமர மக்களும் உபயோகிக்கும் அளவிற்கு இதை எளிமையாக்குவது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் நிறைய:-&lt;a href="http://www.muthamilmantram.com/showthread.php?p=132302#post132302"&gt;http://www.muthamilmantram.com/showthread.php?p=132302#post132302&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆலோசகர்:- மோகன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7884566-115932559544869656?l=muthamilmantram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthamilmantram.blogspot.com/feeds/115932559544869656/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7884566&amp;postID=115932559544869656' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/115932559544869656'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/115932559544869656'/><link rel='alternate' type='text/html' href='http://muthamilmantram.blogspot.com/2006/09/blog-post.html' title='இந்தியா முன்னேற யோசனைகள்!'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/16215519587221396052</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://img.photobucket.com/albums/v324/welcometofree/bestmtm.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7884566.post-115569405179725178</id><published>2006-08-16T08:05:00.000+06:00</published><updated>2006-08-16T08:07:31.806+06:00</updated><title type='text'>புதிய தலைமை நடத்துனர் கிரி!</title><content type='html'>அன்புள்ள முத்தமிழ் மன்ற நண்பர்களே,&lt;br /&gt;&lt;br /&gt;நமது மன்றத்தில் அருமையான பல பதிவுகளைத் தந்து கொண்டிருப்பவரும் மற்றவர்களுக்கு தம்மாலான உதவியைச் செய்து வருபவருமான ரத்தினகிரி அவர்கள் இன்றுமுதல் தலைமை நடத்துனர் ஆகிறார். இக்பால் மற்றும் ரத்தினகிரி ஆகியோர் தலைமை நடத்துனர்களாக இருந்து நமது மன்றத்தையும் உறுப்பினர்களையும் வழிநடத்துவார்கள். நண்பர்கள் ஒத்துழைப்பு நல்குமாறு வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன். பதவி உயர்வு பெற்ற ரத்தினகிரி அவர்களை பாராட்டுவதில் பெருமை அடைகிறேன். இந்திய சுதந்திர நாள் வாழ்த்துக்களை நம் மன்ற நண்பர்கள் அனைவருக்கும் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிக்கு,&lt;br /&gt;முத்தமிழ்.&lt;br /&gt;&lt;br /&gt;===================================================================&lt;br /&gt;&lt;br /&gt;அன்புத் தம்பி ரத்தினகிரி அவர்கள் முத்தமிழ் மன்றம் புதிய பொலிவைப் பெற்றுள்ள சுதந்திர தின இந்நன்னாளிலிருந்து தலைமை நடத்துனராக பதிவு உயர்வு பெறுகிறார் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றோம்.ரத்தினகிரி குறுகிய காலத்தில் நல்ல பதிவுகள் பல தந்து மன்ற உறுப்பினர்கள், நடத்துனர்கள் மற்றும் நிர்வாக நண்பர்கள் மனதில் இடம் நல்லதொரு இடம் பெற்றுள்ளார் என்பதை நினைவுக்கு கொண்டு வந்து அவரை நன்றியுடன் பாராட்டுகின்றோம்.எல்லோரும் தொடர்ந்து இதே மாதிரியான அன்புடனும், நட்புடனும் கூடிய ஆதரவினை அவருக்கு அளித்து, அவர் தன் பணியில் முன்னரை விட அதிக உற்சாகத்துடனும், உத்வேகத்துடனும் உலா வர மகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;இக்பால்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7884566-115569405179725178?l=muthamilmantram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthamilmantram.blogspot.com/feeds/115569405179725178/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7884566&amp;postID=115569405179725178' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/115569405179725178'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/115569405179725178'/><link rel='alternate' type='text/html' href='http://muthamilmantram.blogspot.com/2006/08/blog-post.html' title='புதிய தலைமை நடத்துனர் கிரி!'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/16215519587221396052</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://img.photobucket.com/albums/v324/welcometofree/bestmtm.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7884566.post-115035090691929608</id><published>2006-06-15T11:51:00.000+06:00</published><updated>2006-06-15T11:55:06.930+06:00</updated><title type='text'>அழகிய பெண்ணின் இலக்கணம் - மணி</title><content type='html'>வெண்மையாக இருக்க வேண்டியவை: பற்கள், சருமம், கைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;கறுப்பாக இருக்க வேண்டியவை: கண்கள், புருவம், கண் இமைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;சிவப்பாக இருக்க வேண்டியவை: உதடுகள், கண்ணங்கள், நகங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt; நீளமாக இருக்க வேண்டியவை: கைகள், உடல், தலைமுடி.&lt;br /&gt;&lt;br /&gt;குட்டையாக இருக்க வேண்டியவை: கால்கள், காதுகள், பற்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உருண்டையாக இருக்க வேண்டியவை: உதடுகள், புஜங்கள், காலின் பின்புறமுள்ள தசைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிதாக இருக்க வேண்டியவை: இடை, கைகள், பாதங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மென்மையாக இருக்க வேண்டியவை: உதடுகள், விரல்கள், கைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவை எல்லாம் ஷேக்ஸ்பியரின் விளக்கங்கள் இவ்வாறு இருந்தால் ஷேக்ஸ்பியருக்கு பிடிக்கும். அனைவருக்கும் கட்டாயாமல்ல...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7884566-115035090691929608?l=muthamilmantram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthamilmantram.blogspot.com/feeds/115035090691929608/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7884566&amp;postID=115035090691929608' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/115035090691929608'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/115035090691929608'/><link rel='alternate' type='text/html' href='http://muthamilmantram.blogspot.com/2006/06/blog-post_15.html' title='அழகிய பெண்ணின் இலக்கணம் - மணி'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/16215519587221396052</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://img.photobucket.com/albums/v324/welcometofree/bestmtm.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7884566.post-114965948761034215</id><published>2006-06-07T11:49:00.000+06:00</published><updated>2006-08-06T05:23:25.416+06:00</updated><title type='text'>சிவாலயங்களில் செய்யத்தகாதன! - சிவசேவகன்</title><content type='html'>1. குளிக்காமல் ஆலயத்திற்குள் செல்லக் கூடாது!&lt;br /&gt;&lt;br /&gt;2. மேல் வேட்டி, சட்டை முதலிய அணிந்து செல்லக் கூடாது!&lt;br /&gt;&lt;br /&gt;3. சிரித்தல், சண்டையிடல், வீண் வார்த்தைகள் பேசல், உறங்கல் கூடாது!&lt;br /&gt;&lt;br /&gt;4. சிவனார்க்கும், நந்தி தேவருக்கும் குறுக்கே செல்லுதல் கூடாது!&lt;br /&gt;&lt;br /&gt;5. பலிபீடத்திற்கும், சன்னிதிக்கும் இடையே போதல் கூடாது!&lt;br /&gt;&lt;br /&gt;6. அபிஷேகம் நடக்கும் போது உட் பிரகாரத்தில் வலம் வரல் கூடாது!&lt;br /&gt;&lt;br /&gt;7. வழிபாட்டை அவசரமாக நிகழ்த்தல் கூடாது!&lt;br /&gt;&lt;br /&gt;8. சுவாமிக்கு நேராக காலை நீட்டி வணங்கல் கூடாது!&lt;br /&gt;&lt;br /&gt;9. ஈரமான ஆடை அணிந்து செல்லுதல் கூடாது, மயிர் கோதி முடித்தல் கூடாது!&lt;br /&gt;&lt;br /&gt;10. பாதரட்சை, குடை முதலியன எடுத்துச் செல்ல கூடாது!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7884566-114965948761034215?l=muthamilmantram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthamilmantram.blogspot.com/feeds/114965948761034215/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7884566&amp;postID=114965948761034215' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/114965948761034215'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/114965948761034215'/><link rel='alternate' type='text/html' href='http://muthamilmantram.blogspot.com/2006/06/blog-post_07.html' title='சிவாலயங்களில் செய்யத்தகாதன! - சிவசேவகன்'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/16215519587221396052</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://img.photobucket.com/albums/v324/welcometofree/bestmtm.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7884566.post-114965959794363791</id><published>2006-06-07T11:47:00.000+06:00</published><updated>2006-09-27T11:53:34.630+06:00</updated><title type='text'>காஞ்சி மஹா பெரியவர் - நடமாடும் தெய்வம்</title><content type='html'>1893ம் ஆண்டிலே அவதரித்து 1994ம் ஆண்டிலே முக்தியடைந்த காஞ்சி மஹா பெரியவர் உலகத் தலைவர்களும், பிற மதத் தலைவர்களும் மதித்த ஒரு உத்தமமான ஜீவன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முறை காஞ்சி மடத்தில், நீதியரசர் மு.மு.இஸ்மாயில் அவர்கள் மஹா பெரியவரை தரிசித்த பொழுது, மஹா பெரியவர் நீங்கள் ஐந்து முறை தொழுகை செய்கிறீர்களா? என வினவினாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்மாயில் அவர்கள் தான் நான்கு முறை மட்டுமே தொழுவதாகக் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐந்து முறை தொழுவது உண்டல்லவா? என மஹா பெரியவர் கேட்டாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்மாயில் அவர்கள், ஆமாம் உண்டு. அர்த்தசாமம் எனும் நடுநிசியில் ஒரு முறைத் தொழவேண்டும். சிலர் மட்டுமே இதைச் செய்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைக் கேட்ட மஹா பெரியவர்கள், உற்க்கத்தில் கூட இறை உணர்வு வரவேண்டும் என மனிதனை பண் படுத்திய வழிபாடுகள் உண்மையாய் கடைபிடிக்கப்பட்டால், சண்டை சச்சரவுகளே வாராது அல்லவா எனக் கேட்டு, நீங்களாவது ஐந்து முறை தொழுகை செய்யுங்கள் என்று கூறினாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;*-*-*-*-*-*-*&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முறை தொழிலதிபர் பிர்லா அவர்கள், மஹாபெரியவர்களை தரிசிக்க வந்தார். வரும் பொழுது பல தட்டுக்களில் பழங்களை வைத்து கொண்டு வந்தார். அதில் ஒரு தட்டில் லட்சக்கணக்கான ரூபாய் நோட்டுகளும் வைத்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;தரிசனம் முடிந்து, பிர்லா கிளம்பு பொழுது, பெரியவர் தட்டில் என்ன வைத்திருக்கிறாய் எனக் கேட்டாராம். பிர்லாவும் காணிக்கை வைத்திருப்பதாகவும், இன்னும் பெரியவர் உத்தரவு பண்ணினால் காசோலையே தருவதாகக் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைக் கேட்ட பெரியவர், ஒன்றும் இல்லாத எனக்கே நீங்கள் இவ்வளவு பணம் தருகிறீர்கள் என்றால், குடும்பத்தொடு அன்றாடம் போராடி வாழ்க்கை நடத்தும் மனுஷனுக்கு எவ்வளவு தேவைப்படும். ஆகவே இந்த பணத்தை நீங்களே எடுத்துக்கொண்டு கஷ்ட ஜீவனம் பண்ணும் எளியவர்களுக்கு கொடுத்து விடுங்கள் என்றாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;வெளியே வந்த பிர்லா, தன்னுடன் வந்த நண்பரிடம் கூறினாராம் :- நான் பார்க்கும் பல ஆன்மீகவாதிகள் பணத்தை எப்படியெல்லாம் இரட்டிப்பாக்கலாம் என பல வழிகளில் பணம் சேர்க்கும் வேளையில், எதுவுமே தனக்கு வேண்டாம் என்று கூறும் மஹாபெரியவர் உண்மையிலேயே நடமாடும் தெய்வம் தான் என்றாராம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7884566-114965959794363791?l=muthamilmantram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthamilmantram.blogspot.com/feeds/114965959794363791/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7884566&amp;postID=114965959794363791' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/114965959794363791'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/114965959794363791'/><link rel='alternate' type='text/html' href='http://muthamilmantram.blogspot.com/2006/06/blog-post_114965959794363791.html' title='காஞ்சி மஹா பெரியவர் - நடமாடும் தெய்வம்'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7884566.post-114915408099677360</id><published>2006-06-01T15:24:00.000+06:00</published><updated>2006-07-03T11:10:01.276+06:00</updated><title type='text'>படித்ததில் பிடித்தது - ரத்தினகிரி</title><content type='html'>&lt;span style="font-weight: bold;"&gt;பிள்ளையார் சுழியைப் பற்றி ஒவ்வொருவரிடமும் கேட்ட போது:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நர்சரிக் குழந்தை: அம்மா போடச் சொன்னாங்க, போடலைன்னா சாமி அடிக்கும். போட்டா சாமி காப்பாத்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளி மாணவன்: சாமி கும்பிட்டு ஆரம்பித்தால் நல்லது. அதான்.&lt;br /&gt;&lt;br /&gt;சாதாரண மக்கள்: ரொம்ப வருடம் பழகி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;நாத்திகர்: அந்தக் காலத்தில் எழுத்தாணி அல்லது தொட்டு எழுதும் பேனா சரியாக எழுதுகின்றதா என்று சோதிப்பதற்காக ஒரு சிறு கீற்று. அதை இந்த மடமக்கள் பிள்ளையார், அது இது என்று காதில் பூச்சுற்ற ஆரம்பித்து விட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆன்மீகத்தினர்: கணபதி அனைத்திற்கும் ஆரம்பம். விக்னம் தீர்க்கும் விநாயகர் தான் ஆரம்பிக்கும் இச்செயல் விக்னமின்றி முழுமை பெற வழிபடும் முகமாகவே இக்குறியீடு. ஓம் என்ற பிரணவமே விநாயகர். அதன் திரிபு தான் உ என்ற எழுத்து.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவியல் ஆன்மீகம்: உ என்ற வார்த்தை பூஜ்ஜியமும், நேர்கோடும் சேர்ந்த அமைப்பு. பூஜ்யம் என்பது ஆதியும் அந்தமும் இல்லாத பாரதம் கண்டுபிடித்த உயரிய அமைப்பு. அண்டமும் வட்டம் தானே! அது சுழலும் பாதையும் வட்டம் தானே. ஆதலின் சர்வ வியாபகம் உடைய சர்வ வல்லமையுடைய ஆதி அந்தமில்லா இறைவனை ஒரு சிறு வட்டத்தினைக் குறிப்பதன் மூலம் உணர்ந்து வழிபடுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;மின் உற்பத்தி செய்யும் டைனமோ அமைப்பில், காந்தத்தின் சுழற்சியில் மின்சக்தி வெளிப்படும். அணுவின் சுழற்சியில் சக்தியின் வெளிப்பாடும் இது போல் தான். சக்தியின் வெளிப்பாடு, நேர் கோட்டிலே தான் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாவற்றிற்கும் மேல் உள்ள பரம்பொருளை பூஜ்யமாகவும், அதிலிருந்து வெளிப்படும் சக்தியை நேர்கோடாகவும் எழுதுவதே உ ஆகும். இந்த உலகத் தத்துவத்தை ஒரு எழுத்தில் உணர்த்துவது ஆன்மீகம்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றாகப் பாருங்கள், ஆயிரம்,லட்சம், கோடி தவிர அனைத்து தமிழ் எண்களும் உ வில் தான் முடிவுறும்!&lt;br /&gt;&lt;br /&gt;------------------------------------------------------------------------------------&lt;br /&gt;இவ்வாறு பல விஷயங்களைப் பற்றி சிவகாசியிலிருக்கும் மற்றொரு மருத்துவர் (எஸ். எஸ். பி போல்) பாலசுப்பிரமணியன் அவர்கள் குருகுலத்தில் ஒரு தொடர் எழுதியிருக்கிறார். அதிலிருந்து படித்ததில் பிடித்தது உங்களுக்காக.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் படிக்க தருகை தாங்க: http://www.muthamilmantram.com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7884566-114915408099677360?l=muthamilmantram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthamilmantram.blogspot.com/feeds/114915408099677360/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7884566&amp;postID=114915408099677360' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/114915408099677360'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/114915408099677360'/><link rel='alternate' type='text/html' href='http://muthamilmantram.blogspot.com/2006/06/blog-post.html' title='படித்ததில் பிடித்தது - ரத்தினகிரி'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7884566.post-114905472450441512</id><published>2006-05-31T11:49:00.000+06:00</published><updated>2006-09-27T12:07:40.510+06:00</updated><title type='text'>இந்து என்று ஒரு மதமே கிடையாது! - சிவசேவகன்</title><content type='html'>1. உள்ளங்கவர் கள்வன் (By கி.வா.ஜகன்னாதன்)&lt;br /&gt;&lt;br /&gt;"இந்துமதம் என்ற இக்காலத்தில் வழங்கும் பெயர் பலசமயங்களுக்கும் பொதுவானது. அப்படி ஒரு தனிச் சமயம் இல்லை. ஆனாலும் சைவம் வைணவம் முதலிய சமயங்கள் பலவற்றிற்குப் பொதுவாக அந்தப் பெயர் அயல் நாட்டவரால் வழங்கப் பெற்று நாளடைவில் நாமும் வழங்கும்படியாயிற்று"&lt;br /&gt;&lt;br /&gt;2. காங்கிரஸ் 15-7-1956 (ஜுன் வெளிவந்த பிலிம் இண்டியாத் தமிழாக்கம்) "ஆங்கிலச் சரித்திரப் பேராசிரியர்கள் தான் முகலாயர்கள் இந்தியருக்கு கொடுத்து வந்த 'இந்து' என்ற பெயரை எடுத்துக் கொண்டு மேலும் மேலும் அழுத்தமாக வற்புறுத்தி ........ பிரிவினையை ஏற்படுத்துவதற்குக் காரண கர்த்தர்க்களாக இருந்தார்கள். முகலாயர்கள் இந்தியாவைப் படையெடுப்பதற்கு முன்பு ஹிந்துக்கள் என்ற பெயரே கிடையாது"&lt;br /&gt;&lt;br /&gt;3. பிரம வித்தியா பத்திரிகை (புத்தகம் 4, இலக்கம் 14, பக்கம் 201, 202.) பக்கம் -201 "ஹிந்து என்னுஞ் சொல் புதியதே. இதைச் சிலபாஷாகவிகள் உபயோகிக்கின்றனர். சில நவீனர் இது மகமதியரிட்ட பெயரென்றும் மற்றவர் யவணர் ஸிந்து நதிக்கரையில் வசிப்பவராதலின் ஹிந்துக்களெனப் பெயரிட்டா ரென்றும் வேறு சார்பினர் இ·தறிஞர் பெயரென்றும் பிறர் ஓர்வகைச் சித்தாந்திகள் பெயரென்றும் மற்றவர் ஒதுக்கப் பட்டவர் பெயரென்றும் சிலர் பிரஷ்டர் பெயரென்றும் பலவழி சொல்லுகிறார்கள்." "இச் சொல் மகமதியர் விசேஷமாய் நெடுங்காலமாய் வியவகரிப்பதாய் ஆரட்ட பாஷை (அதாவது அரபிபாஷை). அதில் ஹிந்து என்று (அஞ்ஞானி என்னும் பொருளில்) இருக்கின்றது. அவர்கள் இந்த இந்தியா தேசத்தின் ஆக்ஷ¢யைக் கைக்கொண்ட பொழுது நம்மவர் ஞானிகளாகவும் மற்றவர் அஞ்ஞானிகளாகவும் எண்ணி இப்பெயரை இட்டார் என்பது."&lt;br /&gt;&lt;br /&gt;4. தினமணி 10-3-1958 "ஹிந்தி என்ற வார்த்தையே இந்தியச் சொல் அல்ல என்று ராஜாஜி இங்கு தமிழர் அளித்த வரவேற்பில் பேசுகையில் கூறினார். பூர்வீக பாரசீகர் இந்தியாவுக்கு வந்தபோது இந்தியாவின் பூர்வீக குடிகள் பேசிய மொழிக்கு ஹிந்தி என்று பெயரிட்டனர் என்று அவர் விளக்கினார்"&lt;br /&gt;&lt;br /&gt;5. R.K.முகர்ஜி என்பவர் சென்னைக் கோகலே ஹாலில் 27.09.1941ல் நடந்த கூட்டமொன்றில் பிரசங்கித்தது. "India and Hinduism are Organically related like body and soul. The name HINDUISM was given to them by Persians"&lt;br /&gt;&lt;br /&gt;6. படுக்கை யறையில் பாசாங்கு செய்த பங்கஜவல்லியின் கதை "கிறிஸ்து பிறந்த 1191 வது வருஷத்திலே சகாபுடீன் கோரி என்னப்பட்ட மகமதிய அரசன் டில்லி இராஜ்யத்தை ஜயித்து மகமதிய அரசை நிலைபெறச் செய்த போது இந்நாட்டவர்களாகிய ஆரியரை இந்துக்களென்று அழைக்கத் தொடங்கினர்.......இதனை இத்தேச புராதன சரித்திரமாகிய 'பாரத் பாகி' என்னப்பட்ட நூலிற் காணலாம்."&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் படிக்க:- &lt;a href="http://www.muthamilmantram.com/index.php?name=PNphpBB2&amp;file=viewtopic&amp;amp;t=3558"&gt;http://www.muthamilmantram.com/index.php?name=PNphpBB2&amp;file=viewtopic&amp;amp;t=3558&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7884566-114905472450441512?l=muthamilmantram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthamilmantram.blogspot.com/feeds/114905472450441512/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7884566&amp;postID=114905472450441512' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/114905472450441512'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/114905472450441512'/><link rel='alternate' type='text/html' href='http://muthamilmantram.blogspot.com/2006/05/blog-post_31.html' title='இந்து என்று ஒரு மதமே கிடையாது! - சிவசேவகன்'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/16215519587221396052</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://img.photobucket.com/albums/v324/welcometofree/bestmtm.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7884566.post-114836949970448005</id><published>2006-05-23T13:29:00.000+06:00</published><updated>2006-05-23T13:31:39.706+06:00</updated><title type='text'>இதே நாளில்...-மணி</title><content type='html'>செஞ்சிலுவை சங்கத்தை தொடங்கிய ஹென்றி டுனானட் பிறந்தநாள்.(08-05-1821)&lt;br /&gt;&lt;br /&gt;சுதந்திர போராட்ட வீரர் கோபால கிருஷ்ண கோகலே பிறந்த நாள் தேதி : 09-05-1866&lt;br /&gt;&lt;br /&gt;தென்னாப்ரிக்காவின் அதிபராக நெல்சன் மன்டேலா பதவி ஏற்றார். 10.05.1994&lt;br /&gt;&lt;br /&gt;தாம்பரத்திற்கும் சென்னை கடற்கறைக்கும் இடையே முதல் மின்சார ரயில் விடப்பட்டது.(11.05.1931)&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் படிக்க:-&lt;a href="http://www.muthamilmantram.com/index.php?name=PNphpBB2&amp;file=viewtopic&amp;amp;t=3161"&gt;http://www.muthamilmantram.com/index.php?name=PNphpBB2&amp;file=viewtopic&amp;amp;t=3161&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7884566-114836949970448005?l=muthamilmantram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthamilmantram.blogspot.com/feeds/114836949970448005/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7884566&amp;postID=114836949970448005' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/114836949970448005'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/114836949970448005'/><link rel='alternate' type='text/html' href='http://muthamilmantram.blogspot.com/2006/05/blog-post_114836949970448005.html' title='இதே நாளில்...-மணி'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/16215519587221396052</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://img.photobucket.com/albums/v324/welcometofree/bestmtm.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7884566.post-114836933011977004</id><published>2006-05-23T13:25:00.000+06:00</published><updated>2006-05-23T13:28:50.126+06:00</updated><title type='text'>ஏன் என்ற கேள்வி! - ரத்தினகிரி</title><content type='html'>ஒரு ஏ.கே. 47 துப்பாக்கியை வாங்க 100 டாலர் ஆகிறதாம். 3000 குழந்தைகளுக்குக் கண்ணுக்கு வைட்டமின் A மாத்திரை வாங்க இந்தப் பணம் போதுமானது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மில்லியன் கண்ணி வெடிகள் வாங்க 100 மில்லியன் டாலர் ஆகிறதாம். இந்தப் பணத்தில் 77 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;23 எஃப் - 86 ரக போர் விமானங்கள் வாங்க 800 மில்லியன் டாலர் ஆகிறதாம். இதைக் கொண்டு 1.6 பில்லியன் மக்களுக்கு 10 ஆண்டுகளுக்கு அயோடின் கலந்த உப்பை வழங்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் படிக்க:- &lt;a href="http://www.muthamilmantram.com/index.php?name=PNphpBB2&amp;file=viewtopic&amp;amp;t=3070"&gt;http://www.muthamilmantram.com/index.php?name=PNphpBB2&amp;file=viewtopic&amp;amp;t=3070&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7884566-114836933011977004?l=muthamilmantram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthamilmantram.blogspot.com/feeds/114836933011977004/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7884566&amp;postID=114836933011977004' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/114836933011977004'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/114836933011977004'/><link rel='alternate' type='text/html' href='http://muthamilmantram.blogspot.com/2006/05/blog-post_23.html' title='ஏன் என்ற கேள்வி! - ரத்தினகிரி'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/16215519587221396052</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://img.photobucket.com/albums/v324/welcometofree/bestmtm.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7884566.post-114785713213967749</id><published>2006-05-17T15:10:00.000+06:00</published><updated>2006-05-17T15:12:12.140+06:00</updated><title type='text'>மகா சதாசிவன் - சிவசேவகன்</title><content type='html'>&lt;a href="http://www.geocities.com/shivaperuman/shivaperuman10.jpg"&gt;&lt;img style="WIDTH: 400px; CURSOR: hand" alt="" src="http://www.geocities.com/shivaperuman/shivaperuman10.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7884566-114785713213967749?l=muthamilmantram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthamilmantram.blogspot.com/feeds/114785713213967749/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7884566&amp;postID=114785713213967749' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/114785713213967749'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/114785713213967749'/><link rel='alternate' type='text/html' href='http://muthamilmantram.blogspot.com/2006/05/blog-post_114785713213967749.html' title='மகா சதாசிவன் - சிவசேவகன்'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/16215519587221396052</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://img.photobucket.com/albums/v324/welcometofree/bestmtm.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7884566.post-114785668248079687</id><published>2006-05-17T15:02:00.000+06:00</published><updated>2006-09-30T00:12:35.876+06:00</updated><title type='text'>இடதுகை பழக்கம் - மூர்த்தி</title><content type='html'>இடது கைப் பழக்கம் உள்ளவர்கள் பற்றி அண்மையில் கலிபோர்னியா பல்கலைக்கழகத் தில் ஒரு சர்வே நடத்தப்பட்டது. இந்த சர்வேயை நடத்திய பேராசிரியர் ஸ்டான்லி கோரன், இடது கைப் பழக்கம் உள்ள நூற்றுக் கணக்கானவர்களைச் சந்தித்தார். இடது கைப் பழக்கம் கொண்ட இறந்தவர்கள் பற்றியும் ஆராய்ந்தார். இவரது ஆராய்ச்சியின்படி இடது கைப் பழக்கம் உள்ளவர்களுக்கு சில குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இடது கைப் பழக்கம் உள்ளவர்கள் வலது கைப் பழக்கம் கொண்ட வாழ்க்கைத் துணையுடன் சேர்ந்து வாழும்போது மிகவும் சிரமப்படுகிறார்களாம். தவிர, வலது கைப் பழக்கம் கொண்டவர்களை விட இவர்களுக்கு சராசரியாக 9 வருடம் ஆயுள் குறைவாக இருப்பதையும் கண்டறிந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு முக்கியக்காரணம் இவர்கள் அதிக அளவில் விபத்துக்களில் சிக்கிக் கொள்வதுதான். ஏனெனில் உலகம் முழுவதும் வலதுகை பழக்கம் கொண்டவர்களுக் காகவே எந்திரங்கள், தொழில் உபகரணங்கள், வாகனங்கள் தயாரிக்கப்பட்டிருப்பதால் அதை இடது கைப் பழக்கம் உள்ளவர்கள் கையாளும்போது அவர்களுக்குப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே ஆறுதலான விஷயம், இடது கைப்பழக்கம் உள்ளவர்கள் இக்கட்டான சூழ்நிலை யிலும் சட்டென்று திடமான முடிவுகளை எடுப்பதுதான். வலது கைப் பழக்கம் உள்ளவர்கள் இது போன்ற நேரங்களில் தடுமாறி விடுகிறார்களாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7884566-114785668248079687?l=muthamilmantram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthamilmantram.blogspot.com/feeds/114785668248079687/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7884566&amp;postID=114785668248079687' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/114785668248079687'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/114785668248079687'/><link rel='alternate' type='text/html' href='http://muthamilmantram.blogspot.com/2006/05/blog-post_17.html' title='இடதுகை பழக்கம் - மூர்த்தி'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/16215519587221396052</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://img.photobucket.com/albums/v324/welcometofree/bestmtm.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7884566.post-114749297739453641</id><published>2006-05-13T10:02:00.000+06:00</published><updated>2006-05-13T10:02:57.396+06:00</updated><title type='text'>குழந்தையின் வளர்ப்பு சரியா? -பாலா</title><content type='html'>போனாவாரம் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தேன். குழந்தைக்கு 2 முதல் மூன்று வயது இருக்கும் என்று நினைக்கிறேன். ஆண் குழந்தை. நன்றாக நடக்கிறான். ஏதற்கெடுத்தாலும் அழுகை. பெற்றோர்கள் ஒரு வார்த்தை கூட கடிந்து பேசுவதில்லை. அந்த குழந்தையும் கையில் கிடைக்கும் செல்போன் முதல் கொண்டு கன்னாபின்னாவென தூக்கிபோட்டு விளையாடிக்கொண்டிருக்கிறது. பெற்றோர்களும் அதுமாதிரி செய்ய கூடாது என்று கூட சொல்லவில்லை. அவர்கள் வீட்டில் உள்ள பெரிய எல்சிடி டிவி 59" இஞ்ச் டிவியை கூட எதோ ஸ்டூலால் தள்ளி அந்த டிவி இப்ப எல்லாத்தையும் ஒன்னுக்கு மன்னாக காண்பித்து கொண்டிருக்கிறது. ஸ்கிரீனில் உள்ள கலர்கள் போய்விட்டன. சொல்ல போனால் அநியாத்துக்கு செல்லம். கார்ட்லெஸ் போன், ட்வி ரிமோட் இப்படி எல்லாம் உடைந்துபோய்தான் இருக்கிறது. நாம் பொதுவாக அதிகபட்சம் குழந்தை எல்லைமீறி அழுதால் ஏய் என்று அதட்டுவோம். அட்லீஸ்ட் குழந்தை கொஞ்சமாவது அழுகையை நிப்பாட்டும் அல்லவா? இங்கே அது கூட இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகளை அடிப்பதை கண்டால் பொறுக்காத எனக்கு இந்த குழந்தையை பார்த்தும் ஏனோ அடித்து வளர்க்கவேண்டும்போல் தோன்றுகிறது. இப்படியே விட்டால் அந்த பொருளின் அருமை அந்த குழந்தைக்கு எப்படி தெரியும்.? உண்மையில் குழந்தையை அப்படிதான் வளர்க்கவேண்டுமா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7884566-114749297739453641?l=muthamilmantram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthamilmantram.blogspot.com/feeds/114749297739453641/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7884566&amp;postID=114749297739453641' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/114749297739453641'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/114749297739453641'/><link rel='alternate' type='text/html' href='http://muthamilmantram.blogspot.com/2006/05/blog-post_114749297739453641.html' title='குழந்தையின் வளர்ப்பு சரியா? -பாலா'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/16215519587221396052</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://img.photobucket.com/albums/v324/welcometofree/bestmtm.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7884566.post-114749287001142513</id><published>2006-05-13T09:59:00.000+06:00</published><updated>2006-05-22T20:12:47.026+06:00</updated><title type='text'>கீரைபக்கோடா- பரஞ்சோதி</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;தேவையான பொருட்கள்:-&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடலைப் பருப்பு - 1 1/2 கப், அரைக் கீரை - 1 கட்டு, புதினா - 1 கைப்பிடி, கறிவேப்பிலை -சிறிது, மல்லித்தழை -சிறிது, மிளகாய் வற்றல் - 2 பச்சை மிளகாய் - 2 ,சோம்பு - 1 டீஸ்பூன், இஞ்சி - 1 துண்டு, பூண்டு - 5 பல், எண்ணெய் - தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;செய்முறை:-&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடலைப் பருப்பை இரண்டு மணி நேரம் தண்&amp;shy;ரில் ஊறவைத்து பச்சை மிளகாய், மிளகாய் வற்றல், இஞ்சி, பூண்டு, சோம்பு ஆகியவற்றைச் சேர்த்து கரகரப்பாக அரைத்தெடுங்கள். அரைக் கீரை, மல்லி, புதினா, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சுத்தம் செய்து பொடியாக நறுக்குங்கள். அரைத்த விழுதுடன் உப்பு கீரை வகைகளைச் சேர்த்துப் பிசையுங்கள். சிறிது சிறிதாக எடுத்து சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள். சுடச்சுட சாப்பிட சுவையாக இருக்கும். தக்காளி சாஸ் தொட்டுக்கொண்டால் சுவை கூடும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7884566-114749287001142513?l=muthamilmantram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthamilmantram.blogspot.com/feeds/114749287001142513/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7884566&amp;postID=114749287001142513' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/114749287001142513'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/114749287001142513'/><link rel='alternate' type='text/html' href='http://muthamilmantram.blogspot.com/2006/05/blog-post_114749287001142513.html' title='கீரைபக்கோடா- பரஞ்சோதி'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/16215519587221396052</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://img.photobucket.com/albums/v324/welcometofree/bestmtm.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7884566.post-114749272969257117</id><published>2006-05-13T09:56:00.000+06:00</published><updated>2006-05-13T09:58:49.693+06:00</updated><title type='text'>ஆப்பிள் எனும் அருமருந்து- மஞ்சு சுந்தர்</title><content type='html'>ஆப்பிள்களை தினமும் சாப்பிட்டு வருவது நல்லது. நோய்க்காலங்களில் ஆப்பிள்கள் சாப்பிடுபவர்களையும், மருத்துவர்கள் ஆப்பிள் கொடுங்கள் என்று கூறுவதையெல்லாம் நாம் பார்த்திருக்கறோம். ஆனால் குறிப்பாக அதன் மருத்துவப் பயன்கள் என்ன என்பதோ, அதன் ஒரு சில குறைவான தீமைகள் பற்றியோ அறிந்ததில்லை என்றே தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பயன்கள்:-&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கலோரிகளில் குறைவானது ஆப்பிள். மேலும் கரைபடக்கூடிய நார்ச்சத்துக்கள் ஆப்பிள்களில் அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் கொலஸ்ட்ராலைக் குறைக்க ஆப்பிள் பெரிதும் உதவுகிறது. ஃபைட்டோ கெமிக்கல்ஸ் ஆப்பிள்களில் அதிகம் காணப்படுகிறது. அதாவது குறிப்பாக `குவர்செடின்'  அதிகமாக இருப்பதால், இருதய நோயையும், புற்றுநோயையும் தடுக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;குறைகள்:-&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஊட்டச்சத்துகள், பிற பழவகைகளை ஒப்பிடும் போது ஆப்பிளில் குறைவு ஆப்பிளின் தோலில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் எச்ச சொச்சங்கள் இருப்பது. ஒரு புதிய ஆப்பிள் அருமையான ஆரோக்கிய உணவு. 140 கிராம் எடை கொண்ட ஒரு ஆப்பிளில் 90 கலோரிகளே உள்ளன. ஆப்பிளை அப்படியே எடுத்துக் கொள்வதும் உண்டு. சமைத்து உண்பதும் உண்டு. நறுக்கி வேகவைத்தும் உண்ணலாம். வறுத்து மொறுமொறுவென்றும் உண்ணலாம். ஆப்பிள் கொண்டு செய்யப்படும் பணியாரம், ஆப்பிள் சாலட்கள், ஆப்பிள் சாறு போன்றவற்றையும் உண்ணலாம். ஆப்பிள் சாற்றை சூடேற்றி பிறகு குளிரவைத்து தினமும் அருந்தி வரலாம். ஆப்பிள் சாறு அருந்தும் பழக்கம் பெரும்பாலும் மேலை நாடுகளில் இருந்து வருகிறது. என்றாலும் தோலில் பூச்சிக்கொல்லி படலங்கள் இருக்கும் என்பதால் தோலை நீக்கிவிடுவது நல்லது நன்றி: வெப் உலகம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7884566-114749272969257117?l=muthamilmantram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthamilmantram.blogspot.com/feeds/114749272969257117/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7884566&amp;postID=114749272969257117' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/114749272969257117'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/114749272969257117'/><link rel='alternate' type='text/html' href='http://muthamilmantram.blogspot.com/2006/05/blog-post_114749272969257117.html' title='ஆப்பிள் எனும் அருமருந்து- மஞ்சு சுந்தர்'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/16215519587221396052</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://img.photobucket.com/albums/v324/welcometofree/bestmtm.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7884566.post-114749255941713881</id><published>2006-05-13T09:51:00.000+06:00</published><updated>2006-05-13T09:55:59.420+06:00</updated><title type='text'>டைட்டானிக் கப்பல்- சின்னமருது, சுபன்</title><content type='html'>இங்கிலாந்திலிருந்து நியூயார்க் நகருக்கு 1912-ல் புறப்பட்ட டைட்டானிக் என்ற பிரம்மாண்டமான பயணிகள் கப்பல், வடக்கு அட்லான்டிக் பெருங்கடலில் பாறையில் மோதி கவிழ்ந்துவிட்டது என்றுதான் இதுவரை கூறப்பட்டு வருகிறது. "இது சரியா?' என்று கேப் எலிசபெத் என்ற இடத்தைச் சேர்ந்த ரோஜர் லாங் கேட்கிறார். "அப்படியானால் அந்த கப்பல் எப்படி கவிழ்ந்தது?' என்று அவரையே கேட்டால், "அதைப் பற்றித்தான் நாம் யோசிக்க வேண்டும்' என்கிறார். பாறையில் கப்பல் மோதிய பிறகு அதன் வேகத்தைக் குறைத்து திசையை மாற்ற முற்பட்டபோது, அதன் வால் பகுதி உடைந்து 30 டிகிரி கோணத்தில் சாய்ந்தது என்று இதுவரை கூறப்பட்டு வருகிறது. இது சரியல்ல, 10 முதல் 11 டிகிரி வரை மட்டுமே அது சரிந்திருக்க வேண்டும் என்கிறார் ரோஜர் லாங். சுமார் 850 அடி நீளத்துக்கு இருந்த அக்கப்பல் கடலில் மூழ்கியபோது அதில் இருந்தவர்களில் 1,500-க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டனர். தனது முதல் பயணத்திலேயே மிகப்பெரிய விபத்தைச் சந்தித்தது டைட்டானிக்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் டைட்டானிக் ஆங்கிலப் படத்தில் மிகவும் வித்தியாசமான முறையில் படமாக்கி இருக்கின்றனர். படம் முழுக்கக் கற்பனைதான் என்றாலும் கதாசிரியர் தான் படித்த கேள்விப்பட்ட செய்திகளையே அந்தப் படத்தில் புகுத்தி இருக்கிறார். நடந்த சம்பவத்தில் அழகாக காதலையும் ஏற்றியது கதாசிரியரின் புதுமை.&lt;br /&gt;&lt;br /&gt;டைட்டானிக் கப்பல்சார் விபத்துகளில் மிகவும் மோசமான விபத்துதாகும். இக்கப்பல் தனது கன்னி பயணத்தை southamton இலிருந்து new york city க்கு மேற்கொள்ளும் போது new foundland இற்கு தெற்கே 153 km தொலைவில் பனிப்பாறையுடன் மோதுண்டது. இது நடந்தது சித்திரை 14, 1912. இவ்விபத்தில் ஏறாத்தாழ 1513 பேர் இறந்தனர். இவர்களுள் அமெரிக்க கோடீஸ்வரர்களான John Jacob Astor, Benjamin Guggenheim மற்றும் Isidor Straus என்போர் அடங்குவர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் தண்ணீர் உள்புக முடியா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதனால் இதனை மூழ்கடிக்க முடியாதென அறிவித்தனர் இருந்தாலும் பனிப்பாறை இவற்றை எல்லாம் துவம்சம் செய்து மூழ்கடிக்க முடியா கப்பலை மூன்றே மணித்தியாலத்தில் மூழ்கடித்து விட்டது. பின் தொடர்ச்சியாக நடந்த விசாரணைகளில் பனிப்பாறைகள் பற்றிய எச்சரிக்கையும் மீறி கப்பல் தலைவனால் மிக விரைவாக கப்பல் செலுத்தப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. மேலும் உயிர் காக்கும் படகுகளும்(lifeboat) அங்கிருந்தவர்களுள் பாதிப்பேருக்கே போதுமானதாக இருந்தது. அருகிலிருந்தும் எந்தவொரு உதவியும் பெறமுடியவில்லை காரணம் அருகிலிருந்த californian இல் இருந்த வானொலி அலை கட்டுப்பாட்டாளர்(radio opperator) வேலையில் இல்லாமல்(off duty) உறங்கிகொண்டு இருந்தார். இவையே பின்பு கடல் வழி பிரயாணங்களின் போது ஏற்படும் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு தீர்வாகவந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அத்தீர்வுகள் ஆவன:-&lt;br /&gt;&lt;br /&gt;முடிந்தவரை அனைவருக்கும் ஏற்ற மாதிரி உயிர் காக்கும் படகுகளை (lifeboat) எடுத்து வருதல்,24 மணி நேர ஆழ்கடல் அவதானிப்பு,சர்வதேச அளவில் பனிப்பாறைகள் பற்றிய அவதானிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;டைட்டானிக் 1985 இன் பின் முக்கிய விடயமாக மாறியது. காரணம் அந்த வருடம் தான் கப்பலின் உண்மையான் உடைந்த பாகங்கள் கடலின் கீழே 3800 மீற்றர்(12,000 அடி) ஆழத்தில் கண்டு பிடிக்கப்பட்டது. கப்பல் இருந்த இடம் பிரெஞ்சு அமெரிக்க ஆய்வாளர்களால் கடலுக்கடியில் புகைப்படம் பிடிக்க கூடிய கருவிகளால் புகைப்படம் பிடிக்கப்பட்டது. அதன் பிறகு 1986ஆம் ஆண்டு ஆடி மாதம் அமெரிக்க ஆய்வாளர்கள் கப்பலுக்கு அருகில் சென்று பாத்தனர். ஆனால் எதையும் மீட்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு அடுத்தவருடம் பிரெஞ்சு மீட்பு குழுவினர் கப்பலில் இருந்து நகைகள்,பணம் முதலியவற்றை எடுத்து 1987 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் பாரிஸ் நகரில் காட்சிபடுத்தினர். கப்பலை வெளிகொண்டுவரும் முயற்சிகள் சில பல காரணங்களால் கைகூடி வரவில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7884566-114749255941713881?l=muthamilmantram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthamilmantram.blogspot.com/feeds/114749255941713881/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7884566&amp;postID=114749255941713881' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/114749255941713881'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/114749255941713881'/><link rel='alternate' type='text/html' href='http://muthamilmantram.blogspot.com/2006/05/blog-post_114749255941713881.html' title='டைட்டானிக் கப்பல்- சின்னமருது, சுபன்'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/16215519587221396052</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://img.photobucket.com/albums/v324/welcometofree/bestmtm.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7884566.post-114749223941556857</id><published>2006-05-13T09:48:00.000+06:00</published><updated>2006-05-13T09:50:39.420+06:00</updated><title type='text'>தங்கம் நமது அங்கம்- ரத்தினகிரி</title><content type='html'>கடந்த 6000 ஆண்டுகளில் உலகில் மொத்தம் சற்றேறக் குறைய 1,25,000 டன் தங்கம் உற்பத்தியாகியிருக்கிறது. இந்த வரலாறை இரண்டு காலங்களாகப் பிரித்துப் பார்க்கலாம். 1848க்கு முன், அதற்குப் பின் என்று. 1848 வரை மொத்தமே 10,000 டன் மட்டுமே வெட்டி எடுக்கப்பட்ட தங்கம் கடந்த 158 ஆண்டுகளுக்குள் மீதி 115000 டன் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. எனவே 90%க்கும் மேலான உலக தங்கம் 1848க்குப் பின்னரே வெட்டி எடுக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் தங்கத்தை வெட்டி எடுத்தவர்கள் எகிப்தியர்களாக இருக்கலாமென்றும் கி.மு. 2000 ஆண்டு வாக்கிலேயே (இப்போது சூடான் மற்றும் சவுதி அரேபியா) ஆண்டுக்கு 1 டன் வரை எடுக்கப்பட்டுள்ளதற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதுவே ரோமானியர்கள் காலத்தில் 5 முதல் 10 டன் வரை ஆண்டுக்கு வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இவை ஸ்பெயின், போர்ச்சுக்கல் மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கி.பி. 500 - 1400 ஆண்டுவரை 1 டன்னுக்கும் குறைவாகவே எடுக்கப்பட்டு வந்துள்ளது. 15வது நூற்றாண்டில், தங்கக் கடற்கரை என்று ஆப்ரிக்காவின் மேற்குப் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட பின் (தற்போது கானா) தங்கம் கிடைக்கும் முக்கிய இடங்களில் ஒன்றாக அது மாறியது. அங்கிருந்து 5 முதல் 8 டன் வரை ஆண்டுக்கு எடுக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;16வது நூற்றாண்டில் மெக்சிகோ மற்றும் பெருவில் மேலும் தங்கம் கண்டு பிடிக்கப்பட்டது. 17வது நூற்றாண்டில் தான் ஆண்டுக்கு 10-12 டன் தங்கம் வெட்டியெடுக்கப்பட்டது. 18வது நூற்றாண்டில் ரஷ்யாவும் தன் பங்குக்கு தங்கத்தை எடுக்க ஆரம்பித்ததும் இது ஆண்டுக்கு 25 டன்னாக மாறியது. 1847ல் தான் அதுவரை இருந்த வரலாற்றிலேயே அதிக பட்சமாக ரஷ்யா 35 டன் எடுத்தது. அந்த ஆண்டில் உலக மொத்த உற்பத்தியே 75 டன் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;1848. தங்க வரலாற்றில் ஒரு முக்கியமான ஆண்டு. கலிபோர்னியாவில் தங்கச் சுரங்கம் கண்டெடுக்கப்பட்டது. அதற்குள் 1914ம் ஆண்டு வாக்கில் ரஷ்யாவும் 60 டன் வரை தங்கம் ஆண்டுக்கு எடுக்க ஆரம்பித்து விட்டது. 1848ல் அமெரிக்காவின் நதிப் பகுதிகளில் சட்டரின் மில் (Sutter's Mill) கண்டுபிடிக்கப்பட்ட பின் தங்கத்தின் தலைவிதியே மாறிவிட்டது எனலாம். 1851லேயே 77 டன் எடுக்கப்பட்டது. இந்த ஆண்டிலேயே ஆஸ்திரேலியாவிலும் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. 1853ல் 93 டன்னாக அதிகரித்தது. 1856ல் ஆஸ்திரேலியாவில் மட்டும் 95 டன் தங்கம் எடுக்கப்பட்டது. உலக உற்பத்தி அந்த ஆண்டில் 280 டன்னாக அதிகரித்தது. 1886ல் தென்னாப்பிரிக்காவில் விட்வாட்டெஸ்ரெண்ட் பேசின் (Witwatesrand Basin) கண்டுபிடிக்கப்பட்ட பின் மேலும் தங்க உற்பத்தி அதிகரித்தது. கிழக்குப் பகுதிகளில் 1873லேயே தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;1898ல் அமெரிக்காவுக்கு அதிகமாக தங்கம் அனுப்பியது ஆப்ரிக்காவாகும், அப்போதிருந்து இது இன்னும் நீடிக்கிறது. அந்த ஆண்டில் உலகின் மொத்த தங்கத்தில் 40% ஆப்ரிக்காவிலிருந்தே எடுக்கப்பட்டிருந்தது. 1970ல் தான் முதலில் தங்க உற்பத்தி ஆண்டுக்கு 1000 டன்னை எட்டியது. இதற்குள் 1893ல் மேற்கு ஆஸ்திரேலியாவில் கல்கூர்லி (Kalgoorlie) சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை இந்தச் சுரங்கத்திலிருந்து மட்டும் 1300 டன் வரை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். 1903ல் ஆஸ்திரேலியாவின் பங்கு 119 டன்னாகும். இதே அளவு 1988ல் தான் அவர்களால் எட்ட முடிந்தது மீண்டும். 1896ல் கனடாவின் யூகான் எல்லைப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட தங்கப் படிமங்கள் மொத்தம் 75 டன் தங்கம் மூன்றாண்டுகளில் உற்பத்தி செய்ய ஏதுவாயிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நூற்றாண்டில் ஆண்டுக்கு 400 டன் வரை தங்கம் எடுக்க ஆரம்பித்திருந்தது மொத்த உலகமும். 20வது நூற்றாண்டில் தங்க உற்பத்தி தொய்வடைந்தது என்றே சொல்லலாம். 1940ல் அமெரிக்காவின் உற்பத்தி 155 டன்னாகவும், கனடாவின் உற்பத்தி 172 டன்னாகவும் இருந்தது. 1991 வரை இந்த எண்ணிக்கையை கனடாவாலேயே முறியடிக்க முடியவில்லை. 1980ல் ஏற்பட்ட தங்க விலை ஏற்றம் மூடிக்கிடந்த அனைத்து சுரங்கங்களுக்கும் புத்துணர்ச்சி அளித்தது. இதனால் ஆண்டுக்கு வெறூம் 962 டன்னாக இருந்த உற்பத்தி ஒரே ஆண்டில் 1744 டன்னாக அடுத்த பத்தாண்டுகளுக்குள் தாண்டிக் குதித்தது. இதற்குள் பிரேசில், வெனிசுலா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலும் தங்கம் எடுக்க ஆரம்பிக்கப் பட்டது. இதில் பிரேசிலிலுள்ள செர்ரா பெலாடா என்னும் சுரங்கம் 1983ல் மட்டும் 13டன் தங்கம் எடுத்துத் தந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;1980களில் புகுத்தப்பட்ட நவீன சுரங்கத் தொழில் நுட்பம் இதற்கு மிகவும் உதவிகரமாக இருந்தது எனலாம். 1980ல் கனடாவின் 51.6 டன் தங்க உற்பத்தி ஒரே ஆண்டில் மும்மடங்காகி 175.3 டன் உற்பத்தியை ஈட்டித் தந்தது. தற்போது கண்டெடுக்கப்பட்ட ஹெம்லோ சுரங்கம் ஆண்டுக்கு 35 டன்னை உற்பத்தி செய்து தருகிறது. இன்னும் எதிர்காலத்திலும் அதிக தங்க உற்பத்தி செய்ய வாய்ப்பிருப்பதாக அறிய முடிகிறது. முக்கியமாக, பசிபிக் பெருங்கடலின் தீ வட்டம் (rim of fire) (இது என்ன தீ வட்டம் என்று தெரியவேண்டுமானால் அண்டத்தின் அற்புதங்களைப் பாருங்கள்!) கானா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்ற இடங்களில் தங்கத்தின் சுரங்கங்கள் அமைக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;1993ல் மீண்டும் ஒரு தங்க விலையேற்றத்தை உலகம் கண்டாலும், சுற்றுப் புற சூழலையும் கணக்கில் கொள்ள வேண்டியிருக்கிறது. இருந்த போதிலும் இப்போதைக்கு தங்கத்துக்கு தட்டுப்பாடு வராது என்றே தோன்றுகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7884566-114749223941556857?l=muthamilmantram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthamilmantram.blogspot.com/feeds/114749223941556857/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7884566&amp;postID=114749223941556857' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/114749223941556857'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/114749223941556857'/><link rel='alternate' type='text/html' href='http://muthamilmantram.blogspot.com/2006/05/blog-post_114749223941556857.html' title='தங்கம் நமது அங்கம்- ரத்தினகிரி'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/16215519587221396052</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://img.photobucket.com/albums/v324/welcometofree/bestmtm.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7884566.post-114749208071232551</id><published>2006-05-13T09:46:00.000+06:00</published><updated>2006-05-13T09:48:00.713+06:00</updated><title type='text'>புதுவையின் முதல் ஐஏஎஸ்- மணி</title><content type='html'>&lt;a href="http://www.dinakaran.com/epaper/2006/may/13/12_1.jpg"&gt;&lt;img style="WIDTH: 400px; CURSOR: hand" alt="" src="http://www.dinakaran.com/epaper/2006/may/13/12_1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7884566-114749208071232551?l=muthamilmantram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthamilmantram.blogspot.com/feeds/114749208071232551/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7884566&amp;postID=114749208071232551' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/114749208071232551'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/114749208071232551'/><link rel='alternate' type='text/html' href='http://muthamilmantram.blogspot.com/2006/05/blog-post_13.html' title='புதுவையின் முதல் ஐஏஎஸ்- மணி'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/16215519587221396052</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://img.photobucket.com/albums/v324/welcometofree/bestmtm.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7884566.post-114749197938555462</id><published>2006-05-13T09:44:00.000+06:00</published><updated>2006-05-13T09:46:19.393+06:00</updated><title type='text'>தமிழக முதல்வர்கள்!- மணி</title><content type='html'>&lt;a href="http://www.dinamalar.com/2006may13/photos/at27.jpg"&gt;&lt;img style="WIDTH: 400px; CURSOR: hand" alt="" src="http://www.dinamalar.com/2006may13/photos/at27.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7884566-114749197938555462?l=muthamilmantram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthamilmantram.blogspot.com/feeds/114749197938555462/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7884566&amp;postID=114749197938555462' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/114749197938555462'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/114749197938555462'/><link rel='alternate' type='text/html' href='http://muthamilmantram.blogspot.com/2006/05/blog-post.html' title='தமிழக முதல்வர்கள்!- மணி'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/16215519587221396052</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://img.photobucket.com/albums/v324/welcometofree/bestmtm.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7884566.post-109633221413987972</id><published>2004-09-28T06:28:00.000+06:00</published><updated>2006-05-28T23:10:33.893+06:00</updated><title type='text'>அன்பு உள்ளங்களே!</title><content type='html'>&lt;a href="http://www.muthamilmantram.com"&gt;முத்தமிழ்மன்றம்&lt;/a&gt; என்ற எங்கள் அன்புப் பாசறையின் மற்றுமொரு தரமான படைப்பு இது. இங்கே உங்களுக்கு படித்து பயன்பெற நிறைய செய்திகள் கிடைக்கும். என்றாலும் மேலதிக விபரங்கள் மற்றும் உங்கள் கருத்துகளைத் தெளிவாக சுதந்திரமாகச் சொல்ல நீங்கள் மன்றத்துக்கு வரவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="&lt;a href=" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தனியொரு கையாய் தட்டி ஓசைவராது. பல கைகள் இணைந்தால்தான் ஓசை. எனவே உங்களின் கருத்துகளை, ஆக்கங்களை தூய தமிழில் அதுவும் யுனிகோடு தமிழிலேயே கொடுக்கலாம்...எடுக்கலாம். தாய்மொழியாம் தமிழுக்கு நம்மால் ஆன சிறு சேவையாக நல்ல தரமான படைப்புக்களை அளிப்பதே எங்கள் எண்ணம். உங்கள் எண்ணமும் அதுவாகவே இருந்தால் எங்களோடு கைகோர்க்க வாருங்கள். அன்பாக பண்பாக பாசமாக உற்ற தோழனாக உடன்பிறப்பாக வரவேற்கவும் உதவிகள் செய்யவும் எப்போதும் நாங்கள் அங்கே உங்களுக்காக!&lt;br /&gt;&lt;br /&gt;உங்களின் ஒரே ஒரு தமிழ்க் கருத்தும்கூட எங்களுக்கு உற்சாக டானிக்தான்! முதலில் தயக்கமாக இருந்தாலும் பழகப் பழக மிகவும் எளிது என்பதை உணர்வீர்கள். உங்களின் எண்ணங்களை தாராளமாக எங்களோடு பகிர்ந்து கொள்ளலாம். உங்களின் கூச்சத்தினைப் போக்கி கவிதைகள், கதைகள் என எல்லாமும் படைத்து படித்து மகிழுங்கள்...எங்களையும் மகிழ்ச்சியுறச் செய்யுங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;முத்தமிழ்.&lt;br /&gt;&lt;a href="http://www.muthamilmantram.com/images/muthamilindex.gif"&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7884566-109633221413987972?l=muthamilmantram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthamilmantram.blogspot.com/feeds/109633221413987972/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7884566&amp;postID=109633221413987972' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/109633221413987972'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7884566/posts/default/109633221413987972'/><link rel='alternate' type='text/html' href='http://muthamilmantram.blogspot.com/2004/09/blog-post.html' title='அன்பு உள்ளங்களே!'/><author><name>முத்தமிழ்</name><uri>http://www.blogger.com/profile/16215519587221396052</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://img.photobucket.com/albums/v324/welcometofree/bestmtm.gif'/></author><thr:total>3</thr:total></entry></feed>
